கடலூர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து 10 பேர் கொண்ட குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தபோது நோயாளிகளிடம் ஊழியர்கள் மனிதநேயமின்றி நடந்து கொண் டதை கண்கூடாக பார்க்க முடிந் தது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் கூறினார்.
கடலூர் அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேடு, சிகிச் சைக்கு லஞ்சம், நோயாளிகளிடம் பரிவு காட்டாதது போன்ற பல புகார்கள் சுகாதாரத்துறைக்கு வந் துள்ளன. அமைச்சர் பன்னீர் செல் வம் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் தலைமையில் கண்காணிப்பாளர் ரங்கராஜன், ஈஸ்வரன், புள்ளிவிவர உதவியாளர் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கொண்ட அதிரடி படையினர் மருத்துவமனையில் நேற்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நோயாளிகள் போல் மாறுவேடத்தில் ஒவ்வொரு பிரிவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று (நேற்று) எங்கள் குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளது தெரிய வந் துள்ளது. ஊழியர்கள் நோயாளிகளிடம் மனிதநேயம் இல்லாமல் நடத்து கொண்டுள்ளனர். வயிற்று வலியால் துடித்த நோயாளி ஒருவருக்கு 2 மணி நேரமாக ஸ்கேன் எடுக்காமல் காக்க வைத்ததும் கண்கூடாக காண நேர்ந்தது. சிலர் நோயாளிகளிடம் லஞ்சம் பெற் றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மருத்துவமனையில் உள்ள ஸ்டோர், ஆபீஸ், மகப் பேறு, சமையல் கூடத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டு மாற்றியமைக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. எக்ஸ்ரே பிலிம் போதுமான அள விற்கு தட்டுபாடின்றி வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம் ஏழை மக்களுக்கு மருத் துவம் சென்றடையவேண்டும் என்பதேயாகும். ஆய்வின் போது தவறு செய்தவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். சிலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. நடவடிக்கை குறித்து ஆய்வு முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். இது போன்ற அதிரடி ஆய்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படும். இவ் வாறு கூடுதல் இயக்குனர் கூறினார்.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
சுகாதாரத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகாதாரத்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல்
கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரா கூறும்போது, மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்படும். நக ராட்சி, ஊராட்சி பகுதியில் இயங்கும் கடைகள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் நடத்த உரிமம் பெற்று நடத்த வேண்டும். உரிமம் இன்றி நடத்தப்படும் இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். முறைகேடாக வும், சுகாதாரத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் விதத்தில் நடத்தப்படும் கடை களுக்கு ஆய்வின் அடிப்படையில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தொடரும், என்றார்.
குடியிருப்பு பகுதிகளில் தடை
ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சிவலிங்கம் கூறும்போது, சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கடைகள் குடியிருப்பு பகுதியிலேயே அமைந்திருப்பது காரணமாக உள்ளது. பொது சுகாதார சட்டத்தின் படி இறைச்சி கடைகள் குடியிருப்பு பகுதியில் வைக்க தடை உள்ளது.
இதனை முழுமையாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்தால் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு ஏற்படுத்தும். கடலூர் மாவட்டத்தில் முன்னோடியாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் இறைச்சி மற்றும் காய்கறிகளை கொண்ட மினி மார்க்கெட் குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அமைத்து சுகாதாரம் சீர்கெடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
கடலூர், ஏப். 16:
கடலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில், குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கொட்டப் படுகின்றன. மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதால், அவை களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சுகாதார துறை எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கோழி இறைச்சி கடைகள் இயங்கி வருவது குறித்தும், கோழி இறைச்சி கடைகள் பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்படும் வகையில் உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் முத்து என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் மீரா தலைமையில், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், ஊழியர்கள், திருப்பாதிரிப்புலியூர் சப்&இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதிசிவலிங்கம் ஆகியோர் கூத்தப்பாக்கம் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
கூத்தப்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்திய சிக்கன் சென்டர் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மீரா, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவி கோமதி சிவலிங்கம் முன்னிலையில் கோழி இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் கடையில் இருந்த எடை கருவி, கோழி சுத்தப்படுத்தும் இயந்திரம், இறைச்சி கோழிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டதில் அனுமதியின்றியும், சுகாதார முறைகளை கையாளாமலும் இறைச்சி கடைகள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. உரிமம் இன்றி செயல்படும் ஆடு, கோழி இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.
சுகாதாரத்துறை எச்சரிக்கை.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை
கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க கோரிக்கை
மிகவும் பின் தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பாதுகாப்பு பேரவை முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அப்பேரவை நிறுவனத் தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அண்டை மாவட்டமான விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி முயற்சியால் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.அது போல அனைத்து வகையிலும் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் கடலூரிலோ, வடலூரிலோ அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் ஏழை-எளிய மக்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே விரைவில் கடலூர் மாவடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஜி.என்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை,
மருத்துவக்கல்லூரி
கடலூர் அரசு மருத்துவமனையில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் கருவி
கடலூர் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக எச்.ஐ.வி., பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் கருவியை இணை இயக்குனர் துவக்கி வைத்தார்.கடலூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங் கத்தின் மூலம் ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தின் மூலம் எச்.ஐ.வி., பாதித்தவர்கள் சென்னை தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் நோய் எதிர்ப்பு சக் தியை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.தற்போது 17 லட்சம் ரூபாய் மதிப்பில் எச்.ஐ.வி., பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை (வெள்ளையணுக்களின் எண்ணிக்கை) கண்டறியும் கருவி கடலூர் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக அமைக் கப்பட்டுள்ளது. இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கண்காணிப்பாளர் பரஞ் ஜோதி முன்னிலை வகித் தார். முதுநிலை மருத்துவ அலுவலர் தேவ்ஆனந்த் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊழியர் கள் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், உமா, சுதர்சனா, சிவராஜ் மற்றும் சுஜாதா, பாண்டியன், சந்தோஷ்குமார், செந்தில் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை
அரசு மருத்துவக் கல்லூரி துவக்க முதல்வருக்கு கவுன்சிலர் கோரிக்கை
கடலூர் மாவட்டத்தில் அரசு மருத் துவ கல்லூரி துவக்கக் கோரி முதல்வருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன் றிய கவுன்சிலர் மாரியப்பன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியும், இன்ஜினியரிங் கல்லூரிகளும் உள்ளன. இந்த மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி துவக் கப்பட்டது. அதேபோல் இந்த பகுதிமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி துவக்க உத்தரவிடவேண்டும் என கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன் றிய கவுன்சிலர் மாரியப்பன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியும், இன்ஜினியரிங் கல்லூரிகளும் உள்ளன. இந்த மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி துவக் கப்பட்டது. அதேபோல் இந்த பகுதிமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி துவக்க உத்தரவிடவேண்டும் என கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கட்டுகள்
அரசு மருத்துவமனை,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை
காற்றில் பறக்குது கலெக்டர் உத்தரவு
கடலூர் அடுத்த பெரியபட்டு அருகே கடந்த நவம்பர் 23ம் தேதி தனியார் பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் ஒரு மாணவர் இறந் தார். 34க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். அடுத்த சில நாட்களில் நாகை மாவட் டத்தில் தனியார் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்ததில் 10 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் இறந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வாகனங்களை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். கூடுதல் மாணவர்கள் ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களுக்கு உரிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அதனை மீறும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரித்தார். அதன்படி அதிகாரிகள் சில நாட்கள் பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர். இந்த சம்பரதாயம் ஓரிரு நாளில் முடிந்தது. அதன்பிறகு பள்ளி வாகனங்கள் "மாமூலாக' அதிக மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். நேற்று நடந்த விபத்தில் சிக்கிய வேனில் 18 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆனால் அதில் 32 மாணவ, மாணவிகளும் ஐந்து ஆசிரியர்கள் சென்றுள் ளனர். அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென் றதே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வாகனங்களை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். கூடுதல் மாணவர்கள் ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களுக்கு உரிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அதனை மீறும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரித்தார். அதன்படி அதிகாரிகள் சில நாட்கள் பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர். இந்த சம்பரதாயம் ஓரிரு நாளில் முடிந்தது. அதன்பிறகு பள்ளி வாகனங்கள் "மாமூலாக' அதிக மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். நேற்று நடந்த விபத்தில் சிக்கிய வேனில் 18 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆனால் அதில் 32 மாணவ, மாணவிகளும் ஐந்து ஆசிரியர்கள் சென்றுள் ளனர். அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென் றதே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கட்டுகள்
ஆட்சியர்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை,
பள்ளி வாகனங்கள்
யானைக்கால் நோய் ஒழிப்பு பணி: டி.இ.சி., மாத்திரை இன்று வினியோகம்
பொது மக்கள் டி.இ,சி., அல்பண்டசோல் மாத்திரைகளை உட்கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்."கியூலக்ஸ்' வகை கொசுக்கள் மூலம் பரவும் யானைக்கால் என்னும் கொடிய நோய் ஒழிப்பு பணி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாத நிலை உள்ளதால் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனைப்படி ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட ஒரே நாளில் அனைவரும் தமது வயதிற்கு ஏற்ப டி.இ.சி., அல்பண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வதால் இந்நோயினை அறவே ஒழிக்க முடியும்.இதனை கருத்தில் கொண்டு பொது சுகாதாரத்துறை அறிவுரையின்பேரில் குறிப்பிட்ட அனைவரும் உட்கொள்ளும் நிகழ்வு மாவட்டத்தில் இன்று (28ம் தேதி) நடக்கிறது.
100 மி.கி., கொண்ட டி.இ.சி., மாத்திரைகள் 2-5 வயதுள்ளோருக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு இரண்டும், 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றும், அவரவர் வயதிற்கேற்ப வழங்கப்படும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற் பட்டவர், நீண்ட காலமாக நோய்வாய் பட்டவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. இம் மாத்திரைகளை சாப்பிடுவதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஒருசிலருக்கு காய்ச்சல், அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்படுமாயின் அது அவர்களின் உடலுக்குள் உள்ள யானைக்கால் நோய் புழுக்கள் அழிக்கப்படுவதன் விளைவேயின்றி அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாத நிலை உள்ளதால் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனைப்படி ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட ஒரே நாளில் அனைவரும் தமது வயதிற்கு ஏற்ப டி.இ.சி., அல்பண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வதால் இந்நோயினை அறவே ஒழிக்க முடியும்.இதனை கருத்தில் கொண்டு பொது சுகாதாரத்துறை அறிவுரையின்பேரில் குறிப்பிட்ட அனைவரும் உட்கொள்ளும் நிகழ்வு மாவட்டத்தில் இன்று (28ம் தேதி) நடக்கிறது.
100 மி.கி., கொண்ட டி.இ.சி., மாத்திரைகள் 2-5 வயதுள்ளோருக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு இரண்டும், 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றும், அவரவர் வயதிற்கேற்ப வழங்கப்படும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற் பட்டவர், நீண்ட காலமாக நோய்வாய் பட்டவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. இம் மாத்திரைகளை சாப்பிடுவதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஒருசிலருக்கு காய்ச்சல், அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்படுமாயின் அது அவர்களின் உடலுக்குள் உள்ள யானைக்கால் நோய் புழுக்கள் அழிக்கப்படுவதன் விளைவேயின்றி அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
கட்டுகள்
ஆட்சியர்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை
மருந்தாளுனர் பட்டயப் படிப்பு பதிவுகளை சரிபார்க்க கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அழைப்பு
கடலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மருத்தாளுனர் பட்டயப்படிப்பு பதிவு செய்துள்ளவர்கள் நேரில் வந்து பதிவு மூப்பை சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகரசு மருத்துவ கல்லூரி இயக்குனரகத் தால் மருந்தாளுனர் பணி இடங்களை நிரப்புவதற்கு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பட்டியல் கேட்கப் பட்டுள்ளது. இந்த பணி இடத்திற்கு எஸ்.எஸ். எல்.சி., தேர்ச்சி பொது தகுதியும், மருந்தாளுனர் பட்டயப்படிப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் தாழ்த்தப் பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள், அருந்ததி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், முஸ்லீம்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு குறைந்தபட்ச வயது 1-7-2009 அன்று 18 வயதும், அதிபட்ச வயது வரம்பு இல்லை.
ஆனால் அனைத்து முற்பட்ட வகுப்பினருக்கு 18 வயது முதல் 35 வயது மிகாமல் இருக்கவேண்டும். எனவே மேற்கண்ட தகுதியுடன் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 16-2-2010 ம் தேதி வரை பதிவு செய்துள்ள மனு தாரர்கள், தங்கள் பதிவு அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றிதழ்களுடன் வரும் 25ம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நேரில் வந்து தங்கள் பதிவுகளை சரி பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.
தமிழகரசு மருத்துவ கல்லூரி இயக்குனரகத் தால் மருந்தாளுனர் பணி இடங்களை நிரப்புவதற்கு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பட்டியல் கேட்கப் பட்டுள்ளது. இந்த பணி இடத்திற்கு எஸ்.எஸ். எல்.சி., தேர்ச்சி பொது தகுதியும், மருந்தாளுனர் பட்டயப்படிப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் தாழ்த்தப் பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள், அருந்ததி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், முஸ்லீம்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு குறைந்தபட்ச வயது 1-7-2009 அன்று 18 வயதும், அதிபட்ச வயது வரம்பு இல்லை.
ஆனால் அனைத்து முற்பட்ட வகுப்பினருக்கு 18 வயது முதல் 35 வயது மிகாமல் இருக்கவேண்டும். எனவே மேற்கண்ட தகுதியுடன் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 16-2-2010 ம் தேதி வரை பதிவு செய்துள்ள மனு தாரர்கள், தங்கள் பதிவு அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றிதழ்களுடன் வரும் 25ம் தேதிக்குள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நேரில் வந்து தங்கள் பதிவுகளை சரி பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சுகாதாரத்துறை
100 தம்பதிகளுக்கு குழந்தையின்மை நல சிகிச்சை
கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இலவச மருத்துவ முகாமில், 100 தம்பதிகளுக்கு குழந்தையின்மை நல மருத்துவ சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது. சென்னை பில்ராத் மருத்துவமனை மற்றும் பில்ராத் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது.கடலூர் பாதிரிக்குப்பத்தில் நடந்த இந்த முகாமில் குழந்தையில்லாத 100 தம்பதிகளுக்கு ரத்தப் பரிசோதனை விந்துப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மருத்துவர்கள் டி.தாட்சாயணி, சியாமளா, சிவாஜி ஆகியோர் ஆலோசனையும் சிகிச்சையும் அளித்தனர். முகாமை விழுப்புரம் சரக போலீஸ் துணை ஐ.ஜி. மாசானமுத்து தொடங்கி வைத்தார். தொடக்க விழாவுக்கு, கடலூர் ஜூனியர் சேம்பர் தலைவர் என்.மனோகரன் தலைமை தாங்கினார்.திட்ட இயக்குநர் டாக்டர் வி.கே.கணபதி வரவேற்றார்.
கட்டுகள்
கடலூர்,
சுகாதாரத்துறை
கடலூர் மாவட்டத்தில் இன்று 1512 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
மாவட்டத்தில் இன்று 2.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.போலியோ நோயை அறவே அகற்ற தமிழகம் முழுவதும் இன்று 2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சத்துணவு கூடங்கள் என மொத்தம் 1512 மையங்கள் மற்றும் 101 சிறப்பு மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை போலியோ சொந்து மருந்து வழங்கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து105 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய ஒவ்வொரு மையத்திலும் 4 பணியா ளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.
மேலும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், என்.சி.சி., மாணவர்கள், சுயஉதவிக்குழுவினர் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.குழந்தைகளுக்கு போடப்படவுள்ள சொட்டு மருந்து குறித்தோ, பின் விளைவுகள் குறித்தோ பொது மக்கள் எவரும் அச்சப்படத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், என்.சி.சி., மாணவர்கள், சுயஉதவிக்குழுவினர் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.குழந்தைகளுக்கு போடப்படவுள்ள சொட்டு மருந்து குறித்தோ, பின் விளைவுகள் குறித்தோ பொது மக்கள் எவரும் அச்சப்படத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்டுகள்
கடலூர்,
சுகாதாரத்துறை
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4ம் தேதி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த மா.கம்யூ., முடிவு செய்துள்ளது.
கடலூர் நகர மா.கம்யூ., குழுக் கூட்டம் நடந்தது. ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், நகர செயலாளர் சுப்புராயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடலூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமில்லாமல் குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கிறது. நகர மெங்கும் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் கொசு, பன்றிகளால் சிக்குன்-குனியா, டெங்கு, மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்து வருவது வேதனையளிக்கிறது. மக்களை நோய் அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது.
மாவட்ட சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் கொசு, பன்றிகளை அழித்திட நடவடிக்கை எடுத்திடக் கோரியும், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான உயிர்காக்கும் மருந்துகளை இருப்பு வைத்திடவும், இதயம், நரம்பியல் போன்ற முக்கியத் துறைக்கு உடன் சிறப்பு மருத்துவர்களை பணியில் நியமிக்கவும், கொடிய நோயிலிருந்து மக் களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலூர் நகர மா.கம்யூ., குழுக் கூட்டம் நடந்தது. ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், நகர செயலாளர் சுப்புராயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடலூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமில்லாமல் குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கிறது. நகர மெங்கும் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் கொசு, பன்றிகளால் சிக்குன்-குனியா, டெங்கு, மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்து வருவது வேதனையளிக்கிறது. மக்களை நோய் அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது.
மாவட்ட சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் கொசு, பன்றிகளை அழித்திட நடவடிக்கை எடுத்திடக் கோரியும், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான உயிர்காக்கும் மருந்துகளை இருப்பு வைத்திடவும், இதயம், நரம்பியல் போன்ற முக்கியத் துறைக்கு உடன் சிறப்பு மருத்துவர்களை பணியில் நியமிக்கவும், கொடிய நோயிலிருந்து மக் களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்டுகள்
அரசு மருத்துவமனை,
கடலூர்,
கடலூர் நகராட்சி,
சுகாதாரத்துறை
கடலூரில் தொடரும் காய்ச்சல்
கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காய்ச்சல் நோய் தொடர்ந்து பரவி வருகிறது. காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மருந்துக் கடைகளில் மருந்து வாங்குவோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துக் காணப்படுகிறது. கடலூரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் பெருமளவுக்குப் பரவி இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். கொசுக்களின் இனப்பெருக்கம், பன்றிகள் எண்ணிக்கை அதிகரிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வருவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன் கூறுகையில், பல்வேறு வகையான காய்ச்சல்கள் தீவிரமாகப் பரவி வருவதை அரசு நிர்வாகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மூளைக்காய்ச்சல் காரணமாக கடலூரில் பள்ளி மணவர் ஒருவரும், டெங்குக் காயச்சல் காரணமாக அஸ்வத்தாமன் என்பவரும் புதுவை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு கடந்த வாரம் இறந்துள்ளனர். இந்த இருவரும் கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறக்காததால் மாவட்ட நிர்வாகமும் பொது சுகாதாரத் துறையும் அலட்சியமாக இருக்க முடியாது. கடலூர் மற்றும் கோண்டூர் உள்ளிட்ட 7 ஊராட்சிப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு, மூளைக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதுகுறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் கூறியது: கடலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நாளொன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகிறார்கள். இவர்களில் 60 சதவீதம் பேருக்கு காய்ச்சல் உள்ளது. தற்போது பெய்து வரும் அதிகப்படியான பனியாலும், கொசுக்களாலும், பாக்டீரியாக்களாலும் பரவும் காய்ச்சலாக அதிகம் காணப்படுகிறது. சிக்குன் குனியா போன்ற காய்ச்சல், டைஃபாய்டு காய்ச்சலும் உள்ளது. காய்ச்சலுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. கடலூரில் கொசுத் தொல்லையால்தான் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவுகின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆங்காங்கே தண்ணீரும் சாக்கடையும் தேங்கி விடுவதால் பல நோய்கள் பரவக் காரணம் ஆகிவிடுகிறது என்றார்.
கட்டுகள்
அரசு மருத்துவமனை,
கடலூர்,
சுகாதாரத்துறை
வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா : அரசு மருத்துவமனைகளில் கூட்டம்
பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் சிக்குன் குனியா நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பருவநிலை திடீர், திடீரென மாறுவதால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு வாரம் பெய்த கனமழைக்கு பின்னர் சிக்குன் குனியா நோய் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவதால் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது.
சிக்குன்குனியா நோய் தாக்குதலால் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் போடப்படும் ஊசி மற்றும் மருந்துகளுக்கே கட்டுப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு நோயாளிகளின் வருகை பலமடங்கு அதிகரித்துள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக மூவாயிரம் புறநோயாளிகள் வருவார்கள். ஆனால் கடந்த 10 நாளாக தினசரி 4,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதேபோன்று சிதம்பரத்தில் 2,500 பேரும், விருத்தாசலத்தில் 1,500 பேரும், குறிஞ்சிப் பாடியில் 650 ருலிருந்து 1000 பேர் வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் அதிகளவு காய்ச்சல் மற்றும் வலிக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.இது குறித்து மாவட்ட அரசுபொது மருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார் கூறியதாவது:
சிக்குன்குனியா நோய் தாக்குதலால் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் போடப்படும் ஊசி மற்றும் மருந்துகளுக்கே கட்டுப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு நோயாளிகளின் வருகை பலமடங்கு அதிகரித்துள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக மூவாயிரம் புறநோயாளிகள் வருவார்கள். ஆனால் கடந்த 10 நாளாக தினசரி 4,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதேபோன்று சிதம்பரத்தில் 2,500 பேரும், விருத்தாசலத்தில் 1,500 பேரும், குறிஞ்சிப் பாடியில் 650 ருலிருந்து 1000 பேர் வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் அதிகளவு காய்ச்சல் மற்றும் வலிக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.இது குறித்து மாவட்ட அரசுபொது மருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார் கூறியதாவது:
வழக்கம்போல் வைரஸ், சளி, இருமல், டைபாய்டு காய்ச்சலுடன் சிக்குன் குனியா நோய் தாக்குதல் உள்ளது. மழை விட்டு தேங்கும் சுத்தமான தண்ணீரில் உருவாகும்"ஏஜிடி' வகை கொசுக்கள் மூலம் சிக்குன் குனியா நோய் பரவுகிறது. இதனால் மூட்டுகளில் சவ்வுகள் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படும். பாதங்களில் வீக்கம் காணப்படும்.
இந்த வகை கொசுக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகை கொசுக்கள் பகலிலும் கடிக்கும் என்பதால் அலட்சியம் செய்யாமல் உடல் முழுவதும் கவர் செய்யும் விதமான உடைகளை அணிய வேண்டும். வீடுகளில் கொசுவலையை பயன்படுத்த வேண்டும்.
குளிப்பதற்கு மற்றும் துணி துவைப்பதற்காக உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தும் தண்ணீரீல் 30 எம்.எல்., அளவிற்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் இந்த வகை கொசு உருவாகாது.
இந்த வகை கொசுக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகை கொசுக்கள் பகலிலும் கடிக்கும் என்பதால் அலட்சியம் செய்யாமல் உடல் முழுவதும் கவர் செய்யும் விதமான உடைகளை அணிய வேண்டும். வீடுகளில் கொசுவலையை பயன்படுத்த வேண்டும்.
குளிப்பதற்கு மற்றும் துணி துவைப்பதற்காக உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தும் தண்ணீரீல் 30 எம்.எல்., அளவிற்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் இந்த வகை கொசு உருவாகாது.
குடிப்பதற்கும் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் உள்ள தொட்டிகளில் இதை கண்டிப்பாக கலக்கக்கூடாது. இதற்கென தனியாக மருந்து மாத்திரைகள் கிடையாது. காய்ச்சல் மற்றும் வலிக்கு டாக்டர் பரிந்துரை செய்யும் மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டால் போதுமானது. நோய் குணமாகி 10 அல்லது 15 நாட்களுக்கு உடன் வலி மற்றும் மூட்டுகளில் வலி இருக்கும். இதனால் அச்சம் அடையத் தேவையில்லை.அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வழக்கத்தை விட 10 சதவீதம் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தீவிர சிகிச்சையால் மாவட்டத்தில் பல இடங்களில் நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடலூர் அரசு மருத்துவமனைக்கு மூன்று மாதத்திற்கு தேவையான நாய்க்கடி ஊசி 10 லட்சம் மதிப்பிலும், 25 லட்சம் மதிப்பில் மற்ற நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது. மற்ற தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவையான அளவிற்கு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது என தெரிவித்தார்.
கட்டுகள்
அரசு மருத்துவமனை,
சுகாதாரத்துறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
