கோரிக்கை பதிவு

நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

போலி டாக்டர் கைது விவகாரம்

போலி டாக்டர் என தன்னை கைது செய்தது தொடர்பாக கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டாக்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்பட 7 பேர் வரும் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள் ளது. கடலூர் முதுநகரில் கடந்த ஆண்டு போலீசார் அப்பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த முருகேசன் என்பவரை போலி டாக்டர் என கைது செய்தனர். தான் கொல்கத்தாவில் மருத்துவ படிப்பு படித்துள்ளதாகவும்.
இதில் தன்னை டாக்டர் என்று குறிப்பிடலாம் என்று முருகேசன் கூறினார். ஆனால் போலீசார் போலி டாக்டர்கள் பிரிவில் முரு கேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தன் மீது தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் என தான் படித்த படிப்பிற்கு தன்னை குறிப்பிடலாம்.ஆனால் போலீசார் போலி டாக்டர் பட்டியலில் தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண் டும் என கோரி முருகேசன் கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராமபத்திரன் தமிழக உள்துறை செயலர், மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், எஸ்பி அஷ்வின் கோட்னீஸ், டிஎஸ்பி ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்&இன்ஸ்பெக்டர்கள் சேக்கிழார், பிரேமா உள்ளிட்ட 7 பேர் வரும் 7ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வடிவத்தை மாற்ற வேண்டும்

கடலூரில் கட்டத் தொடங்கி இருக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் தோற்றம் அழகாக இல்லாததால்,​​ அதன் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று,​​ காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணி கோரிக்கை விடுத்துள்ளது.கடலூர் மாவட்டக் காங்கிரஸ் வழக்கறிஞரணி அமைப்புக் கூட்டம் மாவட்டக் காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது.​ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பல ஆண்டுகளுக்கு பின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படுவது வரவேற்கத்தகுந்தது.​ ஆனால் அதன் வரைபடத்தைப் பார்க்கும் போது அழகாகத் தோன்றவில்லை.பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அழகாக இருக்க வேண்டும்.​ எனவே அதை அழகாகத் தோன்றும் வகையில் மாற்றி வடிவமைக்க வேண்டும்.அனைத்து மாநில மக்களுக்கும் விரைவில் நீதி கிடைக்கும் வகையில்,​​ அனைவரும் எளிதில் அணுகும் விதத்தில்,​​ உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை சென்னை,​​ மும்பை,​​ கொல்கத்தா நகரங்களில் உருவாக்க வேண்டும்.வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை,​​ ரூ.​ 2 லட்சத்தில் இருந்து ரூ.​ 10 லட்சமாக உயர்த்த வேண்டும்.​ கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.கடலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு,​​ கடலூர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.​ மாநில காங்கிரஸ் வழக்கறிஞரணித் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.வழக்கறிஞர்கள் அரிஹரதாஸ்,​​ சாந்தமூர்த்தி,​​ ஜெயக்குமார்,​​ தமிழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.​ கடலூர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்று சந்திரசேகரன் தெரிவித்தார்.