பல்வேறு கனவுகளோடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஏழை விவசாயி மகளுக்கு, வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால், கல்லூரியில் சேர்ந்தும் படிப்பை தொடர முடியாமல், கூலி வேலை செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமம் அருகே உள்ள நடுக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் - மல்லிகா ஏழை விவசாய தம்பதியினரின் மகள் பிரவினா. இவர், 2007ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 867 மதிப்பெண் பெற்றார். 72 சதவீத மதிப்பெண் பெற்ற இவர், வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது சிலர் உயர் கல்வி படிக்க வங்கிகள் கடன் தருவதாக கூறினர்.அதை நம்பிய பன்னீர்செல்வம், தனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பி, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தார். கவுன்சிலிங்கில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சின்ன கோளம்பாக்கத்தில் உள்ள கற்பக வினாயகா பல் மருத்துவக் கல்லூரியில் "பி.டி.எஸ்.,' சீட் கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், பிரவினாவை கல்லூரியில் சேர்த்தார்.
அப்போது, கல்லூரி நிர்வாகம் கல்லூரி விடுதியில் ஐந்தாண்டுகள் (2007-12) தங்கி படிக்க, மொத்தம் நான்கு லட்சத்து 73 ஆயிரத்து 500 கட்ட வேண்டும். அதில், முதலாண்டு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 500ம், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தலா ஒரு லட்சத்து 10 ஆயிரமும், இறுதியாண்டு விடுதி கட்டணம் மட்டும் 25 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறியது. பன்னீர்செல்வம் தனது மகளின் உயர் கல்விக்காக கடன் கோரி, பண்ருட்டியில் உள்ள இந்தியன் வங்கிக்கு விண்ணப்பித்தார். அவர்கள், காடாம்புலியூரில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு பரிந்துரை செய்தனர். மனுவை பரிசீலித்த லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள், 10 லட்சம் ரூபாயிற்கு சொத்து ஜாமீன் அல்லது அரசு ஊழியர்கள் இருவர் ஜாமீன் அளித்தால் கடன் தருவதாக கூறினர். பன்னீர்செல்வத்தால் சொத்து ஜாமீன் கொடுக்க முடியாததால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கட்டணம் செலுத்தாததால், மாணவி பிரவினாவை இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
இதுகுறித்து, பன்னீர்செல்வம் பிரதமர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். அனைவருமே மனு மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்திருப்பதாக பதில் அனுப்பினர். இதனால், அடுத்த ஆண்டாவது வங்கியில் "லோன்' கிடைத்துவிடும் எனக் கருதிய பன்னீர்செல்வம் 2008ம் ஆண்டு, மீண்டும் தனது மகளை அதே கல்லூரியில் சேர்த்துவிட்டு மீண்டும் கடன் கோரி வங்கிக்கு விண்ணப்பித்தார். அப்போதும் ஜாமீன் தராததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கல்லூரிக்கு பணம் கட்டாததால், மாணவி பிரவினாவை மீண்டும் அதேபோன்று இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
பல்வேறு கனவுகளுடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி பிரவினாவிற்கு, வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்க மறுத்து விட்டதால் தற்போது, பெற்றோருடன் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.கல்விக் கடனுக்கு எந்த ஜாமீனும் தேவையில்லை. கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் கல்லூரி கட்டண பட்டியல் இருந்தால் போதும் என, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மேடைதோறும் பேசி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் வேறு விதமாக உள்ளதால், ஏழை மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு
கடலூரில் நேற்று அனல் காற்று வீசியதால் சில்வர் பீச்சில் மக்கள் கூட் டம் அதிகமாக இருந்தது.
சுனாமிக்கு பிறகு வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. சில நேரங்களில் கடல் உள்வாங்குவதும், வெளியே வருவதும் நடந்து வருகிறது. கடந்த 2 வாரம் முன் சுனாமி பீதி காரணமாக பீச்சிற்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட "லைலா' புயல் காரணமாக மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் சில்வர் பீச்சிற்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந் திருந்தது. நேற்று கடுமையான வெயில் அடித்ததால் அனல் காற்று வீசியது. அதனால் மாலை நேரத்தில் சில்வர் பீச்சில் மக்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
சுனாமிக்கு பிறகு வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. சில நேரங்களில் கடல் உள்வாங்குவதும், வெளியே வருவதும் நடந்து வருகிறது. கடந்த 2 வாரம் முன் சுனாமி பீதி காரணமாக பீச்சிற்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட "லைலா' புயல் காரணமாக மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் சில்வர் பீச்சிற்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந் திருந்தது. நேற்று கடுமையான வெயில் அடித்ததால் அனல் காற்று வீசியது. அதனால் மாலை நேரத்தில் சில்வர் பீச்சில் மக்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
கட்டுகள்
கடல்,
கடலூர்,
கடலூர் நகராட்சி
திருப்பாதிரிப்புலியூரில் ரயில்கள் நிற்காததால் ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பு
திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காததால் பயணிகள் கவலையடைந்துள்ளனர்.
விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில் இயக்கப்பட்ட சோழன் விரைவு ரயில் தற்போது மீண்டும் இயக் கப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூரில் ரயில் நிலையம் வழியாக பகல் 12.30 மணிக்கு கடக்கும் இந்த ரயில் நிற்காமல் செல்வதால் பயணிகளுக்கு ஏமாற் றத்தை அளித்துள்ளது. ஆனால் முதுநகர் ஜங்ஷனில் மட்டும் நின்று செல்கின்றன.கடலூர் புதுநகரில் இருந்து தான் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்வது வழக்கம். இங்கிருந்து முதுநகருக்கு 40 ரூபாய் கொடுத்து ஆட்டோ பிடித்து செல்வதால் கூடுதல் கட்டணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் ரயில் பயணம் செய்ய விரும்புவதில்லை.
அதேப்போல ராமேஸ் வரம் - புவனேஸ்வர் (எண் 8495), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 4260), ராமேஸ்வரம் - புவனேஸ் வர்(எண் 4259), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 8496) ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத் தும் விழுப்புரம் ஜங்ஷனுக்கு பிறகு மயிலாடுதுறையில் மட்டுமே நின்று செல்கின்றன.
திருப்பாதிரிப்புலியூரை கடந்து செல்லும் ரயில்கள் மாவட்ட தலைநகரில் நிற்காமல் செல்வதால் கடலூர் பயணிகள் செல்ல முடியாமல் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் ரயில்வே துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாயை இழந்து வருகிறது. எனவே கடலூரை கடந்து செல்லும் ரயில்கள் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே இலாகா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில் இயக்கப்பட்ட சோழன் விரைவு ரயில் தற்போது மீண்டும் இயக் கப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூரில் ரயில் நிலையம் வழியாக பகல் 12.30 மணிக்கு கடக்கும் இந்த ரயில் நிற்காமல் செல்வதால் பயணிகளுக்கு ஏமாற் றத்தை அளித்துள்ளது. ஆனால் முதுநகர் ஜங்ஷனில் மட்டும் நின்று செல்கின்றன.கடலூர் புதுநகரில் இருந்து தான் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்வது வழக்கம். இங்கிருந்து முதுநகருக்கு 40 ரூபாய் கொடுத்து ஆட்டோ பிடித்து செல்வதால் கூடுதல் கட்டணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் ரயில் பயணம் செய்ய விரும்புவதில்லை.
அதேப்போல ராமேஸ் வரம் - புவனேஸ்வர் (எண் 8495), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 4260), ராமேஸ்வரம் - புவனேஸ் வர்(எண் 4259), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 8496) ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத் தும் விழுப்புரம் ஜங்ஷனுக்கு பிறகு மயிலாடுதுறையில் மட்டுமே நின்று செல்கின்றன.
திருப்பாதிரிப்புலியூரை கடந்து செல்லும் ரயில்கள் மாவட்ட தலைநகரில் நிற்காமல் செல்வதால் கடலூர் பயணிகள் செல்ல முடியாமல் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் ரயில்வே துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாயை இழந்து வருகிறது. எனவே கடலூரை கடந்து செல்லும் ரயில்கள் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே இலாகா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுகள்
கடலூர்,
ரயில் போக்குவரத்து
கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை: நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட, நகராட்சி தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் (படம்) நடத்தின.கடலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் லாரன்ஸ் சாலையின் குறுக்கே உள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது உடனடி, அத்தியாவசியத் தேவையாகவும் உள்ளது. ரயில்கள் முழுமையாக இயக்கப்படும்போது, போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதைத் தடுக்க, லாரன்ஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், வண்டிப்பாளையம் சாலையையும், சரவணன் நகரையும் இணைக்கும் 300 மீட்டர் சாலையை உருவாக்க வேண்டும் என்பது கடலூர் நகர மக்களின் கோரிக்கை. மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் திறமையாகச் செயல்பட்டு இருக்குமாயின், 3 ஆண்டுகளாக அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளின் நடைபெற்றபோதே, ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டத்துக்கும், சரவணன் நகர் இணைப்புச் சாலை திட்டத்துக்கும், தீர்வு காணப்பட்டு இருக்கும் என்பது, கடலூர் மக்களின் கருத்து. ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடந்தது. நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் நிர்வாகிகள் எம்.மருதவாணன், வெண்புறா குமார், திருமார்பன், துரை.வேலு, பழநி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ச.சிவராமன், பண்டரிநாதன், அருள்செல்வம், மணிவண்ணன், அரங்கநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் நகராட்சி,
சுரங்கப்பாதை
படுகுழிக்குள் வீழ்த்தும் பாதாள சாக்கடைத் திட்டம்
கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் நகரில் பலரை படுகுழிக்குள் வீழ்த்திக் கொண்டு இருக்கிறது. இத்திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளங்களில், குழிகளில், நூற்றுக் கணக்கானோர் விழுந்து காயம் அடைந்துள்ளனர்; பலர் இறந்துள்ளனர். பாதாள சாக்கடைத் திட்டத்தில் விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ அரசோ, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரோ பொறுப்பல்ல என்பது, காண்ட்ராக்ட் விதிமுறைகளில் இருப்பதால், திட்டத்தை நிறைவேற்றுவோர், மக்கள்படும் அவதியைக் கண்டு சற்றும் கவலை கொள்வதில்லை. கடலூரில் மூன்றில் இரு பங்கு வார்டுகளில், ரூ.44 கோடியில் தொடங்கி ரூ.70 கோடியை தொட்டுக் கொண்டு இருக்கும் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து விட்டது.ஒரு திட்டம் எப்போது முடிவடையும் என்ற கேள்வி, அத்திட்டத்தின் பலனை எப்போது அனுபவிப்போம் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும். அது திட்டத்தின் வெற்றியை மனதில் கொண்டதாக அமையும். ஆனால் கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது முடிவடையும் என்ற கேள்வி, இத்திட்டத்தை நிறைவேற்றும்போது ஏற்படும் துன்பங்களில் இருந்து, துயரங்களில் இருந்து, சங்கடங்களில் இருந்து, கடலூர் மக்கள் எப்போது விடுபடுவார்கள் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.வரும் 20 ஆண்டுகளில் கடலூர் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் என்ற கணக்கின் அடிப்படையில், கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் முழுமையான பயன்பாட்டுக்கு வருவதற்கு, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடங்கி ஓரிரு ஆண்டுகளிலேயே பிரச்னைகளும் தோன்றிவிடும் என்றும், அனுபவமிக்க பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கியது முதல் பள்ளத்தில் விழுந்து திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மூவர், பொதுமக்களில் ஒருவர், விபத்தில் சிக்கி 4 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் விழுந்து, பலத்த காயங்களுடன், பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து உயிர் பிழைத்து உள்ளனர்.இந்தப் பட்டியல் மேலும் தொடரும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் 3-வது கட்டமாக தோண்டப்பட்ட குழியில், செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் சைக்கிளுடன் விழுந்தார். அவர் நீதிமன்றக் காவலாளியான சந்திரன் (58) என்று பின்னர் தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து, அவரைக் காப்பாற்றி உள்ளனர். திட்டம் முடிவடையும் வரை இத்தகைய சம்பவங்கள் தொடரவும், நல்ல சாலைகளை கடலூர் மக்கள் அனுபவிக்க முடியாத துயரம் தொடரவும் இத்திட்டம் வழிவகுத்து உள்ளது. ஆனால் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.44 கோடியில் இருந்து ரூ.70 கோடியாக தற்போது உயர்ந்து இருக்கிறது. இது மேலும் உயராது என்று யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாத நிலைக்குச் சென்று கொண்டு இருப்பதுதான் வேதனை தரும் விஷயமாகக் கருதுகிறார்கள் கடலூர் மக்கள். மண்ணில் புதைக்கப்படும் பணத்தை யாரால் ஆய்வு செய்ய முடியும்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் நகராட்சி,
பாதாளச் சாக்கடை
மாயமான மீனவர்களில் மூவர் கரை திரும்பினர் : மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரம்
மீன் பிடிக்க சென்று, காணாமல் போன மூன்று மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். மற்றொரு மீனவரை தேடும் பணி நடந்து வருகிறது.
லைலா புயல் காரணமாக, பலத்த காற்று வீசும் என்பதால், தூத்துக்குடியில், 2,300 நாட்டுப் படகுகள், நேற்று கடலுக்கு செல்லவில்லை. கடலூர் தேவனாம்பட் டினத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (60), அவரது மகன் ஆனந்தன் (26), பூபாலன் (23) ஆகிய மூவரும், கடந்த 18ம் தேதி, பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இதேபோல், சகாய ராஜ் என்பவர் மீன்பிடிக்க தனியாக சென்றார். இவர்கள், நேற்று முன்தினம் மதியம் 3 மணி வரை, கரை திரும்பவில்லை. அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராததால், உறவினர்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த கடலோர பாதுகாப்பு படை யினர், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, ஆழ்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெட்ஜரில் அவர் கள் தஞ்சமடைந்தனர். கரைக்கு திரும்பிய மீன வர்கள் கூறுகையில், "புயல் எச்சரிக்கை விடுவதற்கு முன்பாகவே கடலுக்கு சென்றுவிட்டோம். இன்ஜின் பழுதானதால் கரைக்கு திரும்ப முடியவில்லை. மூன்று பேரும் மொபைல் போன் எடுத்து செல்லாததால், நாங்கள் கடலில் தத்தளித்ததை, தெரிவிக்க முடியவில்லை. நாங்களே இன்ஜினை பழுதுபார்த்து கரைக்கு திரும் பும் முயற்சியில் ஈடுபட் டோம். ஆனால் முடியவில்லை. வேறுவழியின்றி டிரெட்ஜரில் தஞ்சமடைந் தோம்' என்றனர்.
லைலா புயல் காரணமாக, பலத்த காற்று வீசும் என்பதால், தூத்துக்குடியில், 2,300 நாட்டுப் படகுகள், நேற்று கடலுக்கு செல்லவில்லை. கடலூர் தேவனாம்பட் டினத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (60), அவரது மகன் ஆனந்தன் (26), பூபாலன் (23) ஆகிய மூவரும், கடந்த 18ம் தேதி, பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இதேபோல், சகாய ராஜ் என்பவர் மீன்பிடிக்க தனியாக சென்றார். இவர்கள், நேற்று முன்தினம் மதியம் 3 மணி வரை, கரை திரும்பவில்லை. அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராததால், உறவினர்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த கடலோர பாதுகாப்பு படை யினர், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, ஆழ்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெட்ஜரில் அவர் கள் தஞ்சமடைந்தனர். கரைக்கு திரும்பிய மீன வர்கள் கூறுகையில், "புயல் எச்சரிக்கை விடுவதற்கு முன்பாகவே கடலுக்கு சென்றுவிட்டோம். இன்ஜின் பழுதானதால் கரைக்கு திரும்ப முடியவில்லை. மூன்று பேரும் மொபைல் போன் எடுத்து செல்லாததால், நாங்கள் கடலில் தத்தளித்ததை, தெரிவிக்க முடியவில்லை. நாங்களே இன்ஜினை பழுதுபார்த்து கரைக்கு திரும் பும் முயற்சியில் ஈடுபட் டோம். ஆனால் முடியவில்லை. வேறுவழியின்றி டிரெட்ஜரில் தஞ்சமடைந் தோம்' என்றனர்.
பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலில்
பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கும் வசதி பெட்டிகள் அதிகமாக உள்ளது. ஆனால் இரண் டாம் வகுப்புக்கு உட்காரும் வசதிக்கு முன்பதிவு இல்லாததால் பயணிகள் அவதி அடைகின்றனர்.
சென்னை & திருச்சி இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக சோழன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினசரி காலை சென்னை எழும்பூரில் 8.20க்கு புறப்படும் இந்த ரயில், மாலை 4.35க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்சியில் காலை 9.10க்கு புறப்படும் ரயில் மாலை 5.45க்கு சென் னையை வந்தடைகிறது.
ஆனால் இதன் முன்பதி வால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்புக்கான உட்கார்ந்து செல்லும் சீட்டுகளுக்கு முன்பதிவு இல்லை. அதற்கு மாறாக 10 பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கே முன்பதிவு (பர்த்கோச்) உள்ளது. பொது வாக பகல் நேர ரயில்களில் பெரும்பாலான பயணிகள் தூங்க மாட்டார்கள். ஆனால் இந்த ரயிலில் 10 பெட்டிகள் தூங்கும் வசதியாக இருப்பதால் இந்த பெட்டிகளுக்கான முன்பதிவு, மற்றும் பய ணத்தை யாரும் விரும்பவில்லை.
அதற்கு மாறாக பயணி கள் அதிகம் விரும்பும் இரண்டாம் வகுப்பு உட் காரும் வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட பெட்டிகளை அதிக அளவில் இணைத்தால் பயணிகளுக்கு உதவியாக இருப்பதோடு, ரயில்வே நிர்வாகத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
பயணிகள் அவதி
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
கடலூர்,
ரயில் போக்குவரத்து
புதுச்சேரி கார்களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம்! : தாமாக முன்வந்து வரி செலுத்துவது அதிகரிப்பு
தமிழகத்தில் சாலை வரி செலுத்தாத புதுச்சேரி பதிவெண் கொண்ட கார் களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தை விட புதுச் சேரியில் வாகனங்கள் விலை குறைவாக இருப்பதால் தமிழக எல்லையோர கிராம மக்கள் இதை பயன்படுத்திக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. நாற்பதாயிரம்ரூபாய் மதிப் புள்ள டூ விலர் வாங்குவோருக்கு 4000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. புதுச்சேரியின் எல்லையோரத்தில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்ட சில கிராம மக்கள் புதுச்சேரியில் கொடுக்கல் வாங்கல், பெண் எடுப்பது போன்ற வற்றில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அங்குள்ள வாகனங்களை தமிழக பகுதிகளில் ஊடுருவுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
மேலும் புதுச்சேரி எல்லையோர கிராம மக்கள் போலியான முகவரி கொடுத்து வாகனங் களை வாங்கி அதை தமிழக பகுதிகளில் ஓட்டி வருவது அதிகரித்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும் சாலை வரி செலுத்திவிட்டு தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மாவட் டங்களில் ஓட்டி சாலையை தேய்ப்பது சரியானதா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொ ருட்டு புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங் கள் தமிழக பகுதியில் ஓட்ட தனியாக சாலை வரி செலுத்த அறிவுறுத்தப் பட்டது.
உண்மையான முகவரியில் வாங்கப்பட்ட வாகனங்களாக இருந்தால் ஆர். சி.புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை புதுச்சேரியில் வாங்கி இருக்க வேண்டும். கடலூரில் ஓட்டுனர் உரிமம் பெற்று புதுச்சேரி வாகன பதிவெண் கொண்ட டூ வீலர்களை ஓட்டினால் அது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. அவ்வாறு விதிமுறை மீறி தமிழகத்தில் ஓட்டும் வாகனங் கள் சோதனை செய்யப் பட்டு உடனுக்குடன் சாலை வரி செலுத்துமாறு பணிக்கப்படுகின்றனர்.
அதைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் தினம் தினம் கடலூர்-புதுச்சேரி மாவட்ட எல்லையில் வாகன சோதனை செய்து வருகின்றனர். கடலூரில் மட்டும் இதுவரை 1000த் திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள் சோதனை செய்து பிடித்துள்ளனர்.
சோதனை செய்யும் சில போலீசார் வழக்குபோடமல் இருக்க சாலைவரி கட்டணத்தில் பாதித்தொகையை கேட்கின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி செலுத்தி வருகின்றனர். வாகனம் வாங்கும் தொகையில் 8 சதவீதம் சாலைவரியாக செலுத்த வேண்டும். இவையெல்லாம் டூ வீலர் கள் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி பதிவெண் கார்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன. ஆனால் அதிகாரிகள் கார்களை சோதனை செய்து பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதை விட அரசுக்கு அதிக வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க கார்களை பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர். கடலூர் மாவட் டத்தில் இதுவரை 4 பழைய வாகனங்களை மட்டுமே பிடித்துள்ளனர். அரசுக்கு கார்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டக்கூடியதாக இருந்தும் அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என புரியாத புதிராக உள்ளது.
தமிழகத்தை விட புதுச் சேரியில் வாகனங்கள் விலை குறைவாக இருப்பதால் தமிழக எல்லையோர கிராம மக்கள் இதை பயன்படுத்திக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. நாற்பதாயிரம்ரூபாய் மதிப் புள்ள டூ விலர் வாங்குவோருக்கு 4000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. புதுச்சேரியின் எல்லையோரத்தில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்ட சில கிராம மக்கள் புதுச்சேரியில் கொடுக்கல் வாங்கல், பெண் எடுப்பது போன்ற வற்றில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அங்குள்ள வாகனங்களை தமிழக பகுதிகளில் ஊடுருவுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
மேலும் புதுச்சேரி எல்லையோர கிராம மக்கள் போலியான முகவரி கொடுத்து வாகனங் களை வாங்கி அதை தமிழக பகுதிகளில் ஓட்டி வருவது அதிகரித்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும் சாலை வரி செலுத்திவிட்டு தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மாவட் டங்களில் ஓட்டி சாலையை தேய்ப்பது சரியானதா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொ ருட்டு புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங் கள் தமிழக பகுதியில் ஓட்ட தனியாக சாலை வரி செலுத்த அறிவுறுத்தப் பட்டது.
உண்மையான முகவரியில் வாங்கப்பட்ட வாகனங்களாக இருந்தால் ஆர். சி.புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை புதுச்சேரியில் வாங்கி இருக்க வேண்டும். கடலூரில் ஓட்டுனர் உரிமம் பெற்று புதுச்சேரி வாகன பதிவெண் கொண்ட டூ வீலர்களை ஓட்டினால் அது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. அவ்வாறு விதிமுறை மீறி தமிழகத்தில் ஓட்டும் வாகனங் கள் சோதனை செய்யப் பட்டு உடனுக்குடன் சாலை வரி செலுத்துமாறு பணிக்கப்படுகின்றனர்.
அதைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் தினம் தினம் கடலூர்-புதுச்சேரி மாவட்ட எல்லையில் வாகன சோதனை செய்து வருகின்றனர். கடலூரில் மட்டும் இதுவரை 1000த் திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள் சோதனை செய்து பிடித்துள்ளனர்.
சோதனை செய்யும் சில போலீசார் வழக்குபோடமல் இருக்க சாலைவரி கட்டணத்தில் பாதித்தொகையை கேட்கின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி செலுத்தி வருகின்றனர். வாகனம் வாங்கும் தொகையில் 8 சதவீதம் சாலைவரியாக செலுத்த வேண்டும். இவையெல்லாம் டூ வீலர் கள் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி பதிவெண் கார்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன. ஆனால் அதிகாரிகள் கார்களை சோதனை செய்து பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதை விட அரசுக்கு அதிக வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க கார்களை பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர். கடலூர் மாவட் டத்தில் இதுவரை 4 பழைய வாகனங்களை மட்டுமே பிடித்துள்ளனர். அரசுக்கு கார்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டக்கூடியதாக இருந்தும் அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என புரியாத புதிராக உள்ளது.
கட்டுகள்
கடலூர்,
காவல்துறை,
போக்குவரத்துத்துறை
கடலூர் மாவட்டத்தில் ரூ.420 கோடியில் வெள்ளத்தடுப்புப் பணிகள்: மத்திய நீர்வள ஆணைய குழுவினர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் ரூ.420 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்குவதற்காக மத்திய நீர்வள ஆணைய குழுவினர் மே15,16 தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.தமிழ கத்தில் திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ரூ.620 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதில் 75 சதவீத தொகை மத்திய அரசும், 25 சதவீத தொகை மாநில அரசும் வழங்குகிறது.இத்திட் டங்களுக்கு மத்திய அரசு நிர்வாக அனுமதி மற்றும் ஒப்புதல் வழங்க தமிழகத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் மத்திய அரசு நீர்வள ஆணைய இயக்குநர் எஸ். லால், தலைமைப் பொறியாளர் சௌத்திரி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் வெள்ளாற்று கரையை பலப்படுத்துவது, கொள்ளிடம் வடக்கு கரையை பலப்படுத்துதல், கான்சாகிப் வாய்க்கால் இருகரையை உயர்த்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.மத்திய அரசு நீர்வள ஆணையக் குழுவினர் அணைக்கரை, வல்லம்படுகை (கொள்ளிடம் ஆற்றங்கரை), அம்மாப்பேட்டை (கான்சாகிப் வாய்க்கால்), பாசிமுத்தான்ஓடை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.அவர்களுடன் கடலூர் மாவட்ட பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன், செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.அப் போது அக் குழுவினரிடம் விவசாயிகள் சார்பில் உழவர் கூட்டமைப்புத் தலைவர் பி.ரவீந்திரன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை பாலம் குறுகியதாக உள்ளதால் வெள்ளநீர் வடியை வழி செல்லாமல் ஆண்டுதோறும் சேதத்தை ஏற்படுத்துகிறது.எனவே அங்கு அகலமாக புதிய பாலம் அமைக்க வேண்டும். நீர்நிலை நிறைந்த வாய்க்கால்கள் குறுக்கே எதிர்காலத்தில் பாலம் அமைக்கும் முன் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை அனுமதி பெற்று அவர்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை பாலத்தை அமைக்க வேண்டும்.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச்சேதத்தை தவிர்க்கவும், விவசாயத்தை காப்பாற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடங்கு முன்பு அப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா என கண்காணிக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என பி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
வெள் ளத்தடுப்பு
மாணவர்களுக்கு வசதியாக ரயில்களை இயக்கக் கோரிக்கை
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வசதியாக பாசஞ்சர் ரயில்களின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று, ரயில்வே இலாகாவுக்குத் தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் ரயில்வே பொது மேலாளருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்,
கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
நிற்காமல் செல்வது பயணிகளை பெரிதும் பாதிக்கிறது. துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் சென்று எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பிடிப்பது மக்களுக்குச்
சாத்தியமாக இல்லை. இதனால் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின்
வருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.÷50 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து எக்ஸ்பிஸ் ரயில்களும் நிற்கும் ரயில் நிலையமாக இருந்து
வந்துள்ளது திருப்பாப்புலியூர். திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில்,
திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றுவரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும், தினமும் சென்னை செல்லும் பயணிகளுக்கும், திருப்பாப்புலியூர், பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காதது பெருத்த ஏமாற்றமாக உள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு வசதியாக, விழுப்புரம் மயிலாடுதுறை இடையே முன்பு காலையில் 2 ரயில்களும் மாலையில் 2 ரயில்களும்
இயக்கப்பட்டன. தற்போது காலை, மாலை தலா ஒரு ரயில் மட்டுமே
இயக்கப்படுவது மாணவர்களுக்கும் அலவலகம் செல்வோருக்கும்
போதுமானதாக இல்லை. ரயில்களின் இயக்க நேரங்களும் ஏற்றதாக இல்லை. எனவே கூடுதலாக இரு பாசஞ்சர் ரயில்களை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்றும் சிவகுமார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம்,
ரயில் போக்குவரத்து
கடலூர் மாவட்டத்தில் 82 சுயநிதிப் பள்ளிகளுக்கு கல்விக் கட்டண விவரம் வெளியீடு
நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, சுயநிதிப் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டண அறிக்கைகளை, கடலூர் மாவட்டத்தில் இதுவரை 82 பள்ளிகள் பெற்றுச் சென்றுள்ளன.தனியார் சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களிடம் அபரிமிதமான கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த தமிழக அரசு சட்டம் இயற்றி இருக்கிறது. இந்தச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு பள்ளிகளும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்ட அறிக்கைகள் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 112 சுயநிதிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 90 பள்ளிகளுக்கு கட்டணப் பரிந்துரைப் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு
வநதுள்ளது. இவற்றில் 82 பள்ளி நிர்வாகங்கள் வியாழக்கிழமை வரை,
கட்டணப் பட்டியலைப் பெற்றுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ÷கட் டணப் பட்டியலை இதுவரை வாங்காமல் இருக்கும் பள்ளிகள், நகர்ப் புறங்களில் உள்ள மிகப் பிரபலமான பள்ளிகள்தான் என்று
கூறப்படுகிறது.÷பிரபலமான பள்ளிகள் பல, தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தியும் தகவல்களை அளித்து உள்ளன. இந்தக் கட்டணத்தில் பள்ளி சிறப்பாக நடப்பதால், அதேக் கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்கலாம் என்று நீதிபதி கோவிந்தராஜ் குழு பரிந்துரைத்து உள்ளது. இவ்வாறு 25 சதவீத பள்ளி நிர்வாகங்கள், தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்துக் காண்பித்ததால், அதேக் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கிராமப்புற நர்சரி பள்ளிகள் பலவற்றுக்கு அவர்கள் தற்போது வசூலிக்கும் கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிபதி குழு பரிந்துரைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 20 சதவீத பள்ளிகளுக்கு அவர்கள் தற்போது
வசூலிக்கும் கட்டணத்தையே நீதிபதி குழு பரிந்துரைத்து உள்ளது.மொத்தத்தில் 50 சதத்துக்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகங்கள், நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைக் கட்டண விகிதத்தை, முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு இருப்பதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வநதுள்ளது. இவற்றில் 82 பள்ளி நிர்வாகங்கள் வியாழக்கிழமை வரை,
கட்டணப் பட்டியலைப் பெற்றுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ÷கட் டணப் பட்டியலை இதுவரை வாங்காமல் இருக்கும் பள்ளிகள், நகர்ப் புறங்களில் உள்ள மிகப் பிரபலமான பள்ளிகள்தான் என்று
கூறப்படுகிறது.÷பிரபலமான பள்ளிகள் பல, தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தியும் தகவல்களை அளித்து உள்ளன. இந்தக் கட்டணத்தில் பள்ளி சிறப்பாக நடப்பதால், அதேக் கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்கலாம் என்று நீதிபதி கோவிந்தராஜ் குழு பரிந்துரைத்து உள்ளது. இவ்வாறு 25 சதவீத பள்ளி நிர்வாகங்கள், தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்துக் காண்பித்ததால், அதேக் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கிராமப்புற நர்சரி பள்ளிகள் பலவற்றுக்கு அவர்கள் தற்போது வசூலிக்கும் கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிபதி குழு பரிந்துரைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 20 சதவீத பள்ளிகளுக்கு அவர்கள் தற்போது
வசூலிக்கும் கட்டணத்தையே நீதிபதி குழு பரிந்துரைத்து உள்ளது.மொத்தத்தில் 50 சதத்துக்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகங்கள், நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைக் கட்டண விகிதத்தை, முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு இருப்பதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
கல்வி,
பள்ளி
கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ரூ.5.50 லட்சம் டாப்-அப் கார்டுகள் மாயம்
கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டாப்-அப் கார்டுகள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 55 ரூபாய் மதிப் புள்ள 70 ஆயிரம் டாப்-அப் கார்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அப்போது பொறுப்பில் இருந்த அதிகாரி ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டு வாங்கியுள்ளார். இதன் பின் அவர் வெளியூருக்கு மாறுதலாகி சென்று, தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.அலுவலக தணிக்கையின் போது 10 ஆயிரம் டாப்-அப் கார்டு களை கொண்ட ஒரு பாக்ஸ் விற் பனை செய்ததற்கான கணக்கில் வரவில்லை. இது குறித்து அலுவலகத்தில் விசாரணை செய்த தில் மாயமான டாப்-அப் கார்டுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாயமான கார்டுகளின் மதிப்பு 5.50 லட்சம் ரூபாயாகும். மாயமான 3,000 கார்டுகள் விருதுநகர் மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 7,000 கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
கார்டுகள் எப்படி காணாமல் போனது... யார் எடுத்துச் சென்றது என்ற விபரங்களை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட் டனர். மேலும் கார்டுகள் மாயமானது குறித்து கடலூர் பி.எஸ். என்.எல்., முதன்மை கணக்கு அதிகாரி ராஜா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் சம்பவம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்குள் நடந்துள்ளது. மேலும் ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதில் மாயமானது மூன் றாம் எண் பெட்டியாகும். விற்பனை செய்தவர்கள் இரண்டு பெட்டிகளை விற்பனை செய்த பின் மூன்று பெட்டி மாயமானது தெரியாமல் எப்படி நான்காவது பெட்டியை விற்பனை செய்துள் ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை செய்து குற்றவாளி அல்லது சந்தேக நபர்கள் குறிப்பிட்டு புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 55 ரூபாய் மதிப் புள்ள 70 ஆயிரம் டாப்-அப் கார்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அப்போது பொறுப்பில் இருந்த அதிகாரி ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டு வாங்கியுள்ளார். இதன் பின் அவர் வெளியூருக்கு மாறுதலாகி சென்று, தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.அலுவலக தணிக்கையின் போது 10 ஆயிரம் டாப்-அப் கார்டு களை கொண்ட ஒரு பாக்ஸ் விற் பனை செய்ததற்கான கணக்கில் வரவில்லை. இது குறித்து அலுவலகத்தில் விசாரணை செய்த தில் மாயமான டாப்-அப் கார்டுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாயமான கார்டுகளின் மதிப்பு 5.50 லட்சம் ரூபாயாகும். மாயமான 3,000 கார்டுகள் விருதுநகர் மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 7,000 கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
கார்டுகள் எப்படி காணாமல் போனது... யார் எடுத்துச் சென்றது என்ற விபரங்களை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட் டனர். மேலும் கார்டுகள் மாயமானது குறித்து கடலூர் பி.எஸ். என்.எல்., முதன்மை கணக்கு அதிகாரி ராஜா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் சம்பவம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்குள் நடந்துள்ளது. மேலும் ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதில் மாயமானது மூன் றாம் எண் பெட்டியாகும். விற்பனை செய்தவர்கள் இரண்டு பெட்டிகளை விற்பனை செய்த பின் மூன்று பெட்டி மாயமானது தெரியாமல் எப்படி நான்காவது பெட்டியை விற்பனை செய்துள் ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை செய்து குற்றவாளி அல்லது சந்தேக நபர்கள் குறிப்பிட்டு புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
கட்டுகள்
கடலூர்,
பி.எஸ்.என்.எல்
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூரில் வரும் 23ம் தேதி துவக்கம்
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. மாவட்ட கிரிக்கெட் சங்கம், கடலூர் காஸ்மா பாலிட்டன் கிரிக்கெட் கிளப் மற்றும் மாவட்ட கிரிக்கெட் அகாடமி ஆகியவை சார்பில் 2009-10ம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வரும் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. வெற்றி பெற்றும் அணிக்கு முதல் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 7,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய், நான்காம் பரிசாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கு 250 ரூபாய் பரிசு, தொடர் நாயகனுக்கு 1,000 ரூபாய், தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. போட்டிகள் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கிரிக் கெட் அணியினர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு கூத்தரசன், செயலர், கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், ஜட்ஜ் பங் களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 9442521780, 9500872434 மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.
ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கு 250 ரூபாய் பரிசு, தொடர் நாயகனுக்கு 1,000 ரூபாய், தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. போட்டிகள் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கிரிக் கெட் அணியினர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு கூத்தரசன், செயலர், கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், ஜட்ஜ் பங் களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 9442521780, 9500872434 மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.
கட்டுகள்
அண்ணா விளையாட்டு அரங்கம்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
கிரிக்கெட்
மாறுவேடத்தில் அதிகாரிகள் குழு அதிரடி ஆய்வு : கடலூர் அரசு மருத்துவமனை சீர்கேடு அம்பலம்
கடலூர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து 10 பேர் கொண்ட குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தபோது நோயாளிகளிடம் ஊழியர்கள் மனிதநேயமின்றி நடந்து கொண் டதை கண்கூடாக பார்க்க முடிந் தது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் கூறினார்.
கடலூர் அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேடு, சிகிச் சைக்கு லஞ்சம், நோயாளிகளிடம் பரிவு காட்டாதது போன்ற பல புகார்கள் சுகாதாரத்துறைக்கு வந் துள்ளன. அமைச்சர் பன்னீர் செல் வம் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் தலைமையில் கண்காணிப்பாளர் ரங்கராஜன், ஈஸ்வரன், புள்ளிவிவர உதவியாளர் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கொண்ட அதிரடி படையினர் மருத்துவமனையில் நேற்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நோயாளிகள் போல் மாறுவேடத்தில் ஒவ்வொரு பிரிவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று (நேற்று) எங்கள் குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளது தெரிய வந் துள்ளது. ஊழியர்கள் நோயாளிகளிடம் மனிதநேயம் இல்லாமல் நடத்து கொண்டுள்ளனர். வயிற்று வலியால் துடித்த நோயாளி ஒருவருக்கு 2 மணி நேரமாக ஸ்கேன் எடுக்காமல் காக்க வைத்ததும் கண்கூடாக காண நேர்ந்தது. சிலர் நோயாளிகளிடம் லஞ்சம் பெற் றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மருத்துவமனையில் உள்ள ஸ்டோர், ஆபீஸ், மகப் பேறு, சமையல் கூடத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டு மாற்றியமைக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. எக்ஸ்ரே பிலிம் போதுமான அள விற்கு தட்டுபாடின்றி வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம் ஏழை மக்களுக்கு மருத் துவம் சென்றடையவேண்டும் என்பதேயாகும். ஆய்வின் போது தவறு செய்தவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். சிலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. நடவடிக்கை குறித்து ஆய்வு முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். இது போன்ற அதிரடி ஆய்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படும். இவ் வாறு கூடுதல் இயக்குனர் கூறினார்.
கடலூர் அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேடு, சிகிச் சைக்கு லஞ்சம், நோயாளிகளிடம் பரிவு காட்டாதது போன்ற பல புகார்கள் சுகாதாரத்துறைக்கு வந் துள்ளன. அமைச்சர் பன்னீர் செல் வம் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் தலைமையில் கண்காணிப்பாளர் ரங்கராஜன், ஈஸ்வரன், புள்ளிவிவர உதவியாளர் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கொண்ட அதிரடி படையினர் மருத்துவமனையில் நேற்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நோயாளிகள் போல் மாறுவேடத்தில் ஒவ்வொரு பிரிவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று (நேற்று) எங்கள் குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளது தெரிய வந் துள்ளது. ஊழியர்கள் நோயாளிகளிடம் மனிதநேயம் இல்லாமல் நடத்து கொண்டுள்ளனர். வயிற்று வலியால் துடித்த நோயாளி ஒருவருக்கு 2 மணி நேரமாக ஸ்கேன் எடுக்காமல் காக்க வைத்ததும் கண்கூடாக காண நேர்ந்தது. சிலர் நோயாளிகளிடம் லஞ்சம் பெற் றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மருத்துவமனையில் உள்ள ஸ்டோர், ஆபீஸ், மகப் பேறு, சமையல் கூடத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டு மாற்றியமைக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. எக்ஸ்ரே பிலிம் போதுமான அள விற்கு தட்டுபாடின்றி வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம் ஏழை மக்களுக்கு மருத் துவம் சென்றடையவேண்டும் என்பதேயாகும். ஆய்வின் போது தவறு செய்தவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். சிலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. நடவடிக்கை குறித்து ஆய்வு முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். இது போன்ற அதிரடி ஆய்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படும். இவ் வாறு கூடுதல் இயக்குனர் கூறினார்.
கட்டுகள்
அரசு மருத்துவமனை,
கடலூர்,
சுகாதாரத்துறை
கல்விக் கட்டண அரசாணை நகல் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்த அரசாணை நகல் சி.இ.ஓ., அலுவலகத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை கட்டுப்படுத்தப் படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி அரசு சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயிப்புக்குழு அமைத் தது. இந்த குழு தனியார் பள்ளிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கட்டணத்தை நிர்ணயித்துள் ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 398 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது 328 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள் ளது. அதில் 101 பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் குறித்த பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி தனியார் பள்ளிகளுக்கு வழங்கினார். மீதமுள்ள பள்ளிகளுக்கு விரைவில் வழங் கப்படும்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 398 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது 328 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள் ளது. அதில் 101 பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் குறித்த பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி தனியார் பள்ளிகளுக்கு வழங்கினார். மீதமுள்ள பள்ளிகளுக்கு விரைவில் வழங் கப்படும்.
கட்டுகள்
கடலூர்,
கல்வி,
தமிழக அரசு
கல்வியில் புறக்கணிக்கப்படும் நெல்லிக்குப்பம்: படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள்
நெல்லிக்குப்பத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் ஏழை, எளிய மாணவர்கள் வெளியூர் சென்று மேல் படிப்பை தொடர முடியாத அவலம் உள்ளது.நெல்லிக்குப்பம் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெல்லிக்குப்பத்தில் அரசு பெண்கள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. பார்டர் அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பெரும்பாலான கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய விவசாய கூலி குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் இலவச பஸ் பாஸ், புத்தகம் என அனைத்தும் அரசு கொடுத்தாலும் படித்தவரை போதும் வெளியூர் சென்று படித்தால் கூடா நட்பு ஏற்பட்டு கெட்டு போய் விடுவாய் என கூறி தங்களுடன் விவசாய கூலி அல்லது கொத்தனார் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். பெரும்பாலான கிராமப்புற ஏழை மாணவர்கள், எஸ்.எஸ். எல்.சி.,யில் குறைந்த மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர் கள் மேல் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்பவர்களே அதிகம் உள்ளனர். இதனால் அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மத்திய அரசு கல்வியை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்துள்ளது. மாநில அரசும் இலவச கல்வி, பஸ் பாஸ், சைக்கிள் என கல்வியை வளர்க்க பல முயற்சிகள் மேற்கொண்டுள் ளது. ஆண்டுதோறும் மாவட்டத் தில் பல இடங்களில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் மாணவர்கள் கல்வி தடைபடுவதை தடுக்க முடியும். கல்வியைப் பொறுத்தவரை நெல்லிக்குப்பம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. இத்தொகுதியில் அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், கலைக் கல்லூரிகள் என எதுவும் இல்லை. அருகில் உள்ள பண்ருட்டி தொகுதியில் பொறியியல் கல் லூரியும், கடலூரில் ஐ.டி.ஐ., கலைக்கல்லூரியும் உள்ளது. நெல்லிக்குப்பம் தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு பட்ஜெட்டில் புதியதாக 6 பாலி டெக்னிக் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதில் ஒன்றை நெல்லிக்குப்பம் தொகுதியில் அமைக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்பில் நெல்லிக்குப்பம் தொகுதி தற் போது எடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரே அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய விவசாய கூலி குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் இலவச பஸ் பாஸ், புத்தகம் என அனைத்தும் அரசு கொடுத்தாலும் படித்தவரை போதும் வெளியூர் சென்று படித்தால் கூடா நட்பு ஏற்பட்டு கெட்டு போய் விடுவாய் என கூறி தங்களுடன் விவசாய கூலி அல்லது கொத்தனார் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். பெரும்பாலான கிராமப்புற ஏழை மாணவர்கள், எஸ்.எஸ். எல்.சி.,யில் குறைந்த மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர் கள் மேல் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்பவர்களே அதிகம் உள்ளனர். இதனால் அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மத்திய அரசு கல்வியை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்துள்ளது. மாநில அரசும் இலவச கல்வி, பஸ் பாஸ், சைக்கிள் என கல்வியை வளர்க்க பல முயற்சிகள் மேற்கொண்டுள் ளது. ஆண்டுதோறும் மாவட்டத் தில் பல இடங்களில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் மாணவர்கள் கல்வி தடைபடுவதை தடுக்க முடியும். கல்வியைப் பொறுத்தவரை நெல்லிக்குப்பம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. இத்தொகுதியில் அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், கலைக் கல்லூரிகள் என எதுவும் இல்லை. அருகில் உள்ள பண்ருட்டி தொகுதியில் பொறியியல் கல் லூரியும், கடலூரில் ஐ.டி.ஐ., கலைக்கல்லூரியும் உள்ளது. நெல்லிக்குப்பம் தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு பட்ஜெட்டில் புதியதாக 6 பாலி டெக்னிக் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதில் ஒன்றை நெல்லிக்குப்பம் தொகுதியில் அமைக்க வேண்டும். தொகுதி மறு சீரமைப்பில் நெல்லிக்குப்பம் தொகுதி தற் போது எடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒரே அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுகள்
கடலூர்,
கல்வி,
நெல்லிக்குப்பம்
திருவந்திபுரம் கோயிலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பை வியாழக்கிழமை சாமி கும்பிட்டார்.இதற்காக எடியூரப்பா வியாழக்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுவை வந்தார். அங்கிருந்து காரில் கடலூர் வழியாகத் திருவந்திபுரத்துக்கு காலை 9 மணிக்கு வந்தார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.பின்னர் காரில் எடியூரப்பா திருவந்திபுரம் மலை மீதுள்ள லட்சுமி ஹயகிரீவர் ஆலயத்துக்குச் சென்றார். கோயில் வாயிலில் மேளதாளம் முழங்க அர்ச்சகர்கள் நீலமேகப் பட்டாச்சாரியார், நரசிம்ம பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் வரவேற்றனர். கோயிலில் எடியூரப்பா சிறப்பு வழிபாடுகள் செய்தார். அங்கிருந்து படிக்கட்டுகள் வழியாக நடந்து தேவநாதசாமி கோயிலுக்கு வந்தார். அங்கும் எடியூரப்பாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.எடியூரப்பா வருகையை முன்னிட்டு தேவநாத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.சிறப்பு பூஜைகளை முடித்துக் கொண்டு எடியூரப்பா 10-07 மணிக்கு மீண்டும் புதுவை மாநிலம் சென்றார். அவரது வருகையை முன்னிட்டு கடலூரில் புதன்கிழமை மாலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீஸ் உத்தரவின்பேரில் திருவந்திபுரத்தில் பிரதானக் கடை வீதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. எடியூரப்பா செல்லும் பாதை முழுவதும், வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. கோயில் வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை நடத்தப்பட்டது.
கட்டுகள்
கடலூர்,
திருவந்திபுரம்
புதுச்சேரி பதிவு எண் வாகனங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் ரூ.7 லட்சம் வசூல்
கடலூர் மாவட்டத்தில் 237 புதுச்சேரி மாநில பதிவு எண் வாகனங்கள் பிடிபட்டதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை வரி கட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் வரை இரண்டு கார்கள் உட்பட 237 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை வரி கட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் வரை இரண்டு கார்கள் உட்பட 237 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
போக்குவரத்துத்துறை,
போலீஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)