கோரிக்கை பதிவு

காவல்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவல்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரி கார்களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம்! : தாமாக முன்வந்து வரி செலுத்துவது அதிகரிப்பு

தமிழகத்தில் சாலை வரி செலுத்தாத புதுச்சேரி பதிவெண் கொண்ட கார் களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தை விட புதுச் சேரியில் வாகனங்கள் விலை குறைவாக இருப்பதால் தமிழக எல்லையோர கிராம மக்கள் இதை பயன்படுத்திக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. நாற்பதாயிரம்ரூபாய் மதிப் புள்ள டூ விலர் வாங்குவோருக்கு 4000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. புதுச்சேரியின் எல்லையோரத்தில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்ட சில கிராம மக்கள் புதுச்சேரியில் கொடுக்கல் வாங்கல், பெண் எடுப்பது போன்ற வற்றில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அங்குள்ள வாகனங்களை தமிழக பகுதிகளில் ஊடுருவுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
மேலும் புதுச்சேரி எல்லையோர கிராம மக்கள் போலியான முகவரி கொடுத்து வாகனங் களை வாங்கி அதை தமிழக பகுதிகளில் ஓட்டி வருவது அதிகரித்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும் சாலை வரி செலுத்திவிட்டு தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மாவட் டங்களில் ஓட்டி சாலையை தேய்ப்பது சரியானதா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொ ருட்டு புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங் கள் தமிழக பகுதியில் ஓட்ட தனியாக சாலை வரி செலுத்த அறிவுறுத்தப் பட்டது.
உண்மையான முகவரியில் வாங்கப்பட்ட வாகனங்களாக இருந்தால் ஆர். சி.புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை புதுச்சேரியில் வாங்கி இருக்க வேண்டும். கடலூரில் ஓட்டுனர் உரிமம் பெற்று புதுச்சேரி வாகன பதிவெண் கொண்ட டூ வீலர்களை ஓட்டினால் அது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. அவ்வாறு விதிமுறை மீறி தமிழகத்தில் ஓட்டும் வாகனங் கள் சோதனை செய்யப் பட்டு உடனுக்குடன் சாலை வரி செலுத்துமாறு பணிக்கப்படுகின்றனர்.
அதைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் தினம் தினம் கடலூர்-புதுச்சேரி மாவட்ட எல்லையில் வாகன சோதனை செய்து வருகின்றனர். கடலூரில் மட்டும் இதுவரை 1000த் திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள் சோதனை செய்து பிடித்துள்ளனர்.
சோதனை செய்யும் சில போலீசார் வழக்குபோடமல் இருக்க சாலைவரி கட்டணத்தில் பாதித்தொகையை கேட்கின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி செலுத்தி வருகின்றனர். வாகனம் வாங்கும் தொகையில் 8 சதவீதம் சாலைவரியாக செலுத்த வேண்டும். இவையெல்லாம் டூ வீலர் கள் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி பதிவெண் கார்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன. ஆனால் அதிகாரிகள் கார்களை சோதனை செய்து பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதை விட அரசுக்கு அதிக வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க கார்களை பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர். கடலூர் மாவட் டத்தில் இதுவரை 4 பழைய வாகனங்களை மட்டுமே பிடித்துள்ளனர். அரசுக்கு கார்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டக்கூடியதாக இருந்தும் அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என புரியாத புதிராக உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம்

மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப் பட்ட 60 வாகனங்கள் வரும் 26ம் தேதி கடலூர் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலக செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவில் கைப்பற்றப்பட்ட 60 வாகனங் களை ஏலம் எடுப்பவர்கள் இன்று 24ம் தேதி முதல் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். 26ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.

இரு சக்கர வாகனத்திற்கு 500ம், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன் பணமாக 26ம் தேதி காலை 8.30 மணிக்கு மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க வருபவர்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடை யாள அட்டை, வங்கி பாஸ் புக் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். மேலும், தொடர்புக்கு ஏ.டி.எஸ்.பி., 04142-284353, என்ற தொலைபேசியும், பண் ருட்டி மது விலக்கு பிரிவு 297688 மற்றும் 04144-230477 என்ற எண்ணிற்கும் இன்ஸ்பெக்டர் 98423-14114 என்ற மொபைல் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் அருகே லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு

கடலூர் அருகே கங்கணாங்குப்பத்தில் காவல்துறையின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, சிறப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பிரிவாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது.
மாவட்ட அளவில் செயல்படும் இப்பிரிவின் அலுவலகம் கடலூர் அண்ணா நகரில் தனியார் இடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. அனைத்து துறைகளில் நடக்கும் லஞ்சம் தொடர்பான வழக்கு களை விசாரிக்கவும், லஞ்சம் பெறுபவர்களை பிடிக்கவும் செயல்படும் இப்பிரிவிற்கு நிரந்தர கட்டிடம் அரசு சார்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் அருகே உள்ள கங்கணாங்குப்பத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் சம்பந்தப்பட்ட பிரிவின் அலுவலகம் மற்றும் பணியாற்றும் காவலர்களுக்கான குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது.
மாவட்ட அளவில் செயல்படும் இந்த அலுவலகத்திற்கு லஞ்சம் குறித்து புகார் கொடுக்க வருபவர்கள் கங்கணாங்குப்பத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தை எளிதில் கண்டுபிடித்து வர இயலாது என்று சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் காவல் துறையிடம் கூறியுள்ளனர். இதையடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறைக்கான இடத்தில் சுற்றுப்புற கிராம விவசாயிகள் சிலர் நெல் நடவு செய்து பயிரிட்டு வருகின்றனர். அரசு துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் விளைநிலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, தற்பொழுது இப்பிரிவில் ஒரு டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர் உள்பட 17 போலீசார் பணியாற்றி வருகின்றனர். போலீஸ் குடியிருப்பு மற்றும் அலுவலகத்திற்காக கங்கணாங்குப்பத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிரிவின் முக்கியத்துவம் கருதி கடலூர் நகரிலேயே இடம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட காவல் துறையிடம் கோரப்பட்டுள்ளது.
இடம் ஒதுக்கீடு செய்தவுடன் கங்கணாங்குப்பம் இடம் மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தற்பொழுது கங்கணாங்குப்பத்தில் வேலி அமைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

போலி டாக்டர் கைது விவகாரம்

போலி டாக்டர் என தன்னை கைது செய்தது தொடர்பாக கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டாக்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்பட 7 பேர் வரும் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள் ளது. கடலூர் முதுநகரில் கடந்த ஆண்டு போலீசார் அப்பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த முருகேசன் என்பவரை போலி டாக்டர் என கைது செய்தனர். தான் கொல்கத்தாவில் மருத்துவ படிப்பு படித்துள்ளதாகவும்.
இதில் தன்னை டாக்டர் என்று குறிப்பிடலாம் என்று முருகேசன் கூறினார். ஆனால் போலீசார் போலி டாக்டர்கள் பிரிவில் முரு கேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தன் மீது தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் என தான் படித்த படிப்பிற்கு தன்னை குறிப்பிடலாம்.ஆனால் போலீசார் போலி டாக்டர் பட்டியலில் தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண் டும் என கோரி முருகேசன் கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராமபத்திரன் தமிழக உள்துறை செயலர், மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், எஸ்பி அஷ்வின் கோட்னீஸ், டிஎஸ்பி ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்&இன்ஸ்பெக்டர்கள் சேக்கிழார், பிரேமா உள்ளிட்ட 7 பேர் வரும் 7ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில் தொடர் திருட்டை தடுக்க தீவிர முயற்சி : குற்றவாளிகள் விபரம் சேகரிக்கிறோம்: எஸ்.பி.,

தொடர் திருட்டு மற்றம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை பல்வேறு கோணங்களில் தேடி வருவதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு செய்த போது ஆதிவராகநல்லூரைச் சேர்ந்த அன் வர்பாஷா மனைவி ஷெரியா பேகம் மற்றும் அவரது மாமியார் மகபூப் பீவியும் சிதம்பரம் ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கியில் தலா ஒரு லட்சம் ரூபாயை மேனேஜர் அப்துல் ரகீமிடம் டெபாசிட் செய்து ஏமாற்றப் பட்ட வழக்கு பதிந்து நிலுவையில் இருந்தது.
விசாரணையில் வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்தது உண்மை என தக்க ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டு அதன் பேரில் பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப் பட்டது. மும்பையில் தலைமை கணக்கு அலுவலர் மண்டல் என்பவரை தொடர்பு கொண்டு பாதிக் கப்பட்டவர்களுக்கு  தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்தேன். அதன் பேரில் வங்கி மூலம் முறைப்படி 2 லட்சம் ரூபாயை திரும்ப பெற்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைமறைவான வங்கி மேலாளர் அப்துல் ரகீமை தேடி வருகிறோம்.
மாவட்டத்தில் சமீப காலமாக  வீட்டை உடைத்து நடக்கும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை ஆங் காங்கே செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனைகள் மூலம் தீவிரமாக தேடி வருகிறோம். மேலும் கடலூர், புதுச் சேரி மற்றும் திருச்சி மத் திய சிறைகளில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் வெளியே வந்த கைதிகள் மற்றும் 10 ஆண்டாக குற் றங்களில் ஈடுபடுவோர் விபரம் சேகரித்து அதன் அடிப்படையிலும் குற்றவாளிகளை தேடி வருகிறோம்.
தினமும் நான் மற்றும் அனைத்து டி.எஸ்.பி., க்கள், இன்ஸ்பெக்டர்கள் இரவு ரோந்து பணி மேற் கொள்கிறோம். விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம். பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது வெளியே விளக்குகளை எரிய விட்டு செல்ல வேண்டும். மேலும் போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவித்துவிட்டு சென்றால் குறிப்பிட்ட அப்பகுதியை கண்காணிக்க வசதியாக இருக்கும். இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் கூறினார்.

தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி: மேலும் இரண்டு தனிப்படை அமைப்பு

மாவட்டத்தில் தொடர்ந்து கை வரிசை காட்டி வரும் கொள்ளையர்களை பிடிக்க மேலும் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம் பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இரவு ரோந்து பணியும், வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது.

இருப் பினும் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியில் கொள்ளையர்கள் இரண்டு வீடுகளில் புகுந்து தம்பதியினர்களை தாக்கி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ்.பி., தலைமையில் அவசரக் கூட்டம் நடந்தது. அதில் டி.எஸ். பி.,க்கள், சிறப்புபடை, ரவுடி ஒழிப்பு படை மற் றும் டி.எஸ்.பி.,க்களின் கிரைம் பார்ட்டிகள் கலந்து கொண்டனர். தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக் டர்கள் சிங்காரவேல் மற் றும் குமரேசன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து கொள்ளையர் களை விரைந்து பிடிக்கவும், இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் எஸ்.பி., உத்தரவிட்டார்.

போலீசார் அலட்சியப் போக்கினால் கடலூர் பகுதியில் தொடர் கொள்ளை

கடலூர் பகுதியில் போலீசாரின் அலட்சியம் காரணமாக தொடர் கொள்ளை அதிகரித்து வருகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகமூடிக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் கொள்ளையர்கள் புதுப்புது யுத்திகளை கையாண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 5 கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த 14ம் தேதி பெரியப்பட்டில் ரோலிங் ஷட்டர் பூட்டுகளை ஜாக்கி மூலம் உடைத்து 9 கடைகளில் திருட்டு நடந் துள்ளன. மறுநாள் முட்லூரில் 6 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை போனது. இரண்டு நாள் முன்பு நல்லாத்தூரில் அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து தி.மு.க., பிரமுகர் வீட் டில் கொள்ளையர்கள் புகுந்து 5 லட்சம்  பாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு கடலூர் ரட்சகர் நகரில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டை கொள்ளையடிக்க முயன்றனர். அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே தப்பி சென்றவர்கள் அரை கி.மீ., தூரத்தில் உள்ள  கோண்டூர் சுப்புலட்சுமி நகரில் கணவரை தாக்கி மனைவி கழுத்தில் இருந்த தாலிசரடை பறித்துச்சென்றனர்.  போலீசாரின் அலட்சியம் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

அமாவாசையன்று  திருட்டு அதிகமாக இருக்கும் என்பதால் வழக்கமாக போலீசார் மிகவும் உஷார் படுத்தப் பட்டு இரவு ரோந்து தீவிரப்படுத்தப்படுவதுடன், இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப்படும். ஆனால் கடலூர் புதுநகரில் ஒன்னரை கி.மீ., ரேடியசில் பகுதியைக் கூட போலீசார் கண்காணிக்காமல் கோட்டை விட்டுள்ளனர்.சாதாரணமாக புது நகர் எஸ்.ஐ., கள்  தொலைபேசிகள் எப்போதும் "பிசி' யாகவே இருக்கும்.  பொதுமக்கள், பத்திரிகை நிருபர்கள்  ஏதாவது தகவல் சொல்ல நினைத்து போன் செய்தால்  கூட உடனே "கட்' செய்து விடுவர். பொது மக்களிடமிருந்து தகவல் பெறவே விரும்பாதவர்கள், எங்கே இருந்து சேவை செய்யப்போகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சுட்டு பிடிக்க போலீஸ் எஸ்.பி., உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டை தடுக்க, கொள்ளையர்களைக் கண்டால் சுட்டு பிடிக்க த்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.பி., கூறினார். கடலூர் கோண்டூரில் அமைக்கப்பட் டுள்ள போலீஸ் செக்போஸ்டை நேற்று மாலை எஸ்.பி.,  அஷ்வின் கோட்னீஸ் துவக்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமீப காலமாக திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. மாவட் டத்தில் சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுள்ளதால், வேறு வழியில் சம்பாதிக்க இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க 6 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் இனி துப்பாக்கி, வான்செய்தி கருவிகளுடன் சப் இன்ஸ் பெக்டர்கள் செயல்படுவர்.

பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக் டர்கள் தங்கள் நிலைய  பகுதியில் பெண்கள் குழுக்களை அமைப்பர்.  அக்குழுவினரிடம் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் போன் எண்கள் கொடுக்கப்பட்டு அன்னியர்கள் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.முதல் கட்டமாக இன்று முதல் கடலூர், பண்ருட்டி சப் டிவிஷன்களில் இரண்டு ஜீப், நான்கு மோட்டார் சைக்கிள் களில் போலீசார் துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கி யுடன் நகரின் உட்பகுதி மற்றும் 2 கி.மீ., சுற்றளவில் உட் பகுதிக்கு ரோந்து செல்வர்.  24 மணி நேரமும் செயல்படும் இவர்கள், கொள்ளையர்க ளை கண்டால் சுட்டுப் பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெய்வேலி, சிதம்பரம் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். டி.எஸ்.பி.,க்கள் அலுவலகம் எண்கள். கடலூர் 04142-284355, சிதம்பரம் 04144-222257, விருத்தாசலம் 04143-238401, நெய்வேலி 04142-242022, சேத்தியாத் தோப்பு 04144-244341, பண்ருட்டி 04142-242022, திட்டக்குடி 04143-255211, காவல் கட்டுப்பாட்டு அறை 04142-284341 மற்றும் மாவட்ட தனிப்பிரிவு 04142-284333 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.

ஆற்றில் விழுந்த மற்றொரு மாணவரும் சாவு

சிதம்பரத்தில்,​​ வடமாநில மாணவர் ஒருவர் விபத்தில் இறந்ததை அடுத்து அண்ணாமலை பல்கலை.​ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ​ மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.​ போலீஸôர் அவர்களை விரட்டியடித்த போது ​ ஆற்றில் விழுந்து மற்றொரு வடமாநில மாணவர் இறந்தார்.பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌதம்குமார் ​(20).​ இவர் சிதம்பரம் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள காம்ப்ளக்ஸில் தங்கி பி.இ.​ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர்,​​ இதே மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ்குமாருடன் ​(20) ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றார்.​ சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் மின்கம்பத்தின் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.அப்போது பின்புறம் வந்த லாரி கௌதம்குமார் மீது ஏறியது.இதில் படுகாயமடைந்த கௌதம்குமார்,​​ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.மாணவர் இறந்த தகவலை அடுத்து வடமாநில மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,​​ தேர்வுத்துறை கட்டடம் உள்ளிட்டவற்றின் கண்ணாடிகள்,​​ கம்ப்யூட்டர்,​​ மின்விளக்குகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.மருத்துவமனைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் அங்குள்ள நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அலறியடித்து ஓடினர்.​ பின்னர் துணைவேந்தர் விடுதியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.அப்போது அங்கு வந்த போலீஸôர் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்தனர்.​ அதில் தப்பி ஓடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சுமித்குமார் ​(22),​ பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தார்.இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் மேலும் பதற்றம் உருவானது.​ மாணவர்கள் அதிவேகத் தாக்குதலில் ஆட்டோ,​​ ஆம்புலன்ஸ்,​​ வேன்,​​ முதுநிலை மருத்துவ மாணவர்களின் கார்கள் சேதமடைந்தன.தகவல் அறிந்த டிஐஜி மாசானமுத்து,​​ கடலூர் மாவட்ட எஸ்.பி.​ அஸ்வின் கோட்னீஷ் மற்றும் அதிரடிப்படை போலீஸôர் பல்கலைக்கழக வளாகத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் ரகளையில் ஈடுபட்ட 21 வடமாநில மாணவர்களை பிடித்து விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர்.பின்னர் ஐஜி துரைராஜ்,​​ டிஐஜிக்கள் மாசானமுத்து ​(விழுப்புரம்),​​ ராமசுப்பிரமணியம் ​(காஞ்சிபுரம்)​ ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைநகருக்கு வந்து சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கடலூரில் காவல்துறை ஒத்திகை நிகழ்ச்சி

கடலூர் ஆயுதப்படை போலீசாருக்கு படை திரட்டு பயிற்சி முகாம் கடலூர் ஆயுதப் படை பயிற்சி மைதானத்தில் நடந்தது.
15 நாள் பயிற்சி முகாம் கடந்த 10ம் தேதி தொடங்கியது. 400 போலீசார் பயிற்சி பெற்றனர். கவாத்து பயிற்சி, தடியடி பிரயோகம், கண்ணீர் குண்டு வீசும் முறை, துப்பாக்கி சுடுதல், முதலுதவி மற்றும் மீட்பு பணிகள், நவீன துப்பாக்கி கள் பயன்படுத்துதல் உள் ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கவாத்து பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் பார்வையிட்டார். டி.எஸ்.பி ஹரிகிருஷ்ணன் உடனிருந் தார். அணிவகுப்பு மற்றும் கலவர கும்பலை அடக்கும் செயல்முறை விளக்க நிகழ்ச்சிகள் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் நடந்தது.கலவரம் கட்டுக்கடங்காமல் போகவே எச்சரிக்கை விடப்பட்டு அவர்கள் மீது துப் பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்தவரை போலீசார் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். கல வரம் அடக்கப்பட்டது.
நிஜ நிகழ்ச்சியை போல் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 400 போலீசார் கலந்து கொண்டனர். செயல்முறை நிகழ்ச்சியை நேரில் பார்த்த எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் பாராட்டு தெரிவித்தார்.

மாசிமக திருவிழா நாளை கோலாகலம்

கடலூர் தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தாண்டு மாசிமக திருவிழா நாளை(28ம் தேதி) நடைபெறுகிறது.
திருக்கோவிலூர் உலகளந்த சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி, பாடலீஸ்வரர் சுவாமி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட் டம், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 30 கோயில்களில் இருந்து சுவாமிகள் கடலில் தீர்த்தவாரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவனாம்பட்டினம் மற்றும் அதனையொட்டி உள்ள சில்வர் பீச் கடற்கரை பகுதி மற் றும் சிங்காரதோப்பு உள்ளிட்ட இடங்களில் மாச மக திரு விழாவில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டு சாமியை தரி சனம் செய்வார்கள்.
200 போலீசார் பாதுகாப்பு படகு சவாரிக்கு தடை
திருக்கோவிலூர் உலகளந்த சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி, பாடலீஸ்வரர் சுவாமி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட் டம், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சுமார் 30 கோயில்களில் இருந்து சுவாமிகள் கடலில் தீர்த்தவாரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவனாம்பட்டினம் மற்றும் அதனையொட்டி உள்ள சில்வர் பீச் கடற்கரை பகுதி மற் றும் சிங்காரதோப்பு உள்ளிட்ட இடங்களில் மாச மக திரு விழாவில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டு சாமியை தரி சனம் செய்வார்கள்.
கடந்த ஆண்டு நடந்த விழாவின் போது சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளது. கடலில் குளித்த போது மூழ்கி உயிரிழந்தவர் கள் சம்பவங்கள் நடந்துள்ளன.இவ்விழா தொடர் பாக பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து கடலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆலோ சனை கூட்டம் நடந்தது.
டிஎஸ்பி ஸ்டாலின் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ஏழுமலை, கண்ணன், சப்&இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், ஆனந்தபாபு, ப்ரியா, கவிதா மற்றும் தேவனாம்பட்டினம், ரெட்டிச்சாவடி, கடலூர் முதுநகர், துறைமுகம் ஆகிய பகுதி கடற்கரை கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவிழா காண வரும் பொதுமக்களை விசைப்படகில் ஏற்றிக்கொண்டு ஆற்றிலோ, கடலிலோ செல்லக் கூடாது. குளிப்பதற்கு தடை விதித்து கண்காணிக்க வேண்டும். போதிய மின்விளக்குகள் தேவையான இடங்களில் அமைக்க வேண்டும். அமைதியான முறையில் திருவிழா நடைபெற பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கிராம நிர்வாகிகள் உதவி புரிய வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது. போலீசாருடன் கடற்கரை கிராமப்பகுதி மக்களும் நீரில் மூழ் காத வகையில் பாதுகாப்பு கவசங்களுடன் 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என போலீஸ் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
காவல்துறை சார்பில் மாசி மக திருவிழாவுக்கு எஸ்பி தலைமையில் டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர், 8 சப்& இன்ஸ்பெக்டர், 72 போலீசார் மற்றும் 64 ஆயுதப்படையினர் உள்ளிட்ட 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர்.

நிகழ்ச்சிகள் முடிந்த 2 நாள்களில் பேனர்களை அகற்றிவிட கடலூர் போலீஸ் உத்தரவு

கடலூர், பிப். 21: கடலூர் போலீஸ் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில், அரசியல் கட்சிகள் தங்களது நிகழ்ச்சிகள் முடிவடைந்த 2 நாள்களில், டிஜிட்டல் பேனர்களை அகற்றிவிட வேண்டும் என்று, போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.அனைத்துக் கட்சிகள் கூட்டம் கடலூரில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நகரில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. போலீஸ் அனுமதி பெற்றுத்தான் பேனர்கள் வைக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 தினங்களுக்கு முன்தான் பேனர்களை வைக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்து 2 நாள்களில் பேனர்களை அகற்றிவிட வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் காவல்துறை மூலம் அகற்றப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சியினரும் சம்மதம் தெரிவித்தனர். கூட்டத்தில் தி.மு.க. சார்பில் தனஞ்செயன், அதிமுக நகரச் செயலாளர் குமரன், ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி, மதிமுக  நகரச் செயலாளர் சேகர், நகராட்சி  உறுப்பினர் ராஜா, பாமக நகரச் செயலாளர் தாண்டவராயன், தேமுதிக நகரச் செயலாளர் தட்சிணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்கொடை இல்லை என கடைகளில் அறிவிப்பு பலகை

நன்கொடை வழங்க மாட்டோம் என்று கடைகளில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று வியாபாரிகளை, வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். கடலூரில் மாமூல் கேட்டு ரவுடிகள் இனிப்புக் கடைமீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, விசாரிப்பதற்காக வெள்ளையன் வெள்ளிக்கிழமை கடலூர் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் வெள்ளையன் கூறியது:  ரவுடிகள் மாமூல் வசூல் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதில் வணிகர்கள் ஒற்றுமையுடன் இருந்து இப்பிரச்னையை அணுக வேண்டும். கடலூரில் இத்தகைய பிரச்னைகளுக்கு போலீஸôர் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்கு உரியது.வன்முறைகள் தொடரா வண்ணம் இருக்க வியாபாரிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நன்கொடை இல்லை, மாமூல் வழங்க மாட்டோம் என்று கடைகளில் அறிவிப்புப் பலகை எழுதி வைக்க வேண்டும் என்று வணிகர்களை வற்புறுத்தி இருக்கிறேன்.அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால்தான் பணம் கேட்டு மிரட்டல், வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. எனவே வணிகர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். போலீஸ் கண்காணிப்பும் அதிகரிக்க வேண்டும் என்றார் வெள்ளையன்.மாமூல் கேட்டு சேதப்படுத்தப்பட்ட இனிப்புக் கடை மற்றும்  மஞ்சக்குப்பத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை, வெள்ளையன் பார்வையிட்டார்.  வணிகர் சங்க மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் மதிசேகர் மற்றும் நிர்வாகிகள் எம்.கே.ராஜன், நூர்முகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

போலீஸ் போல் நடித்து வாகன தணிக்கை செய்தவர் கைது

கடலூரில் போலீஸ் போல் நடித்து, வாகன தணிக்கையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.கடலூர் ஆனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(37). இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் குண்டு சாலை ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது, திடீர்குப்பம் பாலசுப்ரமணியர் கோவில் எதிரே மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த வாலிபர் ஒருவர், சக்திவேலை வழி மறித்து, "உன்னிடம் வாகனம் ஓட்டுவதற்கான ஆவணங்கள் உள்ளதா? இல்லையெனில், 5,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்' என்றார்.சந்தேகமடைந்த சக்திவேல், அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள் உதவியுடன் அவரை பிடித்து, கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், கடலூர் திருப்பாதிரிபுலியூர், தானம் நகரைச் சேர்ந்த தனுசு(31) என தெரிந்தது. அவரது மோட்டார் சைக்கிளை (பி.ஒய்-01-யு-9459) பறிமுதல் செய்தனர்.புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, தனுசுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நகராட்சி கண்டுகொள்ளவில்லை சாலையை போலீசாரே சீரமைத்தனர்


நகராட்சியினர் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளாததால் காவல்துறையினரே தற்காலிகமாக சீரமைக்கும் பணியை செய்தனர்.
கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக நகரின் அனைத்து பகுதி யிலும் சாலைகள் தோண்டப்பட்டு மீண்டும் பணி முடிக்கப்பட்ட இடங்கள் சரிசெய்யப்படாமல் இருப்பதால் வாகனங்களில் செல்லும் மக்கள் அவதி யடைந்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தன. அதைத்தொடர்ந்து விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும் என நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் தொடங்குவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 
இந்நிலையில் மாவட்ட காவல் துறை அலுவலகம் உள்ள பகுதியிலும் பணி நடக்கவில்லை. இது குறித்து போலீசார் சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கடலூர் எஸ்பி அலுவலகம், சிறப்பு பிரிவு அலுவலகம், அதி விரைவுபடை, ஊர்க்காவல் படை அலுவலகம், காவலர் குடியிருப்பு, க்யூ பிராஞ்சு, மாவட்ட குற்ற புலனாய்வு துறை, தவுலத் நகர், ஆனைக்குப்பம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய ஆனைக்குப்பம் சாலை, எஸ்பி அலுவலக சாலை உள்ளிட்ட சாலைகளை போலீசாரே தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 30 லாரி செம்மண் மற்றும் கிராவல் மூலம் சாலையில் உள்ள குழிகளை மறைத்து சமன்படுத்தும் பணியை ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆலோக்கியராஜ், சப்&இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் மேற்பார்வையில் பணி நடந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது 1396984945 டிஐஜி கேட்டுக்கொண்டதின் பேரில் சம்பந்தப்பட்ட துறையினரிடம் டிஎஸ்பி முறையிட்டும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடந்தது. அதனால் போலீசார் மற்றுமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதையடுத்து காவல் துறையினரின் நிதி பங்களிப்போடு தற்காலிகமாக சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது என்றனர்.

அதிக பயணிகளை ஏற்றிசென்ற 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

கடலூரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதாக 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.​ கடலூரில் 500-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.​ இவற்றில் அனுமதிக்கப்பட்டதைவிட,​​ கூடுதலாகப் பயணிகளை ஏற்றிச் செல்வதாக நிறையப் புகார்கள் காவல் துறைக்கு வந்தன.​ எனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் ஷேர் ஆட்டோக்களை போலீஸôர் திங்கள்கிழமை தீவிர தணிக்கை செய்தனர்.​ ​ கடலூர்,​​ லாரன்ஸ் சாலை,​​ அண்ணா மேம்பாலம்,​​ மஞ்சக்குப்பம்,​​ ஆல்பேட்டை,​​ செம்மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸôர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர்.​ ஷேர் ஆட்டோக்களில் மிகச் சாதாரணமாக 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.​ ​2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில்,​​ விதிகளை மீறிய 30 ஷேர் ஆட்டோக்கள் பிடிபட்டன.​ அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.​ ​பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஷேர் ஆட்டோக்களும் காவல் நிலையத்துக்குக் கொண்டு போகப்பட்டன.​ இதனால் போலீஸôருக்கும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.​ ஷேர் ஆட்டோக்களில் 5 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது,​​ மீறினால் பறிமுதல் செய்வோம் என்று போலீஸôர் மீண்டும் எச்சரித்து உள்ளனர்.

கடலூரில் முக்கிய இடங்களில் 'கேமரா' : பாதுகாப்பு கருதி போலீசார் நடவடிக்கை


கடலூர் காவல் துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது. டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ஏழுமலை, தம்புசாமி, சப் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, ஆனந்தபாபு, மோகன், கோவிந்தராஜ், வள்ளி விலாஸ் பாலு, அழகப்பா ராஜகோபால், ஓட் டல் அபிநயா ராம ஜனார்த்தனன், ஆனந்தபவன் வெங்கடசுப்பு மற் றும் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு, போலீசாருடன் பொதுமக் கள் மற்றும் வியாபாரிகளின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப் பட்டது.


டி.எஸ்.பி., ஸ்டாலின் பேசுகையில் "தற்போது நாட்டில் நிலவும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக மக் கள் அதிகளவில் கூடும் நகை கடை, ஜவுளிக் கடை, சினிமா தியேட்டர், ஓட்டல்கள் போன்றவைகள்தான் அவர்களின் இலக்காக இருக்கும். இதுபோன்ற அச்சுறுத்தல் நமது மாவட்டத்தில் இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி நாம் செயல்பட வேண்டும். வியாபாரிகள் தங்கள் நிறுவனங்களில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் இடங்களில் கேமரா பொருத்தியிருக்க வேண்டும்.நிறுவனத்தில் பணிபுரியும் ஆட் கள் குறித்து முழு விவரங்களையும் அவர்களது போட்டாவையும் வைத் திருக்க வேண்டும். இதற்காக தனியாக புத்தகம் பராமரிக்க வேண்டும். நிறுவனத்திற்கு சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.நகரில் முக்கிய இடங்களில் "கேமரா' பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அவசியமாக கருதப்படுகிறது' என பேசினார்.