கடலூர் மாவட் டத்தில் பரவியுள்ள டிஜிட் டல் பேனர் கலாசாரத்தினால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்."பருப்பு இல்லாமல் கல்யாணமா' என்பார்கள். ஆனால் இன்று டிஜிட்டல் பேனர் இல்லாமல் விழாவா என்கிற நிலை மக்கள் மத்தியில் வியாபித்துள்ளது. அரசு விழா, அரசியல் விழா, அமைச்சர் கள் விழா, கோவில் திருவிழா, மஞ்சள் நீராட்டு, காதணி விழா, பிறந்த நாள், காலமானார், நினைவஞ்சலி போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரதான சாலைகளில் டிஜி ட்டல் பேனர் வைக்கும் கலாசாரம் பரவியுள்ளது.தன்னுடைய உருவ படத்தை பேனர்களில் போட்டு பல நாட்கள் மக்கள் பார்வைக்கு வைப் பதற்காக ஏதாவது ஒரு அரசியல் கட்சித் தலைவர் பங்கேற்கும் விழாவை பயன்படுத்திக் கொண்டு சிலர் "மெகா சைசில்' 60, 70 அடி நீளத்திற்கு மேல் பேனர் வைக்கின்றனர். குறிப்பாக மஞ்சக்குப்பம், புதுச்சேரி - கடலூர் எல்லை, நியூசினிமா போன்ற குறுகலான இடங் களில் பேனர்கள் வைப்பதால் வாகனங்கள் வருவதை கவனிக்க முடியாமல் அதிக விபத்து ஏற்படுகிறது.அத்துடன் சாலையில் உள்ள கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிப்பதோடு போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. சாலை என்பது டிஜிட்டல் பேனர் வைப்பதற்கான இடம் என ஆகிவிட்டது. இதனை வைப்பதற்கு போலீசில் முறையாக அனுமதி வாங்குவதும் கிடையாது.அனுமதியின்றி வைக் கப்படும் பேனர்களை போலீசார் கண்டு கொள்வதும் கிடையாது. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 30 நாட் களுக்கு முன்பே பேனர் வைப்பதும், நிகழ்ச்சி முடிந்து 30 நாட்கள் வரை கூட அப்புறப்படுத்தாமல் இருப்பதும் கடலூர் மாவட்டத்தில் சகஜமாகி விட்டது.இந்த பேனர் தயாரிப்பு ஷீட்டுகள் கூரை மீது போடுவதற்கு பயன்படுத்தப்படுவதால் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் கிழித்துச் சென்று விடுகின்றனர். இதனால் பேனர் வைத்தவர்கள் தங்களின் எதிரணியினர் தான் வேண்டுமென்றே கிழித்து விட்டதாக கூறி ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த போலீஸ் துறை விழா ஒன்றில் பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், கடலூர் மாவட் டத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரம் மோசமாக பரவி வருகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் பாகுபாடின்றி பேனர் களை அகற்றுமாறு எஸ்.பி., யிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதனைத்தொடர்ந்தும் பேனர் வைப்பதை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தலைவர்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக கட்சித் தொண்டர் களால் வைக்கப்படும் பேனர்கள் பொது மக்களின் முகம் சுளிப்பிற்குள் ளாகி சம்மந்தப்பட்ட தலைவருக்கு கெட்டபெயர் ஏற்பட்டு மக்கள் செல்வாக்கை இழக்கும் நிலைதான் ஏற்படும்.
கலெக்டர் கடும் எச்சரிக்கை...:இந்நிலையில் கலெக்டர், டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்க முன் அனுமதியை 7 நாட்களுக்கு முன்பே பெற வேண்டும். நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன் வைத்து முடிந்ததும் இரண்டு நாட்களில் அவர்கள் செலவிலேயே அகற்ற வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விளம்பர பலகை அமைத்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வைத்து சட்டவரம்பை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனுமதியற்ற விளம்பர பேனர்கள் மற்றும் சாரங்கள் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. விளம்பர பேனர்கள் வைத்தவர்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும். இல்லையெனில் போலீஸ் துறையே அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான செலவினத் தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்வதோடு, வழக்கும் தொடரப்படும்.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மெள்ள மெள்ளக் கொல்லும்
''மேட்டூர், கடலூர் உட்பட பல இடங்களில், மெள்ள மெள்ளக் கொல்லும் ஆலைக் கழிவு அபாயம் அரங்கேறி வருகிறது. இந்த மாதிரியான ஆலைகள் பலவும் அரசின் அனுமதி இல்லாமலேயே இயங்குகின்றன. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 2,500 நடுத்தர, பெரும் தொழில் நிறுவனங்கள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குகின்றன. இப்படி இருந்தால், அரசின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?'' என்று ஆதங்கத்துடன் சொன்னார்.
போபால் நீதிக்கான பிரசாரத்தின் உறுப்பினரும், சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்வேதா நாராயணையும் சந்தித்தோம், ''கடலூர், பெரும் ஆபத்து மையமாக மாறிவருகிறது. அங்கு உள்ள
சிப்காட் தொழிற்பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளன. தொழிற்பேட்டையைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் கெட்டுவிட்டது. 2008-ல் இங்கு ஆய்வுசெய்த மத்திய அரசின் 'நீரி' சூழல் நிறுவனம், 'இந்த ஆலைகளின் கழிவுகளால் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது' என அறிக்கை அளித்தது. நான்கு ஆண்டுகளாக நாங்கள் எடுத்த 12 'மாதிரி' ஆய்வுகளில், 'இங்கு வெளியேறும் 25 வேதிக் கழிவுகளில், 12 கழிவுகள் புற்றுநோயை உண்டாக்குபவை. அதிலும், பென்சீன் என்பது, மற்றவற்றைவிட 26 மடங்கு அதிகமாகப் புற்றுநோயை உண்டாக்கும்' எனக் கண்டறிந்தோம். அதேபோல், டால்மியாபுரம் சிமென்ட் ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில், மூளையைப் பாதிக்கும் காரீயம், பாதரசம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காட்மியம், பெரிலியம், பேரியம் உள்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் இருப்பதும் தெரிந்தது. கடந்த பிப்ரவரி நிலவரப்படி, கடலூர் சிப்காட்டில் 25 ஆலைகளில் 20 ஆலைகளுக்கு லைசென்ஸ் இல்லை!'' என்று சொல்லி மூச்சுத் திணறவைத்தார்.
- இரா. தமிழ்க்கனல்
போபால் நீதிக்கான பிரசாரத்தின் உறுப்பினரும், சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்வேதா நாராயணையும் சந்தித்தோம், ''கடலூர், பெரும் ஆபத்து மையமாக மாறிவருகிறது. அங்கு உள்ள
- இரா. தமிழ்க்கனல்
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சிப்காட்
மாங்குரோவ் காடுகளை அழிக்கும் அனல்மின் நிலையங்கள் கூடாது
மாங்குரோவ் காடுகளை அழிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் அனல் மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று, கடலூரில் சனிக்கிழமை நடந்த உலகச் சுற்றுச்சூழல் தின விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு மற்றும் சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு ஆகியவற்றின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:இந்தியாவில் மாங்குரோவ் காடுகள் அதிகம் உள்ள கடலூர் பிச்சாவரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பால் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருகின்றன. பூமி வெப்பமடைவதால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எதிராக கடலூர் மாங்குரோவ் காடுகளுக்கு அருகே 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையங்களுக்கு அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. மாங்குரோவ் காடுகளுக்கு அருகே அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி கூடாது.இந்தியாவில் வாழத் தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் கடலூர் 16-வது இடத்தில் இருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது. கடலூர், நாகை மாவட்டங்களில் 250 ச.கி.மீ. பரப்பளவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மேலும் ரசாயன ஆலைகளையும், அனல்மின் நிலையங்களையும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் நிறுவக் கூடாது. தற்போது உள்ள ஆலைகள் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பு சார்பில் பள்ளிகளில் அதிக அளவில் மரங்களை நடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் நிர்வாகச் செயலர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார். பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் சிறப்புரை நிகழ்த்தினார். சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிர்வாகிகள் நெய்வேலி தங்கம், பண்ருட்டி நடராஜன், மணிவண்ணன், சிப்காட் சுற்றுச்சூழல் கணகாணிப்புக் குழு உறுப்பினர்கள் புகழேந்தி, சிவசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கட்டுகள்
அனல் மின் நிலையங்கள்,
கடலூர் மாவட்டம்,
மாங்குரோவ்
தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு
தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஆணையர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திலுள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் தொழிலாளர் ஆய்வர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களும் பெயர் பலகை தமிழில் கட்டாயமாக இருக்க வேண்டும். பிற மொழிகளை பயன்படுத்தும் போது தமிழ் மொழி முதலிலும், ஆங்கிலம் 2வதாகவும், பிறமொழி அடுத்தும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தொழிலாளர் ஆய்வர்கள் ஆய்வு செய்து நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிந்து வருகின்றனர்.இந்த ஆய்வுகள் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையொட்டி அனைத்து கடைகள், உணவு நிறுவனங்களிலும் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஆணையர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திலுள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் தொழிலாளர் ஆய்வர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களும் பெயர் பலகை தமிழில் கட்டாயமாக இருக்க வேண்டும். பிற மொழிகளை பயன்படுத்தும் போது தமிழ் மொழி முதலிலும், ஆங்கிலம் 2வதாகவும், பிறமொழி அடுத்தும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தொழிலாளர் ஆய்வர்கள் ஆய்வு செய்து நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிந்து வருகின்றனர்.இந்த ஆய்வுகள் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையொட்டி அனைத்து கடைகள், உணவு நிறுவனங்களிலும் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
பெயர் பலகை
சொத்து ஜாமீனின்றி கல்விக் கடன் தர வங்கி மறுப்பு
பல்வேறு கனவுகளோடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஏழை விவசாயி மகளுக்கு, வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால், கல்லூரியில் சேர்ந்தும் படிப்பை தொடர முடியாமல், கூலி வேலை செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமம் அருகே உள்ள நடுக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் - மல்லிகா ஏழை விவசாய தம்பதியினரின் மகள் பிரவினா. இவர், 2007ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 867 மதிப்பெண் பெற்றார். 72 சதவீத மதிப்பெண் பெற்ற இவர், வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது சிலர் உயர் கல்வி படிக்க வங்கிகள் கடன் தருவதாக கூறினர்.அதை நம்பிய பன்னீர்செல்வம், தனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பி, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தார். கவுன்சிலிங்கில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சின்ன கோளம்பாக்கத்தில் உள்ள கற்பக வினாயகா பல் மருத்துவக் கல்லூரியில் "பி.டி.எஸ்.,' சீட் கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், பிரவினாவை கல்லூரியில் சேர்த்தார்.
அப்போது, கல்லூரி நிர்வாகம் கல்லூரி விடுதியில் ஐந்தாண்டுகள் (2007-12) தங்கி படிக்க, மொத்தம் நான்கு லட்சத்து 73 ஆயிரத்து 500 கட்ட வேண்டும். அதில், முதலாண்டு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 500ம், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தலா ஒரு லட்சத்து 10 ஆயிரமும், இறுதியாண்டு விடுதி கட்டணம் மட்டும் 25 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறியது. பன்னீர்செல்வம் தனது மகளின் உயர் கல்விக்காக கடன் கோரி, பண்ருட்டியில் உள்ள இந்தியன் வங்கிக்கு விண்ணப்பித்தார். அவர்கள், காடாம்புலியூரில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு பரிந்துரை செய்தனர். மனுவை பரிசீலித்த லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள், 10 லட்சம் ரூபாயிற்கு சொத்து ஜாமீன் அல்லது அரசு ஊழியர்கள் இருவர் ஜாமீன் அளித்தால் கடன் தருவதாக கூறினர். பன்னீர்செல்வத்தால் சொத்து ஜாமீன் கொடுக்க முடியாததால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கட்டணம் செலுத்தாததால், மாணவி பிரவினாவை இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
இதுகுறித்து, பன்னீர்செல்வம் பிரதமர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். அனைவருமே மனு மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்திருப்பதாக பதில் அனுப்பினர். இதனால், அடுத்த ஆண்டாவது வங்கியில் "லோன்' கிடைத்துவிடும் எனக் கருதிய பன்னீர்செல்வம் 2008ம் ஆண்டு, மீண்டும் தனது மகளை அதே கல்லூரியில் சேர்த்துவிட்டு மீண்டும் கடன் கோரி வங்கிக்கு விண்ணப்பித்தார். அப்போதும் ஜாமீன் தராததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கல்லூரிக்கு பணம் கட்டாததால், மாணவி பிரவினாவை மீண்டும் அதேபோன்று இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
பல்வேறு கனவுகளுடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி பிரவினாவிற்கு, வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்க மறுத்து விட்டதால் தற்போது, பெற்றோருடன் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.கல்விக் கடனுக்கு எந்த ஜாமீனும் தேவையில்லை. கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் கல்லூரி கட்டண பட்டியல் இருந்தால் போதும் என, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மேடைதோறும் பேசி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் வேறு விதமாக உள்ளதால், ஏழை மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமம் அருகே உள்ள நடுக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் - மல்லிகா ஏழை விவசாய தம்பதியினரின் மகள் பிரவினா. இவர், 2007ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 867 மதிப்பெண் பெற்றார். 72 சதவீத மதிப்பெண் பெற்ற இவர், வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது சிலர் உயர் கல்வி படிக்க வங்கிகள் கடன் தருவதாக கூறினர்.அதை நம்பிய பன்னீர்செல்வம், தனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பி, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தார். கவுன்சிலிங்கில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சின்ன கோளம்பாக்கத்தில் உள்ள கற்பக வினாயகா பல் மருத்துவக் கல்லூரியில் "பி.டி.எஸ்.,' சீட் கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், பிரவினாவை கல்லூரியில் சேர்த்தார்.
அப்போது, கல்லூரி நிர்வாகம் கல்லூரி விடுதியில் ஐந்தாண்டுகள் (2007-12) தங்கி படிக்க, மொத்தம் நான்கு லட்சத்து 73 ஆயிரத்து 500 கட்ட வேண்டும். அதில், முதலாண்டு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 500ம், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தலா ஒரு லட்சத்து 10 ஆயிரமும், இறுதியாண்டு விடுதி கட்டணம் மட்டும் 25 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறியது. பன்னீர்செல்வம் தனது மகளின் உயர் கல்விக்காக கடன் கோரி, பண்ருட்டியில் உள்ள இந்தியன் வங்கிக்கு விண்ணப்பித்தார். அவர்கள், காடாம்புலியூரில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு பரிந்துரை செய்தனர். மனுவை பரிசீலித்த லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள், 10 லட்சம் ரூபாயிற்கு சொத்து ஜாமீன் அல்லது அரசு ஊழியர்கள் இருவர் ஜாமீன் அளித்தால் கடன் தருவதாக கூறினர். பன்னீர்செல்வத்தால் சொத்து ஜாமீன் கொடுக்க முடியாததால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கட்டணம் செலுத்தாததால், மாணவி பிரவினாவை இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
இதுகுறித்து, பன்னீர்செல்வம் பிரதமர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். அனைவருமே மனு மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்திருப்பதாக பதில் அனுப்பினர். இதனால், அடுத்த ஆண்டாவது வங்கியில் "லோன்' கிடைத்துவிடும் எனக் கருதிய பன்னீர்செல்வம் 2008ம் ஆண்டு, மீண்டும் தனது மகளை அதே கல்லூரியில் சேர்த்துவிட்டு மீண்டும் கடன் கோரி வங்கிக்கு விண்ணப்பித்தார். அப்போதும் ஜாமீன் தராததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கல்லூரிக்கு பணம் கட்டாததால், மாணவி பிரவினாவை மீண்டும் அதேபோன்று இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
பல்வேறு கனவுகளுடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி பிரவினாவிற்கு, வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்க மறுத்து விட்டதால் தற்போது, பெற்றோருடன் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.கல்விக் கடனுக்கு எந்த ஜாமீனும் தேவையில்லை. கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் கல்லூரி கட்டண பட்டியல் இருந்தால் போதும் என, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மேடைதோறும் பேசி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் வேறு விதமாக உள்ளதால், ஏழை மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
கல்வி
கடலூர் மாவட்டத்தில் ரூ.420 கோடியில் வெள்ளத்தடுப்புப் பணிகள்: மத்திய நீர்வள ஆணைய குழுவினர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் ரூ.420 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்குவதற்காக மத்திய நீர்வள ஆணைய குழுவினர் மே15,16 தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.தமிழ கத்தில் திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ரூ.620 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதில் 75 சதவீத தொகை மத்திய அரசும், 25 சதவீத தொகை மாநில அரசும் வழங்குகிறது.இத்திட் டங்களுக்கு மத்திய அரசு நிர்வாக அனுமதி மற்றும் ஒப்புதல் வழங்க தமிழகத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் மத்திய அரசு நீர்வள ஆணைய இயக்குநர் எஸ். லால், தலைமைப் பொறியாளர் சௌத்திரி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் வெள்ளாற்று கரையை பலப்படுத்துவது, கொள்ளிடம் வடக்கு கரையை பலப்படுத்துதல், கான்சாகிப் வாய்க்கால் இருகரையை உயர்த்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.மத்திய அரசு நீர்வள ஆணையக் குழுவினர் அணைக்கரை, வல்லம்படுகை (கொள்ளிடம் ஆற்றங்கரை), அம்மாப்பேட்டை (கான்சாகிப் வாய்க்கால்), பாசிமுத்தான்ஓடை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.அவர்களுடன் கடலூர் மாவட்ட பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன், செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.அப் போது அக் குழுவினரிடம் விவசாயிகள் சார்பில் உழவர் கூட்டமைப்புத் தலைவர் பி.ரவீந்திரன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை பாலம் குறுகியதாக உள்ளதால் வெள்ளநீர் வடியை வழி செல்லாமல் ஆண்டுதோறும் சேதத்தை ஏற்படுத்துகிறது.எனவே அங்கு அகலமாக புதிய பாலம் அமைக்க வேண்டும். நீர்நிலை நிறைந்த வாய்க்கால்கள் குறுக்கே எதிர்காலத்தில் பாலம் அமைக்கும் முன் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை அனுமதி பெற்று அவர்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை பாலத்தை அமைக்க வேண்டும்.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச்சேதத்தை தவிர்க்கவும், விவசாயத்தை காப்பாற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடங்கு முன்பு அப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா என கண்காணிக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என பி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
வெள் ளத்தடுப்பு
கடலூர் மாவட்டத்தில் 82 சுயநிதிப் பள்ளிகளுக்கு கல்விக் கட்டண விவரம் வெளியீடு
நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, சுயநிதிப் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டண அறிக்கைகளை, கடலூர் மாவட்டத்தில் இதுவரை 82 பள்ளிகள் பெற்றுச் சென்றுள்ளன.தனியார் சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களிடம் அபரிமிதமான கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த தமிழக அரசு சட்டம் இயற்றி இருக்கிறது. இந்தச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு பள்ளிகளும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்ட அறிக்கைகள் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 112 சுயநிதிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 90 பள்ளிகளுக்கு கட்டணப் பரிந்துரைப் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு
வநதுள்ளது. இவற்றில் 82 பள்ளி நிர்வாகங்கள் வியாழக்கிழமை வரை,
கட்டணப் பட்டியலைப் பெற்றுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ÷கட் டணப் பட்டியலை இதுவரை வாங்காமல் இருக்கும் பள்ளிகள், நகர்ப் புறங்களில் உள்ள மிகப் பிரபலமான பள்ளிகள்தான் என்று
கூறப்படுகிறது.÷பிரபலமான பள்ளிகள் பல, தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தியும் தகவல்களை அளித்து உள்ளன. இந்தக் கட்டணத்தில் பள்ளி சிறப்பாக நடப்பதால், அதேக் கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்கலாம் என்று நீதிபதி கோவிந்தராஜ் குழு பரிந்துரைத்து உள்ளது. இவ்வாறு 25 சதவீத பள்ளி நிர்வாகங்கள், தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்துக் காண்பித்ததால், அதேக் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கிராமப்புற நர்சரி பள்ளிகள் பலவற்றுக்கு அவர்கள் தற்போது வசூலிக்கும் கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிபதி குழு பரிந்துரைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 20 சதவீத பள்ளிகளுக்கு அவர்கள் தற்போது
வசூலிக்கும் கட்டணத்தையே நீதிபதி குழு பரிந்துரைத்து உள்ளது.மொத்தத்தில் 50 சதத்துக்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகங்கள், நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைக் கட்டண விகிதத்தை, முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு இருப்பதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வநதுள்ளது. இவற்றில் 82 பள்ளி நிர்வாகங்கள் வியாழக்கிழமை வரை,
கட்டணப் பட்டியலைப் பெற்றுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ÷கட் டணப் பட்டியலை இதுவரை வாங்காமல் இருக்கும் பள்ளிகள், நகர்ப் புறங்களில் உள்ள மிகப் பிரபலமான பள்ளிகள்தான் என்று
கூறப்படுகிறது.÷பிரபலமான பள்ளிகள் பல, தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தியும் தகவல்களை அளித்து உள்ளன. இந்தக் கட்டணத்தில் பள்ளி சிறப்பாக நடப்பதால், அதேக் கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்கலாம் என்று நீதிபதி கோவிந்தராஜ் குழு பரிந்துரைத்து உள்ளது. இவ்வாறு 25 சதவீத பள்ளி நிர்வாகங்கள், தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்துக் காண்பித்ததால், அதேக் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கிராமப்புற நர்சரி பள்ளிகள் பலவற்றுக்கு அவர்கள் தற்போது வசூலிக்கும் கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிபதி குழு பரிந்துரைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 20 சதவீத பள்ளிகளுக்கு அவர்கள் தற்போது
வசூலிக்கும் கட்டணத்தையே நீதிபதி குழு பரிந்துரைத்து உள்ளது.மொத்தத்தில் 50 சதத்துக்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகங்கள், நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைக் கட்டண விகிதத்தை, முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு இருப்பதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
கல்வி,
பள்ளி
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூரில் வரும் 23ம் தேதி துவக்கம்
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. மாவட்ட கிரிக்கெட் சங்கம், கடலூர் காஸ்மா பாலிட்டன் கிரிக்கெட் கிளப் மற்றும் மாவட்ட கிரிக்கெட் அகாடமி ஆகியவை சார்பில் 2009-10ம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வரும் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. வெற்றி பெற்றும் அணிக்கு முதல் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 7,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய், நான்காம் பரிசாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கு 250 ரூபாய் பரிசு, தொடர் நாயகனுக்கு 1,000 ரூபாய், தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. போட்டிகள் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கிரிக் கெட் அணியினர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு கூத்தரசன், செயலர், கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், ஜட்ஜ் பங் களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 9442521780, 9500872434 மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.
ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கு 250 ரூபாய் பரிசு, தொடர் நாயகனுக்கு 1,000 ரூபாய், தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. போட்டிகள் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கிரிக் கெட் அணியினர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு கூத்தரசன், செயலர், கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், ஜட்ஜ் பங் களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 9442521780, 9500872434 மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.
கட்டுகள்
அண்ணா விளையாட்டு அரங்கம்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
கிரிக்கெட்
புதுச்சேரி பதிவு எண் வாகனங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் ரூ.7 லட்சம் வசூல்
கடலூர் மாவட்டத்தில் 237 புதுச்சேரி மாநில பதிவு எண் வாகனங்கள் பிடிபட்டதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை வரி கட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் வரை இரண்டு கார்கள் உட்பட 237 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை வரி கட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் வரை இரண்டு கார்கள் உட்பட 237 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
போக்குவரத்துத்துறை,
போலீஸ்
பிச்சாவரத்தில் ரூ.2 கோடி வருவாய்
பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அரணாக இக்காடுகள் அமைந்துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில்
6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது. வெளிமாவட்டம், மாநிலம் மற்றும்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
சமீபத் தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர் காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் நிர்மல்சன் இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க இங்கு ஆய்வு செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏப்ரல் முதல் மார்ச் வரை வெளிநாட்டினர் மற்றும் இந்தியர் என பிச்சாவரம் வந்த சுற்றுலா பயணிகளும், அதனால் கிடைத்த வருவாயும் வருமாறு: 2006-07ல் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளால் 28 லட்சம் ரூபாயும், 2007-08ல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பயணிகளால் 31 லட்ச மும், 2008 -09 ஒருலட்சத்து 42 ஆயிரம் பயணிகளால் 60 லட்சமும், 2009-10 ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம்
பயணிகளால் 85 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அரணாக இக்காடுகள் அமைந்துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில்
6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது. வெளிமாவட்டம், மாநிலம் மற்றும்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
சமீபத் தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர் காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் நிர்மல்சன் இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க இங்கு ஆய்வு செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏப்ரல் முதல் மார்ச் வரை வெளிநாட்டினர் மற்றும் இந்தியர் என பிச்சாவரம் வந்த சுற்றுலா பயணிகளும், அதனால் கிடைத்த வருவாயும் வருமாறு: 2006-07ல் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளால் 28 லட்சம் ரூபாயும், 2007-08ல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பயணிகளால் 31 லட்ச மும், 2008 -09 ஒருலட்சத்து 42 ஆயிரம் பயணிகளால் 60 லட்சமும், 2009-10 ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம்
பயணிகளால் 85 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுற்றுலா,
பிச்சாவரம்
பிச்சாவரம் வன சுற்றுலா மையம்தங்கும் இடம் அதிகரிக்குமா அரசு?
பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வரும் வெளிநாட்டினர் தங்க, வசதியான இடம் இல்லாததால், அவர்களின் வருகை குறைகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 எக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால் வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண், சிறு, கருங்கண்டன் என, 18க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்களும் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களைத் தடுக்கும் அரணாக, இக்காடுகள் அமைந்துள்ளன. மூலிகை தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால், பல நோய்கள் தீருகின்றன.
காடுகளை பாதுகாக்க, 1984 ஜூன் 16ல், ஐந்து ஏக்கர் பரப்பில், ஆறு படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில், ஆறு காட்டேஜ், 20 கட்டில் வசதிகளுடன், இரண்டு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, கூடுதல் படகுகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டன. வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சமீபத்தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர், காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர்
நிர்மல் சன், இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க, இங்கு ஆய்வு செய்தார்.
பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான கடந்த ஆண்டில், 85 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெளிநாட்டினர் இப்பகுதியில் தங்குவதற்கான வசதி இல்லாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 எக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால் வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண், சிறு, கருங்கண்டன் என, 18க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்களும் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களைத் தடுக்கும் அரணாக, இக்காடுகள் அமைந்துள்ளன. மூலிகை தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால், பல நோய்கள் தீருகின்றன.
காடுகளை பாதுகாக்க, 1984 ஜூன் 16ல், ஐந்து ஏக்கர் பரப்பில், ஆறு படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில், ஆறு காட்டேஜ், 20 கட்டில் வசதிகளுடன், இரண்டு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, கூடுதல் படகுகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டன. வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சமீபத்தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர், காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர்
நிர்மல் சன், இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க, இங்கு ஆய்வு செய்தார்.
பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான கடந்த ஆண்டில், 85 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெளிநாட்டினர் இப்பகுதியில் தங்குவதற்கான வசதி இல்லாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுற்றுலா,
பிச்சாவரம்
கடலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல்
கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரா கூறும்போது, மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்படும். நக ராட்சி, ஊராட்சி பகுதியில் இயங்கும் கடைகள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் நடத்த உரிமம் பெற்று நடத்த வேண்டும். உரிமம் இன்றி நடத்தப்படும் இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். முறைகேடாக வும், சுகாதாரத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் விதத்தில் நடத்தப்படும் கடை களுக்கு ஆய்வின் அடிப்படையில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தொடரும், என்றார்.
குடியிருப்பு பகுதிகளில் தடை
ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சிவலிங்கம் கூறும்போது, சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கடைகள் குடியிருப்பு பகுதியிலேயே அமைந்திருப்பது காரணமாக உள்ளது. பொது சுகாதார சட்டத்தின் படி இறைச்சி கடைகள் குடியிருப்பு பகுதியில் வைக்க தடை உள்ளது.
இதனை முழுமையாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்தால் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு ஏற்படுத்தும். கடலூர் மாவட்டத்தில் முன்னோடியாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் இறைச்சி மற்றும் காய்கறிகளை கொண்ட மினி மார்க்கெட் குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அமைத்து சுகாதாரம் சீர்கெடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
கடலூர், ஏப். 16:
கடலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில், குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கொட்டப் படுகின்றன. மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதால், அவை களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சுகாதார துறை எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கோழி இறைச்சி கடைகள் இயங்கி வருவது குறித்தும், கோழி இறைச்சி கடைகள் பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்படும் வகையில் உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் முத்து என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் மீரா தலைமையில், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், ஊழியர்கள், திருப்பாதிரிப்புலியூர் சப்&இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதிசிவலிங்கம் ஆகியோர் கூத்தப்பாக்கம் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
கூத்தப்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்திய சிக்கன் சென்டர் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மீரா, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவி கோமதி சிவலிங்கம் முன்னிலையில் கோழி இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் கடையில் இருந்த எடை கருவி, கோழி சுத்தப்படுத்தும் இயந்திரம், இறைச்சி கோழிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டதில் அனுமதியின்றியும், சுகாதார முறைகளை கையாளாமலும் இறைச்சி கடைகள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. உரிமம் இன்றி செயல்படும் ஆடு, கோழி இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.
சுகாதாரத்துறை எச்சரிக்கை.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை
கடலூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் குடிநீர் பணிகள்
கடலூர் ஆட்சியர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்களின் இன விருத்தி காலமான ஏப்ரல் 15 முதல் 29 முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீன் வளத்தை மேம்படுத்தி மீனவர்கள் பயன்பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள தடைகால உத்தரவை கடலூர் மாவட்ட மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும். தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை யாக ரூ.500 வழங்கப்படும். மீனவர் குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்புக்கான 668 ஊராட்சிகளில் இதுவரை 134 ஊராட்சிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. 87 ஆயிரத்து 482 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சப்& காண்ட்ராக்ட் விட்டதால் தொய்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தி விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்காக மாவட்ட ஆட்சியரின் சுய விருப்ப நிதியில் இருந்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 648 குடிநீர் பணிகளுக்காக ரூ.9 கோடியே 78 லட்சத்து 3 ஆயிரமும், நகராட்சி பகுதிகளில் 99 குடிநீர் பணிகளுக்காக ரூ.2 கோடியே 6 லட்சமும், பேரூராட்சி பகுதிகளில் 267 பணிகளுக்காக ரூ.3 கோடியே 21 லட்சத்து 14 ஆயிரம் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 14 பணிகளுக்காக இதுவரை ரூ.15 கோடியே 5 லட்சத்து 17 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை சரி செய்யும் விதமாக என்.எல்.சி நிர்வாகத்திடமும் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்று மாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுகள்
ஆட்சியர்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
குடிநீர் வாரியம்
கோயில் தெற்கு வாயிலை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
நந்தன் நுழைந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயிலை திறக்கக்கோரி சிதம்பரம் தெற்கு சன்னதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படம்) புதன்கிழமை நடைபெற்றது.ஏழைகள் முன்னேற்றக் கழகம், பிற்படுத்தப்பட்டோர் பேரவை, தமிழக சமாஜவாதி கட்சி, உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி, அண்ணாமலைப் பல்கலை. எஸ்சி., எஸ்டி ஆசிரியர் சங்கம், மக்கள் தேசம் கட்சி, ஆதிதிராவிடர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.ஏழைகள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் எம்.ஏ.டி.அர்ச்சுனன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். தமிழக சமாஜவாதி கட்சி மாநில செயல் தலைவர் இளங்கோயாதவ், வழக்கறிஞர் ப.கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி மக்கள் தேசம் கட்சி தலைவர் மு.ராசிக்ஃபரித் உள்ளிட்டோர் பேசினர்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சிதம்பரம்,
நடராஜர் கோயில்,
நந்தன்
கான்கிரீட் வீடுகள் கணக்கெடுப்பு 42 ஊராட்சிகளில் முடிந்தது : கலெக்டர்
கடலூர் மாவட்டத் தில் கடந்த 7ம் தேதி வரையில் 60,168 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளுக்காக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட் டத்தில் குடிசை வீடுகள் கான்கிரீட்வீடு கட்டும் திட்டத்திற்கு கடந்த 29ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கிராம ஊராட்சி உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வரும் மே 15ம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 29ம் தேதி முதல் 7ம் தேதி வரை 410 ஊராட்சிகளில் 60,168 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 42 ஊராட்சிகளில் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட் டத்தில் குடிசை வீடுகள் கான்கிரீட்வீடு கட்டும் திட்டத்திற்கு கடந்த 29ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கிராம ஊராட்சி உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வரும் மே 15ம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 29ம் தேதி முதல் 7ம் தேதி வரை 410 ஊராட்சிகளில் 60,168 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 42 ஊராட்சிகளில் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டுகள்
ஆட்சியர்,
கடலூர்,
கடலூர் ஊராட்சி,
கடலூர் மாவட்டம்
ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆள்சேர்ப்பு முகாம் இன்று தொடங்கி 19-ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, புதுவை மாவட்டங்களைச் தேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.சிப்பாய் நர்ஸிங் உதவியாளர், சிப்பாய் டெக்னீஷியன், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் கிளர்க், சிப்பாய் வர்த்தகப் பணி, ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. உதவி ரெக்ரூட்டிங் அலுவலர் கெடாவூர் தலைமையில் ஆள்கள் தேர்வுப் பணி நடக்கிறது.ஆட்சியர் பார்வையிட்டார்: ராணுவத்துக்கு ஆள்கள் சேர்க்கும் முகாம் ஏற்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை மாலை பார்வையிட்டார். அண்ணா விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடப்பதால், 19-ம் தேதி வரை விளையாட்டு அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்பட்டு இருக்கும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.இந்த முகாமுக்கு தேர்வுக்காக தினமும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் முதல் கட்டமாக சான்றிதழ்கள் சரிபார்த்தல், அடுத்து உடல்திறன் தேர்வும், மருத்துவத் தகுதித் தேர்வும் நடைபெறும்.இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, ஜூலை மாதத்தில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதி அடிப்படையில் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கட்டுகள்
அண்ணா விளையாட்டு அரங்கம்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க கோரிக்கை
மிகவும் பின் தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பாதுகாப்பு பேரவை முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அப்பேரவை நிறுவனத் தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அண்டை மாவட்டமான விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி முயற்சியால் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.அது போல அனைத்து வகையிலும் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் கடலூரிலோ, வடலூரிலோ அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் ஏழை-எளிய மக்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே விரைவில் கடலூர் மாவடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஜி.என்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை,
மருத்துவக்கல்லூரி
கடலூர் அருகே லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு
கடலூர் அருகே கங்கணாங்குப்பத்தில் காவல்துறையின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, சிறப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பிரிவாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது.
மாவட்ட அளவில் செயல்படும் இப்பிரிவின் அலுவலகம் கடலூர் அண்ணா நகரில் தனியார் இடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. அனைத்து துறைகளில் நடக்கும் லஞ்சம் தொடர்பான வழக்கு களை விசாரிக்கவும், லஞ்சம் பெறுபவர்களை பிடிக்கவும் செயல்படும் இப்பிரிவிற்கு நிரந்தர கட்டிடம் அரசு சார்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் அருகே உள்ள கங்கணாங்குப்பத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் சம்பந்தப்பட்ட பிரிவின் அலுவலகம் மற்றும் பணியாற்றும் காவலர்களுக்கான குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது.
மாவட்ட அளவில் செயல்படும் இந்த அலுவலகத்திற்கு லஞ்சம் குறித்து புகார் கொடுக்க வருபவர்கள் கங்கணாங்குப்பத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தை எளிதில் கண்டுபிடித்து வர இயலாது என்று சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் காவல் துறையிடம் கூறியுள்ளனர். இதையடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறைக்கான இடத்தில் சுற்றுப்புற கிராம விவசாயிகள் சிலர் நெல் நடவு செய்து பயிரிட்டு வருகின்றனர். அரசு துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் விளைநிலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, தற்பொழுது இப்பிரிவில் ஒரு டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர் உள்பட 17 போலீசார் பணியாற்றி வருகின்றனர். போலீஸ் குடியிருப்பு மற்றும் அலுவலகத்திற்காக கங்கணாங்குப்பத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிரிவின் முக்கியத்துவம் கருதி கடலூர் நகரிலேயே இடம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட காவல் துறையிடம் கோரப்பட்டுள்ளது.
இடம் ஒதுக்கீடு செய்தவுடன் கங்கணாங்குப்பம் இடம் மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தற்பொழுது கங்கணாங்குப்பத்தில் வேலி அமைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
காவல்துறை
பள்ளி செல்லா குழந்தைகள் கடலூரில் 63 பேர் கண்டுபிடிப்பு
கடலூர் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதில் 2 நாட்களில் 63 மாணவ& மாணவிகள் கண்டறியப்பட்டுள்ளனர். வரும் 15 தேதி வரை மாவட்டம் முழுவதும் 13 வட்டார வள மையபகுதியிலும் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.
நாட்டில் அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கட்டாய ஆரம்ப கல்வி சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்விதிட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மாநில அரசுகளின் உதவியுடன் மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளது. அதற்கான சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இதையடுத்து 6 வயது முதல் 14 வயது வரையுள்ள பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி கடலூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 24 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து பள்ளியில் இடை நின்ற மாணவர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிந்து கல்வியின் முக்கியதுவத்தை கூறி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். கடந்த 6ம் தேதி பணியின் துவக்க விழா நடந்தது. நேற்று முன்தினம் (7ம் தேதி) மற்றும் நேற்று (8ம் தேதி) இரண்டு நாட்களில் 91 கிராம பகுதி குடியிருப்புகள் மற்றும் 8 நகராட்சி வார்டு பகுதியில் கடலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆஷா கிரிஸ்டி எமரால்ட், ஒருங்கிணைப்பாளர் அனந்தநாராயணன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதில் நகராட்சி பகுதியில் 8, கிராமபுறங்களில் 55 மாணவ& மாணவி கள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட் டது.
மாவட்டம் முழுவதும் 13 ஒன்றியங்களில் இந்த கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பள்ளி செல்லா குழந்தைகளின் மொத்த பட்டியலும் கணக்கிடப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. மாணவ& மாணவிகள் பள்ளி செல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக அவர்களது குடும்ப சூழ்நிலையை இருப்பதாக ஆய்வு செய்யும் அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து மாணவ& மாணவிகளையும் மீண்டும் அவர்களது குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
15ம் தேதி வரை கணக்கெடுப்பு
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
கல்வி,
பள்ளி
15-ம் தேதி முதல் 45 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை
வரும் 15-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு விசைப் படகுகள், கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்தத் தடை அமுலில் இருக்கும்.சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. கடல்தான் இவர்களின் வாழ்வாதாரம். ஆயிரக்கணக்கான விசைப் படகுகள், சிறிய படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரிய படகுகள் சுருக்கு வலை, இரட்டைமடி வலை, கொல்லிமடி வலை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வலைகளைப் பயன்படுத்துகின்றன. இதனால் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை, பெருமளவுக்கு மீன்கள் பிடிக்கப்பட்டு விடுகின்றன. எனவே கடல் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், மீனவர்களுக்கு பரவலாக பல மாதங்கள் மீன் கிடைக்கவும், ஏப்ரல் 15-ம் தேதி முதல் 15 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க அரசு தடை விதிக்கிறது. மேலும் ஏப்ரல், மே மாதங்கள்தான் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்கள் என்று கூறப்படுகிறது. இந்த நாள்களில் உற்பத்தியாகும் மீன் குஞ்சுகளையும் பிடித்து விட்டால், மற்ற நாள்களில் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிடும் என்று கருதப்படுவதால் மேற்கண்ட நாள்களில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் சிறிய படகுகள் மற்றும் கட்டுமரங்களுக்குத் தடையில்லை. கடந்த 7 ஆண்டுகளாக இந்தத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மீனவர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். மீன்பிடித் தடைக் காலத்தில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலத்தில் குடும்பத்துக்கு ரூ.500 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.இந்த நிவாரணத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார். அவர் மேலும் கூறியது: கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு முழுவதும் மீன்கள் சரியாகக் கிடைக்கவில்லை. கரையோரப் பகுதிகளில்தான் மீன்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. ஆனால் கடற்கரைகளில் பெருகிவரும் ரசாயனத் தொழிற்சாலைகளால், கடலில் பெருமளவுக்கு கழிவுகள் கலக்கின்றன. இதனால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. மீன்கள் கிடைப்பது அரிதாகி, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றார் சுப்புராயன்.
கட்டுகள்
கடல்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
மீனவர்கள்,
ரசாயனம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)