கோரிக்கை பதிவு

கடலூரில் பெய்த கனமழையால் பாதாள சாக்கடை பணி முடக்கம்

கடலூரில் பெய்த கனமழை காரணமாக சகதி நகரமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூரில் நேற்று காலை திடீரென பெய்த மழையால் மஞ்சக்குப்பம் மைதானம், ஜட்ஜ் பங்களா ரோடு, செம்மண்டலம் பகுதி வெள்ளக் காடானது. ஏற்கனவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு கொட்டப்பட்ட 
மண்மேடுகள் கரைந்து சாலைகள் சகதியானது. மேலும் சரியாக மூடாத பள்ளங்களில் மண் உள்வாங்கியதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கிக் கொண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது கடலூர் நகரின் பிரதான சாலைகளான பீச்ரோடு, நெல்லிக்குப்பம் சாலை, புதுப் பாளையம் மெயின்ரோடு உட்பட பல இடங்களில் பாதாள சாக்கடைத்திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன. இச்சாலைகளில் பெரிய அளவிலான பைப்புகள் பதித்து வருவதால் சாலைகளில் அதிக ஆழம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களும் தூர்ந்து போய் உள்ளன. கன மழையால் முழு வீச்சில் நடந்து வந்த பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக