கோரிக்கை பதிவு

நாகை, கடலூரில் 3 மீன்பிடி துறைமுகங்கள்

நாகப்பட்டிணம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உலக வங்கி உதவியுடன் சுமார் 77 கோடி செலவில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன.உலக வங்கியின் இ.டி.ஆர்.பி. என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் நாகப்பட்டிணம் மீன்பிடிதுறைமுகம் ரூ.35 கோடியே 65 லட்சம் செலவிலும், அந்த மாவட்டத்தில் உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகம் ரூ.27 கோடியே 56 லட்சம் செலவிலும் புதிய மீன்பிடி துறைமுகங்களாக புதுப்பிக்கப்பட உள்ளன.

இதேபோல் கடலூர் மாவட்டம் போர்ட்டனோவா அன்னக்கோவில் என்ற இடத்தில் ரூ.131/2 கோடி செலவில் மீன்பிடி தளம் அமைக்கப்படுகிறது.

இந்த மீன்பிடி துறைமுகங்களில் மீனவர்கள் படகுகளை நிறுத்திக்கொள்ளவும், மீன்களை விற்பனை செய்வதற்கும், சுனாமி போன்ற அவசர காலங்களில் படகுகளை நிறுத்தவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.
உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த புதிய மீன்பிடி துறைமுகங்கள் திட்டத்திற்கு முதலமைச்சர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் தமிழக அரசின் வருவாய்த்துறைச் செயலாளர் கி.தனவேல் தெரிவித்தார்.

கடலூர் திருவந்திபுரத்தை சுற்றுலாத் தலமாக்க அமைச்சர்கள் ஆய்வு

கடலூர் திருவந்திபுரத்தை சுற்றுலாத் தலமாக்குவது தெôடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கேôவில் சாமிநாதன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.கண்ணைக் கவரும் இயற்கைச் சூழலும், தேவநாதசுவாமி கேôயில், ஹயகிரீவர் கோயில் , திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கேôயில், விலங்கல்பட்டு முருகன்கேôயில் உள்ளிட்ட பல்வேறு கேôயில்களும் அமையப் பெற்றது, திருவந்திபுரம் கேப்பர் மலைப் பகுதியôகும். கெடிலம் ஆறு தேவநாதசுவாமி கேôயில் அருகே வடக்கில் இருந்து தெற்கு நேôக்கி ஓடுவது சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.இத்தகைய சிறப்புமிக்க திருவந்திபுரம் கேப்பர் மலைப் பகுதியைச் சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கேôரிக்கை. இக்கேôரிக்கையை வலியுறுத்தி, கடலூர் அனைத்து நகர் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டமைப்பு மனிதச்சங்கிலிப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது.இந்த நிலையில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கேôயிலில் ஞôயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட திருமணங்களும், அதே நாளில் திருவந்திபுரம் திருமண மண்டபங்களில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடந்தன.இதனால் திருவந்திபுரம் பகுதியில் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. தேவநாதசுவாமி கேôயிலுக்கு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் வந்து போகிறார்கள்.எனவே திருவந்திபுரத்தை சுற்றுலாத்தலமாக்குவது குறித்தும், அங்கு விழாக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்தும், திருவந்திபுரம் சென்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக்கேôவில் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.முதல் கட்டமாக திருவந்திபுரத்திலும், கேôயிலைச் சுற்றியும் ஆக்கிரமித்து கடை வைத்து இருப்பவர்களை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு வணிக வளôகம் ஒன்று கட்டிக் கெôடுக்கலாம் என்றும் அமைச்சர்கள் ஆலேôசனை தெரிவித்தனர்.சாலைகளை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்தும் சுற்றுலாத் தலமாக்குவது குறித்தும், தெôடர் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.இதில் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, நெடுஞ்சாலைத்துறை செயலர் சந்தானம் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.நெடுஞ்சாலைப் பணிகள்:அமைச்சர்கள் ஆய்வுகடலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பணிகளை செவ்வாய்க்கிழமை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக்கேôவில் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.கடலூர் மாவட்டத்தில் 2010-11-ம் ஆண்டில் 731.49 கி.மீ. நீளச் சாலைகள்  580 கேôடியிலும், 34 பாலங்கள்  244.47 கேôடியிலும் நடைபெற்று வருவதை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் சேவை வளôகத்தில் நடந்த இந்த ஆய்வில் தலைமைப் பொறியôளர் பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் கேô.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், ரவிக்குமார், நகராட்சித் தலைவர்கள் து.தங்கராசு (கடலூர்), பச்சையப்பன் (பண்ருட்டி) உள்ளிட்டேôர் கலந்து கொண்டனர்.

சட்ட மன்ற உறுப்பினரை காணவில்லை ?

  கோ.ஐயப்பன்  கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரைக் காணவில்லை! யாரவது எங்கிருக்கிறார் என்று தெரிந்தால்  கண்டு பிடித்து கொண்டுவாருங்கள். தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
மாவட்ட மந்திரி பன்னீர் செல்வம் பம்பரமாக மாவட்டம் முழுதும் சுற்றுகிறார், மக்களை சந்திக்கிறார் (தேர்தல் வருகிறதல்லவா ) அனால் நம் தொகுதி ஐயப்பன் என்ன பண்றார் என்றே தெரியவில்லை. அவரால் கடலூருக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.
- பாதாள சாக்கடை பிரச்சனை 
- ரயில்வே சுரங்கப்பாதைப் பிரச்சனை
- புதிய பேருந்துநிலையம்  அமைக்கும் பிரச்சனை 
- சிப்காட் மாசுபடுத்தும் பிரச்சனை
- ரயில் நிறுத்தும் பிரச்சனை (ரயில் கடலூரில் நிற்காது )
எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாமல் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவது,
கட்டபஞ்சாயத்து செய்வது, நிலா அபகரிப்பு செய்வது போன்ற தொழில் மூலம் கோடிகளில் புரல்வதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
அவர் செய்த ஒரே ஒரு சாதனை என்ன தெரியுமா ?
கலைஞர் அறிவாலயம் கட்டியிருக்கிறார்(யார் பணத்தில் ?)

மர்ம நோயால் பன்றிகள் இறப்பு கடலூரில் தொற்று நோய் அபாயம்

கடலூரில் மர்ம நோய் காரணமாக இறந்த 50க்கு மேற்பட்ட பன்றிகளை சாக்கு மூட்டைகளில் கட்டி கெடிலம் ஆற்றங்கரையில் வீசுவதால் தொற்று நோய் பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.கடலூர் புதுப்பாளையம் மற்றும் முதுநகர் பகுதிகளில் 500க்கு மேற்பட்ட பன்றிகளை வளர்க்கின்றனர். கடந்த சில தினங்களாக கடலூர் புதுப்பளையம் பகுதியில் மர்ம நோய் காரணமாக தினமும் ஐந்திற்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தன. அவற்றை அதன் உரிமையாளர்கள் கெடிலம் ஆற்றங்கரையில் குழிதோண்டி புதைத்தனர். ஆனால் தொடர்ந்து அதிகளவில் இறந்ததால் கடந்த சில நாட்களாக இறக்கும் பன்றிகளை சாக்கில் கட்டி  கெடிலம் ஆற்றங்கரையில் வீசி விடுகின்றனர்.இவ்வாறு 50க்கும் மேற்பட்ட பன்றிகளை கடலூர் புதுப்பாளையம் கெடிலம் ஆற்றின் கரையில் ஆங்காங்கே வீசியுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி  தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. தகவல் அறிந்த கடலூர் கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் குழு புதுப்பாளையம் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பன்றி வளர்ப்பவர்கள் எவ்வித தகவல்களையும் தெரிவிக்காததால் நோய் குறித்து ஆய்வு செய்ய ரத்த மாதிரி எடுக்க முடியாத நிலை உள்ளது.தொடர்ந்து பன்றிகளை மர்ம நோய் தாக்கி இறப்பதாலும், அவைகளை திறந்த வெளியில் வீசுவதாலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பரவி வரும் பேனர் கலாசாரம் : பொதுமக்கள், வியாபாரிகள் கடும் பாதிப்பு

கடலூர் மாவட் டத்தில் பரவியுள்ள டிஜிட் டல் பேனர் கலாசாரத்தினால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்."பருப்பு இல்லாமல் கல்யாணமா' என்பார்கள். ஆனால் இன்று டிஜிட்டல் பேனர் இல்லாமல் விழாவா என்கிற நிலை மக்கள் மத்தியில் வியாபித்துள்ளது. அரசு விழா, அரசியல் விழா, அமைச்சர் கள் விழா, கோவில் திருவிழா, மஞ்சள் நீராட்டு, காதணி விழா, பிறந்த நாள், காலமானார், நினைவஞ்சலி போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரதான சாலைகளில் டிஜி ட்டல் பேனர் வைக்கும் கலாசாரம் பரவியுள்ளது.தன்னுடைய உருவ படத்தை பேனர்களில் போட்டு பல நாட்கள் மக்கள் பார்வைக்கு வைப் பதற்காக ஏதாவது ஒரு அரசியல் கட்சித் தலைவர் பங்கேற்கும் விழாவை பயன்படுத்திக் கொண்டு சிலர் "மெகா சைசில்' 60, 70 அடி நீளத்திற்கு மேல் பேனர் வைக்கின்றனர். குறிப்பாக மஞ்சக்குப்பம், புதுச்சேரி - கடலூர் எல்லை, நியூசினிமா போன்ற குறுகலான இடங் களில் பேனர்கள் வைப்பதால் வாகனங்கள் வருவதை கவனிக்க முடியாமல் அதிக விபத்து ஏற்படுகிறது.அத்துடன் சாலையில் உள்ள கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிப்பதோடு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. சாலை என்பது டிஜிட்டல் பேனர் வைப்பதற்கான இடம் என ஆகிவிட்டது. இதனை வைப்பதற்கு போலீசில் முறையாக அனுமதி வாங்குவதும் கிடையாது.அனுமதியின்றி வைக் கப்படும் பேனர்களை போலீசார் கண்டு கொள்வதும் கிடையாது. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 30 நாட் களுக்கு முன்பே பேனர் வைப்பதும், நிகழ்ச்சி முடிந்து 30 நாட்கள் வரை கூட அப்புறப்படுத்தாமல் இருப்பதும் கடலூர் மாவட்டத்தில் சகஜமாகி விட்டது.இந்த பேனர் தயாரிப்பு ஷீட்டுகள் கூரை மீது போடுவதற்கு பயன்படுத்தப்படுவதால் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் கிழித்துச் சென்று விடுகின்றனர். இதனால் பேனர் வைத்தவர்கள் தங்களின் எதிரணியினர் தான் வேண்டுமென்றே கிழித்து விட்டதாக கூறி ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த போலீஸ் துறை விழா ஒன்றில் பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், கடலூர் மாவட் டத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரம் மோசமாக பரவி வருகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்கள்  பாதிக்கப்படுகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் பாகுபாடின்றி பேனர் களை அகற்றுமாறு எஸ்.பி., யிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதனைத்தொடர்ந்தும் பேனர் வைப்பதை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தலைவர்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக கட்சித் தொண்டர் களால் வைக்கப்படும் பேனர்கள் பொது மக்களின் முகம் சுளிப்பிற்குள் ளாகி சம்மந்தப்பட்ட தலைவருக்கு கெட்டபெயர் ஏற்பட்டு மக்கள் செல்வாக்கை இழக்கும் நிலைதான் ஏற்படும்.
கலெக்டர் கடும் எச்சரிக்கை...:இந்நிலையில் கலெக்டர், டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்க  முன் அனுமதியை 7 நாட்களுக்கு முன்பே  பெற வேண்டும். நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன் வைத்து முடிந்ததும் இரண்டு நாட்களில் அவர்கள் செலவிலேயே அகற்ற வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விளம்பர பலகை அமைத்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வைத்து சட்டவரம்பை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனுமதியற்ற விளம்பர பேனர்கள் மற்றும் சாரங்கள் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. விளம்பர பேனர்கள் வைத்தவர்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும். இல்லையெனில் போலீஸ் துறையே அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான செலவினத் தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்வதோடு, வழக்கும் தொடரப்படும்.

குப்பை மேடானது சில்வர் பீச்

விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ததைத் தொடர்ந்து கடலூர் சில்வர் பீச் குப்பை மேடாக காட்சி அளித்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 472 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விஸ்வரூப விநாயகர் சிலைகள் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 380 சிலைகளை மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட் டது. அவற்றில் 218 சிலைகளும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 78 சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வந்து கடலூர் சில்வர் பீச்சில் கரைக்கப் பட்டது. கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும் பெரும்பாலான சிலைகள் 50 முதல் 100 மீட்டர் தூரத்திலேயே கரைக்கப்பட்டது. இதனால் கடலில் போடப்பட்ட சிலைகள் உடைந்து அலையில் கரைக்கு அடித்து வரப்பட்டது. அதேப்போன்று சிலைகள் வைக்க பயன்படுத்திய பலகைகள், கழிகள் மரத்துண்டுகள் மற்றும் சிலைகளில் போடப்பட்டிருந்த மாலைகள், வேட்டிகள் அனைத்தும் அலையில் மீண்டும் கரைக்கு அடித்து வரப்பட்டன. இதில் மரச்சட்டங்கள், பலகைகள், கழிகளை பலர் அடுப்பெறிக்க எடுத்துச் சென்றனர். சிலைகள் மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்லப் பட்டன. மாலைகள், எலுமிச்சை பழம், பிளாஸ்டிக் பைகள் கரை முழுவதும் சிதறிக் கிடந்ததால் கடற்கரை அசுத்தமாக காணப்பட்டது.

திண்டாடும் ஆளூம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் புறக்கணிப்புப் புகாரில் எம்.ஆர்.கே?

டந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில், நெல்லிக்குப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய முன்று தொகுதிகள் மட்டுமே தி.மு.க-வுக்குக் கிடைத்தன. பண்ருட்டி, மங்களுர், விருத்தாசலம், காட்டுமன்னார்குடி, சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் எதிர்க் கட்சிகள்தான் வெற்றி பெற்றன. தி.மு.க. சார்பில் வென்ற மூன்று பேரில் ஒருவர், தி.மு.க. மாவட்டச் செயலாளரும் சுகாதாரத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். மற்ற இருவர்... நெல்லிக்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன், கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன்.
ஏனோ அமைச்சருக்குப் பிடிக்காமல்போனதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவருக்கும் ஸீட் கிடைக்காது என்ற பேச்சு மாவட்டம் முழுக்க அடிபடுகிறது. இறங்கி விசாரித்தால், மடை திறந்த வெள்ளமாகக் கொட்டுகிறார்கள்.
''ஆரம்பத்தில் இருந்தே அமைச்சருக்கும், அந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கும் ஆகவே ஆகாது. அமைச்சரே மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், அந்த
எம்.எல்.ஏ-க்களுக்கு இந்த தடவை ஸீட் கொடுக்க மாட்டார். தவிர, தொகுதி மறு சீரமைப்பில்... சபா.ராஜேந்திரனோட நெல்லிக் குப்பம் தொகுதி காணாமல்போயிடுச்சு. அதனால், அவர் பண்ருட்டி அல்லது நெய்வேலிக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கார். ஆனா, அவர் எந்தத் தொகுதியைக் கேட்டாலும், அதை கூட்டணிக் கட்சிக்குத் தள்ளிவிட அமைச்சர் முடிவு பண்ணிட்டார். பண்ருட்டி ஒன்றியத்தில் சபாவுக்கு கட்சி செல்வாக்கு அதிகம். அதனால், அ.தி.மு.க. தொழிற்சங்கப் பிரமுகர் ஒருவரின் மகனை தி.மு.க-வுக்கு அமைச்சர் இழுத்துட்டார். இப்போ, பண்ருட்டி ஒன்றியமே அவருடைய கையில் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உண்டாக்கிட்டாங்க.
அதேபோல, கடலூர் தொகுதியில் அய்யப்பனுக்கு ஸீட் கொடுக்காத எம்.ஆர்.கே., அங்கே இளைஞர் அணியைச் சேர்ந்த பழக்கடை ராஜாவையும், ஏ.ஜி.ராஜேந் திரனின் மகன் சுந்தரையும் முன்னிலைப்படுத்த ஆரம்பிச்சுட்டார்!'' என்கிறார்கள் எம்.ஆர்.கே-யின் மூவ் தெரிந்த தி.மு.க-வினர்.
''கடந்த முறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மத்திய சாலை மேம்பாட்டு நிதியான 33 கோடி ரூபாயில் விஜயகாந்த்தின் விருத்தாசலம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது ஆறு கோடி ரூபாய். ஆனால், சபாவின் நெல்லிக்குப்பம் தொகுதிக்கு ஒரு ரூபாய்கூட கிடையாது. அதேபோல, அ.தி.மு.க. தொகுதிகளான சிதம்பரத்துக்கு ஆறு கோடி ரூபாயும், புவனகிரிக்கு ஐந்து கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அய்யப்பனின் கடலூர் தொகுதிக்கு வெறும் 75 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கினார்கள். இந்த ஆண்டும் இதே நிலைதான் தொடர்கிறது. மொத்த நிதியான 40 கோடி ரூபாயில், நெல்லிக்குப்பத்துக்கு ஒரு கோடியும், கடலூருக்கு 50 லட்சமும்தான் ஒதுக்கப்பட்டு உள்ளது'' என ஆதங்கத்தோடு சொல்கிறார்கள் அந்த இரு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்களும்.
கடலூர் மாவட்டப் பொறுப்பாளரான உடன்பிறப்பு ஒருவர், ''தனக்குப் பிடிக்காத ஆட் களோட பெயரைப் போட்டு பத்திரிகை அடிச்சா, அமைச்சர் அந்த நிகழ்ச்சிக்கு வர மாட்டார். சமீபத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம் தன் தங்கச்சியோட கல்யாணப் பத்திரிகையில் அமைச்சர் பொன்முடியின் படத்தைப் போட்டதால், அந்தக் கல்யாணத்தையே எம்.ஆர்.கே. புறக் கணிச்சார். கட்சி நிகழ்ச்சிகளை முன்கூட்டி சொல்லாமல் பிடிக்காத ஆட்களைத் தவிக்கவிடுவதும் எம்.ஆர்.கே-வுக்கு வழக்கம். பிடிக்காத நிர்வாகிகள் இருக்கும் ஏரியாவுக்கு, அரசு நலத் திட்ட உதவிகளும் சரிவரக் கிடைக்காது!'' என்றார் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தோடு.
சொந்தக் கட்சிக்காரர்களிடம் இந்த அளவுக்கு முரண்டு காட்டும் அமைச்சர், பா.ம.க-விடம் மட்டும் பாசமழை பொழிவாராம். நெய்வேலி தொகுதியில் முன்னாள் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளரான குணசேகரன் நடத்திய ஒரு விழாவை எம்.ஆர்.கே. புறக்கணித்ததின் பின்னணியையும் 'பா.ம.க. பாசத்'தோடு முடிச்சிடுகிறார்கள் தொகுதி உடன்பிறப்புகள்.
இது குறித்துப் பேசும் எம்.ஆர்.கே-யின் ஆதரவாளர்கள், ''சபா.ராஜேந்திர னையும் அய்யப்பனையும், அமைச்சர் மரியாதையோடுதான் நடத்துகிறார். கட்சி விழாக்களிலும் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறார். கட்சிப் பாகுபாடு பார்க்காமல் மக்கள் நலனுக்காக நிதி ஒதுக்குவதைக்கூட அவர்கள் குற்றமாக்குவதில் கொஞ்சமும் நியாயம் இல்லை. விஜயகாந்த் தொகுதிக்கு அதிக நிதி ஒதுக்கினால்தானே, அடுத்த முறையாவது அங்கே தி.மு.க-வை ஜெயிக்கவைக்க முடியும். சின்னச் சின்ன கசப்புகளைப் பெரிதாக்கி, அமைச்சருக்கு சங்கடத்தை உண்டாக்க சிலர் திட்டமிடுகிறார் கள்!'' என்கிறார்கள்.
இதற்கிடையில் எம்.ஆர்.கே-யை யும் இரு எம்.எல்.ஏ-க்களையும் நேரில் அழைத்து ஸ்டாலின் சமாதானப் பஞ்சாயத்துப் பேசியதாகவும் ஒரு தகவல்!
- கரு.முத்து  

கடலூரில் பெய்த கனமழையால் பாதாள சாக்கடை பணி முடக்கம்

கடலூரில் பெய்த கனமழை காரணமாக சகதி நகரமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூரில் நேற்று காலை திடீரென பெய்த மழையால் மஞ்சக்குப்பம் மைதானம், ஜட்ஜ் பங்களா ரோடு, செம்மண்டலம் பகுதி வெள்ளக் காடானது. ஏற்கனவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு கொட்டப்பட்ட 
மண்மேடுகள் கரைந்து சாலைகள் சகதியானது. மேலும் சரியாக மூடாத பள்ளங்களில் மண் உள்வாங்கியதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கிக் கொண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது கடலூர் நகரின் பிரதான சாலைகளான பீச்ரோடு, நெல்லிக்குப்பம் சாலை, புதுப் பாளையம் மெயின்ரோடு உட்பட பல இடங்களில் பாதாள சாக்கடைத்திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன. இச்சாலைகளில் பெரிய அளவிலான பைப்புகள் பதித்து வருவதால் சாலைகளில் அதிக ஆழம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களும் தூர்ந்து போய் உள்ளன. கன மழையால் முழு வீச்சில் நடந்து வந்த பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடங்கியுள்ளன.

மாவட்டத்தில் 2ம் நாளாக தொடர் மழை : கடலூரில் அதிகபட்சம் 75 மி.மீட்டர்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழைக் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூரில் அதிகபட்சமாக 75 மி.மீட்டர் மழை பெய் துள்ளது.
தென்மேற்கு பருவக் காற்றால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேகங் கள் வேகமாக தமிழக பகுதியில் செல்வதால் ஆங் காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
நேற்று காலை 11 மணி முதல் அதிக அளவில் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து சீராக மழை பெய்து வருவதால் தண் ணீர் வழிந்தோடி வீணாகாமல், நிலத்தில் நன்றாக ஊறி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் விரைவில் உயரக்கூடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:
கடலூரில் 75மி.மீ., வானமாதேவி 69.20, புவனகிரி 65, கொத்தவாச்சேரி 54, அண்ணாமலை நகர் 40.60, பண்ருட்டி 40, பரங் கிப்பேட்டை 39, மேமாத் தூர் 38, லால்பேட்டை 31, சேத்தியாதோப்பு 31, லக் கூர் 30, காட்டுமன்னார் கோவில் 28, விருத்தாசலம் 24.40, குப்பநத்தம் 22.20, பெலாந்துரை 20, ஸ்ரீமுஷ் ணம் 20, கீழ்ச்செருவாய் 16, தொழுதூர் 15மி.மீ மழை பதிவாகியுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூல்: கிருஷ்ணசுவாமி பொறியியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து கடலூர் கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரி இறுதியாண்டு பயலும் மாணவ மாணவியர் சுமார் 200 பேர், கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:இந்த கிருஷ்ணசுவாமி பொறியியல் கல்லூரியில் இ-லேர்னிங் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 8 ஆயிரம் வசூலித்து இருக்கிறார்கள். இக்கட்டணம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்குக் கிடையாது என்று திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நிர்வாகத்தை அணுகியபோது மாணவர்களைத் துறைத் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். கல்லூரிக்குள் நுழைய விடாமல் கல்லூரி அதிகாரிகள் கண்டித்து வெளியேற்றினர். போராட்டத்தில் பங்கேற்க வெளியேற முயன்ற சில மாணவிகளை, கல்லூரி விடுதியில் தனி அறையில் அடைத்தனர். அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒரு மாணவியை அடிக்க முயன்றனர். மாணவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றோரிடம் தவறாகப் பேசியுள்ளனர்.புகார்களுக்கு நிர்வாகத்திடம் பேசி, எங்களின் படிப்புக்கு எவ்வித இடையூறும் பின்விளைவும் இல்லாத நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் மனுவில் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், இயக்குநர் சி.ஏ.தாஸ்,  கடலூர் வாசிப்போர் இயக்க அமைப்பாளர் கவிஞர் பால்கி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சிவபாலன் உள்ளிட்டோர் பேசினர்.

நூலகர் இல்லாததால் பூட்டிக் கிடக்குது நூலகம்

கடலூரில் நூலகர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டதால் கடந்த 6 நாட்ளாக பூட்டிக் கிடப்பதால் வாசகர்கள் கவலையடைந்துள்ளனர்.
கடலூர் புதுப்பாளையத்தில் தங்கராஜ் நூற்றாண்டு நினைவு நூலகம் இயங்கி வருகிறது. கடலூர் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த நூலகத்திற்கு தினசரி 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். புதன் கிழமை வார விடுமுறையாகும். இங்கு பணியாற்றிய வந்த நூலகர் சேகர் உடல் நிலைக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த 14ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சென்று விட் டார். அவருக்கு பதிலாக நகராட்சி நிர்வாகம் வேறு நூலகர்களை இங்கு நியமிக்காததால் கடந்த 14ம் தேதி முதல் நூலகம் பூட்டியே கிடக்கிறது.
இதனால் நூலகத்திற்கு அன்றாடம் வரும் வாசகர்கள் பெருத்த ஏமாற்றத் திற்குள்ளாகியுள்ளனர். மருத்துவ விடுப்பில் சென் றுள்ள நூலகர் மீண்டும் பணிக்கு வரும் வரை தற்காலிகமாக வேறு நூலகர்களை நியமித்து, நூலகத்தை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலிண்டர் வினியோகத்தில் ஸ்டிக்கர் முறை அறிமுகம்! முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வினியோகத் தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க மாவட்டத்தில் முதல் முறையாக இன்டேன் நிறுவனம் "ஸ்டிக்கர்' முறையை அமல்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மூன்று லட்சம் வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன. இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் கடலூர், நெய்வேலியில் தலா மூன்றும், விருத்தாசலத்தில் ஒரு ஏஜென்சியும், இந்துஸ் தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சிதம்பரம், கடலூர் மற்றும் பரங்கிப் பேட்டையில் தலா ஒரு ஏஜென்சியும், பாரத் பெட் ரோலிய நிறுவனம் சார் பில் பண்ருட்டியில் இரண்டு, நெய்வேலி மற் றும் காட்டுமன்னார்கோவிலில் தலா ஒரு ஏஜென்சி என மொத்தம் 15 காஸ் ஏஜென்சிகள் இயங்கி வருகின்றன. இருப்பினும் அனைத்து பகுதிகளிலும் காஸ் சிலிண்டர் தட்டுப் பாடு நிலவி வருகிறது.
வீட்டு உபயோக காஸ் இணைப்புகளுக்கு 21 நாட் களுக்கு ( தமிழக அரசின் இலவச காஸ் இணைப்பு திட்டத்தில் இணைப்பு பெற்றவர்களுக்கு 60 நாட்களுக்கு)  ஒரு சிலிண்டர் வழங்க வேண்டும் என விதி இருந்தாலும் இதனை பெரும்பாலான ஏஜன்சிகள் பின்பற்றுவதில்லை. நிறுவனங்கள் நிர்ணயித்த காலக்கெடு முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகே சிலிண்டர்கள் வழங்குகின்றனர்.
இலவச காஸ் இணைப் புதாரர்களுக்கு மூன்று மாதத்திற்கு பிறகே மறு சிலிண்டருக்கு பதிவு செய் யப்படுகிறது.
காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பெரும்பாலான ஏஜென்சிகள் முறைகேடு செய்வதாகவும், அதன் காரணமாக சிலிண் டர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு  அதிகரித்து வருகிறது. குறிப் பாக வீட்டு உபயோக சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு ஓட்டல்கள் மற் றும் கார்களுக்கு விற்பனை செய்வதால் தான் தட்டுப் பாடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து "இன்டேன் காஸ்' நிறுவனம் ( இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) சிலிண்டர் வினியோகத் தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்த் திட முன் மாதிரியாக "ஸ்டிக்கர்' முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இணைப்பிற் கும் தனித் தனி நான்கு இலக்க எண் மற்றும் ஏஜென்சியின் பெயர் அடங்கிய "ஸ்டிக் கர்' வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ளது.
இன்டேன் நிறுவனத்தில் காஸ் இணைப்பு பெற்றவர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள ஏஜென் சிகளில் ரேஷன் கார்டு மற் றும் காஸ் இணைப் பிற் கான "பாஸ் புக்'கை காண் பித்து பதிவு செய்து கொண்டு நான்கு இலக்க எண் கொண்ட 32 ஸ்டிக்கர் பெற்றுக் கொள்ள வேண் டும். அனைத்து ஸ்டிக்கர்களிலும் ஒரே எண் இருக் கும். ஒவ்வொரு இணைப் பிற்கும் வழங்கிய குறியீட்டு எண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விடும். அதன்பிறகு சிலிண்டர் பதிவு செய்ய வேண்டும். வீட்டிற்கு சிலிண்டர் கொண்டு வருபவரிடம் சிலிண்டரை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதில் கையெழுத்து போட்டு, நிறுவனம் கொடுத்த ஸ்டிக்கரில் ஒன்றை அந்த ரசீதியில் ஒட்டி ஒப்படைக்க வேண் டும்.
இதன் மூலம் தினசரி குடோனில் எடுத்துச் செல் லப்படும் சிலிண்டர்கள் ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மாவட்டத்தில் இன் டேன் நிறுவனம் சார்பில் உள்ள ஏழு ஏஜன்சிகளிலும் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நுகர்வோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே முறையை மாவட் டத்தில் உள்ள இந்துஸ் தான் பெட்ரோலியம் மற் றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் காஸ் ஏஜென்சிகளிலும் அமல்படுத்தினால் சிலிண்டர் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்க முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் - எம்.எல்.ஏ. பனிப்போர்: பாதியில் கிடக்கும் திட்டங்கள் கலங்கும் கடலூர்





மந்திரிக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கும் இடையிலான மோதலால் அரசின் திட்டங்கள் பாதிக்கப்படுவது கூட ஆங்காங்கே நடப்பதுதான். ஆனால், எங்கள் ஊரில் தி.மு.க. அமைச்சருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்குமான ஈகோ யுத்தத்தால் பல திட்டங்களும் பாதியில் கிடக்கின்றன...’’

-இப்படி குமுறுகிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.

அவர்கள் குறிப்பிடுவது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ., அய்யப்பனுக்கும் இடையிலான பனிப் போரைத்தான்.

‘‘ரயில்வே சுரங்கப்பாதை, அரசு பொது மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி, துறைமுக வளர்ச்சித் திட்டம் என பல முக்கியத் திட்டங்கள் கடலூர் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், எம்.ஆர்.கே.வுக்கும், அய்யப்பனுக்கும் இடையிலான ஈகோ யுத்தத்தால் எதுவும் முழுதாக செயல்வடிவம் பெறவில்லை. அதிலும் கடலூர் லாரன்ஸ் ரோடு, ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்கு கடந்த 93-ம் ஆண்டே திட்டம் தீட்டப்பட்டு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் இன்றுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை’’ என அலுத்துக் கொள்கிறார்கள் கடலூர் நகர வியாபாரிகள்.

அரசின் திட்டத்தில் தி.மு.க.வின் கோஷ்டிப் பூசல் வெட்ட வெளிச்சமாகக் கிடப்பதைக் கண்டித்து கடலூரின் பொது நல இயக்கங்கள், தொழிலாளர் நலச்சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் என மொத்தம் 75 அமைப்புகள் சேர்ந்து கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை ஆரம்பித்தனர். இந்தக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம் என நடத்தியும் ஒன்றும் பயனில்லை.

எம்.ஆர்.கே.வுக்கும் அய்யப்பனுக்கும் இடையில் அப்படி என்னதான் நடக்கிறது? கடலூர் தி.மு.க.வின் மூத்த உடன்பிறப்புகளிடம் பேசினோம்.

“சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்-போதே அய்யப்பனுக்கு சரியான ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்க மறுத்தார் எம்.ஆர்.கே. அதனால் அய்யப்பனுக்கு அவர்மேல் அதிருப்தி. இந்த நிலையில் நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ. சபாராஜேந்திரன், எம்.ஆர்.கே.வை எதிர்க்க அவருக்கு ஆதரவாக செயல்பட்டார் அய்யப்பன். பிறகு நடந்த கடலூர் நகர பிரதிநிதி நியமனத்திலும் இரு கோஷ்டினருக்கும் பிரச்னை ஏற்பட்டு உண்ணாவிரதம் வரை சென்று பின்னர் அறிவாலயத்தில் சமாதானம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மாவட்டச் செயலாளர் தேர்தல் வந்தபோது எம்.ஆர்.கே.அணிக்கு எதிராக அய்யப்பனும், சபா ராஜேந்திரனும் சிதம்பரத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. சரவணனை நிறுத்தினர். ஆனால் சரவணன் தோல்வி அடைந்தார். அன்று முதல் எம்.ஆர்.கே.வுக்கும் அய்யப்பனுக்குமான பிரச்னை மேலும் வலுத்துவிட்டது. மாவட்டத்தின் தலைமையிடமான கடலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர் அய்யப்பன். இதனால் கடலூர் டவுனுக்கு எந்த முக்கியத் திட்டமும் நிறைவேறாமல் பார்த்துக் கொள்கிறார் எம்.ஆர்.கே. சுரங்கப்பாதைத் திட்டம் நிறைவேறினால் எங்கே அய்யப்பனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்துவிடுமோ என்று இந்தத் திட்டத்தில் மெத்தனம் காட்டி வருகிறார் எம்.ஆர்.கே. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையிலான பிரச்னையால் மக்களுக்கு சேரவேண்டிய நல்ல திட்டங்கள் தடுக்கப்படுகின்றன. இதனால் தி.மு.க.வுக்குத்தான் கெட்டபெயர்’’ என்றார்கள் வருத்தத்துடன்.

கூட்டு நடவடிக்கைக் குழுவில் இருப்பவரும் கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பாளருமான நிஜாமுதீனிடம் இதுபற்றிப் பேசினோம். “கடலூர் லாரன்ஸ் சாலை நகரின் இருதயம் போன்றது. இதன் வழியாகத்தான் மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் செல்லவேண்டும். மேலும் எஸ்.பி. அலுவலகம், கலைக் கல்லூரி, நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மிக முக்கிய பள்ளிகள் என எல்லாமே ரயில்வே கேட்டுக்கு முன்பக்கம்தான் உள்ளது. ஆனால் அந்தப் பக்கம் திருவந்திபுரம் கோயில், பாடலீசுரர் கோயில், மத்திய சிறைச்சாலை போன்றவை அமைந்துள்ளன. இந்தக் குறுகிய சாலையை கடக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ரயில்வே கேட் மூடப்படுவதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதைத் தீர்க்க 1970-லேயே ரயில்வே சுரங்கப் பாதை திட்டம் அமைக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தினோம். அதன் பேரில் கடந்த 93-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப் படவில்லை.

வேங்கடபதி எம்.பி.யாக இருந்தபோது இதுபற்றி எடுத்துக் கூறினோம். இந்த சுரங்கப்பாதை லாரன்ஸ் சாலையில் வந்தால் தனக்கு ஆதரவான வசதி படைத்த நகை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த சுரங்கப்பாதை திட்டத்தை மக்கள் பயன்படாதவகையில் கடலூர்-விருத்தாசலம் சாலை தொடங்கி வண்டிப்பாளையம் சென்று அடையும்படி திட்டம் தீட்ட உத்தரவிட்டார் வேங்கடபதி. ஆனால் இது மக்களுக்குத் தெரியவில்லை. பின்பு எங்கள் குழுவின் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளும்போதுதான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும், அதன் மூலம் சிலர் பணம் பார்த்ததும் தெரியவந்தது.

இதை எடுத்துக்கூறி அய்யப்பன் எம்.எல்.ஏ.விடம் திட்டத்தை முறையாக நிறைவேற்ற வலியுறுத்தினோம். மக்களின் கஷ்டத்தைப் புரிந்துக்கொண்ட அவர் அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பி பழைய லாரன்ஸ் சாலைக்கே சுரங்கப் பாதை அமைக்க வழிவகை செய்தார். ஆனால் அமைச்சர் எம்.ஆர்.கே.-பன்னீர்செல்வம் இதில் தலையிட்டதால் அமைச்-சருக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. பல கோரிக்கைகள், போராட்டங்கள், நடத்திய பிறகும் பெரும்பான்மை மக்களுக்கு தேவையான இத்திட்டம் தற்போது கடலூர் நகரமன்றத்தின் தீர்மானத்துக்காக காத்துக் கிடக்கிறது” என்றார்.

இதுகுறித்து கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அய்யப்பனிடம் பேசினோம். “சுரங்கப்பாதை திட்டம் கோப்புகள் அனைத்தும் கையெழுத்-திடப்பட்டு டெண்டருக்காக காத்திருக்கிறோம். விரைவில் டெண்டரும் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மக்கள் நலனுக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்க என்னால் முடியும்” என்றார் சூசகமாக.

இதுகுறித்து மாவட்டச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பேசினோம். “மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதற்கு நான் தடையும் செய்யமாட்டேன், தடையாகவும் இருக்கமாட்டேன். என் உதவியை நாடினால் நிச்சயம் நான் செய்வேன். ஆனால் தேவையில்லாமல் எனக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கிறார்கள். அது தோல்வியில்தான் முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாது’’ என்றார்.

‘பிரச்னை உனக்கும் எனக்கும்தான். இதில் அப்பாவிங்க பாதிக்கப்படக் கூடாது...’

-‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசும் இந்த வசனத்தை சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப் பார்த்தால் கடலூர் மக்களுக்கு நல்லது.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1437&rid=73

கடலூரில் 2 லட்சம் வீடுகளைக் கட்ட கொட்டிக் கிடக்கிறது எரிசாம்பல்; பயன்படுமா செங்கல் தயாரிப்புக்கு?

மக்கள் தொகை பெருகப் பெருக வீடுகளின் தேவை அதிகரிக்கிறது. இதனால் கட்டுமானப் பணிக்குத் தேவையான செங்கல்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.கடலூர் மாவட்டத்தில், விளை நிலங்களை அழித்துத்தான் பெரும்பாலான செங்கல் சூளைகள் அமைக்கப்படுகின்றன. சுரங்கத் துறையின் அனுமதி பெற்றுத்தான் செங்கல் சூளைகளை அமைக்க வேண்டும் என்பது அரசாணை. ஆனால், கடலூர் மாவட்டத்தில் 40 செங்கல் சூளைகள்தான் சுரங்கத் துறையின் அனுமதி பெற்றவை. 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனுமதி பெறாமலேயே செயல்படுகின்றன. தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழத்துக்குத்தான் மணல் அல்லது சரளைக்கல் போன்றவற்றை எடுக்கலாம் என்பது சுரங்கத்துறையின் விதி. ஆனால் கடலூரில் விதிகளுக்கு மாறாக 15 அடி ஆழம் வரை களிமண், செம்மண், சரளைக்கல் போன்றவற்றை தாராளமாக எடுத்துச் செல்கிறார்கள்.இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று விட்டதாகவும், சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.செங்கல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் 4 ஆயிரம் செங்கல், லாரி வாடகையுடன் சேர்த்து ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சுனாமி நிவாரணப் பணிகள் நடைபெற்றபோது கடலூர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டதன் விளைவாக, 4 ஆயிரம் செங்கல் விலை ரூ.15 ஆயிரத்தைத் தொட்டது. தற்போது விலை ரூ.11 ஆயிரம் வரை உள்ளது.  கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில், தமிழகத்திலேயே அதிக பட்சமாக 2.10 லட்சம் வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. இவை 4 ஆண்டுகளில் கட்டப்படும் என்கிறார்கள். 2.10 லட்சம் வீடுகள் கட்ட சுமார் 20 கோடி செங்கற்கள் தேவை என்று கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.இத்தனை செங்கற்களையும் நான்கே ஆண்டுகளில் தயாரித்து அளிக்க வேண்டுமானால் எத்தனை செங்கல் சூளைகள் அமைக்க வேண்டியது இருக்கும்; அதற்காக எத்தனை விளை நிலங்களை சூளைகளாக மாற்ற வேண்டியது இருக்கும். பயன்பாட்டில் உள்ள சூளை நிலங்களில், இன்னும் எத்தனை அடி ஆழத்துக்கு மண் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படாதா? என்று கேள்விகளை எழுப்புகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.அனல் மின் நிலையங்களில் ஏராளமான டன் எரிசாம்பல், கழிவுகளாகக் கொட்டிக் கிடக்கின்றன. கடலூர் மாவட்டம் என்.எல்.சி. நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான டன் எரிசாம்பல் சேமிப்பில் உள்ளது. எரிசாம்பல் காற்றில் கலந்து மனிதனின் உடலுக்குள் புகுந்து சுவாசக் கோளாறுகளுக்கும், காசநோய் போன்ற நோய்களுக்குக் காரணமாகி விடுவதாக மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். எனவே எரிசாம்பலை பாதுகாப்புடன் அப்புறப்படுத்த, செங்கல் தயாரிப்பில் குறிப்பிட்ட சதவீதம் எரிசாம்பலைக் கலக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருப்பதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது.எரிசாம்பல் கலந்த செங்கல்கள் உறுதியானவைதான் என்று தமிழகப் பொதுப்பணித் துறை சான்று அளித்து இருக்கிறது. அதனால் செங்கல் தயாரிப்பில் சிலர் 50 சதவீதம் கூட எரி சாம்பலை கலக்குகிறார்களாம். சிமென்ட் தயாரிப்பிலும் எரிசாம்பல் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. செங்கல் சூளை அதிகரிப்பால் நீராதாரங்கள் பாதிக்கப்படும். சூளையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் அனல் அருகில் உள்ள பயிர்களைப் பாதிக்கும். கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் செங்கல் தயாரிப்பில் எரிசாம்பலை பயன்படுத்துவது இல்லை. செங்கல் தேவை திடீரென அதிகரிக்கும் சூழ்நிலையில், செங்கல்களுக்கான மண் தேவையை கணிசமாகக் குறைக்கும் வகையில், செங்கல் தயாரிப்பில் எரிசாம்பலை கலக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக அமல்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு வெகுவாகக் குறையும்.  என்.எல்.சி. நிறுவனம் எரிசாம்பலை இலவசமாக வழங்க வேண்டும். எளிதாக எடுத்துச் செல்ல பாதைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிறார் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன். இது குறித்து கடலூர் மாவட்டக் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் ராஜா கூறுகையில், செங்கல் தயாரிப்பில் எரிசாம்பல் கலக்கலாம். ஆனால் சூளை போடுவோர் அதை சரியான விகிதத்தில், முறையாகக் கலக்காததால் நம்பகத் தன்மை இல்லை. எனவே வீடு கட்டுவோரும் ஏற்பது இல்லை. சாம்பலை எந்த விகிதத்தில் கலக்க வேண்டும், எவ்வாறு கலக்க வேண்டும் என்பதை அரசு, சட்டமாக வெளியிட வேண்டும் என்றார்.

கடலூர் நகர பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கடலூரில் அரசு அலுவலர்கள் குடியிருக்கும் நகர பகுதியில் கடந்த 3 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என 450 குடும்பங்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டு வசதி வாரியம் சார்பில் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும் குடிநீர், சாலை வசதி, மின் விளக்கு பராமரிப்பு செலவிற்காக 60 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.தற்போது இந்தப் பகுதி பராமரிப்பு பணிகள் கடலூர் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள மேல்நிலை தேக்கத் தொட்டிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மேல்நிலைத் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அதிலிருந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து கிழே விழுந்தது. இதைத் தொடர்ந்து தண்ணீர் தொட்டி சீர் செய்ய டெண்டர் விடப்பட்டது.பணியை எடுத்த ஒப்பந்தக்காரர் பணியை துவங்கி மூன்ற மாதங்கள் ஆகியும் இதுவரை முடிக்காததால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட் டுள்ளது. காலை நேரத்தில் தண்ணீர் தொட்டியில் ஏற்ற முடியாமல் நேரடியாக வழங்கப்படுவதால் தண்ணீர் கலர் மாறி பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.இந்த தண்ணீரை குளியல் மற்றம் துணி துவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். குடிநீருக்கு ஒரு குடம் 3 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் குடிநீர் தொட்டி இருந்தும் நல்ல குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடன் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதானதால் வாகன போக்குவரத்து பாதிப்பு

கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முதல் கட்டமாக 33 வார்டுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதியுள்ள 13 வார்டுகள் 2வது கட்டமாக பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.குறிப்பாக சண்முகம் பிள்ளைத்தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, அங் காளம்மன் கோவில் தெருக்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் செம்மண்டத்தில் துவங்கி மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் இணையும் இந்த சாலை 100 அடி அகலம் இருப்பதால் அரசு மருத்துவமனை சாலைக்கு மாற்று சாலையாக அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாத மழையில் நெல்லிக்குப்பம் சாலை பெரிதும் பாதிக் கப்பட்ட போது பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சண்முகம் பிள்ளைத்தெரு வழியாக திருப்பி விடப்பட்டன. அதுவரை சிறந்த நிலையில் இருந்த சாலை கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்றதால் சாலைகளில் ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமானது.மஞ்சக்குப்பம் அங் காளம்மன் கோவில் அருகில் உள்ள சாலையில் ஜல்லி பெயர்ந்து யானைப் பிடிக்கும் பள்ளமானது. இதன் காரணமாக லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதாள சாக்கடைத் திட்டப்பணி செயல் படுத்தாத காரணத்தால் இந்த சாலையாவது நகராட்சி உடனே போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர் - செம்மண்டலம் சாலைக்கு மாற்று சாலையாக கருதி தரமாக போடப்பட்டால் தான் எதிர்காலத்தில் வாகனங்கள் சென்றால் பழுதடையாமல் இருக்கும்.

கடலூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் மீனவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பது,​​ கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட சுனாமி வீடுகள் கட்டுமானத்தில் நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியும் நடவடிக்கை எடுக்காதது,​​ ​ சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் மீனவர்களின் வீடுகளைக் காலி செய்ய வற்புறுத்துவது,​​ சுனாமி பாதித்த சில பகுதி மக்களுக்கு இன்னமும் வீடுகள் கட்டிக் கொடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்தும்,​​ மாவட்டம் முழுவதும் கட்டப்பட்ட வரும் சுனாமி வீடுகளின் தரத்தைக் ஆய்வுசெய்ய வேண்டும்,​​ கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.​ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ​ ​ மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜெயராமன் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கங்காதரன் வரவேற்றார்.​ மீனவர் பாதுகாப்பு பேரியக்க மாநில பொதுச் செயலர் செல்வ.ஏழுமலை,​​ குடிமக்கள் இயக்க பொறுப்பாளர்கள் தேவராஜ்,​​ ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மண்டல ஆலோசகர் பி.ஜே.அமலதாஸ்,​​ ​ தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன்,​​ பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ்,​​ தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலர் திருமார்பன்,​​ நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசகர் கவிஞர் பால்கி,​​ வழக்கறிஞர் கோ.மன்றவாணன்,​​ வெண்புறா பேரவைத் தலைவர் சி.குமார்,​​ தமிழர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பரிதிவாணன் உள்ளிட்ட பலர் பேசினர்.​ ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.

செம்மொழி மாநாடு விடுமுறை பிச்சாவரத்தில் வருமானம் உயர்வு

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற் றுலா பயணிகள் வருகை அதிகரித்து படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இம்மையத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட் டம் அதிகளவில் காணப்படும். பள்ளி திறந்ததும் பயணிகள் வரத்து குறைந்து காணப்படும். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டது.இதன் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் கடந்த ஐந்து நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் 6 ஆயிரத்து 300 பேரும், வெளி நாட்டினர் 253 பேரும் வந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகள் வரத்து மூலம் ஐந்து நாளில் படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.

கடலூரில் கடல் உள்வாங்கியது: படகுப் போக்குவரத்தில் சிரமம்

கடலூரில் சனிக்கிழமை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் கடலூரில் மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டது. சுனாமிக்குப் பிறகு கடலூர் மாவட்டக் கடல் பகுதிகளில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலில் நீரோட்டங்களிலும் ஏற்படும் பல மாற்றங்களை மீனவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனால் மீன்பிடித் தொழில் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. கடலில் ஏற்படும் மாற்றங்களால் கடலூர் மாவட்டத்தில் மீன் வரத்து வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் மீன் பற்றாக்குறையும், விலை ஏற்றமும் மீன் உணவை விரும்புவோரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் உள்வாங்கியது குறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், சுனாமிக்குப் பிறகு வங்கக் கடலில் இத்தகைய மாற்றங்கள் மிகச் சாதாரணமாகி விட்டது. கடந்த இரு நாள்களாக கடல் உள்வாங்கிக் காணப்படுகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு இந்த மாற்றங்கள் அடிக்கடி நிகழும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் மீன்பிடித் தொழிலில் தற்போதைக்கு பெரிய மாற்றம் எதுவும் இல்லை. கடலூர் துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்ந்து கிடப்பதால், கடல் உள்வாங்கி இருக்கும் நேரங்களில், மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் சென்றுவருவது சிரமமாக இருக்கிறது. மீன் பிடித்துவிட்டு படகுகள் கரை திரும்பும்போது, கடல் உள்வாங்கி விட்டால், படகை கடலில் நங்கூரம் போட்டு நிறுத்தி விடுவோம். அங்கேயே காத்து இருந்து, பின்னர் கடல் மட்டம் உயரும் போதுதான், படகுகள் கரைக்குத் திரும்பும். கடல் உள்வாங்கி இருக்கும் நேரங்களில் அதைப் பொருள்படுத்தாமல் சிலர், கடலுக்குள் செல்லவோ, கரை திரும்பவோ நேரிடும்போது, படகுகள் சேதம் அடைந்து, பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. பின்னர் அந்தப் படகு உரிமையாளர் வேறு படகுகளில் கூலிக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள் என்றார்.

நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களுக்காக

நடைபாதையை ஆக்கிரமித்திருக்கும் கடைக்காரர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு வசதியாக, ரூ. 20 லட்சத்தில் அழகுபடுத்தி டைல்ஸ் (தரை ஓடு) பதிக்கும் பணியை கடலூர் நகராட்சி மேற்கொண்டு வருகிறது.கடலூர் உட்லண்ட்ஸ் பகுதியில் இருந்து சில்வர் பீச் வரை சுமார் 5 கி.மீ. தூரம், சுனாமி நிவாரண நிதியில் இருந்து, சாலையின் இருபுறமும் ரூ. 5 கோடி செலவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு உள்ளது. வாய்க்கால் மீது காங்கிரீட் தளம் அமைத்து மூடப்பட்டு, நடைபாதையாகப் மாற்றப்பட்டு உள்ளது. இப்பணி முடிந்து ஓராண்டு ஆகிவிட்டது. மாநில நெடுஞ்சாலைப் பட்டியலில் இச்சாலை உள்ளது.நடைபாதை அமைக்கும் பணிக்காக, ஒரு சில நாள்கள் காலி செய்து கொடுத்த வியாபாரிகள், பணி முடிந்ததும் நடைபாதை மீது, மீண்டும் கடைகளை அமைத்துக் கொண்டனர்.தற்போது இந்த நடைபாதையை அழகுபடுத்தும் முயற்சியாக, கடலூர் நகராட்சி ரூ. 20 லட்சத்தில் டைல்ஸ் பதிக்கும் பணியைக் ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறது. பிற்பட்ட பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பணி நடப்பதாக நகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இப்பணியும் மிகவும் தரமற்றதாக செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.÷காங்கிரீட் தளத்தின் மீது 2 அங்குல உயரத்துக்கு ஆற்று மணல் கொட்டி, அதில் சிமென்டைக் கரைத்து லேசாகத் தெளித்துவிட்டு, அதன்மீது டைல்ஸ்கள் வைத்து வருகிறார்கள்.டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைபாதையில் மீண்டும் கடைகள் முளைத்து விட்டன. மேலும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள நடைபாதையில், சில தினங்களாக லாரிகளையும் நிறுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் டைல்ஸ்கள் நொறுங்கத் தொடங்கி விட்டன. ஏற்கெனவே கடலூர் நகர ஆட்டோக்கள், நடைபாதைகளைத்தான் ஆட்டோ ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகின்றன.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது நகராட்சிக்கு வேண்டாத வேலை. அங்கு டைல்ஸ் பதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ரூ. 15 கோடிக்கு மேல் தமிழக அரசு மானியமாக வழங்கினால்தான்  சாலைகளை செப்பனிட முடியும் என்ற நிலையில் இருக்கும் கடலூர் நகராட்சி, இந்த ரூ. 20 லட்சத்தைக் கொண்டு இரு சாலைகளைச் செப்பனிட முடியும் என்று  மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.கடற்கரைச் சாலையில் நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து வணிகர்கள் கடைகளை அமைத்து இருப்பதாலும் உட்லண்ட்ஸ் திருப்பத்தில் ஆட்டோக்களை இடையூராக நிறுத்துவதாலும், பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும்  இச்சாலையில், தொடர்ந்து போக்குரத்து நெரிசலும், விபத்துக்களும் தொடர் கதையாகி வருகிறது.  இந்நிலையில் கடலூரில் மாதம் ஒருமுறை  "நடைபாதை நடப்பதற்கே' என்ற போராட்டமும், வாரம் ஒருமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் போராட்டமும் நடத்தப்போவதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை எச்சரித்துள்ளது.பேரவையின் நிர்வாகப் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் இது தொடர்பாக தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் மற்றும் கடலூர் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு வியாழக்கிழமை  கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

மெள்ள மெள்ளக் கொல்லும்

''மேட்டூர், கடலூர் உட்பட பல இடங்களில், மெள்ள மெள்ளக் கொல்லும் ஆலைக் கழிவு அபாயம் அரங்கேறி வருகிறது. இந்த மாதிரியான ஆலைகள் பலவும் அரசின் அனுமதி இல்லாமலேயே இயங்குகின்றன. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 2,500 நடுத்தர, பெரும் தொழில் நிறுவனங்கள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குகின்றன. இப்படி இருந்தால், அரசின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?'' என்று ஆதங்கத்துடன் சொன்னார்.
போபால் நீதிக்கான பிரசாரத்தின் உறுப்பினரும், சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்வேதா நாராயணையும் சந்தித்தோம், ''கடலூர், பெரும் ஆபத்து மையமாக மாறிவருகிறது. அங்கு உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளன. தொழிற்பேட்டையைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் கெட்டுவிட்டது. 2008-ல் இங்கு ஆய்வுசெய்த மத்திய அரசின் 'நீரி' சூழல் நிறுவனம், 'இந்த ஆலைகளின் கழிவுகளால் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது' என அறிக்கை அளித்தது. நான்கு ஆண்டுகளாக நாங்கள் எடுத்த 12 'மாதிரி' ஆய்வுகளில், 'இங்கு வெளியேறும் 25 வேதிக் கழிவுகளில், 12 கழிவுகள் புற்றுநோயை உண்டாக்குபவை. அதிலும், பென்சீன் என்பது, மற்றவற்றைவிட 26 மடங்கு அதிகமாகப் புற்றுநோயை உண்டாக்கும்' எனக் கண்டறிந்தோம். அதேபோல், டால்மியாபுரம் சிமென்ட் ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில், மூளையைப் பாதிக்கும் காரீயம், பாதரசம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காட்மியம், பெரிலியம், பேரியம் உள்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் இருப்பதும் தெரிந்தது. கடந்த பிப்ரவரி நிலவரப்படி, கடலூர் சிப்காட்டில் 25 ஆலைகளில் 20 ஆலைகளுக்கு லைசென்ஸ் இல்லை!'' என்று சொல்லி மூச்சுத் திணறவைத்தார்.
- இரா. தமிழ்க்கனல்

மாங்குரோவ் காடுகளை அழிக்கும் அனல்மின் நிலையங்கள் கூடாது

மாங்குரோவ் காடுகளை அழிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் அனல் மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று, கடலூரில் சனிக்கிழமை நடந்த உலகச் சுற்றுச்சூழல் தின விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு மற்றும் சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு ஆகியவற்றின் சார்பில் உலக  சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:இந்தியாவில் மாங்குரோவ் காடுகள் அதிகம் உள்ள கடலூர் பிச்சாவரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பால் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருகின்றன. பூமி வெப்பமடைவதால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எதிராக கடலூர் மாங்குரோவ் காடுகளுக்கு அருகே 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையங்களுக்கு அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. மாங்குரோவ் காடுகளுக்கு அருகே அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி கூடாது.இந்தியாவில் வாழத் தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் கடலூர் 16-வது இடத்தில் இருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது. கடலூர், நாகை மாவட்டங்களில் 250 ச.கி.மீ. பரப்பளவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மேலும் ரசாயன ஆலைகளையும், அனல்மின் நிலையங்களையும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் நிறுவக் கூடாது. தற்போது உள்ள ஆலைகள் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பு சார்பில் பள்ளிகளில் அதிக அளவில் மரங்களை நடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் நிர்வாகச் செயலர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார். பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் சிறப்புரை நிகழ்த்தினார். சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிர்வாகிகள் நெய்வேலி தங்கம், பண்ருட்டி நடராஜன், மணிவண்ணன், சிப்காட் சுற்றுச்சூழல் கணகாணிப்புக் குழு உறுப்பினர்கள் புகழேந்தி, சிவசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஆணையர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திலுள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் தொழிலாளர் ஆய்வர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களும் பெயர் பலகை தமிழில் கட்டாயமாக இருக்க வேண்டும். பிற மொழிகளை பயன்படுத்தும் போது தமிழ் மொழி முதலிலும், ஆங்கிலம் 2வதாகவும், பிறமொழி அடுத்தும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தொழிலாளர் ஆய்வர்கள் ஆய்வு செய்து நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிந்து வருகின்றனர்.இந்த ஆய்வுகள் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையொட்டி அனைத்து கடைகள், உணவு நிறுவனங்களிலும் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கடலூரில்புவி வெப்பமாதல் விழிப்புணர்வு விழா

புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு விழா கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நடந்தது.வட்டார தளபதி கேதார்நாதன் தலைமை தாங்கினார். துணை வட் டார தளபதி ஜெயந்தி ரவிச் சந்திரன் முன்னிலை வகித் தார். கம்பெனி காமாண்டர் ரகுபதி வரவேற்றார்.ஊர்க்காவல் படை சார்பில் புவி வெப்பமாதல் குறித்து நடந்த விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு விழுப்புரம் சரக துணை தளபதி ராஜேந்திரன் பரிசு வழங்கி பேசினார். உதவி படை தளபதி பழனி நன்றி கூறினார்.

சொத்து ஜாமீனின்றி கல்விக் கடன் தர வங்கி மறுப்பு

பல்வேறு கனவுகளோடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஏழை விவசாயி மகளுக்கு, வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால், கல்லூரியில் சேர்ந்தும் படிப்பை தொடர முடியாமல், கூலி வேலை செய்து வருகிறார்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமம் அருகே உள்ள நடுக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் - மல்லிகா ஏழை விவசாய தம்பதியினரின் மகள் பிரவினா.  இவர், 2007ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 867 மதிப்பெண் பெற்றார். 72 சதவீத மதிப்பெண் பெற்ற இவர், வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது சிலர் உயர் கல்வி படிக்க வங்கிகள் கடன் தருவதாக கூறினர்.அதை நம்பிய பன்னீர்செல்வம், தனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பி, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தார். கவுன்சிலிங்கில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சின்ன கோளம்பாக்கத்தில் உள்ள கற்பக வினாயகா பல் மருத்துவக் கல்லூரியில் "பி.டி.எஸ்.,' சீட் கிடைத்தது.  மகிழ்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், பிரவினாவை கல்லூரியில் சேர்த்தார்.

அப்போது, கல்லூரி நிர்வாகம் கல்லூரி விடுதியில்  ஐந்தாண்டுகள் (2007-12) தங்கி படிக்க, மொத்தம் நான்கு லட்சத்து 73 ஆயிரத்து 500 கட்ட வேண்டும். அதில், முதலாண்டு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 500ம், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தலா ஒரு லட்சத்து 10 ஆயிரமும், இறுதியாண்டு விடுதி கட்டணம் மட்டும் 25 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறியது. பன்னீர்செல்வம் தனது மகளின் உயர் கல்விக்காக கடன் கோரி, பண்ருட்டியில் உள்ள இந்தியன் வங்கிக்கு விண்ணப்பித்தார். அவர்கள், காடாம்புலியூரில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு பரிந்துரை செய்தனர். மனுவை பரிசீலித்த லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள், 10 லட்சம் ரூபாயிற்கு சொத்து ஜாமீன் அல்லது அரசு ஊழியர்கள் இருவர் ஜாமீன் அளித்தால் கடன் தருவதாக கூறினர். பன்னீர்செல்வத்தால் சொத்து ஜாமீன் கொடுக்க முடியாததால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கட்டணம் செலுத்தாததால், மாணவி பிரவினாவை இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.

இதுகுறித்து, பன்னீர்செல்வம் பிரதமர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்.  அனைவருமே மனு மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்திருப்பதாக பதில் அனுப்பினர். இதனால், அடுத்த ஆண்டாவது வங்கியில் "லோன்' கிடைத்துவிடும்  எனக் கருதிய பன்னீர்செல்வம் 2008ம் ஆண்டு, மீண்டும் தனது மகளை அதே கல்லூரியில் சேர்த்துவிட்டு மீண்டும் கடன் கோரி வங்கிக்கு விண்ணப்பித்தார். அப்போதும் ஜாமீன் தராததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கல்லூரிக்கு பணம் கட்டாததால், மாணவி பிரவினாவை மீண்டும் அதேபோன்று இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.

பல்வேறு கனவுகளுடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி பிரவினாவிற்கு, வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்க மறுத்து விட்டதால் தற்போது, பெற்றோருடன் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.கல்விக் கடனுக்கு எந்த ஜாமீனும் தேவையில்லை. கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் கல்லூரி கட்டண பட்டியல் இருந்தால் போதும் என, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மேடைதோறும் பேசி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் வேறு விதமாக உள்ளதால், ஏழை மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

கடலூரில் நேற்று அனல் காற்று வீசியதால் சில்வர் பீச்சில் மக்கள் கூட் டம் அதிகமாக இருந்தது.
சுனாமிக்கு பிறகு வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. சில நேரங்களில் கடல் உள்வாங்குவதும், வெளியே வருவதும் நடந்து வருகிறது. கடந்த 2 வாரம் முன் சுனாமி பீதி காரணமாக பீச்சிற்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட "லைலா' புயல் காரணமாக மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் சில்வர் பீச்சிற்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந் திருந்தது. நேற்று கடுமையான வெயில் அடித்ததால் அனல் காற்று வீசியது. அதனால் மாலை நேரத்தில் சில்வர் பீச்சில் மக்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

திருப்பாதிரிப்புலியூரில் ரயில்கள் நிற்காததால் ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பு

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காததால் பயணிகள் கவலையடைந்துள்ளனர்.
விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில் இயக்கப்பட்ட சோழன் விரைவு ரயில் தற்போது மீண்டும் இயக் கப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூரில் ரயில் நிலையம் வழியாக பகல் 12.30 மணிக்கு கடக்கும் இந்த ரயில் நிற்காமல் செல்வதால் பயணிகளுக்கு ஏமாற் றத்தை அளித்துள்ளது. ஆனால் முதுநகர் ஜங்ஷனில் மட்டும் நின்று செல்கின்றன.கடலூர் புதுநகரில் இருந்து தான் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்வது வழக்கம். இங்கிருந்து முதுநகருக்கு 40 ரூபாய் கொடுத்து ஆட்டோ பிடித்து செல்வதால் கூடுதல் கட்டணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் ரயில் பயணம் செய்ய விரும்புவதில்லை.
அதேப்போல ராமேஸ் வரம் - புவனேஸ்வர் (எண் 8495), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 4260), ராமேஸ்வரம் - புவனேஸ் வர்(எண் 4259), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 8496) ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத் தும் விழுப்புரம் ஜங்ஷனுக்கு பிறகு மயிலாடுதுறையில் மட்டுமே நின்று செல்கின்றன.
திருப்பாதிரிப்புலியூரை கடந்து செல்லும் ரயில்கள் மாவட்ட தலைநகரில் நிற்காமல் செல்வதால் கடலூர் பயணிகள் செல்ல முடியாமல் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் ரயில்வே துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாயை இழந்து வருகிறது. எனவே கடலூரை கடந்து செல்லும் ரயில்கள் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே இலாகா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை: நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட, நகராட்சி தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் (படம்) நடத்தின.கடலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் லாரன்ஸ் சாலையின் குறுக்கே உள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது உடனடி, அத்தியாவசியத் தேவையாகவும் உள்ளது. ரயில்கள் முழுமையாக இயக்கப்படும்போது, போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதைத் தடுக்க, லாரன்ஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், வண்டிப்பாளையம் சாலையையும், சரவணன் நகரையும் இணைக்கும் 300 மீட்டர் சாலையை உருவாக்க வேண்டும் என்பது கடலூர் நகர மக்களின் கோரிக்கை. மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் திறமையாகச் செயல்பட்டு இருக்குமாயின், 3 ஆண்டுகளாக அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளின் நடைபெற்றபோதே, ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டத்துக்கும், சரவணன் நகர் இணைப்புச் சாலை திட்டத்துக்கும், தீர்வு காணப்பட்டு இருக்கும் என்பது, கடலூர் மக்களின் கருத்து. ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடந்தது. நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார்.  கூட்டமைப்பின் நிர்வாகிகள் எம்.மருதவாணன், வெண்புறா குமார், திருமார்பன், துரை.வேலு, பழநி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ச.சிவராமன், பண்டரிநாதன், அருள்செல்வம், மணிவண்ணன், அரங்கநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.

படுகுழிக்குள் வீழ்த்தும் பாதாள சாக்கடைத் திட்டம்

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் நகரில் பலரை படுகுழிக்குள் வீழ்த்திக் கொண்டு இருக்கிறது.  இத்திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளங்களில், குழிகளில், நூற்றுக் கணக்கானோர் விழுந்து காயம் அடைந்துள்ளனர்; பலர் இறந்துள்ளனர்.  பாதாள சாக்கடைத் திட்டத்தில் விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ அரசோ, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரோ பொறுப்பல்ல என்பது, காண்ட்ராக்ட் விதிமுறைகளில் இருப்பதால், திட்டத்தை நிறைவேற்றுவோர், மக்கள்படும் அவதியைக் கண்டு சற்றும் கவலை கொள்வதில்லை. கடலூரில் மூன்றில் இரு பங்கு வார்டுகளில், ரூ.44 கோடியில் தொடங்கி ரூ.70 கோடியை தொட்டுக் கொண்டு இருக்கும் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து விட்டது.ஒரு திட்டம் எப்போது முடிவடையும் என்ற கேள்வி, அத்திட்டத்தின் பலனை எப்போது அனுபவிப்போம் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும். அது திட்டத்தின் வெற்றியை மனதில் கொண்டதாக அமையும். ஆனால் கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது முடிவடையும் என்ற கேள்வி, இத்திட்டத்தை நிறைவேற்றும்போது ஏற்படும் துன்பங்களில் இருந்து, துயரங்களில் இருந்து, சங்கடங்களில் இருந்து, கடலூர் மக்கள் எப்போது விடுபடுவார்கள் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.வரும் 20 ஆண்டுகளில் கடலூர் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் என்ற கணக்கின் அடிப்படையில், கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் முழுமையான பயன்பாட்டுக்கு வருவதற்கு, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடங்கி ஓரிரு ஆண்டுகளிலேயே பிரச்னைகளும் தோன்றிவிடும் என்றும், அனுபவமிக்க பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கியது முதல் பள்ளத்தில் விழுந்து திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மூவர், பொதுமக்களில் ஒருவர், விபத்தில் சிக்கி 4 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் விழுந்து, பலத்த காயங்களுடன், பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து உயிர் பிழைத்து உள்ளனர்.இந்தப் பட்டியல் மேலும் தொடரும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் 3-வது கட்டமாக தோண்டப்பட்ட குழியில், செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் சைக்கிளுடன் விழுந்தார். அவர் நீதிமன்றக் காவலாளியான சந்திரன் (58) என்று பின்னர் தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து, அவரைக் காப்பாற்றி உள்ளனர். திட்டம் முடிவடையும் வரை இத்தகைய சம்பவங்கள் தொடரவும், நல்ல சாலைகளை கடலூர் மக்கள் அனுபவிக்க முடியாத துயரம் தொடரவும் இத்திட்டம் வழிவகுத்து உள்ளது.  ஆனால் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.44 கோடியில் இருந்து ரூ.70 கோடியாக தற்போது உயர்ந்து இருக்கிறது. இது மேலும் உயராது என்று யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாத நிலைக்குச் சென்று கொண்டு இருப்பதுதான் வேதனை தரும் விஷயமாகக் கருதுகிறார்கள் கடலூர் மக்கள். மண்ணில் புதைக்கப்படும் பணத்தை யாரால் ஆய்வு செய்ய முடியும்.

மாயமான மீனவர்களில் மூவர் கரை திரும்பினர் : மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரம்

மீன் பிடிக்க சென்று, காணாமல் போன மூன்று மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். மற்றொரு மீனவரை தேடும் பணி நடந்து வருகிறது.
லைலா புயல் காரணமாக, பலத்த காற்று வீசும் என்பதால், தூத்துக்குடியில், 2,300 நாட்டுப் படகுகள், நேற்று கடலுக்கு செல்லவில்லை. கடலூர் தேவனாம்பட் டினத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (60), அவரது மகன் ஆனந்தன் (26), பூபாலன் (23) ஆகிய மூவரும், கடந்த 18ம் தேதி, பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இதேபோல், சகாய ராஜ் என்பவர் மீன்பிடிக்க தனியாக சென்றார். இவர்கள், நேற்று முன்தினம் மதியம் 3 மணி வரை, கரை திரும்பவில்லை. அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராததால், உறவினர்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த கடலோர பாதுகாப்பு படை யினர், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, ஆழ்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெட்ஜரில் அவர் கள் தஞ்சமடைந்தனர். கரைக்கு திரும்பிய மீன வர்கள் கூறுகையில், "புயல் எச்சரிக்கை விடுவதற்கு முன்பாகவே கடலுக்கு சென்றுவிட்டோம். இன்ஜின் பழுதானதால் கரைக்கு திரும்ப முடியவில்லை. மூன்று பேரும் மொபைல் போன் எடுத்து செல்லாததால், நாங்கள் கடலில் தத்தளித்ததை, தெரிவிக்க முடியவில்லை. நாங்களே இன்ஜினை பழுதுபார்த்து கரைக்கு திரும் பும் முயற்சியில் ஈடுபட் டோம். ஆனால் முடியவில்லை. வேறுவழியின்றி டிரெட்ஜரில் தஞ்சமடைந் தோம்' என்றனர்.

பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலில்

பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கும் வசதி பெட்டிகள் அதிகமாக உள்ளது. ஆனால் இரண் டாம் வகுப்புக்கு உட்காரும் வசதிக்கு முன்பதிவு இல்லாததால் பயணிகள் அவதி அடைகின்றனர்.
சென்னை & திருச்சி இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக சோழன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினசரி காலை சென்னை எழும்பூரில் 8.20க்கு புறப்படும் இந்த ரயில், மாலை 4.35க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்சியில் காலை 9.10க்கு புறப்படும் ரயில் மாலை 5.45க்கு சென் னையை வந்தடைகிறது.
ஆனால் இதன் முன்பதி வால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்புக்கான உட்கார்ந்து செல்லும் சீட்டுகளுக்கு முன்பதிவு இல்லை. அதற்கு மாறாக 10 பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கே முன்பதிவு (பர்த்கோச்) உள்ளது. பொது வாக பகல் நேர ரயில்களில் பெரும்பாலான பயணிகள் தூங்க மாட்டார்கள். ஆனால் இந்த ரயிலில் 10 பெட்டிகள் தூங்கும் வசதியாக இருப்பதால் இந்த பெட்டிகளுக்கான முன்பதிவு, மற்றும் பய ணத்தை யாரும் விரும்பவில்லை.
அதற்கு மாறாக பயணி கள் அதிகம் விரும்பும் இரண்டாம் வகுப்பு உட் காரும் வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட பெட்டிகளை அதிக அளவில் இணைத்தால் பயணிகளுக்கு உதவியாக இருப்பதோடு, ரயில்வே நிர்வாகத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
பயணிகள் அவதி

புதுச்சேரி கார்களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம்! : தாமாக முன்வந்து வரி செலுத்துவது அதிகரிப்பு

தமிழகத்தில் சாலை வரி செலுத்தாத புதுச்சேரி பதிவெண் கொண்ட கார் களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தை விட புதுச் சேரியில் வாகனங்கள் விலை குறைவாக இருப்பதால் தமிழக எல்லையோர கிராம மக்கள் இதை பயன்படுத்திக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. நாற்பதாயிரம்ரூபாய் மதிப் புள்ள டூ விலர் வாங்குவோருக்கு 4000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. புதுச்சேரியின் எல்லையோரத்தில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்ட சில கிராம மக்கள் புதுச்சேரியில் கொடுக்கல் வாங்கல், பெண் எடுப்பது போன்ற வற்றில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அங்குள்ள வாகனங்களை தமிழக பகுதிகளில் ஊடுருவுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
மேலும் புதுச்சேரி எல்லையோர கிராம மக்கள் போலியான முகவரி கொடுத்து வாகனங் களை வாங்கி அதை தமிழக பகுதிகளில் ஓட்டி வருவது அதிகரித்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும் சாலை வரி செலுத்திவிட்டு தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மாவட் டங்களில் ஓட்டி சாலையை தேய்ப்பது சரியானதா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொ ருட்டு புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங் கள் தமிழக பகுதியில் ஓட்ட தனியாக சாலை வரி செலுத்த அறிவுறுத்தப் பட்டது.
உண்மையான முகவரியில் வாங்கப்பட்ட வாகனங்களாக இருந்தால் ஆர். சி.புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை புதுச்சேரியில் வாங்கி இருக்க வேண்டும். கடலூரில் ஓட்டுனர் உரிமம் பெற்று புதுச்சேரி வாகன பதிவெண் கொண்ட டூ வீலர்களை ஓட்டினால் அது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. அவ்வாறு விதிமுறை மீறி தமிழகத்தில் ஓட்டும் வாகனங் கள் சோதனை செய்யப் பட்டு உடனுக்குடன் சாலை வரி செலுத்துமாறு பணிக்கப்படுகின்றனர்.
அதைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் தினம் தினம் கடலூர்-புதுச்சேரி மாவட்ட எல்லையில் வாகன சோதனை செய்து வருகின்றனர். கடலூரில் மட்டும் இதுவரை 1000த் திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள் சோதனை செய்து பிடித்துள்ளனர்.
சோதனை செய்யும் சில போலீசார் வழக்குபோடமல் இருக்க சாலைவரி கட்டணத்தில் பாதித்தொகையை கேட்கின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி செலுத்தி வருகின்றனர். வாகனம் வாங்கும் தொகையில் 8 சதவீதம் சாலைவரியாக செலுத்த வேண்டும். இவையெல்லாம் டூ வீலர் கள் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி பதிவெண் கார்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன. ஆனால் அதிகாரிகள் கார்களை சோதனை செய்து பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதை விட அரசுக்கு அதிக வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க கார்களை பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர். கடலூர் மாவட் டத்தில் இதுவரை 4 பழைய வாகனங்களை மட்டுமே பிடித்துள்ளனர். அரசுக்கு கார்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டக்கூடியதாக இருந்தும் அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என புரியாத புதிராக உள்ளது.

கட​லூர் மாவட்​டத்​தில் ​ரூ.420 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்​புப் பணி​கள்​: மத்​திய நீர்​வள ஆணைய குழு​வி​னர் ஆய்வு

கட​லூர் மாவட்​டத்​தில் ரூ.420 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்பு பணி​கள் மேற்​கொள்ள மத்​திய அரசு ஒப்​பு​தல் வழங்​கு​வ​தற்​காக மத்​திய நீர்​வள ஆணைய குழு​வி​னர் மே15,16 தேதி​க​ளில் ஆய்வு மேற்​கொண்​ட​னர்.​த​மி​ழ​ கத்​தில் திருச்சி,​​ நாகப்​பட்​டி​னம்,​​ கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ அரி​ய​லூர்,​​ பெரம்​ப​லூர்,​​ திருச்சி,​​ புதுக்​கோட்டை ஆகிய 8 மாவட்​டங்​க​ளில் ரூ.620 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்பு பணி​கள் மேற்​கொள்ள தமி​ழ​க​அ​ரசு அறி​வித்​துள்​ளது.​ இதில் 75 சத​வீத தொகை மத்​திய அர​சும்,​​ 25 சத​வீத தொகை மாநில அர​சும் வழங்​கு​கி​றது.​இத்​திட் ​டங்​க​ளுக்கு மத்​திய அரசு நிர்​வாக அனு​மதி மற்​றும் ஒப்​பு​தல் வழங்க தமி​ழ​கத்​தில் மேற்​கண்ட மாவட்​டங்​க​ளில் மத்​திய அரசு நீர்​வள ஆணைய இயக்​கு​நர் எஸ்.​ லால்,​​ தலை​மைப் பொறி​யா​ளர் சௌத்​திரி ஆகி​யோர் மேற்​கொண்​டுள்​ள​னர்.​க​ட​லூர் மாவட்​டத்​தில் வெள்​ளாற்று கரையை பலப்​ப​டுத்​து​வது,​​ கொள்​ளி​டம் வடக்கு கரையை பலப்​ப​டுத்​து​தல்,​​ கான்​சா​கிப் வாய்க்​கால் இரு​க​ரையை உயர்த்​து​வது உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​ப​ட​வுள்​ளன.​மத்​திய அரசு நீர்​வள ஆணை​யக் குழு​வி​னர் அணைக்​கரை,​​ வல்​லம்​ப​டுகை ​(கொள்​ளி​டம் ஆற்​றங்​கரை)​,​​ அம்​மாப்​பேட்டை ​(கான்​சா​கிப் வாய்க்​கால்)​,​​ பாசி​முத்​தான்​ஓடை உள்​ளிட்ட பகு​தி​களை பார்​வை​யிட்​ட​னர்.​அ​வர்​க​ளு​டன் கட​லூர் மாவட்ட பொதுப்​ப​ணித் துறை கண்​கா​ணிப்பு பொறி​யா​ளர் நஞ்​சன்,​​ செயற்​பொ​றி​யா​ளர் செல்​வ​ராஜ் மற்​றும் அதி​கா​ரி​கள் உடன் சென்​ற​னர்.​அப் ​போது அக் குழு​வி​ன​ரி​டம் விவ​சா​யி​கள் சார்​பில் உழ​வர் கூட்​ட​மைப்​புத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் பல்​வேறு கோரிக்​கை​கள் அடங்​கிய மனு ஒன்றை அளித்​தார்.​ அம்​ம​னு​வில் சிதம்​ப​ரம் அருகே உள்ள அம்​மா​பேட்டை பாலம் குறு​கி​ய​தாக உள்​ள​தால் வெள்​ள​நீர் வடியை வழி செல்​லா​மல் ஆண்​டு​தோ​றும் சேதத்தை ஏற்​ப​டுத்​து​கி​றது.​எ​னவே அங்கு அக​ல​மாக புதிய பாலம் அமைக்க வேண்​டும்.​ நீர்​நிலை நிறைந்த வாய்க்​கால்​கள் குறுக்கே எதிர்​கா​லத்​தில் பாலம் அமைக்​கும் முன் நெடுஞ்​சா​லைத்​துறை,​​ ரயில்வே துறை அனு​மதி பெற்று அவர்​க​ளு​டன் இணைந்து பொதுப்​ப​ணித்​துறை பாலத்தை அமைக்க வேண்​டும்.​சி​தம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் ஆண்​டு​தோ​றும் ஏற்​ப​டும் வெள்​ளச்​சே​தத்தை தவிர்க்​க​வும்,​​ விவ​சா​யத்தை காப்​பாற்ற நிரந்​தர நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ மேற்​கொண்ட வெள்​ளத்​த​டுப்​புப் பணி​கள் தொடங்கு முன்பு அப்​ப​ணி​கள் சரி​யாக நடை​பெ​று​கி​றதா என கண்​கா​ணிக்க கண்​கா​ணிப்​புக் குழு அமைக்க வேண்​டும் என பி.ரவீந்​தி​ரன் தெரி​வித்​துள்​ளார்.

மாண​வர்​க​ளுக்கு வச​தி​யாக ​ரயில்​களை இயக்​கக் கோரிக்கை

அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பயி​லும் மாண​வர்​க​ளுக்கு வச​தி​யாக பாசஞ்​சர் ரயில்​க​ளின் நேரங்​களை மாற்றி அமைக்க வேண்​டும்,​​ கூடு​தல் ரயில்​களை இயக்க வேண்​டும் என்று,​​ ரயில்வே இலா​கா​வுக்​குத் தென்​னக ரயில்வே பய​ணி​கள் ஆலோ​ச​னைக்​குழு உறுப்​பி​னர் முனை​வர் பி.சிவ​கு​மார் கோரிக்கை விடுத்​துள்​ளார்.​ ​அ​வர் ரயில்வே பொது மேலா​ள​ருக்கு புதன்​கி​ழமை அனுப்​பிய கோரிக்கை மனு:​ ​ ​அ​கல ரயில்​பா​தைத் திட்​டம் நிறை​வேற்​றப்​பட்ட பின்​னர்,​
​ கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யத்​தில் எக்ஸ்​பி​ரஸ் ரயில்​கள் 
நிற்​கா​மல் செல்​வது பய​ணி​களை பெரி​தும் பாதிக்​கி​றது.​ துறை​மு​கம் சந்​திப்பு ரயில் நிலை​யம் சென்று எக்ஸ்​பி​ரஸ் ரயில்​க​ளைப் பிடிப்​பது மக்​க​ளுக்​குச் 
சாத்​தி​ய​மாக இல்லை.​ இத​னால் திருப்​பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யத்​தின் 
வரு​வாய் வெகு​வா​கப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது.​÷50 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக அனைத்து எக்ஸ்​பிஸ் ரயில்​க​ளும் நிற்​கும் ரயில் நிலை​ய​மாக இருந்து 
வந்​துள்​ளது திருப்​பாப்பு​லி​யூர்.​ திரு​வந்​தி​பு​ரம் தேவ​நா​த​சு​வாமி கோயில்,​
​ திருப்​பாப்பு​லி​யூர் பாட​லீஸ்​வ​ரர் கோயில் ஆகி​ய​வற்​றுக்​குச் சென்​று​வ​ரும் ஆயி​ரக்​க​ணக்​கான பக்​தர்​க​ளுக்​கும்,​​ சுற்​று​லாப் பய​ணி​க​ளுக்​கும்,​​ தின​மும் சென்னை செல்​லும் பய​ணி​க​ளுக்​கும்,​​ திருப்​பாப்பு​லி​யூர்,​​ பண்​ருட்டி,​​ தாம்​ப​ரம் ரயில் நிலை​யங்​க​ளில் சோழன் எக்ஸ்​பி​ரஸ் ரயில்​கள் நிற்​கா​தது பெருத்த ஏமாற்​ற​மாக உள்​ளது.​அண்ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக மாண​வர்​கள் மற்​றும் அலு​வ​ல​கங்​க​ளுக்​குச் செல்​வோ​ருக்கு வச​தி​யாக,​​ விழுப்​பு​ரம் மயி​லா​டு​துறை இடையே முன்பு காலை​யில் 2 ரயில்​க​ளும் மாலை​யில் 2 ரயில்​க​ளும் 
இயக்​கப்​பட்​டன.​ தற்​போது காலை,​​ மாலை தலா ஒரு ரயில் மட்​டுமே 
இயக்​கப்​ப​டு​வது மாண​வர்​க​ளுக்​கும் அல​வ​ல​கம் செல்​வோ​ருக்​கும் 
போது​மா​ன​தாக இல்லை.​ ரயில்​க​ளின் இயக்க நேரங்​க​ளும் ஏற்​ற​தாக இல்லை.​ எனவே கூடு​த​லாக இரு பாசஞ்​சர் ரயில்​களை சரி​யான நேரத்​தில் இயக்க வேண்​டும் என்​றும் சிவ​கு​மார் மனு​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

கடலூர் மாவட்டத்தில் 82 சுய​நி​திப் பள்​ளி​க​ளுக்கு கல்​விக் கட்​டண விவரம் வெளியீடு

நீதி​பதி கோவிந்​த​ராஜ் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு​வின் பரிந்​து​ரைப்​படி,​​ சுய​நி​திப் பள்​ளி​க​ளுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட கல்​விக் கட்​டண அறிக்​கை​களை,​​ கட​லூர் மாவட்​டத்​தில் இது​வரை 82 பள்​ளி​கள் பெற்​றுச் சென்​றுள்​ளன.​த​னி​யார் சுய​நி​திப் பள்​ளி​கள்,​​ மெட்​ரிக் பள்​ளி​கள் மாண​வர்​க​ளி​டம் அப​ரி​மி​த​மான கட்​ட​ணம் வசூ​லிப்​ப​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன.​ ​த​னி​யார் சுய​நி​திப் பள்​ளி​க​ளில் கட்​ட​ணம் வசூ​லிப்​பதை முறைப்​ப​டுத்த தமி​ழக அரசு சட்​டம் இயற்றி இருக்​கி​றது.​ இந்​தச் சட்​டம் செல்​லும் என்று உச்ச நீதி​மன்​றம் அண்​மை​யில் தீர்ப்பு அளித்​துள்​ளது.​ ​இந்த நிலை​யில் நீதி​பதி கோவிந்​த​ராஜ் குழு​வின் பரிந்​து​ரைப்​படி,​​ ஒவ்​வொரு பள்​ளி​க​ளும் எவ்​வ​ளவு கட்​ட​ணம் வசூ​லிக்​க​லாம் என்று நிர்​ண​யம் செய்​யப்​பட்ட அறிக்​கை​கள் பள்​ளி​க​ளுக்கு சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​கங்​கள் மூலம் விநி​யோ​கிக்​கப்​பட்டு வரு​கி​றது.​ ​ ​க​டலூர் மாவட்​டத்​தில் 112 சுய​நி​திப் பள்​ளி​கள் உள்​ளன.​ இவற்​றில் 90 பள்​ளி​க​ளுக்கு கட்​ட​ணப் பரிந்​து​ரைப் பட்​டி​யல் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​கத்​துக்கு 
வந​துள்​ளது.​ இவற்​றில் 82 பள்ளி நிர்​வா​கங்​கள் வியா​ழக்​கி​ழமை வரை,​​ 
கட்​ட​ணப் பட்​டி​ய​லைப் பெற்​றுச் சென்​றுள்​ள​தாக அதி​கா​ரி​கள் வட்​டா​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​ ​÷கட் ​ட​ணப் பட்​டி​யலை இது​வரை வாங்​கா​மல் இருக்​கும் பள்​ளி​கள்,​​ நகர்ப் புறங்​க​ளில் உள்ள மிகப் பிர​ப​ல​மான பள்​ளி​கள்​தான் என்று 
கூறப்​ப​டு​கி​றது.​÷பி​ர​ப​ல​மான பள்​ளி​கள் பல,​​ தாங்​கள் வசூ​லிக்​கும் கட்​ட​ணத்தை குறைத்​தும்,​​ ஆசி​ரி​யர்​க​ளுக்கு வழங்​கப்​ப​டும் ஊதி​யத்தை உயர்த்​தி​யும் தக​வல்​களை அளித்து உள்​ளன.​     இந்​தக் கட்​ட​ணத்​தில் பள்ளி சிறப்​பாக நடப்​ப​தால்,​​ அதேக் கட்​ட​ணத்தை தொடர்ந்து வசூ​லிக்​க​லாம் என்று நீதி​பதி கோவிந்​த​ராஜ் குழு பரிந்​து​ரைத்து உள்​ளது.​ ​இவ்​வாறு 25 சத​வீத பள்ளி நிர்​வா​கங்​கள்,​​ தாங்​கள் வசூ​லிக்​கும் கட்​ட​ணத்தை குறைத்​துக் காண்​பித்​த​தால்,​​ அதேக் கட்​ட​ணத்தை வசூ​லிக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் மாட்​டிக் கொண்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ ​
கி​ரா​மப்​புற நர்​சரி பள்​ளி​கள் பல​வற்​றுக்கு அவர்​கள் தற்​போது வசூ​லிக்​கும் கட்​ட​ணத்​தை​விட,​​ கூடு​தல் கட்​ட​ணம் வசூ​லிக்க நீதி​பதி குழு பரிந்​து​ரைத்து இருப்​ப​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது. ​ 20 சத​வீத பள்​ளி​க​ளுக்கு அவர்​கள் தற்​போது 
வசூ​லிக்​கும் கட்​ட​ணத்​தையே நீதி​பதி குழு பரிந்​து​ரைத்து உள்​ளது.​மொத்​தத்​தில் 50 சதத்​துக்​கும் மேற்​பட்ட பள்ளி நிர்​வா​கங்​கள்,​​ நீதி​பதி கோவிந்​த​ராஜ் குழு​வின் பரிந்​து​ரைக் கட்​டண விகி​தத்தை,​​ முழு​ம​ன​து​டன் ஏற்​றுக் கொண்டு இருப்​ப​தாக ​கல்​வித் துறை அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார்.

கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ரூ.5.50 லட்சம் டாப்-அப் கார்டுகள் மாயம்

கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5.50 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள டாப்-அப் கார்டுகள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 55 ரூபாய் மதிப் புள்ள 70 ஆயிரம் டாப்-அப் கார்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அப்போது  பொறுப்பில் இருந்த அதிகாரி ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டு வாங்கியுள்ளார். இதன் பின் அவர் வெளியூருக்கு மாறுதலாகி சென்று, தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.அலுவலக தணிக்கையின் போது  10 ஆயிரம் டாப்-அப் கார்டு களை கொண்ட ஒரு பாக்ஸ் விற் பனை செய்ததற்கான கணக்கில் வரவில்லை. இது குறித்து அலுவலகத்தில் விசாரணை செய்த தில் மாயமான டாப்-அப் கார்டுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாயமான கார்டுகளின் மதிப்பு 5.50 லட்சம் ரூபாயாகும். மாயமான 3,000 கார்டுகள் விருதுநகர் மாவட்டத்தில்  பயன்பாட்டில் உள்ளன.  மீதமுள்ள 7,000 கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. 

கார்டுகள் எப்படி காணாமல் போனது... யார் எடுத்துச் சென்றது என்ற விபரங்களை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட் டனர். மேலும் கார்டுகள் மாயமானது குறித்து கடலூர் பி.எஸ். என்.எல்., முதன்மை கணக்கு அதிகாரி ராஜா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் சம்பவம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்குள் நடந்துள்ளது. மேலும் ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதில் மாயமானது மூன் றாம் எண் பெட்டியாகும். விற்பனை செய்தவர்கள் இரண்டு பெட்டிகளை விற்பனை செய்த பின் மூன்று பெட்டி மாயமானது தெரியாமல் எப்படி நான்காவது பெட்டியை விற்பனை செய்துள் ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை செய்து குற்றவாளி அல்லது சந்தேக நபர்கள் குறிப்பிட்டு  புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூரில் வரும் 23ம் தேதி துவக்கம்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. மாவட்ட கிரிக்கெட் சங்கம், கடலூர் காஸ்மா பாலிட்டன் கிரிக்கெட் கிளப் மற்றும் மாவட்ட கிரிக்கெட் அகாடமி ஆகியவை சார்பில் 2009-10ம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வரும் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. வெற்றி பெற்றும் அணிக்கு முதல் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 7,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய், நான்காம் பரிசாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கு 250 ரூபாய் பரிசு, தொடர் நாயகனுக்கு 1,000 ரூபாய், தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.  போட்டிகள் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கிரிக் கெட் அணியினர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு கூத்தரசன், செயலர், கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், ஜட்ஜ் பங் களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 9442521780, 9500872434 மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

மாறுவேடத்தில் அதிகாரிகள் குழு அதிரடி ஆய்வு : கடலூர் அரசு மருத்துவமனை சீர்கேடு அம்பலம்

கடலூர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து  10 பேர் கொண்ட குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தபோது நோயாளிகளிடம் ஊழியர்கள் மனிதநேயமின்றி நடந்து கொண் டதை கண்கூடாக பார்க்க முடிந் தது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் கூறினார்.
கடலூர் அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேடு, சிகிச் சைக்கு லஞ்சம், நோயாளிகளிடம் பரிவு காட்டாதது போன்ற பல புகார்கள் சுகாதாரத்துறைக்கு வந் துள்ளன. அமைச்சர் பன்னீர் செல் வம் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் தலைமையில் கண்காணிப்பாளர் ரங்கராஜன், ஈஸ்வரன், புள்ளிவிவர உதவியாளர் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கொண்ட அதிரடி படையினர் மருத்துவமனையில் நேற்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நோயாளிகள் போல் மாறுவேடத்தில் ஒவ்வொரு பிரிவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  இன்று (நேற்று) எங்கள் குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளது தெரிய வந் துள்ளது. ஊழியர்கள் நோயாளிகளிடம் மனிதநேயம் இல்லாமல் நடத்து கொண்டுள்ளனர். வயிற்று வலியால் துடித்த நோயாளி ஒருவருக்கு 2 மணி நேரமாக ஸ்கேன் எடுக்காமல் காக்க வைத்ததும் கண்கூடாக காண நேர்ந்தது.  சிலர் நோயாளிகளிடம் லஞ்சம் பெற் றது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மருத்துவமனையில் உள்ள ஸ்டோர், ஆபீஸ், மகப் பேறு, சமையல் கூடத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டு மாற்றியமைக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. எக்ஸ்ரே பிலிம் போதுமான அள விற்கு தட்டுபாடின்றி வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம் ஏழை மக்களுக்கு மருத் துவம் சென்றடையவேண்டும் என்பதேயாகும். ஆய்வின் போது தவறு செய்தவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். சிலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. நடவடிக்கை குறித்து ஆய்வு முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். இது போன்ற அதிரடி ஆய்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படும். இவ் வாறு கூடுதல் இயக்குனர் கூறினார்.

கல்விக் கட்டண அரசாணை நகல் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்த அரசாணை நகல் சி.இ.ஓ., அலுவலகத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை கட்டுப்படுத்தப் படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி அரசு சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயிப்புக்குழு அமைத் தது. இந்த குழு தனியார் பள்ளிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கட்டணத்தை நிர்ணயித்துள் ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 398 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது 328 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள் ளது. அதில் 101 பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் குறித்த பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி தனியார் பள்ளிகளுக்கு வழங்கினார். மீதமுள்ள பள்ளிகளுக்கு விரைவில் வழங் கப்படும்.

கல்வியில் புறக்கணிக்கப்படும் நெல்லிக்குப்பம்: படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள்

நெல்லிக்குப்பத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் ஏழை, எளிய மாணவர்கள் வெளியூர் சென்று மேல் படிப்பை தொடர முடியாத அவலம் உள்ளது.நெல்லிக்குப்பம் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெல்லிக்குப்பத்தில் அரசு பெண்கள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. பார்டர் அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பெரும்பாலான கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய விவசாய கூலி குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் இலவச பஸ் பாஸ், புத்தகம் என அனைத்தும் அரசு கொடுத்தாலும் படித்தவரை போதும் வெளியூர் சென்று படித்தால் கூடா நட்பு ஏற்பட்டு கெட்டு போய் விடுவாய் என கூறி தங்களுடன் விவசாய கூலி அல்லது கொத்தனார் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். பெரும்பாலான கிராமப்புற ஏழை மாணவர்கள், எஸ்.எஸ். எல்.சி.,யில் குறைந்த மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர் கள் மேல் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்பவர்களே அதிகம் உள்ளனர். இதனால் அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மத்திய அரசு கல்வியை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்துள்ளது. மாநில அரசும் இலவச கல்வி, பஸ் பாஸ், சைக்கிள் என கல்வியை வளர்க்க பல முயற்சிகள் மேற்கொண்டுள் ளது. ஆண்டுதோறும் மாவட்டத் தில் பல இடங்களில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் மாணவர்கள் கல்வி தடைபடுவதை தடுக்க முடியும். கல்வியைப் பொறுத்தவரை நெல்லிக்குப்பம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. இத்தொகுதியில் அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், கலைக் கல்லூரிகள் என எதுவும் இல்லை. அருகில் உள்ள பண்ருட்டி தொகுதியில் பொறியியல் கல் லூரியும், கடலூரில் ஐ.டி.ஐ., கலைக்கல்லூரியும் உள்ளது. நெல்லிக்குப்பம் தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு பட்ஜெட்டில் புதியதாக 6 பாலி டெக்னிக் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதில் ஒன்றை நெல்லிக்குப்பம் தொகுதியில் அமைக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்பில் நெல்லிக்குப்பம் தொகுதி தற் போது எடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரே அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவந்திபுரம் கோயிலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பை வியாழக்கிழமை சாமி கும்பிட்டார்.இதற்காக எடியூரப்பா வியாழக்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுவை வந்தார். அங்கிருந்து காரில் கடலூர் வழியாகத் திருவந்திபுரத்துக்கு காலை 9 மணிக்கு வந்தார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.பின்னர் காரில் எடியூரப்பா திருவந்திபுரம் மலை மீதுள்ள லட்சுமி ஹயகிரீவர் ஆலயத்துக்குச் சென்றார். கோயில் வாயிலில் மேளதாளம் முழங்க அர்ச்சகர்கள் நீலமேகப் பட்டாச்சாரியார், நரசிம்ம பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் வரவேற்றனர். கோயிலில் எடியூரப்பா சிறப்பு வழிபாடுகள் செய்தார். அங்கிருந்து படிக்கட்டுகள் வழியாக நடந்து தேவநாதசாமி கோயிலுக்கு வந்தார். அங்கும் எடியூரப்பாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.எடியூரப்பா வருகையை முன்னிட்டு தேவநாத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.சிறப்பு பூஜைகளை முடித்துக் கொண்டு எடியூரப்பா 10-07 மணிக்கு மீண்டும் புதுவை மாநிலம் சென்றார். அவரது வருகையை முன்னிட்டு கடலூரில் புதன்கிழமை மாலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  போலீஸ் உத்தரவின்பேரில் திருவந்திபுரத்தில் பிரதானக் கடை வீதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. எடியூரப்பா செல்லும் பாதை முழுவதும், வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. கோயில் வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை நடத்தப்பட்டது.

புதுச்சேரி பதிவு எண் வாகனங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் ரூ.7 லட்சம் வசூல்

கடலூர் மாவட்டத்தில் 237 புதுச்சேரி மாநில பதிவு எண் வாகனங்கள் பிடிபட்டதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை வரி கட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் வரை இரண்டு கார்கள் உட்பட 237 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டம்

கடலூரில் பாதாள சாக் கடை திட்டப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கடலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட் டப் பணி தற்போது போக் குவரத்து மிகுந்த நெடுஞ் சாலையான வண் டிப்பாளையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் இணைப்பு முதல் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு வரையிலும், திருப்பாதிரிப்புலியூர் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு முதல் சுப்புராய செட்டி தெரு, சங்கரநாயுடு தெரு பெருமாள் கோவில் வரை குழாய் பதிக்கும் பணி மற்றும் வீடுகளுக்கு இணைப்பு குழாய் பொருத் தும் பணி மேற் கொள்ளப் பட உள்ளது. இப் பணியை விரைந்து முடிக்க வசதியாக போக்குவரத்தை மாற்று வழியில் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் கடலூர் டவுன் ஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், டி.எஸ்.பி., ஸ்டாலின், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ் சாலை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகளும், வர்த் தக சங்க நிர்வாகிகள் மற் றும் பொது நல அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம்

மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப் பட்ட 60 வாகனங்கள் வரும் 26ம் தேதி கடலூர் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலக செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவில் கைப்பற்றப்பட்ட 60 வாகனங் களை ஏலம் எடுப்பவர்கள் இன்று 24ம் தேதி முதல் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். 26ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.

இரு சக்கர வாகனத்திற்கு 500ம், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன் பணமாக 26ம் தேதி காலை 8.30 மணிக்கு மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க வருபவர்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடை யாள அட்டை, வங்கி பாஸ் புக் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். மேலும், தொடர்புக்கு ஏ.டி.எஸ்.பி., 04142-284353, என்ற தொலைபேசியும், பண் ருட்டி மது விலக்கு பிரிவு 297688 மற்றும் 04144-230477 என்ற எண்ணிற்கும் இன்ஸ்பெக்டர் 98423-14114 என்ற மொபைல் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25 கோடியில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்

கடலூர் நகராட்சியில் ரூ. 25.35 கோடியில் புதிய சாலைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் நகராட்சி இயல்புக் கூட்டம் புதன்கிழமை நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது.  பாதாளச் சாக்கடைத் திட்டத்தாலும் மழையினாலும் பழுதடைந்த சாலைகளை புதியதாக அமைக்க நகராட்சி திட்டம் தயாரித்து உள்ளது. அதன்படி 46.9 கி.மீ. தார்ச் சாலையும், 48.5 கி.மீ. சிமென்ட் சாலையும் (160 சாலைகள்) அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.இச்சாலைகள் ரூ. 25.35 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொகையை அரசு மானியத்துடன் கடனாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கோரலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்:  நகராட்சி கூட்ட மண்டபத்தில் அம்பேத்கர் படம் வைப்பது. இத்தீர்மானத்தை நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கொண்டு வந்தார்.  ஆற்றுத் திருவிழாவுக்காக பெண்ணை ஆற்றங்கரையை சுத்தம் செய்த பணிக்கு ரூ. 1.5 லட்சம் அனுமதிப்பது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதுயுகம் மற்றும் குட்லக் என்டர்டெய்ன்மெண்ட் சர்வீசஸ்  நிறுவனத்துக்கு பொருள்காட்சி நடத்த தடையில்லாச் சான்று வழங்குவது.கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தற்போது ரூ.424 லட்சத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.505 லட்சத்துக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகளை பார்வையிட மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், 2 மேற்பார்வையாளர் பணியிடங்களை, ஒப்பந்தப்புள்ளி கோரி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிரப்ப அனுமதிக்கலாம்.இதனால் ஆண்டுச் செலவு ரூ. 61 ஆயிரம். கடலூர் நகராட்சி பகுதியில் 34 குடிசைப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள 14,911 குடும்பங்களின் வறுமை மற்றும் வாழ்வாதார நிலைகளை கண்டறிய கணக்கெடுக்கும் பணிக்கு, ரூ. 2.5 லட்சம் அனுமதிப்பது.  நகராட்சி சார்பில் கம்மியம்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ள நவீன எரிவாயு தகன மேடையை எவ்வாறு செயல்படுத்துவது, நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது என்பது பற்றி நகராட்சித் தலைவர் உள்ளிட்டோர் பழநி, ஈரோடு நகராட்சிகளுக்குச் சென்று பார்த்து வந்தச் செலவுத் தொகை ரூ. 60 ஆயிரம் அனுமதிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எப்​போது தெரி​யும்?

பள்​ளிக் கல்​விக் கட்​டண வசூல் ஒழுங்​கு​மு​றைச் சட்​டம் செல்​லும் என்று உயர் நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்கி பத்து நாள்​க​ளுக்கு மேலா​கி​றது.​ ஆனால்,​​ பள்​ளி​க​ளுக்கு எத்​த​கைய கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது என்​பது பற்றி,​​ தமி​ழக அரசு இது​வரை வெளிப்​ப​டை​யாக எதை​யும் பேச​வில்லை.​ ஒவ்​வொரு பள்​ளிக்​கும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கட்​ட​ணம் எவ்​வ​ளவு என்​பது தெரி​யா​மல் அவ​திப்​ப​டு​வது வழக்​கம்​போல பெற்​றோர்​கள் மட்​டுமே!​பள்​ளிக் கட்​ட​ணங்​கள் மிக அதி​க​மாக உள்​ளன என்று மக்​கள் தாங்​க​மாட்​டா​மல் புலம்​பி​ய​தால்​தான் அரசு இந்​தப் பிரச்​னை​யில் ஆர்​வம் காட்​டி​யது.​ உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதி​பதி கோவிந்​த​ரா​ஜன் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டது.​ தமிழ்​நாடு பள்​ளி​கள் ​(கட்​டண வசூல் ஒழுங்​கு​முறை)​ சட்​டம் 2009 கொண்​டு​வ​ரப்​பட்​டது.​ இந்​தச் சட்​டத்​துக்கு எதி​ரா​கத் தனி​யார் பள்​ளி​கள் சங்​கம் தொடுத்த வழக்​கில்,​​ இந்​தச் சட்​டம் செல்​லும் என்று தலைமை நீதி​பதி எச்.எல்.​ கோகலே,​​ நீதி​பதி கே.கே.​ சசி​த​ரன் ஆகி​யோர் தீர்ப்பு வழங்​கி​னர்.​ தமி​ழக அர​சுக்கு இதை​விட சாத​க​மான தீர்ப்பு வேறு ஏதும் கிடை​யாது.​ ஆனா​லும்,​​ இது​வரை அரசு எந்த அறி​விப்​பை​யும் செய்​ய​வில்லை.​அரசு எந்த அறி​விப்​பும் செய்​ய​வில்லை என்​ப​தற்​காக,​​ தனி​யார் பள்​ளி​கள் சும்மா இருந்​து​வி​ட​வில்லை.​ அவர்​கள் தங்​கள் பள்​ளி​யில் மாண​வர்​க​ளைச் சேர்த்​துக் கொண்​டு​தான் இருக்​கி​றார்​கள்.​ ஆனால் இந்த மாண​வர் சேர்க்கை சின்ன நோட்​டுப் புத்​த​கத்​தி​லும்,​​ வெறும் துண்​டுச் சீட்​டி​லு​மாக நடந்து கொண்​டி​ருக்​கி​றது.​ சில பள்​ளி​கள் கட்​ட​ணங்​க​ளை​யும் வசூ​லித்​து​விட்​டன.​ சில பள்​ளி​கள் மாண​வர் சேர்க்கை மட்​டும் நடத்​து​கின்​றன.​ கட்​ட​ணங்​க​ளைப் பிறகு சொல்​கி​றோம் என்று கூறு​கின்​றன.​ இத்​தனை நடை​முறை ஊழல்​க​ளுக்​கும் கார​ணம்-​ இன்​ன​மும் அரசு தான் நிர்​ண​யித்​துள்ள கட்​டண விகி​தத்தை வெளிப்​ப​டை​யாக அறி​விக்​கா​மல் இருப்​ப​து​தான்.​இந்​தச் சட்​டத்​தில்,​​ மாண​வர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​களை தனி​யார் பள்​ளி​கள் மே 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதிக்​குள் வழங்​கி​விட வேண்​டும் என்று அறி​விக்​கப்​பட்​டுள்​ள​தால்,​​ தனி​யார் பள்​ளி​கள் தங்​கள் விண்​ணப்​பங்​களை விற்​பனை செய்​ய​வில்​லையே தவிர,​​ மாண​வர் சேர்க்​கையை நடத்​திக் கொண்டே இருக்​கின்​றன.​ பெற்​றோர்​க​ளும்,​​ முந்​திக்​கொண்டு குழந்​தை​க​ளைச் சேர்க்​கா​மல் அரசு அறி​விப்​புக்​கா​கக் காத்​தி​ருந்​தால்,​​ நம் குழந்​தைக்கு இடம் கிடைக்​கா​மல் போய்​வி​டும் என்ற பயத்​தின் கார​ண​மாக இந்​தப் பள்​ளி​கள் சொல்​லும் அனைத்​துக்​கும் கட்​டுப்​பட்டு,​​ எந்த ஆதா​ர​மும் இல்​லா​மல் நம்​பிக்​கை​யின் அடிப்​ப​டை​யில் பணத்​தைக் கொடுத்து அனு​ம​தியை உறு​திப்​ப​டுத்​திக் கொள்​கி​றார்​கள்.​சென்ற ஆண்டு ஜூலை மாதம்,​​ தமி​ழ​கத்​தின் அனைத்து தனி​யார் பள்​ளி​க​ளுக்​கும் அரசு ஒரு சுற்​ற​றிக்கை அனுப்​பி​யது.​ 2008-09-ம் ஆண்​டு​க​ளில் வசூ​லித்த கட்​ட​ணம்,​​ சிறப்​புக் கட்​ட​ணம் மற்​றும் வரவு செல​வுக் கணக்​கு​கள் ஆகி​ய​வற்றை மெட்​ரி​கு​லே​ஷன் பள்ளி ஆய்​வா​ளர் அலு​வ​ல​கத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று கேட்​டி​ருந்​தது.​ ஆனால்,​​ இந்த நட​வ​டிக்​கையை எதிர்த்து,​​ தனி​யார் பள்​ளி​கள் சங்​கம் வழக்​குத் தொடுத்​த​து​டன்,​​ வழக்கு முடி​யும்​வரை நமது வரவு செல​வுக் கணக்​கு​களை சமர்ப்​பிக்க வேண்​டிய அவ​சி​ய​மில்லை என்ற முடி​வை​யும் எடுத்​த​தா​கத் தெரி​கி​றது.​ ​இந்த வழக்​கில் அரசு கொண்​டு​வந்​துள்ள சட்​டம் செல்​லும் என்று தீர்ப்பு வரு​வ​தற்கு ஓராண்டு காலம் ஆன நிலை​யில்,​​ மெட்​ரி​கு​லே​ஷன் பள்ளி ஆய்​வா​ளர் அலு​வ​ல​கம் என்ன செய்து கொண்​டி​ருந்​தது?​ அந்​தந்​தப் பள்​ளி​க​ளில் படிக்​கும் குழந்​தை​க​ளின் பெற்​றோ​ரி​டம் தாங்​கள் செலுத்​திய கட்​டண விவ​ரங்​க​ளின் நகலை அனுப்பி வைக்​கும்​படி கேட்​டி​ருந்​தாலே போதுமே,​​ கொட்​டித் தீர்த்​தி​ருப்​பார்​களே!​ ​கல் ​வித் துறை ஏற்​கெ​னவே இத்​த​க​வல்​கள் அனைத்​தை​யும் பெற்று,​​ ஒவ்​வொரு பள்​ளி​யை​யும் அதன் வச​தி​க​ளுக்கு ஏற்ப தரம் பிரித்து முடித்​தி​ருந்​தி​ருந்​தால்,​​ இப்​போது வெளிப்​ப​டை​யாக கட்​டண விவ​ரங்​களை வகுப்பு வாரி​யாக அறி​விக்க வேண்​டி​ய​து​தானே.​ தமிழ்​நாட்​டில் மாவட்ட வாரி​யாக எத்​தனை தனி​யார் பள்​ளி​கள் உள்​ளன,​​ இவை எந்த அடிப்​ப​டை​யில் ஏ,​​ பி,​​ சி,​​ என தரம் பிரிக்​கப்​பட்​டன,​​ இவற்​றுக்​கான கல்​விக் கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ சிறப்​புக் கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ என்​பதை ஒட்​டு​மொத்​த​மாக இணை​ய​த​ளத்​தில் வெளி​யிட்​டால்,​​ பெற்​றோர்​கள் அனை​வ​ருமே பார்த்து அறிந்​து​கொள்ள முடி​யுமே!​ அரசு ஏன் இதில் இன்​ன​மும் மெüனம் காக்க வேண்​டும்.​மெட்​ரி​கு​லே​ஷன் பள்​ளி​க​ளில் எல்.கே.ஜி.​ மாண​வர் சேர்க்கை மற்​றும் புத்​த​கம் ரூ.​ 445,​ யு.கே.ஜி.​ ரூ.​ 500,​ முதல் வகுப்பு ரூ.​ 655 என ஐந்​தாம் வகுப்பு வரை கட்​ட​ணம் நிர்​ண​யித்து,​​ பள்​ளி​க​ளுக்கு சுற்​ற​றிக்கை அனுப்​பி​யுள்​ள​தா​கக் கல்​வித்​துறை வட்​டா​ரங்​கள் கூறி​னா​லும் இதை ஏன் மக்​கள் அறிந்​து​கொள்​ளும்​படி வெளிப்​ப​டை​யா​கத் தெரி​விக்​க​வில்லை.​1973-ல் இயற்​றப்​பட்ட தனி​யார் பள்ளி ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​தின் பிரிவு 32-ன் படி,​​ எந்த ஒரு தனி​யார் பள்​ளி​யும் தகு​தி​வாய்ந்த அதி​காரி குறிப்​பிட்​டுள்ள கட்​ட​ணம் தவிர,​​ வேறு எந்​தக் கட்​ட​ண​மும் வசூ​லிக்​கக்​கூ​டாது என்று தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது என்​பதை நீதி​ப​தி​கள் தீர்ப்​பில் குறிப்​பிட்​டுள்​ள​னர்.​ அப்​ப​டி​யா​னால்,​​ இத்​தனை ஆண்​டு​க​ளாக கல்​வித் துறை அதி​கா​ரி​கள் ஏன் மெüன​மாக இந்த கல்​விக் கட்​ட​ணக் கொள்​ளையை வேடிக்கை பார்த்​துக் கொண்​டி​ருந்​தார்​கள்?​கல்​லூ​ரி​கள் விவ​கா​ரத்​தி​லும் இதே மெüனம்​தான் நீடிக்​கி​றது.​ அதி​கக் கட்​ட​ணம்,​​ நன்​கொடை போன்ற முறை​கே​டு​க​ளில் ஈடு​பட்​ட​தாக,​​ கோவை​யைச் சேர்ந்த ஒரு கல்​லூரி மீது நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று அமைச்​சர் பொன்​முடி அறி​வித்து ஓராண்டு ஆகப் போகி​றது.​ ஆனால் அந்​தக் கல்​லூரி மீது என்ன நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டது என்​பது யாருக்​குமே தெரி​யாது.​சென்ற ஆண்டு பல பொறி​யி​யல் கல்​லூ​ரி​க​ளில் அரசு அறி​வித்த குழு நேரில் சென்று பல்​வேறு புகார்​களை விசா​ரித்​தது.​ சில கல்​லூ​ரி​கள் அலு​வ​ல​கங்​க​ளைப் பூட்​டிக்​கொண்டு அலட்​சி​யப்​ப​டுத்​தின.​ ஆனால் எந்​தப் பொறி​யி​யல் கல்​லூரி மீது என்ன நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டது.​ அந்​தக் கல்​லூ​ரி​கள் தற்​போது நடை​பெ​ற​வுள்ள கலந்​தாய்​வுக்கு தகு​தி​யா​ன​வையா இல்​லையா?​ இன்​னும் அறி​விப்பு இல்லை.​ஒவ்​வொரு தனி​யார் பள்​ளிக்​கும் அரசு நிர்​ண​யித்​துள்ள கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ முறை​கேடு செய்த பொறி​யி​யல் கல்​லூ​ரி​கள் மீது என்ன நட​வ​டிக்கை?​ கல்​வி​யாண்டு தொடங்​க​வுள்ள நிலை​யில் இப்​போது சொல்​லா​விட்​டால்,​​ வேறு எப்​போது சொல்​வார்​கள்!

பிச்சாவரத்தில் ரூ.2 கோடி வருவாய்

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அரணாக இக்காடுகள் அமைந்துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில் 
6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது. வெளிமாவட்டம், மாநிலம் மற்றும் 
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
சமீபத் தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர் காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் நிர்மல்சன் இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க இங்கு ஆய்வு செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏப்ரல் முதல் மார்ச் வரை வெளிநாட்டினர் மற்றும் இந்தியர் என பிச்சாவரம் வந்த சுற்றுலா பயணிகளும், அதனால் கிடைத்த வருவாயும் வருமாறு: 2006-07ல் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளால் 28 லட்சம் ரூபாயும், 2007-08ல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பயணிகளால் 31 லட்ச மும், 2008 -09 ஒருலட்சத்து 42 ஆயிரம் பயணிகளால் 60 லட்சமும், 2009-10 ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் 
பயணிகளால் 85 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பிச்சாவரம் வன சுற்றுலா மையம்தங்கும் இடம் அதிகரிக்குமா அரசு?

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வரும் வெளிநாட்டினர் தங்க, வசதியான இடம் இல்லாததால், அவர்களின் வருகை குறைகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 எக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால் வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண், சிறு, கருங்கண்டன் என, 18க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்களும் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களைத் தடுக்கும் அரணாக, இக்காடுகள் அமைந்துள்ளன. மூலிகை தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால், பல நோய்கள் தீருகின்றன.

காடுகளை பாதுகாக்க, 1984 ஜூன் 16ல், ஐந்து ஏக்கர் பரப்பில், ஆறு படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில், ஆறு காட்டேஜ், 20 கட்டில் வசதிகளுடன், இரண்டு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, கூடுதல் படகுகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டன. வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சமீபத்தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர், காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் 
நிர்மல் சன், இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க, இங்கு ஆய்வு செய்தார்.

பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான கடந்த ஆண்டில், 85 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெளிநாட்டினர் இப்பகுதியில் தங்குவதற்கான வசதி இல்லாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.