கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழைக் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூரில் அதிகபட்சமாக 75 மி.மீட்டர் மழை பெய் துள்ளது.
தென்மேற்கு பருவக் காற்றால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேகங் கள் வேகமாக தமிழக பகுதியில் செல்வதால் ஆங் காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
நேற்று காலை 11 மணி முதல் அதிக அளவில் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து சீராக மழை பெய்து வருவதால் தண் ணீர் வழிந்தோடி வீணாகாமல், நிலத்தில் நன்றாக ஊறி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் விரைவில் உயரக்கூடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:
கடலூரில் 75மி.மீ., வானமாதேவி 69.20, புவனகிரி 65, கொத்தவாச்சேரி 54, அண்ணாமலை நகர் 40.60, பண்ருட்டி 40, பரங் கிப்பேட்டை 39, மேமாத் தூர் 38, லால்பேட்டை 31, சேத்தியாதோப்பு 31, லக் கூர் 30, காட்டுமன்னார் கோவில் 28, விருத்தாசலம் 24.40, குப்பநத்தம் 22.20, பெலாந்துரை 20, ஸ்ரீமுஷ் ணம் 20, கீழ்ச்செருவாய் 16, தொழுதூர் 15மி.மீ மழை பதிவாகியுள்ளது.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூரில் தொடர்மழை காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் இடிந்து விழுந்தது
கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பழைமை வாய்ந்த கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் உள்ளது. இது 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கடலூர் நகரில் பழைமையும் பெருமையும் வாய்ந்த கட்டடங்களில் இதுவும் ஒன்று.
கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இக்கட்டடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. தற்போது இந்த அலுவலகத்தில் 60 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
வியாழக்கிழமை மாலை 6-30 மணி வரை ஊழியர்கள் இங்கு பணிபுரிந்தனர். அதற்குமேல் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். இரவு 7 மணிக்கு அலுவலகத்தின் இரவுக் காவலர் அமாவாசை (55) மட்டும் முதல் மாடியில் பணியில் இருந்தார். இரவு 7-30 மணி அளவில் கட்டடத்தின் முன் பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் உயிர்ச்சேதம் இன்றித் தப்பியது. கட்டடத்தின் ஏனைய பகுதிகளும் இடிந்து விழும் நிலையில்தான் உள்ளன. எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தாற்காலிகமாக அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டது.
அலுவலகக் கட்டடம் இடிந்து சேதம் அடைந்தது குறித்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி பஞ்சமூர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விவரம் தெரிவித்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
கட்டுகள்
கடலூர் ஊராட்சி,
மழை
ஒருநாள் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காத கடலூர் நகரச் சாலைகள்
கடலூரில் ஒருநாள் (புதன்கிழமை இரவு) பெய்த மழையைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் படுமோசமாகக் காட்சி அளிக்கின்றன. கடலூரில் பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் தணியும் வகையில், புதன்கிழமை இரவு 57 மி.மீ. மழை பெய்தது. ஆனால், இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையைத் தவிர்த்து, பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் குண்டும், குழியுமாக உள்ள ஏனைய சாலைகள் அனைத்தும் திடீர் மழையால் உழுதுபோட்ட வயல்போல சகதிக் காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பலர் சாலைகளில் விழுந்து, சகதியில் புரளும் நிலை ஏற்பட்டது. இரு சக்கரவாகன ஓட்டிகளும் சகதியில் வழுக்கி விழுந்து சாக்கடையை உடலில் பூசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மழைக்கு முன்னரே முடிக்குமாறு, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், குறிப்பிடத்தகுந்த அளவில் பணிகள் எதுவும் முடிக்கப்படாதாதால் இத்தகைய நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஒரு நாள் மழையிலேயே இந்நிலை என்றால், பலத்த மழை பெய்யும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து இப்போதே கடலூர் நகர மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, மழைக் காலம் தொடங்கிவிட்டதால், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தற்போது தொடர வாய்ப்பு இல்லை என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காகத் தோண்டப்பட்ட மண் முழுவதும் சாலைகளில் கொட்டப்பட்டு, சாலைகளின் மட்டம் உயர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன் கூறுகையில், சாலைகள் மோசமானதால், சாலைகளின் தடுப்புக் கட்டை மேலும் மதிற்சுவர்களுக்கு மேலும் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றாததால் 50 செ.மீ. வரை சாலைகளின் மட்டம் உயர்ந்து விட்டது. புதிய சாலைகள் அமைக்கும் போது மேலும் 30 செ.மீ. உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சாலைகளில் குவிக்கப்பட்ட மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.
கட்டுகள்
மழை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)