கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிதம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செம்மொழி மாநாடு விடுமுறை பிச்சாவரத்தில் வருமானம் உயர்வு
உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற் றுலா பயணிகள் வருகை அதிகரித்து படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இம்மையத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட் டம் அதிகளவில் காணப்படும். பள்ளி திறந்ததும் பயணிகள் வரத்து குறைந்து காணப்படும். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டது.இதன் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் கடந்த ஐந்து நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் 6 ஆயிரத்து 300 பேரும், வெளி நாட்டினர் 253 பேரும் வந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகள் வரத்து மூலம் ஐந்து நாளில் படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.
கட்டுகள்
கடலூர்,
சிதம்பரம்,
பிச்சாவரம்
மாணவர்களுக்கு வசதியாக ரயில்களை இயக்கக் கோரிக்கை
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வசதியாக பாசஞ்சர் ரயில்களின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று, ரயில்வே இலாகாவுக்குத் தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் ரயில்வே பொது மேலாளருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்,
கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
நிற்காமல் செல்வது பயணிகளை பெரிதும் பாதிக்கிறது. துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் சென்று எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பிடிப்பது மக்களுக்குச்
சாத்தியமாக இல்லை. இதனால் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின்
வருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.÷50 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து எக்ஸ்பிஸ் ரயில்களும் நிற்கும் ரயில் நிலையமாக இருந்து
வந்துள்ளது திருப்பாப்புலியூர். திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில்,
திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றுவரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும், தினமும் சென்னை செல்லும் பயணிகளுக்கும், திருப்பாப்புலியூர், பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காதது பெருத்த ஏமாற்றமாக உள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு வசதியாக, விழுப்புரம் மயிலாடுதுறை இடையே முன்பு காலையில் 2 ரயில்களும் மாலையில் 2 ரயில்களும்
இயக்கப்பட்டன. தற்போது காலை, மாலை தலா ஒரு ரயில் மட்டுமே
இயக்கப்படுவது மாணவர்களுக்கும் அலவலகம் செல்வோருக்கும்
போதுமானதாக இல்லை. ரயில்களின் இயக்க நேரங்களும் ஏற்றதாக இல்லை. எனவே கூடுதலாக இரு பாசஞ்சர் ரயில்களை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்றும் சிவகுமார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம்,
ரயில் போக்குவரத்து
கோயில் தெற்கு வாயிலை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
நந்தன் நுழைந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயிலை திறக்கக்கோரி சிதம்பரம் தெற்கு சன்னதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படம்) புதன்கிழமை நடைபெற்றது.ஏழைகள் முன்னேற்றக் கழகம், பிற்படுத்தப்பட்டோர் பேரவை, தமிழக சமாஜவாதி கட்சி, உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி, அண்ணாமலைப் பல்கலை. எஸ்சி., எஸ்டி ஆசிரியர் சங்கம், மக்கள் தேசம் கட்சி, ஆதிதிராவிடர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.ஏழைகள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் எம்.ஏ.டி.அர்ச்சுனன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். தமிழக சமாஜவாதி கட்சி மாநில செயல் தலைவர் இளங்கோயாதவ், வழக்கறிஞர் ப.கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி மக்கள் தேசம் கட்சி தலைவர் மு.ராசிக்ஃபரித் உள்ளிட்டோர் பேசினர்.
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சிதம்பரம்,
நடராஜர் கோயில்,
நந்தன்
அண்ணாமலைப் பல்கலையில் தமிழர்களக்கு 85% இடங்கள் கேட்டு ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 80 விழுக்காடு இடங்களை ஒதுக்கக் கோரிக்கை விடுத்து, தமிழக மாணவர் முன்னணி சார்பில் நேற்று(31.03.2010) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தே.அரவிந்தன் முன்னிலை வகித்தார். ”அக்னிச் சிறகுகள்” குபேரன் கண்டன உரையாற்றினார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:
அண்மையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடநாட்டு மாணவர் ஒருவர் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, குடித்து விட்டு பைக் ஒட்டி விபத்தில் இறந்து போனார். அதற்கு பதிலடியாக வடநாட்டு மாணவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் நம் மருத்துவமனையின் கண்ணாடிகளை, ஆம்புலன்சு வண்டிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் நமக்கு 2 செய்திகளை கூறியிருக்கிறது. ஒன்று, வடநாட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்குப் படிப்பதும், இரண்டாவதாக அவர்கள் ஒருங்கிணைந்த முறையில் இருப்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இந்த மாணவர்கள் துணை வேந்தரை சந்திக்க முற்பட்ட போது அதற்கு மறுப்புத் தெரிவித்திரிக்கிறார் அவர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தான் துணை வேந்தர் பதவியே. அந்தப் பதிவியில் இருந்து கொண்டு அவர் சந்திக்க மறுத்தது நியாமில்லை. வடநாட்டு மாணவர்களாக இருந்தாலும், தமிழ் மாணவர்களாக இருந்தாலும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கத் தானே அந்தப் பதவி. துணை வேந்தர் இதனை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வடநாட்டு மாணவர்கள் இங்கு படிப்பதோடு அல்லாமல் இங்கு அடாவடித்தனங்களில் ஈடுபடுவதும், வகுப்புகளை ஹிந்தியில் நடத்த வலியுறுத்துவதும், தமிழ் மாணவர்களை கேலி செய்வதும் இங்கு நடக்கிறது. அவர்கள் படித்து முடித்ததும் இங்கெயே தங்கி, வேலை புரிந்து, தங்கள் குடும்பங்களை இங்கேயே குடியமர்த்தி ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்கள்.
இலங்கையில் சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் எப்படி திட்டமிட்டு சிங்களர்களை குடியமர்த்துகிறதோ, அதைப் போல இந்திய அரசு தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குவிவதை விரும்புகிறது. இதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துணை போகக் கூடாது.
இந்நிலை நீடித்தால், நமது மண்ணில் பெரும் எண்ணிக்கையில் அவர்கள் குடியேறி ஆக்கிரமிப்பு செய்வார்கள். எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் பணத்தாசைக்கு ஆட்படாமல் வரும் கல்வியாண்டில் 85 விழுக்காடு இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாங்கள் கேட்பது பீகாரிலோ, உத்திரப்பிரதேசத்திலோ அல்ல.
தமிழ்நாட்டில் செயல்படுகின்ற, தமிழர்களின் வியர்வையிலும் உழைப்பிலும் கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் தான் தமிழர்களுக்கு இடங்களை ஒதுக்குங்கள் என கேட்கிறோம். இது சலுகைப் போராட்டம் அல்ல, இன உரிமை போராட்டம் என்பதை நாம் உணர வேண்டும். நம் மண்ணை அயலாரிடமிருந்து மீட்க நாம் ஒன்று திரள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இப்போராட்டத்தில் தமிழ் மாணவர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முடிவில், திரு. சௌந்தரராசன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.
இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தே.அரவிந்தன் முன்னிலை வகித்தார். ”அக்னிச் சிறகுகள்” குபேரன் கண்டன உரையாற்றினார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:
அண்மையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடநாட்டு மாணவர் ஒருவர் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, குடித்து விட்டு பைக் ஒட்டி விபத்தில் இறந்து போனார். அதற்கு பதிலடியாக வடநாட்டு மாணவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் நம் மருத்துவமனையின் கண்ணாடிகளை, ஆம்புலன்சு வண்டிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் நமக்கு 2 செய்திகளை கூறியிருக்கிறது. ஒன்று, வடநாட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்குப் படிப்பதும், இரண்டாவதாக அவர்கள் ஒருங்கிணைந்த முறையில் இருப்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இந்த மாணவர்கள் துணை வேந்தரை சந்திக்க முற்பட்ட போது அதற்கு மறுப்புத் தெரிவித்திரிக்கிறார் அவர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தான் துணை வேந்தர் பதவியே. அந்தப் பதிவியில் இருந்து கொண்டு அவர் சந்திக்க மறுத்தது நியாமில்லை. வடநாட்டு மாணவர்களாக இருந்தாலும், தமிழ் மாணவர்களாக இருந்தாலும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கத் தானே அந்தப் பதவி. துணை வேந்தர் இதனை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வடநாட்டு மாணவர்கள் இங்கு படிப்பதோடு அல்லாமல் இங்கு அடாவடித்தனங்களில் ஈடுபடுவதும், வகுப்புகளை ஹிந்தியில் நடத்த வலியுறுத்துவதும், தமிழ் மாணவர்களை கேலி செய்வதும் இங்கு நடக்கிறது. அவர்கள் படித்து முடித்ததும் இங்கெயே தங்கி, வேலை புரிந்து, தங்கள் குடும்பங்களை இங்கேயே குடியமர்த்தி ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்கள்.
இலங்கையில் சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் எப்படி திட்டமிட்டு சிங்களர்களை குடியமர்த்துகிறதோ, அதைப் போல இந்திய அரசு தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குவிவதை விரும்புகிறது. இதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துணை போகக் கூடாது.
இந்நிலை நீடித்தால், நமது மண்ணில் பெரும் எண்ணிக்கையில் அவர்கள் குடியேறி ஆக்கிரமிப்பு செய்வார்கள். எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் பணத்தாசைக்கு ஆட்படாமல் வரும் கல்வியாண்டில் 85 விழுக்காடு இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாங்கள் கேட்பது பீகாரிலோ, உத்திரப்பிரதேசத்திலோ அல்ல.
தமிழ்நாட்டில் செயல்படுகின்ற, தமிழர்களின் வியர்வையிலும் உழைப்பிலும் கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் தான் தமிழர்களுக்கு இடங்களை ஒதுக்குங்கள் என கேட்கிறோம். இது சலுகைப் போராட்டம் அல்ல, இன உரிமை போராட்டம் என்பதை நாம் உணர வேண்டும். நம் மண்ணை அயலாரிடமிருந்து மீட்க நாம் ஒன்று திரள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இப்போராட்டத்தில் தமிழ் மாணவர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முடிவில், திரு. சௌந்தரராசன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
கடலூர் மாவட்டம்,
சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில் இன்று வெளியீடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் டிசம்பர்-2009 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்டர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச்31-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359 மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர் என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.ஏ.-வரலாறு, சோசியாலஜி, எக்னாமிக்ஸ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், தமிழ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், ஆங்கிலம் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், பங்ஷனல் தமிழ், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் மற்றும் சிவிக் ஸ்டெடிஸ், ஹியுமன் ரைட்ஸ், சோசியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன், பிசினஸ் எக்னாமிக்ஸ், பி.ஏ. மற்றும் பி.எஸ்சி. சைக்காலஜி பி.எஸ்சி.- கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (டபுள் டிகிரி), ஆப்ரேஷன் ரிசர்ச் (டபுள் டிகிரி), அப்ளைடு கெமிஸ்டரி, எலக்டிரானிக் சயன்ஸ், இயற்பியல், தாவரவியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இனபர்மேஷன் டெக்னாலஜி, விஷுவல் கம்யூனிக்கேஷன்ஸ், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், இன்டீரியர் டிசைன், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் டூரிசம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எஸ்., பி.எம்.எம்., பி.மியுசிக்., பி.டான்ஸ்., பி.பி.எல்., பி.சி.ஏ., பி.டிட், பி.எட்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.ஃபில்- இயற்பியல், விலங்கியல், கடல்வாழ் உயிரியல் மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகள், டிப்ளமா படிப்புகள். சான்றிதழ் படிப்புகள்.
வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359 மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர் என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.ஏ.-வரலாறு, சோசியாலஜி, எக்னாமிக்ஸ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், தமிழ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், ஆங்கிலம் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், பங்ஷனல் தமிழ், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் மற்றும் சிவிக் ஸ்டெடிஸ், ஹியுமன் ரைட்ஸ், சோசியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன், பிசினஸ் எக்னாமிக்ஸ், பி.ஏ. மற்றும் பி.எஸ்சி. சைக்காலஜி பி.எஸ்சி.- கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (டபுள் டிகிரி), ஆப்ரேஷன் ரிசர்ச் (டபுள் டிகிரி), அப்ளைடு கெமிஸ்டரி, எலக்டிரானிக் சயன்ஸ், இயற்பியல், தாவரவியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இனபர்மேஷன் டெக்னாலஜி, விஷுவல் கம்யூனிக்கேஷன்ஸ், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், இன்டீரியர் டிசைன், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் டூரிசம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எஸ்., பி.எம்.எம்., பி.மியுசிக்., பி.டான்ஸ்., பி.பி.எல்., பி.சி.ஏ., பி.டிட், பி.எட்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.ஃபில்- இயற்பியல், விலங்கியல், கடல்வாழ் உயிரியல் மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகள், டிப்ளமா படிப்புகள். சான்றிதழ் படிப்புகள்.
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சிதம்பரம்
தொலைதூரக்கல்வி மைய பாடங்கள் வானொலியில் ஒலிபரப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பயிலும் பல்வேறு துறை மாணவர்களுக்கான பாடங்கள் புதுச்சேரி, சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய அகில இந்திய வானொலி நிலையங்களில் முதல் அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது.இவ்வாண்டுக்கான பாடங்கள் மே 9-ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. மே 8,9 தேதிகளில் மட்டும் மாலை 5 மணிக்கே இப்பாடங்கள் ஒலிபரப்பாகும்.30 நிமிட கால அளவிலான தமிழ், ஆங்கிலம், சமூகவியல், பொருளாதாரம், வணிகம், மக்கள் தொகையியல், அரசியல் பொது நிர்வாகம், காவல் நிர்வாகத்துறை மாணவர்களுக்கான இப்பாடங்களின் ஒலிபரப்பை கேட்டு பயன்பெறுங்கள் என புதுச்சேரி வானொலி நிலைய இயக்குநர் கல்யாணி ராமச்சந்திரன் பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சிதம்பரம்
இரு மாணவர்களை காணவில்லை : தீயணைப்பு வீரர்கள் தேடுதல்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர் கள் இருவரை காணவில்லை என்ற தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் நேற்றிரவு பாலமான் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன் ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர் கவுதம்குமார் (20) நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் அவர் அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதையறிந்து ஆவேசமடைந்த சகமாணவர்கள் பல்கலை தேர்வுத்துறை அலுவலகம், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, அங்கு நின்றிருந்த வாகனங்களை உடைத்தனர். அவர்களை போலீசார் விரட்டினர்.அதில் மாணவர்கள் பலர் அருகில் உள்ள பாலமான் ஆற்றில் குதித்து தப்பினர். அவர்களில் இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் சுமித்குமார் (22) இறந்தார். இந்த சம்பவங்களினால் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் விரட்டியதில் ஆற்றில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என்ற தகவல் நேற்று மாலை பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு தீயணைப்பு படையினர் பாலமான் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பல்கலை பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன் ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர் கவுதம்குமார் (20) நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் அவர் அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதையறிந்து ஆவேசமடைந்த சகமாணவர்கள் பல்கலை தேர்வுத்துறை அலுவலகம், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, அங்கு நின்றிருந்த வாகனங்களை உடைத்தனர். அவர்களை போலீசார் விரட்டினர்.அதில் மாணவர்கள் பலர் அருகில் உள்ள பாலமான் ஆற்றில் குதித்து தப்பினர். அவர்களில் இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் சுமித்குமார் (22) இறந்தார். இந்த சம்பவங்களினால் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் விரட்டியதில் ஆற்றில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என்ற தகவல் நேற்று மாலை பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு தீயணைப்பு படையினர் பாலமான் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பல்கலை பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
கடலூர்,
கடலூர் மாவட்டம்,
சிதம்பரம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1,333 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்: கவர்னர் பர்னாலா 22-ந்தேதி வழங்குகிறார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 77-வது பட்டமளிப்பு விழா வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மண்டபத்தில் நடக்கிறது.
விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு 2008-2009-ம் கல்வி ஆண்டில் பட்டம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களையும், பல் வேறு அறக்கட்டளை பரிசு களையும் வழங்குகிறார்.
விழாவில் நேரடியாக 1, 333 மாணவர்களுக்கு பட்டங்களையும், இதில் பல்வேறு பாடங்களில் முதன்மை தேர்ச்சி பெற்ற 145 மாணவ- மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசுகளையும் கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.
இதில் 264 (எம்.பில், 62 பி.எச்டி, 201,டி.எஸ்.சி.1) மாணவர்கள் ஆராய்ச்சி பட்டங்கள் பெறுகிறார்கள்.
நேரடி சேர்க்கை மூலம் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள் 6,114 பேர், தொலைதூர கல்வி இயக்க கம் மூலம் பட்டம் பெறும் மாணவர்கள் 97,413 பேர் உள்பட மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 27 மாணவ- மாணவிகள் பட்டம் பெறுகின்றனர்.
விழாவில் புதுடெல்லி மானியக்குழு துணை தலைவர் பேராசிரியர் வேத் பிரகாஷ், கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி எம்.பி. கலந்து கொள்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் (டாக்டர் ராமநாதன்) ஆண்டறிக்கை வாசிக்கிறார். விழா ஏற்பாடுகளை பல்கலைக் கழக நிர்வாகம் செய்து வருகிறது.
இவ்வாறு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் கூறினார்.
பேட்டியின் போது துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா 21-ந் தேதி மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர் பங்களா வந்தடைகிறார். இதற்காக பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஹெலிகாப்டர் தளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நேற்று ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம், பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கட்டுகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சிதம்பரம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)