கோரிக்கை பதிவு

நெல்லிக்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெல்லிக்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கல்வியில் புறக்கணிக்கப்படும் நெல்லிக்குப்பம்: படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள்

நெல்லிக்குப்பத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் ஏழை, எளிய மாணவர்கள் வெளியூர் சென்று மேல் படிப்பை தொடர முடியாத அவலம் உள்ளது.நெல்லிக்குப்பம் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெல்லிக்குப்பத்தில் அரசு பெண்கள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. பார்டர் அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பெரும்பாலான கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய விவசாய கூலி குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் இலவச பஸ் பாஸ், புத்தகம் என அனைத்தும் அரசு கொடுத்தாலும் படித்தவரை போதும் வெளியூர் சென்று படித்தால் கூடா நட்பு ஏற்பட்டு கெட்டு போய் விடுவாய் என கூறி தங்களுடன் விவசாய கூலி அல்லது கொத்தனார் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். பெரும்பாலான கிராமப்புற ஏழை மாணவர்கள், எஸ்.எஸ். எல்.சி.,யில் குறைந்த மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர் கள் மேல் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்பவர்களே அதிகம் உள்ளனர். இதனால் அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மத்திய அரசு கல்வியை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்துள்ளது. மாநில அரசும் இலவச கல்வி, பஸ் பாஸ், சைக்கிள் என கல்வியை வளர்க்க பல முயற்சிகள் மேற்கொண்டுள் ளது. ஆண்டுதோறும் மாவட்டத் தில் பல இடங்களில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் மாணவர்கள் கல்வி தடைபடுவதை தடுக்க முடியும். கல்வியைப் பொறுத்தவரை நெல்லிக்குப்பம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. இத்தொகுதியில் அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், கலைக் கல்லூரிகள் என எதுவும் இல்லை. அருகில் உள்ள பண்ருட்டி தொகுதியில் பொறியியல் கல் லூரியும், கடலூரில் ஐ.டி.ஐ., கலைக்கல்லூரியும் உள்ளது. நெல்லிக்குப்பம் தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு பட்ஜெட்டில் புதியதாக 6 பாலி டெக்னிக் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதில் ஒன்றை நெல்லிக்குப்பம் தொகுதியில் அமைக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்பில் நெல்லிக்குப்பம் தொகுதி தற் போது எடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரே அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லிக்குப்பத்தில் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லையில் கடலூர் பண்ருட்டி சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறும், விபத்துகளும் நடக்கிறது. பஸ்நிலையத்தின் உள்ளே பஸ்கள் சென்றுவர சிரமமாக உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் முக்கிய சாலையில் சர்வேயர் மூலம் அளக்கும் பணி நடந்தது. ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்களே அகற்றி கொள்ள வேண்டுமென தண்டோரா போட்டனர். பெரும்பான்மையானவர் கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று ஆக்ரமிப்புகளை 
அகற்றப்பட்டன.கட்டட ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பணியாற்றினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பேருந்துளே வராத பேருந்து நிலையம்


நெல்லிக்குப்பம் நகராட்சி பேருந்துநிலையத்தை அண்மைக்காலமாக பேருந்துகள் புறக்கணித்து வருகின்றன.  
 நெல்லிக்குப்பம் பேருந்துநிலையம் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு, 2008-ம் ஆண்டு துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறந்தது முதல் ஓராண்டாக பேருந்துநிலையத்துக்குள் எந்த பேருந்துகளும் செல்வது இல்லை.   
 இதுகுறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் முயற்சியால், 2009 அக்டோபர் 1-ம் தேதி முதல் பேருந்துநிலையத்துக்குள் பேருந்துகள் சென்று வந்தன. ஆனால் 3 மாதங்கள்தான் இந்த நிலை நீடித்தது. மீண்டும் எந்த பேருந்துகளும் பேருந்துநிலையத்துக்குள் செல்வது இல்லை. கடலூர்-நெல்லிக்குப்பம் வழித்தடத்தில் 6 நகரப் பேருந்துகள் உள்ளன. இவைகள் நெல்லிக்குப்பத்தின் மேற்கு எல்லையான வைடிப்பாக்கத்தில் இருந்து முன்பு புறப்பட்டு வந்தன.
 பேருந்துநிலையம் திறக்கப்பட்ட பின், வைடிப்பாக்கம் வரை நகரப் பேருந்துகள் செல்வதில்லை. போலீஸ் நிலையம் வரை மட்டும் சென்று திரும்பி விடுகின்றன. பேருந்துநிலையத்துக்கு உள்ளேயும் செல்வதில்லை. நெல்லிக்குப்பம் பிரதானச் சாலையில் நின்றே பயணிகளை ஏற்றி இறக்குகின்றன.
 நெல்லிக்குப்பம் வழியாகச் செல்லும் நீண்ட தூரப் பேருந்துகளும், பேருந்துநிலையத்துக்குள் சென்று வருவது சிரமமாக உள்ளது, காலதாமதம் ஏற்படுகிறது என்றுகூறி, பேருந்துநிலையத்துக்குள் செல்ல மறுத்து வருகின்றன.
 போலீஸ் காவலர்கள் அங்கு இருந்தால் மட்டுமே பேருந்துகள் பேருந்துநிலையத்துக்குள் செல்கின்றன. பேருந்துநிலையத்துக்குள் பேருந்துகள் வந்தால், குறைந்தபட்சம் இங்கிருந்து புறப்படும் பேருந்துகளில் ஏறுவதற்காவது பயணிகள் உள்ளே வருவார்கள் என்கிறார்கள் பொதுமக்கள்.
 பேருந்துநிலையத்துக்குள் 9 கடைகள், ஒரு ஹோட்டல், சைக்கிள் ஸ்டாண்டு, புறக் காவல் நிலையம், பஸ்களுக்கான நேரக் காப்பகம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. பேருந்துநிலையத்துக்கு பேருந்துகள் வராததால், கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு வியாபாரம் செய்யமுடியாத நிலை உள்ளது.   
இந்நிலையில் பேருந்துநிலையத்துக்குள் பேருந்துகள் வராதது குறித்து, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட்பாபு வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்து உள்ளார்.
அனைத்து பேருந்துகளும் பேருந்துநிலையத்துக்குள் வந்துபோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டார்.

நெல்லிக்குப்பம் பெண்ணையாற்றில் விதிமுறை மீறல் : புதுச்சேரிக்கு வருமானம்; தமிழகத்திற்கு பாதிப்பு

நெல்லிக்குப்பம் பெண் ணையாற்றில் விதிமுறைகளை மீறி புதுச்சேரி பாசிக் நிறுவனம் மணல் எடுத்து வருவதால் கரை பாதிக் கும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் - முள்ளிகிராம்பட்டு இடையே தமிழக பகுதியில் பெண்ணையாற்றின் கரை உள்ளது. ஆற்றின் மறுபுறம் புதுச்சேரி மாநிலம் மணல்மேடு கிராமம் உள்ளது. தமிழக கரை வரை ஆறு முழுவதும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தது என கூறுகின்றனர். இதை காரணம் கூறி அம்மாநில கரையோரம் மணல் எடுக்காமல் தமிழக கரையையொட்டி ஆற்றில் மணல் எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பாசிக் நிறுவனமே மணல் குவாரியை நடத்துகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் செல்கிறது.
கரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் எடுக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி கரையோரம் மணல் எடுப்பதால் ஆற்றங்கரை பாதிக் கப்படும். மணல் குவாரியில் புதுச்சேரி அரசுக்கு வருமானம். ஆனால் தமிழக பகுதி பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு நிறுவனமே இதுபோன்று நடப்பதால் யாரும் கேட்க முடியாமல் தவிக்கின் றனர். தமிழக எல்லையில் உள்ள ஆற்றின் கரை பலமிழப்பதால் மழைக் காலத் தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால், கரை உடைந்து தண்ணீர் ஊரினுள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு மேல் அகலமுள்ளஆற்றின் கரையோரம் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த கடலூர் மாவட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.