கோரிக்கை பதிவு

புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூர் அருகே பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுப்பு

கடலோர கிராமமான தியாகவல்லியில் பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.​ ​கடலூர் அருகே உள்ள தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கச்சிராயர்.​ ​ கடலூர் திரைப்பட இயக்கச் செயலாளராகவும் குறும்படத் தயாரிப்பாளராகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார்.​ சாமிக்கச்சிராயர் தனது கிராமத்தில் தொடர்ந்து தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.​ ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள வயல் வெளியில் பழங்காலச் செப்பக்காசு ஒன்றை கண்டெடுத்தார்.​ வட்ட வடிவமான இந்தச் செப்புக் காசின் ஒரு புறம் கோழிச்சின்னமும்,​​ மறுபுறம் புதுச்சேரி 1837 என்றும் உள்ளது.இதுகுறித்துச் சாமிக் கச்சிராயர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:​ ​கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் புதுவை மாநிலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் அரிக்கமேடுவரை பல்லாண்டுகளாக பழந்தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் நாணையங்கள்,​​ பானை ஓடுகள்,​​ சுட்ட மண்ணால் செய்யப்பட்ட கலன்கள்,​​ ​ மது ஜாடிகள்,​​ பாசிமணிகள் உள்ளிட்ட பல பொருள்கள் கிடைத்து உள்ளன.​ ​

கடலூர் கடற்கரையோர கிராமங்களில் ஆங்காங்கே காணப்படும் மணல் திட்டுகள் பல காலங்களில் நடந்த கடல்கோள்களால் அழிந்த நகரங்கள்,​​ கிராமங்களின் சுவடுகளாக உள்ளன.​ அத்தகைய மணல் குன்றுகளில் இருந்துதான் இத்தகைய பழங்கால பொருள்கள் கிடைத்து வருகின்றன.​ இந்த மணல் குன்றுகள் பல ரசாயனத் தொழிற்பேட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டது தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.​ ​தற்போது கிடைத்து இருக்கும் செப்புக்காசு கடலூர் பகுதியில் பிரெஞ்சு அரசின் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததை எடுத்துக் காட்டுகிறது.​ கிராமங்களில் கோழிக்காசு என்று முதியோர் பலர் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் கடலூர் பகுதிகளில் ஆபரணத் தொழிற்சாலைகள் இருந்தது முன்னரே கண்டறியப்பட்ட தகவல் ஆகும்.​ எனவே கடலூர் துறைமுகம் பழங்காலத்தில் மேன்மையுடன் செயல்பட்டு வந்ததையும் இங்கு வணிகம் சிறந்து இருந்ததையும் இந்தச் செப்புக்காசு எடுத்துக் காட்டுகிறது.​ விரைவில் இந்தக் காசு தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சாமிக்கச்சிராயர் தெரிவித்தார்.

நெல்லிக்குப்பம் பெண்ணையாற்றில் விதிமுறை மீறல் : புதுச்சேரிக்கு வருமானம்; தமிழகத்திற்கு பாதிப்பு

நெல்லிக்குப்பம் பெண் ணையாற்றில் விதிமுறைகளை மீறி புதுச்சேரி பாசிக் நிறுவனம் மணல் எடுத்து வருவதால் கரை பாதிக் கும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் - முள்ளிகிராம்பட்டு இடையே தமிழக பகுதியில் பெண்ணையாற்றின் கரை உள்ளது. ஆற்றின் மறுபுறம் புதுச்சேரி மாநிலம் மணல்மேடு கிராமம் உள்ளது. தமிழக கரை வரை ஆறு முழுவதும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தது என கூறுகின்றனர். இதை காரணம் கூறி அம்மாநில கரையோரம் மணல் எடுக்காமல் தமிழக கரையையொட்டி ஆற்றில் மணல் எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பாசிக் நிறுவனமே மணல் குவாரியை நடத்துகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் செல்கிறது.
கரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் எடுக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி கரையோரம் மணல் எடுப்பதால் ஆற்றங்கரை பாதிக் கப்படும். மணல் குவாரியில் புதுச்சேரி அரசுக்கு வருமானம். ஆனால் தமிழக பகுதி பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு நிறுவனமே இதுபோன்று நடப்பதால் யாரும் கேட்க முடியாமல் தவிக்கின் றனர். தமிழக எல்லையில் உள்ள ஆற்றின் கரை பலமிழப்பதால் மழைக் காலத் தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால், கரை உடைந்து தண்ணீர் ஊரினுள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு மேல் அகலமுள்ளஆற்றின் கரையோரம் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த கடலூர் மாவட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.