கோரிக்கை பதிவு

நுகர்வோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நுகர்வோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களுக்காக

நடைபாதையை ஆக்கிரமித்திருக்கும் கடைக்காரர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு வசதியாக, ரூ. 20 லட்சத்தில் அழகுபடுத்தி டைல்ஸ் (தரை ஓடு) பதிக்கும் பணியை கடலூர் நகராட்சி மேற்கொண்டு வருகிறது.கடலூர் உட்லண்ட்ஸ் பகுதியில் இருந்து சில்வர் பீச் வரை சுமார் 5 கி.மீ. தூரம், சுனாமி நிவாரண நிதியில் இருந்து, சாலையின் இருபுறமும் ரூ. 5 கோடி செலவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு உள்ளது. வாய்க்கால் மீது காங்கிரீட் தளம் அமைத்து மூடப்பட்டு, நடைபாதையாகப் மாற்றப்பட்டு உள்ளது. இப்பணி முடிந்து ஓராண்டு ஆகிவிட்டது. மாநில நெடுஞ்சாலைப் பட்டியலில் இச்சாலை உள்ளது.நடைபாதை அமைக்கும் பணிக்காக, ஒரு சில நாள்கள் காலி செய்து கொடுத்த வியாபாரிகள், பணி முடிந்ததும் நடைபாதை மீது, மீண்டும் கடைகளை அமைத்துக் கொண்டனர்.தற்போது இந்த நடைபாதையை அழகுபடுத்தும் முயற்சியாக, கடலூர் நகராட்சி ரூ. 20 லட்சத்தில் டைல்ஸ் பதிக்கும் பணியைக் ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறது. பிற்பட்ட பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பணி நடப்பதாக நகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இப்பணியும் மிகவும் தரமற்றதாக செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.÷காங்கிரீட் தளத்தின் மீது 2 அங்குல உயரத்துக்கு ஆற்று மணல் கொட்டி, அதில் சிமென்டைக் கரைத்து லேசாகத் தெளித்துவிட்டு, அதன்மீது டைல்ஸ்கள் வைத்து வருகிறார்கள்.டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைபாதையில் மீண்டும் கடைகள் முளைத்து விட்டன. மேலும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள நடைபாதையில், சில தினங்களாக லாரிகளையும் நிறுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் டைல்ஸ்கள் நொறுங்கத் தொடங்கி விட்டன. ஏற்கெனவே கடலூர் நகர ஆட்டோக்கள், நடைபாதைகளைத்தான் ஆட்டோ ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகின்றன.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது நகராட்சிக்கு வேண்டாத வேலை. அங்கு டைல்ஸ் பதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ரூ. 15 கோடிக்கு மேல் தமிழக அரசு மானியமாக வழங்கினால்தான்  சாலைகளை செப்பனிட முடியும் என்ற நிலையில் இருக்கும் கடலூர் நகராட்சி, இந்த ரூ. 20 லட்சத்தைக் கொண்டு இரு சாலைகளைச் செப்பனிட முடியும் என்று  மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.கடற்கரைச் சாலையில் நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து வணிகர்கள் கடைகளை அமைத்து இருப்பதாலும் உட்லண்ட்ஸ் திருப்பத்தில் ஆட்டோக்களை இடையூராக நிறுத்துவதாலும், பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும்  இச்சாலையில், தொடர்ந்து போக்குரத்து நெரிசலும், விபத்துக்களும் தொடர் கதையாகி வருகிறது.  இந்நிலையில் கடலூரில் மாதம் ஒருமுறை  "நடைபாதை நடப்பதற்கே' என்ற போராட்டமும், வாரம் ஒருமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் போராட்டமும் நடத்தப்போவதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை எச்சரித்துள்ளது.பேரவையின் நிர்வாகப் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் இது தொடர்பாக தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் மற்றும் கடலூர் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு வியாழக்கிழமை  கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

ரேஷன்​ கடையை முற்​றுகையிட்ட மக்கள்

தொடர்ந்து தாம​தமாகத் திறக்கப்பட்டுவரும் ரேஷன் கடையை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர் .விலைவாசி விஷம்போல் உயர்ந்து வரும் நிலையில்,​​ ​ ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.​ அதே நேரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீதான புகார்களும் அதிகரித்து வருகிறது.கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன்கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடை தொடர்ந்து,​​ தாமதமாகத் திறக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் இக்கடையில் ரேஷன் பொருள்கள் விநியோகம் முறையாக நடைபெறுவது இல்லை என்றும்,​​ பல நாள்கள் மூடியே கிட்டப்பதாகவும் பொதுக்கள் தெரிவிக்கிறார்கள்.​ துவரம்பருப்பு,​​ கோதுமைமாவு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.செவ்வாய்க்கிழமை காலை 10-30 மணி ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படாதது குறித்து ​மக்கள் பெரிதும் ஆத்திரம் அடைந்தனர்.​ ரேஷன் கடை விற்பனையாளருக்கு எதிராக சிறிது நேரம் குரல் எழுப்பினர்.​ பின்னர் விற்பனையாளர் வந்து கடையைத் திறந்தபோது,​​ அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.

நுகர்வோர் உரிமைப் பயிற்சி தொடக்கம்

விவசாயிகளுக்கான நுகர்வோர் உரிமைகள் குறித்த பயிற்சி முகாம், தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் வியாழக்கிழமை தொடங்கியது. கடலூரில் இந்தப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தொடங்கி வைத்தார்.வீரிய விதைகள், சான்றிதழ் பெற்ற விதைகள் என்று அறிவித்து தரமற்ற விதைகளை விற்பனை செய்பவர்கள், தரமான பூச்சிக் கொல்லி மருந்துகள் என்ற பெயரில் தரமற்ற பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்பனை செய்வோர், தரமற்ற வேளாண் பொறியியல் கருவிகளை விற்பனை செய்வோர் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, விவசாயிகள் தங்களுக்கு ஏற்பாடும் பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறுவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன.÷இது தொடர்பாக விவசாயிகளுக்கான நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமுக்கு, தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்துள்ளது.÷அனைத்து மாவட்டங்களிலும் தலா 3 பயிற்சி முகாம்களை, பிப்ரவரி 11, 18, 25 தேதிகளில் நடத்த நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டு இருக்கிறது.ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் வேளாண் அலுவலர்கள் 10 பேர், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், விவசாயத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் 30 பேர் மற்றும் நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள் 10 பேர் ஆகிய, 50 பேருக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழக அரசின் இந்த முயற்சியால், அனைத்து மாவட்டங்களிலும் தலா 3 நாள்கள் அளிக்கப்படும் பயிற்சி மூலம், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நுகர்வோர் சங்கப் பிரதிநிதிகள் 4,500 பேர் வேளாண் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி பயிற்சி பெறுவார்கள்.கடலூரில் வியாழக்கிழமை நடந்த முதல் பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தொடங்கி வைத்தார்.இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ், ஆலோசகர் பால்கி, மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ், வேளாண் உதவி இயக்குநர்கள் பாபு, இளவரசன், வேளாண் அலுவலர் பிரேமலதா (உணவு பாதுகாப்பு) அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் பட்டாம்பாக்கம் வெங்கடபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கடலூர் மாவட்டத்தில் 18-ம் தேதி விருத்தாசலத்திலும், 25-ம் தேதி சிதம்பரத்திலும் இந்த பயிற்சி முகாம் நடக்கிறது.

பாலம் கட்ட முதல்வருக்கு மனு


புவனகிரி நுகர்வோர் உரிமை பாது காப்பு பேரவை சார்பில் தலைவர் செயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
புவனகிரி வெள்ளாற்றின் மீது உள்ள பாலம் பழுதடைந்து வருவதால் புதிய பாலம் கட்டக்கோரி நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு பணிக்காக ரூ. 35 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. சென்னை தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் மத்திய அரசுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் புதிய பாலம் கட்டவேண்டிய அவசியம் குறித்தும், அதற்காக ரூ. 19 கோடி செலவாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுநாள் வரை பணிகள் தொடங்கவில்லை. எனவே தமிழக முதல்வர்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

நுகர்வோர் மன்ற துவக்க விழா


கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் துவக்க விழா மற்றும் மாணவர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இளைஞர்களிடையே நுகர்வோர்களின் உரிமைகள் குறித்து கூட்டமைப்பு ஆலோசகர் பால்கி எடுத் துரைத்தார். தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு தாஸ் பேசினார். 50 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக 2ம் ஆண்டு மாணவர் உதயேந்திரன் வரவேற்றார். மாணவி மீரா நன்றி கூறினார்.
பேராசிரியர் கண்ணன், மனோகரன், பேராசிரியைகள் அபிராமிசுந்தரி, சத்தியபாமா, சாருபாலா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங் கிணைப்பாளர் முனைவர் திலக்குமார் செய்திருந்தார்.

வங்கிகளில் ஆவணங்களை தமிழில் வழங்க கோரிக்கை

புவனகிரி நுகர்வோர் உரிமை பாது காப்பு பேரவை சார்பில் தலைவர் செயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அனைத்து ஆவணங்களும் தமிழில் வழங்கவேண்டும் என நுகர் வோர் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அஞ்சல் அலுவலகங்களில் மாநில மொழிகளிலேயே மணியார்டர் விண்ணப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் வங்கிகளின் ஆவணங்களை தமிழில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே இது குறித்து தமி ழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை விரைந்து செயல்பட்டு வங்கிகளின் ஆவணங்களை தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண் டும்” என கூறியுள்ளனர்.

இன்னும் 40 ஆண்டுகளில் துறைமுக நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் : நெய்வேலி பேராசிரியர் கருத்து

நெய்வேலி புதுநகர், 14-வது வட்டம் ஜவகர் அறிவியல் கல்லூரியில், குடிமக்கள், நுகர்வோர் மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் இணைந்து “உலக வெப்பமயமாதல்” விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினர்.

ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விவே கானந்தன் வரவேற்றார். தமிழ்த்துறை பேராசிரியரும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான தியாகராஜன் தலைமை தாங்கினார். உலக சுற்றுப் புறச்சூழல் துறை பேராசிரியர் முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

இன்றைய தினம் உலக நாடுகள் அனைத்தும் உலக வெப்ப மயமாகி வருவதை எண்ணி திகிலடைந்த வண்ணம் உள்ளனர். பல பனிப்பிரதேச நகரங்கள் உலககெங்கும் உலக வெப்ப மயமாவதால் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழிந்து வருகிறது.

இதேபோல் நீடித்தால் இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவில் சென்னை, கல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு துறைமுக நகரங்கள் நீரில் மூழ்கி இருந்த இடமே தெரியாமல் போக வாய்ப்புள்ளது.

எனவே சுற்றுப்புற சூழழை பாதுகாத்து உலக வெப்பமயமாதலை எதிர்த்து போராட வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். இதை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் முருகவேல் பேசினார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு பேராசிரியர் பதில் அளித்து விளக்கம் கூறினார்.