ரேஷன் கடையில் முறைகேடு செய்த விற்பனையாளர் இருவருக்கு தலா ஒரு ஆண்டு சிறையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவர் கடந்த 97ம் ஆண்டு மஞ்சக்குப்பம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். 98ம் ஆண்டு இவரை இடம் மாற்றம் செய்தபோது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 532 ரூபாய் பொருள் இருப்பு குறைவு கண்டுபிடிக்கப்பட்டது.அதேபோன்று மஞ்சக்குப்பம் ரேஷன் மெயின் கடை எண்.1ல் பணிபுரிந்த விற்பனையாளர் கணேசன் தனது பணிக்காலத்தில் 44 ஆயிரத்து 489 ரூபாய் பொருள் இருப்பு குறைவு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வணிகவியல் குற்றப்புலனாய்வு போலீசார், இருவர் மீது கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரமேஷ், விற்பனையாளர்கள் விஜயகுமார் மற்றும் கணேசனுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
ரேஷன் கார்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரேஷன் கார்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரேஷன் கார்டு நீக்கத்தில் குளறுபடி : வட்ட வழங்கல் அலுவலர் மாற்றம்
புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது மற்றும் போலி கார்டுகள் நீக்கம் செய்வதில் ஏற்பட்ட குள றுபடியால் கடலூர் வட்ட குடிமை பொருள் தனி தாசில்தார் மாற்றம் செய் யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் போலி ரேஷன் கார்டு எண் ணிக்கை அதிகளவில் இருந்ததால் ஆய்வு செய்து நீக்க அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டு கடந்த வாரம் நீக்கப் பட்ட கார்டுதாரர்கள் குறித்து அந்தந்த ரேஷன் கடைகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதில் உண்மையான கார் டுதாரர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
முறையான ஆய்வு மேற் கொள்ளாததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. ஆறு மாதத் திற்கு ஒருமுறை கார்டுகள் நீக்குவதும், மீண்டும் புதுப்பிக்க அவகாசம் கொடுப்பதும், அதற்காக தங்களது அலுவல்களை விட்டுவிட்டு உண்மையான கார்டுதாரர்கள் அலைவதுமாக இருந்ததால் ரேஷன் கடைகள் மற் றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி டி.ஆர்.ஓ., நடராஜன் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜன் ஆகியோர் கடலூர் வட்ட வழங் கல் அலுவலகத்தில் விசாரணை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 5ம் தேதி வட்ட வழங்கல் தனி தாசில் தார் ராஜசேகர் நெய்வேலி நில எடுப்பு அலுவலகத்திற்கு மாற்றப் பட்டார். அங்கு பணிபுரிந்த பாண்டியம்மாள் கடலூர் குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு இன்று பொறுப் பேற்கிறார்.
தமிழகத்தில் போலி ரேஷன் கார்டு எண் ணிக்கை அதிகளவில் இருந்ததால் ஆய்வு செய்து நீக்க அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டு கடந்த வாரம் நீக்கப் பட்ட கார்டுதாரர்கள் குறித்து அந்தந்த ரேஷன் கடைகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதில் உண்மையான கார் டுதாரர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
முறையான ஆய்வு மேற் கொள்ளாததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. ஆறு மாதத் திற்கு ஒருமுறை கார்டுகள் நீக்குவதும், மீண்டும் புதுப்பிக்க அவகாசம் கொடுப்பதும், அதற்காக தங்களது அலுவல்களை விட்டுவிட்டு உண்மையான கார்டுதாரர்கள் அலைவதுமாக இருந்ததால் ரேஷன் கடைகள் மற் றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி டி.ஆர்.ஓ., நடராஜன் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜன் ஆகியோர் கடலூர் வட்ட வழங் கல் அலுவலகத்தில் விசாரணை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 5ம் தேதி வட்ட வழங்கல் தனி தாசில் தார் ராஜசேகர் நெய்வேலி நில எடுப்பு அலுவலகத்திற்கு மாற்றப் பட்டார். அங்கு பணிபுரிந்த பாண்டியம்மாள் கடலூர் குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு இன்று பொறுப் பேற்கிறார்.
கட்டுகள்
கடலூர்,
ரேஷன் கார்டு
ரேஷன் கார்டுக்காக அலைக்கழிக்கப்படும் கடலூர்வாசிகள்
புதிய ரேஷன் கார்டுகளுக்காகவும், ஏற்கெனவே உள்ள ரேஷன் கார்டுகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அலுவலர்களால் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். 22 லட்சம் மக்கள்தொகை கொண்ட கடலூர் மாவட்டத்தில் தற்போது 6,43,675 ரேஷன் கார்டுகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் போலி கார்டுகள் பல இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதன் அடிப்படையில், அது குறித்து ஓராண்டுக்கு முன் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இதில் 1.14 லட்சம் ரேஷன் கார்டுகள் போலியானவை (குறிப்பிட்ட முகவரியில் அட்டைதாரர் இல்லாவிட்டால் போலி என அறிவிக்கப்படுகிறது) என்று கண்டறியப்பட்டது. இந்தக் கார்டுகளுக்கு ரேஷன் பொருள்கள் நிறுத்தப்பட்டன. போலிப் பட்டியலில் இடம்பெற்ற கார்டுதாரர்கள் ஆவணங்களைக் காண்பித்து தங்களது அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான காலஅவகாசம் 31-1-2010 உடன் முடிந்து விட்டது. இதற்கிடையே போலிப் பட்டியலில் இடம்பெற்ற கார்டுதாரர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்கள் மீது கள ஆய்வு செய்து, கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு இருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவிக்கிறது. ஆனால் ஏற்கெனவே அலுவலர்கள், கள ஆய்வு செய்து போலி கார்டுகள் என அறிவித்தது மற்றும் மேல்முறையீட்டின் பேரில் கள ஆய்வு செய்தது முறையாக நடைபெறவில்லை என்பது பாதிக்கப்பட்ட பொதுமக்களின் குற்றச்சாட்டு. சுமார் 70 ஆயிரம் பேருடைய ரேஷன் கார்டுகள் உண்மையானவைகளாக இருந்தும், போலிப் பட்டியலில் சிக்கியதால், அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். நகர்ப் புறங்களை எடுத்துக் கொண்டால், எடுத்துக்காட்டாக கடலூர் 1,2 வார்டுகளில் ஒரு கடையில் உள்ள 1500 கார்டுகளில் 250 கார்டுகள் போலியென அறிவிக்கப்பட்டது. இது முற்றிலும் தவறானது. மேல் முறையீடு செய்ததில் 60 கார்டுகள் மட்டும் புதுப்பிக்கப்பட்டன. போலி என நீக்கப்பட்டபோது கள ஆய்வு மேற்கொண்டது, மற்றும் மேல் முறையீட்டின் போது கள ஆய்வு மேற்கொண்டது முற்றிலும் சரியாக நடக்கவில்லை. சரியாகக் கள ஆய்வு மேற்கொள்ளாமல், திட்டமிட்டு குறிப்பிட்ட எண்ணிக்கை கார்டுகளை போலியானவை என்று அறிவித்துவிட்டார்கள் என்றார், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன். கிராமப்புறங்களை எடுத்துக் கொண்டால், எடுத்துக்காட்டாக விருத்தாசலம் வட்டம் கார்மாங்குடி கிராமத்தில் கள ஆய்வுக்கு, முழுமையாக உதவி செய்தும் 647 கார்டுகளில் தகுதி உள்ள 48 கார்டுகள் போலியானவை என்று, வேண்டும் என்றே அறிவித்து இருக்கிறார்கள் என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி வெங்கடேசன். இது குறித்து இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதின் கூறுகையில், போலிக் கார்டுகளை நீக்கப்போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததுமே, உண்மையான போலி கார்டுதாரர்கள் உஷாராகி விட்டனர். அதிகாரிகள் உடந்தையுடன் தங்கள் கார்டுகள் போலிப் பட்டியலில் இடம்பெறாது பார்த்துக் கொண்டனர்.÷இதனால் போலிக் கார்டு பட்டியலில், கிராம மக்கள், நகரத்து அப்பாவி மக்களின் கார்டுகள் சிக்கிக் கொண்டன. மேல் முறையீடு செய்ய என்னதான் அறிவிப்பு வந்தாலும், அது மக்களை சென்றடையவில்லை. கள ஆய்வு முறையாக நடக்கவில்லை. கள ஆய்வு மேற்கொண்டபோது ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை நகல், ரேஷன் கார்டுதாரருக்கு வழங்கப்படாதது மிகப் பெரிய தவறு. திட்டமிட்டு குறிப்பிட்ட எண்ணிக்கை கார்டுகளை நீக்கி இருக்கிறார்கள் என்றார். இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜிடம் கேட்டதற்கு, மேல் முறையீட்டு கார்டுகள் குறித்து, கள ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டது. 30 ஆயிரம் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.மேல்முறையீட்டுக் காலம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது என்றார்.
கட்டுகள்
கடலூர்,
ரேஷன் கார்டு
ரேஷன் கடை பணியாளர் தற்காலிக பணி நீக்கம்
எடைக் குறைவாக பொருட்களை வழங்கிய ரேஷன்கடை பணியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:குறிஞ்சிப்பாடி அடுத்த அம்பலவாணன்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் டி.ஆர்.ஓ., நடராஜன் திடீர் ஆய்வு மேற் கொண் டார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கிய துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பொருட்களின் எடை குறைவாக இருந் தது. பில் போடப்பட்டும் சர்க்கரை வழங்கவில்லை. கடையில் பாமாயில, துவரம் பருப்பு, உளுந்து இருப்பு குறைவாக இருந்ததை தொடர்ந்து விற்பனையாள
கட்டுகள்
கடலூர்,
ரேஷன் கார்டு
உண்மையான குடும்ப அட்டைகள்... நீக்கம்! : தவறான கணக்கெடுப்பால் குளறுபடி
மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் என்ற பெயரில் தவறான கணக்கெடுப்பால் உண் மையான கார்டுதாரர்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். வியாபாரிகள் வசம் உள்ள நூற்றுக் கணக்கான கார்டுகளை ஒழிக்க வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.
மாவட்டத்தில் 1,116 முழு நேரம் மற்றும் 193 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 6 லட் சத்து 47 ஆயிரத்து 75 கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, மைதா, ரவை, மண்ணெண்ணெய் உள் ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் நடுத்தர மக்கள் சர்க்கரை, மண்ணெண்ணெய் மட்டுமே வாங்கி வந்தனர். தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக நடுத் தர மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை ரேஷன் கடைகளையே நம்பியுள்ளனர். இதனால் புதிய ரேஷன் கார்டுகள் வாங்குவோரின் விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் சமீப காலமாக இலவச கலர் "டிவி', காஸ் இணைப்பு உள்ளிட்ட அரசு வழங்கும் சலுகைகளை பெற ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்டுகள் பெற்றுள்ளனர். ஏற்கனவே மண்ணெண்ணெய், சர்க்கரைக்காக வியாபாரிகள் அதிகளவில் போலி ரேஷன் கார்டுகள் வைத்துள்ள நிலையில் இலவச பொருட்களை பெற பொதுமக்களும் தாய், தந்தைக்கு ஒரு கார்டு, பிள்ளைகளுக்கு ஒரு கார்டு என தனித்தனியாக விண்ணப்பித்து பெற் றுள்ளனர். ஆரம்பத்திலேயே தீவிரமாக விசாரணை செய்து கார்டு வினியோகத்தை நிறுத்த வேண் டிய வருவாய்த் துறையினர் முழுமையாக விசாரணை செய்யாததன் விளைவாக மாவட்டத்தில் போலி கார்டுகள் லட்சக்கணக்கில் உருவாகியுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் போலி கார்டுகளை நீக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதில் அதிகளவில் குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் பாதிக்கும் என்பதை அறிந்த அரசு, போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு திட்டத்தை நிறுத்தி வைத்தது. மேலும் ஏற்கனவே நீக்கிய கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிட்டது. தேர்தல் முடிந்த பின்னர் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால், பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தவர் கள் கார்டுகளை கூட நீக் கம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் ஆவேசமடைந்தனர். அதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது அன்றாட பணியை விட்டுவிட்டு, ரேஷன் கடைக் கும், தாலுகா அலுவலகத்திற்குமாக அலைந்து ரேஷன் கார்டை புதுப் பித்து பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் மாவட் டத்தில் உள்ள 1,309 ரேஷன்கடைகளிலும் நீக்கப்பட்டியில் கடந்த 1ம் தேதி ஒட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையிலும் போலி ரேஷன்கார்டுகள் என்ற பெயரில் 25 முதல் 30 சதவீதம் வரை நீக்கப்பட் டுள்ளன. உதாரணமாக சிதம்பரத்தில் ஒரு கடையில் 1,346 கார்டுகளில் 298ம், மற் றொரு கடையில் 1,468க்கு 455 கார்டுகளும் நீக்கப்பட் டுள்ளன. கடலூரில் 1,265க்கு 369ம், 1,550க்கு 337ம், நெல்லிக்குப்பத்தில் 1,483க்கு 210ம், காட்டுமன் னார்கோவிலில் 9,027க்கு 1,279 கார்டுகள் நீக்கப்பட் டுள்ளன. இந்த கார்டு நீக் கத்தில் பெரும்பாலும் உண்மையான கார்டுதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வீடு தேடி வந்து விசாரித்த அதிகாரிகள் மேற்கண்ட முகவரியில் வசிப்பதாக அறிக்கை கொடுத்த பலரது ரேஷன் கார்டுகளும் நீக்கப் பட்டுள்ளது.
இவர்கள் நாள்தோறும் தாலுகா அலுவலகமும், வீடுமாக அலைந்து கொண்டிருப்பதே வாடிக் கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு தாலுகா அலுவலகம் சென்றாலும் முறையான பதில் கிடைக்காததால் ஆத்திரத்தில் தகராறில் ஈடுபடுகின்றனர். உண்மையான ரேஷன் கார்டுகளை உட்கார்ந்திருந்த இடத்தில் காலி செய் யும் அதிகாரிகள், போலி கார்டுகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மண்ணெண் ணெய்க்காகவும், அரிசிக்காகவும் அதிகாரிகளின் ஆசியுடன் ஒரே நபர் நூற் றுக்கும் மேற்பட்ட போலி கார்டுகள் வைத்திருப்பதை கண்டுகொள்ளாதது ஏனோ தெரியவில்லை.
முறையான ஆய்வு இல்லை வருவாய் துறையினர் ஒப்புதல்: ரேஷன் கார்டு நீக்கத்தில் சாமானிய மக்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருக்கும் தாலுகா அலுவலக பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பொது வினியோக திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ஒருவரின் கார்டும் நீக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் கடந்தாண்டு இவரது கார்டு நீக்கப் பட் டது. மறு விண்ணப்பம் கொடுத்து புதுப்பிக்கப் பட்டது. கடந்த மாதம் வரை பொருட்கள் வாங்கியுள்ள நிலையில் இவரது கார்டு இந்த மாதம் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை ஊழியர்களே முறையான ஆய்வு இல்லை என்பதை வேதனையுடன் ஒப்புக் கொள்கின்றனர்.
மாவட்டத்தில் 1,116 முழு நேரம் மற்றும் 193 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 6 லட் சத்து 47 ஆயிரத்து 75 கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, மைதா, ரவை, மண்ணெண்ணெய் உள் ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் நடுத்தர மக்கள் சர்க்கரை, மண்ணெண்ணெய் மட்டுமே வாங்கி வந்தனர். தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக நடுத் தர மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை ரேஷன் கடைகளையே நம்பியுள்ளனர். இதனால் புதிய ரேஷன் கார்டுகள் வாங்குவோரின் விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் சமீப காலமாக இலவச கலர் "டிவி', காஸ் இணைப்பு உள்ளிட்ட அரசு வழங்கும் சலுகைகளை பெற ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்டுகள் பெற்றுள்ளனர். ஏற்கனவே மண்ணெண்ணெய், சர்க்கரைக்காக வியாபாரிகள் அதிகளவில் போலி ரேஷன் கார்டுகள் வைத்துள்ள நிலையில் இலவச பொருட்களை பெற பொதுமக்களும் தாய், தந்தைக்கு ஒரு கார்டு, பிள்ளைகளுக்கு ஒரு கார்டு என தனித்தனியாக விண்ணப்பித்து பெற் றுள்ளனர். ஆரம்பத்திலேயே தீவிரமாக விசாரணை செய்து கார்டு வினியோகத்தை நிறுத்த வேண் டிய வருவாய்த் துறையினர் முழுமையாக விசாரணை செய்யாததன் விளைவாக மாவட்டத்தில் போலி கார்டுகள் லட்சக்கணக்கில் உருவாகியுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் போலி கார்டுகளை நீக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதில் அதிகளவில் குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் பாதிக்கும் என்பதை அறிந்த அரசு, போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு திட்டத்தை நிறுத்தி வைத்தது. மேலும் ஏற்கனவே நீக்கிய கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிட்டது. தேர்தல் முடிந்த பின்னர் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால், பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தவர் கள் கார்டுகளை கூட நீக் கம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் ஆவேசமடைந்தனர். அதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது அன்றாட பணியை விட்டுவிட்டு, ரேஷன் கடைக் கும், தாலுகா அலுவலகத்திற்குமாக அலைந்து ரேஷன் கார்டை புதுப் பித்து பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் மாவட் டத்தில் உள்ள 1,309 ரேஷன்கடைகளிலும் நீக்கப்பட்டியில் கடந்த 1ம் தேதி ஒட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையிலும் போலி ரேஷன்கார்டுகள் என்ற பெயரில் 25 முதல் 30 சதவீதம் வரை நீக்கப்பட் டுள்ளன. உதாரணமாக சிதம்பரத்தில் ஒரு கடையில் 1,346 கார்டுகளில் 298ம், மற் றொரு கடையில் 1,468க்கு 455 கார்டுகளும் நீக்கப்பட் டுள்ளன. கடலூரில் 1,265க்கு 369ம், 1,550க்கு 337ம், நெல்லிக்குப்பத்தில் 1,483க்கு 210ம், காட்டுமன் னார்கோவிலில் 9,027க்கு 1,279 கார்டுகள் நீக்கப்பட் டுள்ளன. இந்த கார்டு நீக் கத்தில் பெரும்பாலும் உண்மையான கார்டுதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வீடு தேடி வந்து விசாரித்த அதிகாரிகள் மேற்கண்ட முகவரியில் வசிப்பதாக அறிக்கை கொடுத்த பலரது ரேஷன் கார்டுகளும் நீக்கப் பட்டுள்ளது.
இவர்கள் நாள்தோறும் தாலுகா அலுவலகமும், வீடுமாக அலைந்து கொண்டிருப்பதே வாடிக் கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு தாலுகா அலுவலகம் சென்றாலும் முறையான பதில் கிடைக்காததால் ஆத்திரத்தில் தகராறில் ஈடுபடுகின்றனர். உண்மையான ரேஷன் கார்டுகளை உட்கார்ந்திருந்த இடத்தில் காலி செய் யும் அதிகாரிகள், போலி கார்டுகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மண்ணெண் ணெய்க்காகவும், அரிசிக்காகவும் அதிகாரிகளின் ஆசியுடன் ஒரே நபர் நூற் றுக்கும் மேற்பட்ட போலி கார்டுகள் வைத்திருப்பதை கண்டுகொள்ளாதது ஏனோ தெரியவில்லை.
முறையான ஆய்வு இல்லை வருவாய் துறையினர் ஒப்புதல்: ரேஷன் கார்டு நீக்கத்தில் சாமானிய மக்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருக்கும் தாலுகா அலுவலக பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பொது வினியோக திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ஒருவரின் கார்டும் நீக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் கடந்தாண்டு இவரது கார்டு நீக்கப் பட் டது. மறு விண்ணப்பம் கொடுத்து புதுப்பிக்கப் பட்டது. கடந்த மாதம் வரை பொருட்கள் வாங்கியுள்ள நிலையில் இவரது கார்டு இந்த மாதம் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை ஊழியர்களே முறையான ஆய்வு இல்லை என்பதை வேதனையுடன் ஒப்புக் கொள்கின்றனர்.
கட்டுகள்
கடலூர் மாவட்டம்,
ரேஷன் கார்டு,
வருவாய்த் துறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)