கோரிக்கை பதிவு

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் விரைவில் சுரங்க பாதை பணிகள் தொடங்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரி தகவல்

கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களை தொடர்ந்து ரூ.14 கோடி செலவில் சூரப்பன் சாவடியில் மேம்பாலமும் கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து ரூ.14 கோடி மதிப்பீட்டில் கடலூர் சூரப்பன் சாவடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் லாரன்ஸ் ரோட்டில் சுரங்ப்பாதை அமைக்கும் பணி நிதி ஒதுக்கீடு செய்தும் நடைபெறவில்லை. சுரங்கப்பாதை அமைக்க கோரி பல்வேறு பொதுநல இயக்கங்கள் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கத்தினரும் சுரங்கப் பாதை அமைக்க கோரி போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த நிலையில் கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மருதவாணனுக்கு கடலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 5-10-2000 அன்று ரூ.14 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்த வகையில் லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதைக்கு ரூ.1 கோடி அனுமதி அளிக்கப்பட்டது. இது குறைவான மதிப்பீட்டில் இருப்பதால் சுரங்கப்பாதை திட்டம் ரூ.5.37 கோடியில் தயாரிக்கப்பட்டு மற்றும் மின் கம்பிகள் குடிநீர் குழாய்கள் விளக்கு வசதி உள்ளிட்டவற்றிற்கு ரூ.1.83 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.7.20 கோடி திட்டத்திற்கு நிதித்துறை அனுமதி அளித்துள்ளது.

லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதை வடி வமைப்பு என்பது தலைமை பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) இறுதிப்படுத்தப்படுகிறது. இறுதியில் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்ட உடன் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் லாரன்ஸ் சாலையில் உடனடியாக தொடங்கப்படும். லாரன்ஸ் சாலையில் ரயில் போக்குவரத்து ஆரம்பித்தாலும் இந்த சுரங்கப்பாதை வடி வமைப்பின்படி இப்பணிகள் தொடங்கும்.

இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்துக்கு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு 21-ந் தேதி வருகை

தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருவாய்துறை வளர்ச்சி பணிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். குத்தாலம் தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்திலும் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்கள். அதன்படி வருகிற 21-ந் தேதி மதிப்பீட்டு குழுவினர் கடலூர் வருகிறார்கள். பின்னர் மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்கள்.
கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார்கள். உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், தொடக்க பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை மற்றும் பணிகள் வளர்ச்சி குறித்து இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

பின்னர் அன்று மாலை கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாம்களை மேம்படுத்த ரூ.31 லட்சம் ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் தங்கி உள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு தமிழக அரசு ரூ.30 லட்சத்து 98 ஆயிரம் நிதி ஒதுக்கி உள்ளது.
காட்டுமன்னார் கோவில் அகதிகள் முகாமுக்கு ரூ.8 லட்சத்து 38 ஆயிரமும், குறிஞ்சிப்பாடி முகாமுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரமும், விருத்தாசலம் முகாமுக்கு ரூ.9 லட்சத்து 20 ஆயிரமும், அம்பலவாணன் பேட்டை முகாமுக்கு ரு.6 லட்சத்து 65 ஆயிரமும் ஒதுக்கப் பட்டுள்ளது.இந்த நிதி புதிய குடிநீர் குழாய்கள் அமைத் தல், மின் பழுது நீக்கல், தெருவிளக்கு மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டுதல் போன்றவற்றுக்கு செவிடப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கி உள்ள வர்களில் கலைஞர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 532 பேருக்கு அடையாள அட்டையும், 425 பேருக்கு இலவச கலர் டி.வி.யும், 13 பேருக்கு இலவச பஸ் பாசும், 45 பேருக்கு ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1,333 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்: கவர்னர் பர்னாலா 22-ந்தேதி வழங்குகிறார்


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 77-வது பட்டமளிப்பு விழா வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மண்டபத்தில் நடக்கிறது.
விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு 2008-2009-ம் கல்வி ஆண்டில் பட்டம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களையும், பல் வேறு அறக்கட்டளை பரிசு களையும் வழங்குகிறார்.
விழாவில் நேரடியாக 1, 333 மாணவர்களுக்கு பட்டங்களையும், இதில் பல்வேறு பாடங்களில் முதன்மை தேர்ச்சி பெற்ற 145 மாணவ- மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசுகளையும் கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.
இதில் 264 (எம்.பில், 62 பி.எச்டி, 201,டி.எஸ்.சி.1) மாணவர்கள் ஆராய்ச்சி பட்டங்கள் பெறுகிறார்கள்.
நேரடி சேர்க்கை மூலம் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள் 6,114 பேர், தொலைதூர கல்வி இயக்க கம் மூலம் பட்டம் பெறும் மாணவர்கள் 97,413 பேர் உள்பட மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 27 மாணவ- மாணவிகள் பட்டம் பெறுகின்றனர்.
விழாவில் புதுடெல்லி மானியக்குழு துணை தலைவர் பேராசிரியர் வேத் பிரகாஷ், கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி எம்.பி. கலந்து கொள்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் (டாக்டர் ராமநாதன்) ஆண்டறிக்கை வாசிக்கிறார். விழா ஏற்பாடுகளை பல்கலைக் கழக நிர்வாகம் செய்து வருகிறது.
இவ்வாறு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் கூறினார்.
பேட்டியின் போது துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா 21-ந் தேதி மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர் பங்களா வந்தடைகிறார். இதற்காக பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஹெலிகாப்டர் தளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம், பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

நம்மவர்களையே அடித்த கடலோரக் காவல்படை! -கசந்துபோன கடலூர் மீனவர்கள்

நம்மவர்களையே அடித்த கடலோரக் காவல்படை!
-கசந்துபோன கடலூர் மீனவர்கள்

கடலுக்குள் 25 கிலோ மீட்டரை கடந்து மீன் பிடிக்கக் கூடாது என்ற புதிய சட்டம் வரப்போகிறதாம். இந்த மீன்பிடி மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த மசோதா மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆந்திர, கேரள மீனவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறது மீன்பிடி மசோதா.


இந்த நிலையில், கடந்தவாரம் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல, ‘25 கிலோ மீட்டர் தாண்டி ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்ட கடலோரக் காவல்படையினர் அவர்களை அடித்து அவர்களின் படகையும் சேதப்படுத்தினர். இச்சம்பவத்துக்குப் பிறகு வெடவெடத்துக் கிடக்கிறார்கள்.

25 கிலோ மீட்டர் கடந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லக் கூடாது என்பது மீன்பிடி மசோதாவின் ஓர் அங்கம். இதைக் கண்டித்தும், தாக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மீனவர்களை சுதந்திரமாகச் செயல்பட வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட மீனவ அமைப்புகளான ‘விடுதலை மீனவ வேங்கைகள்,’ ‘வீரவிடுதலை வேங்கைகள்’, ‘மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கம்’ உள்ளிட்ட அமைப்புகள் கண்டன போஸ்டர், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டத்தில் குதித்துள்ளன.

கடலோரக் காவல் படையினரால் தாக்கப்பட்ட மீனவர் முருகனை சந்தித்தோம்.

“போனவாரம் சாயங்காலம் மூணு மணிக்கு அஞ்சு படகுல தொழிலுக்குப் போனோம். முப்பது கிலோ மீட்டர் போய் வலையை விரிச்சோம். அப்போ, எங்ககிட்ட வந்து நின்ன ஒரு கப்பலிலிருந்து வெள்ள டிரெஸ் போட்ட ஆபீசருங்க அஞ்சு பேர் வந்தாங்க.

நாங்க இருந்த படகுலயே இறங்கிட்டாங்க. எங்ககிட்ட வந்து துப்பாக்கிய காட்டி மிரட்டினாங்க. எவ்ளோ சொல்லியும் கேட்காம எங்களை அடிச்சாங்க. ‘அடையாள அட்டை கொடு’ என்று கேட்டார்கள். எங்கக்கிட்ட இல்லை. அதுக்குள்ள படகுல இருந்த வலையை எல்லாம் சேதப்படுத்திட்டாங்க.

அவங்களுக்குப் பயந்து நாங்க கரைக்குத் திரும்பிட்டோம். மீன்வளத்துறை தனி அதிகாரி அப்பர்கிட்ட இதுபற்றிச் சொன்னோம். அவர் எங்கக்கிட்ட புகார் எழுதி வாங்கிக்கிட்டாரு. 15 வருஷமா தொழில் செய்யறோம். இதுபோல நடந்ததேயில்லை. இது எங்களுக்குப் புதுசா இருக்கு. அதனால தொழிலுக்குப் போகவே பயமா இருக்கு.

இதுசம்பந்தமா கலெக்டரை போய்ப் பார்த்து சொன்னோம். அவரும் எங்க ஊருக்கு வந்து சமாதானம் சொல்லிட்டு, விசாரிக்கறதா சொல்லியிருக்காரு. இதுக்கு ஒரு தீர்வு வராம கடலுக்குப் போறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கோம். ஒருவாரமா தொழிலுக்குப் போகலை” என்றார் சோகத்தோடு.

இவரைத் தொடந்து ஊர்ப் பிரமுகரான சாமிநாதனிடம் பேசினோம்.

“கடலம்மாவை நம்பி எங்க ஊருல 700 குடும்பங்கள் இருக்கு. ஆனா இந்தக் கடலோரக் காவல்படை போலீஸ்காரங்க திடீர்னு முரட்டுத்தனமாத் தாக்கியிருக்காங்க. கேட்டா, ‘25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல வராதீங்க’ன்னு சொல்றாங்க.

ஆழமான பகுதியிலதான் வெலை உசந்த மீன்கள் கிடைக்கும். இதையே நம்பி வாழும் எங்களை இதைச் செய்யாதீங்க.. அதைச் செய்யாதீங்கன்னு சொன்னா எப்படி? இதுவரைக்கும் மீன்பிடிக்க எந்தச் சட்டதிட்டமும் எங்களுக்கு இருந்ததில்லை. இப்பதான் ஏதோ புதுசா சொல்றாங்க.

படகுல இத்தனை பேருதான் போகணும்னு வரைமுறைப் படுத்துறாங்க. இதுசம்பந்தமா எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லலை. இவங்களா ஒரு சட்டத்தை வச்சிக்கிட்டு எங்களை வஞ்சிக்கிறாங்க. செல்வநாதன், கோபி, அமிர்தலிங்கம், கார்த்திகேயன், ஆறுமுகம், மனோகரன், முருகன்னு மீன்பிடிக்கப் போன பலரையும் அடிச்சி அவங்க படகையும் சேதப்படுத்தி வலையையும் அபகரிச்சிக்கிட்டாங்க. இதற்கான நிவாரணத்தை உடனடியா வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வரணும். ‘நீங்க எல்லாம் உடனே அடையாள அட்டை வாங்கிக்கணும்னு சொல்லுறாரு கலெக்டரு. தொழிலுக்குப் போற நாங்க உயிரையே கையில பிடிச்சிட்டு போய்வர்றோம். இதுல அடையாள அட்டையை எங்க பாதுகாக்கிறது” என்றார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். “இப்படி ஒரு சம்பவம் இதுதான் முதன்முறை. இது சம்பந்தமாகக் கடலோரக் காவல் படை அதிகாரிகளிடம் பேசினேன். ‘இனிமேல் இப்படி ஒரு தவறு நடக்காது’ என்று உறுதியளித்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளோம். இனிமேல் இவங்க தொழிலுக்குப் போகும்போது அடையாள அட்டை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் படகு சம்பந்தமான சான்றிதழ் நகல்களை எடுத்துச் செல்லவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று மீனவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” என்றார்.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ஐயப்பனிடம் பேசினோம்.

“இந்தச் சம்பவம் கேள்விப்பட்ட உடனே விசாரிக்கத் தொடங்கினேன். எப்போதும்போல கடலோரக் காவல் படையினர் மீனவர்களை விசாரணை செய்வது வழக்கம். அப்போது இந்த மீனவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் இவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். உடனே அதுசம்பந்தமான அதிகாரிகளிடம் பேசினேன். அதில் சிங் என்ற உயர் அதிகாரி ஒருவர் இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டோரை அழைத்துச் சென்று அந்த ஊரில் சமாதானக் கூட்டம் போட்டு அவர்களை மீண்டும் தொழிலுக்குப் போகும்படி வலியுறுத்தி உள்ளேன். விரைவில் தொழிலுக்குச் செல்வார்கள் என நம்புகிறேன்” என்றார் ஐயப்பன்.

இப்போதே மீனவர்களுக்கு உள்ளூர் போலீஸ், கடலோரக் காவல்படை, கடற்படை என மூன்றடுக்குத் தொல்லை இருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு கொண்டுவரப் போகும் இந்தப் புதிய மசோதா, மீனவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

எய்ட்ஸ் மறுவாழ்வு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு

கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கி வரும் எய்ட்ஸ் நோயாளிகள் மறுவாழ்வு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலூர் புதுப்பாளையம் சீனிவாசன் பிள்ளைத் தெருவில் மாடர்ன் கல்வி மற்றும் சமூக சேவை மையம் சார்பில் ஏப்ரல் மாதம் முதல் எய்ட்ஸ் நோயாளிகள் மறுவாழ்வு மையம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த மறுவாழ்வு மையத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் அருகில் வசிப்பவர்களுக்கு டி.பி., உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கழிவறைகள் சுத் தமாக இல்லை. இதனால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயமுள்ளதாகவும், மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில் எய்ட்ஸ் நோயாளிகள் மறுவாழ்வு மையத்தை ஆய்வு செய்தபோது அங்கு தற்போது மூன்றுபேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய பராமரிப்பு இருந்தாலும் அருகில் வீடுகள் உள்ளதால் மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதிக்குள் மையம் வேறு இடத்தில் மாற்றி அமைப்பதாக மறுவாழ்வு மைய நிர்வாகி திருமால் தெரிவித்துள்ளதாக கூறினார்.

கடலூரில் முக்கிய இடங்களில் 'கேமரா' : பாதுகாப்பு கருதி போலீசார் நடவடிக்கை


கடலூர் காவல் துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது. டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ஏழுமலை, தம்புசாமி, சப் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, ஆனந்தபாபு, மோகன், கோவிந்தராஜ், வள்ளி விலாஸ் பாலு, அழகப்பா ராஜகோபால், ஓட் டல் அபிநயா ராம ஜனார்த்தனன், ஆனந்தபவன் வெங்கடசுப்பு மற் றும் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு, போலீசாருடன் பொதுமக் கள் மற்றும் வியாபாரிகளின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப் பட்டது.


டி.எஸ்.பி., ஸ்டாலின் பேசுகையில் "தற்போது நாட்டில் நிலவும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக மக் கள் அதிகளவில் கூடும் நகை கடை, ஜவுளிக் கடை, சினிமா தியேட்டர், ஓட்டல்கள் போன்றவைகள்தான் அவர்களின் இலக்காக இருக்கும். இதுபோன்ற அச்சுறுத்தல் நமது மாவட்டத்தில் இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி நாம் செயல்பட வேண்டும். வியாபாரிகள் தங்கள் நிறுவனங்களில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் இடங்களில் கேமரா பொருத்தியிருக்க வேண்டும்.நிறுவனத்தில் பணிபுரியும் ஆட் கள் குறித்து முழு விவரங்களையும் அவர்களது போட்டாவையும் வைத் திருக்க வேண்டும். இதற்காக தனியாக புத்தகம் பராமரிக்க வேண்டும். நிறுவனத்திற்கு சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.நகரில் முக்கிய இடங்களில் "கேமரா' பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அவசியமாக கருதப்படுகிறது' என பேசினார்.

தகுதி சான்று பெறாத 18 பள்ளி வாகனங்கள் : அதிகாரிகளின் சோதனையில் அம்பலம்

மாவட்டத்தில் 18 பள்ளி வாகனங்கள் தகுதி சான்றிதழ் பெறாமலே ஓட்டியிருப்பது அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.கடலூர் அடுத்த பெரியப்பட்டு மற்றும் வேதாரண்யத்தில் பள்ளி வாகனங்கள் விபத்திற்கு உள் ளான சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கப்படுகிறதா என சோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.அதனைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் போலீஸ், வருவாய் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக தற்போது பள்ளி வாகனங்களில் ஓட்டுனராய் பணியாற்றுபவர் 10 ஆண்டுகள் அனுபவமுள்ளவரா என்பது குறித்து கண்காணிக்கப்படுகிறது.
இதுவரை மாவட் டத்தில் 977 பள்ளி வாகனங் கள் சோதனை செய்யப் பட்டன. இவற்றில் அதிக குழந்தைகள் ஏற்றி சென்ற வாகனங்கள் 113, ஓட்டுனர் உரிமமின்றி இயக்கப்பட்ட வாகனங்கள் 16, அனுமதியின்றி இயக்கிய வாகனங் கள் 16, தகுதி சான்று பெறாமல் இயக்கிய வாகனங்கள் 18 கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.

இடிந்து விழும் நிலையில் பெண்கள் விடுதி : அசம்பாவிதம் நிகழும் முன் நடவடிக்கை தேவை

கடலூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏ.எல்.சி.,க்கு சொந்தமான பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதி கட்டடம் மழையில் ஊறி பல இடங்களில் ஒழுகுவதால் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
கடலூர் போஸ்ட் ஆபீஸ் நிறுத்தம் அருகே பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் பின்புறம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தில் ஏ.எல்.சி., பெண்கள் மற்றும் மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இக்கட்டடத்தில் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, கந்தசாமி நாயுடு கல்லூரி மற்றும் பெரியார் கலைக் கல்லூரியில் படிக்கும் வெளியூர் மாணவிகள் மற் றும் வேலைக்கு செல்லும் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். ஓடுகளால் வேயப் பட்ட இக்கட்டடம் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுவர்கள் ஊறி ஸ்திரத் தன்மையை இழந்து வருகிறது.லேசான அளவில் மழை பெய்தாலே கூரை வழியே ஓழுகுகிறது. ஒரே அறையில் 10க்கும் மேற் பட் டோர் தங்கியிருப்பதால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். வெளியே வடிகால் வசதியில்லாததால் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லை அதிகரித்துள் ளது. சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த போதுமான வசதி இல்லை.கூடுதலான பாத்ரூம், டாய்லெட் இல்லாததாலும் சிரமப்படுகின்றனர். வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு பஸ் நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பாதுகாப்புடன் அருகிலேயே இருப்பதால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த விடுதியில் சேர்க்கின்றனர். ஆனால் விடுதி கொஞ்சம் கொஞ்சமாக ஸ்திரத்தன்மையை இழந்து வருவதை கண்டு மாணவிகளின் பெற்றோர் அச்சமடைந்து வருகின்றனர்.பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் முன் நிர்வாகம் விழித்துக் கொள்ள வேண்டும்.

அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

புயல் வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர் பாக அனைத்து அரசுத்துறை அலுவலர்களின் கூட்டம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டாட்சியர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் வட்டார வளர்ச் சித் துறை அலுவலர்களும் கடலூர் வட்டத்தை சேர்ந்த அனைத்து கிராம அலுவலர்களும் கலந்து கொண்டனர். புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பாது காப்பு நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கூடுதலாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

கடல்சார் மீன்பிடி மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் மீனவர் பேரவை தலைவர் அறிவிப்பு

மீனவர் களை பாதிக்கும் கடல்சார் மீன் பிடி ஒழுங்கு முறை மசோதாவை எந்த வடிவத்திலும் தமிழ்நாட்டிற் குள் அனுமதிக்க மாட் டோம் என்று தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன் பேசினார்.
கடல்சார் மீன்பிடி ஒழுங்கு முறை மசோ தாவை எதிர்த்து 17 ம் தேதி டில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசுகளையும் மீனவர் அமைப்பின் பிரதிநிதி களை கலந்து பேசிய பிறகே மசோதா குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணா நிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் மசோதாவை தற்காலிகமாக கைவிடுவதாகவும் கடலோர மாநில அரசுகளையும் மீனவர் அமைப்புகளை கலந்து ஆலோசித்த பிறகே முடிவெடுப்போம் என்று மத் திய அரசு அறிவித்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மீனவர் பேரவை டில்லியில் நடத்தவிருந்த கண்டன ஆர்பாட்டத்தை கைவிட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தயா ராக அனைத்து ஏற்பாடுகளையும் செய்த மீனவர் கிராம மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காக தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவனத்தலைவர் அன்பழகன் கடலூர் தேவனாம்பட்டினம் வந்தார். அங்கு கிராம மக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிராம மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது; கடலும், கடற்கரைகளும் மீனவர்களின் பிறப்புரிமை. குறிப்பிட்ட தூரத்தில்தான் மீன்பிடிக்க வேண்டும். சிறிய படகுகளைதான் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வகை மீன்களைதான் பிடிக்க வேண்டும் உள் ளிட்ட ஏராளமான கட்டுப்பாட்டுகளுனான மீன் பிடி மசோதா மீனவர்க ளின் நலன்களுக்கு முற்றி லும் எதிரானது. இதை எதிர்த்து டில்லியில் மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு மசோ தாவை கைவிட்டதாக மத் திய அரசு அறிவித்துள் ளது.மீனவர்கள் ஒற்றுமை யாக இருந்தால் யாரும் மீனவர்களை அழிக்க முடியாது.
மீனவர்களின் நலன் களை பாதிக்கும் இந்த மசோதா எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை தமிழ்நாட்டில் நாம் அனுமதிக்கமாட்டோம். இந்திய கட லோர கப்பற்படை வீரர் களை இலங்கையர்கள் கடத்திச் சென்றது நம்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம். நாட்டின் பாதுகாப்பு கேடயமாக மீனவர்கள் உள்ளனர். நாடடை பாதுகாக்க எந்தவிதமான தியாகத்திற்கும் மீனவர்கள் தயாராக உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். மீனவர்களை கப்பல்படை தாக்கியது கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது மீனவர்பேரவை வழக்கு தொடர உள்ளது. மீனவர்களையும் மீனவர்களின் வாழ்வாதாராங்களையும் பாதுகாக்க நாம் ஒற்றுமையுடன் இருந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநிலத் துணைத் தலைவர் தாமோதரன், கடலூர் மாவட்டத் தலை வர் சுப்புராயன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் விந்தியன் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கடலூர் அருகே ரசாயன கப்பல் கடலில் தவிப்பு

வங்ககடலில் உருவாகியுள்ள வார்ட் புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
இந்நிலையில் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பிவிசி தொழிற்சாலைகளுக்கு ஜப்பானில் இருந்து விசிஎம் (வினையல் குளோரைடு மோனமார்) என்ற ரசாயனத்துடன் வந்துள்ள 2 கப்பல்கள் அலையின் சீற்றத்தால் சித்திரைப் பேட்டையில் உள்ள துறைமுகத்திற்கு வரமுடியாமல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு கப்பலில் 7 ஆயிரம் டன் ரசாயனமும், மற் றொரு கப்பலில் 3 ஆயிரம் டன் ரசாயனமும் இருக்கிறது. இது குறித்து கடலூர் துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது “இரண்டு கப்பல்களும் புயல் காரணமாக துறைமுகத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கப்பல்களில் உள்ள ரசாயனம் போதிய பாதுகாப்புடன் உள்ளது. புயல் தாக்கத்தால் பாதிப்புகள் வராது. எனினும் கடலில் அலையின் சீற்றம் குறைந்த பிறகே கப்பல்கள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படும்.
அது வரையில் நடுக்கடலிலேயே நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக நடுகடலில் 10 ஆயிரம் டன் ரசாயனத்துடன்
கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் கடலூர் கடற்கரை கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரதியார் பிறந்தநாள்

கடலூரில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கடலூர் திருப்பாதிரி புலியூர் பாடலேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை தாங்கினார். தமிழாசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். ஓய்வு பெற்ற கல்வித்துறை கண்காணிப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கடல் நாகராசன் பரிசு வழங்கினார். மற்றொரு விழா; திருவள்ளுவர் பயிற்சி பள்ளி யில் நடந்த விழாவிற்கு பயிற்சி பள்ளி நிறுவனர் ஸ்ரீநிவா சன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுபாஷ் முன் னிலை வகித் தார். ஆசி ரியை கயல்விழி வரவேற் றார். சிறப்பு விருந்தினராக ஐந்தாம் உலக தமிழ்சங்க நிறுவனர் முத்துகுமரன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசராகவன் பாரதியும்& தமிழ்சங்கமும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். ஆசிரியை கார்த்திகா நன்றி கூறினார்.

கட​லூ​ரில் தொடர்​மழை கார​ண​மாக ​ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் இடிந்து விழுந்​தது

கட​லூ​ரில் தொடர்ந்து பெய்து வரும் கன​மழை கார​ண​மாக,​​ பழைமை வாய்ந்த கட​லூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் வியா​ழக்​கி​ழமை இரவு இடிந்து விழுந்​தது.​ ​

க​ட​லூர் நெல்​லிக்​குப்​பம் சாலை​யில் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் உள்​ளது.​ இது 200 ஆண்​டு​க​ளுக்கு முன் ஆங்​கி​லே​யர் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​டது.​ ​ கட​லூர் நக​ரில் பழை​மை​யும் பெரு​மை​யும் வாய்ந்த கட்​ட​டங்​க​ளில் இது​வும் ஒன்று.​

கட​லூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கம் இக்​கட்​ட​டத்​தில் கடந்த 40 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இயங்கி வந்​தது.​ தற்​போது இந்த அலு​வ​ல​கத்​தில் 60 ஊழி​யர்​கள் பணி​பு​ரி​கி​றார்​கள்.​ ​

வி​யா​ழக்​கி​ழமை மாலை 6-30 மணி வரை ஊழி​யர்​கள் இங்கு பணி​பு​ரிந்​த​னர்.​ அதற்​கு​மேல் வீடு​க​ளுக்​குச் சென்​று​விட்​ட​னர்.​ இரவு 7 மணிக்கு அலு​வ​ல​கத்​தின் இர​வுக் காவ​லர் அமா​வாசை ​(55) மட்​டும் முதல் மாடி​யில் பணி​யில் இருந்​தார்.​ இரவு 7-30 மணி அள​வில் கட்​ட​டத்​தின் முன் பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்​தது.​ பயங்​கர சத்​தம் கேட்டு அக்​கம்​பக்​கத்​தில் உள்​ள​வர்​கள் ஓடி​வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்​த​னர்.​ ​

இ​ரவு நேரத்​தில் இச்​சம்​ப​வம் நடந்​த​தால் உயிர்ச்​சே​தம் இன்​றித் தப்​பி​யது.​ கட்​ட​டத்​தின் ஏனைய பகு​தி​க​ளும் இடிந்து விழும் நிலை​யில்​தான் உள்​ளன.​ எனவே ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கம் தாற்​கா​லி​க​மாக அரு​கில் உள்ள பூமாலை வணிக வளா​கத்​துக்கு வெள்​ளிக்​கி​ழமை மாற்​றப்​பட்​டது.​

அ​லு​வ​ல​கக் கட்​ட​டம் இடிந்து சேதம் அடைந்​தது குறித்து ஊராட்சி ஒன்​றி​யக் குழுத் தலை​வர் சாந்தி பஞ்​ச​மூர்த்தி மற்​றும் வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்​கள் மாவட்ட ஆட்​சி​ய​ரைச் சந்​தித்து விவ​ரம் தெரி​வித்​த​னர்.​

ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கத்​துக்கு புதிய கட்​ட​டம் கட்​டித் தரு​மாறு கோரிக்கை விடுத்​த​னர்.

தானி(ஆட்டோ ) ஓட்​டு​நர்​கள் வேலை நிறுத்தம்

கட​லூ​ரில் தானி (ஆட்டோ) ஓட்​டு​நர்​கள் வெள்​ளிக்​கி​ழமை வேலை நிறுத்​தம் செய்​த​னர். கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். வேலை நிறுத்​தம் கார​ண​மாக பள்ளி மாண​வர்​கள் பெரி​தும் பாதிக்​கப் பட்​ட​னர். ​ந​க​ரில் பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டப் பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும்,​ திருப்​பாப்பு​லி​யூர் பஸ் நிலை​யத்​தில் ஆட்​டோக்​கள் நிறுத்த அனு​ம​திக்க வேண்​டும்.உ​டல் ஊன​முற்​ற​வர்​கள்,​ நோயா​ளி​கள் போன்​ற​வர்​களை பஸ்​நி​லை​யத்​துக்​குள் ஆட்​டோக்​க​ளில் கொண்​டு​விட அனு​ம​திக்க வேண்​டும். வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​ல​கத்​தில் ஆட்​டோக்​க​ளுக்கு அதிக அள​வில் பெர்​மிட் கொடுப்​பதை நிறுத்த வேண்​டும் என்ற கோரிக்​கைளை வலி​யு​றுத்தி வெள்​ளிக்​கி​ழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோ ரிக்​ஷாக்​கள் வேலை​நி​றுத்​தம் அறி​விக்​கப்​பட்டு இருந்​தது. ​இ​த​னால் கட​லூ​ரில் 2 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட ஆட்​டோக்​கள் இயங்க வில்லை. வேலை​நி​றுத்​தம் செய்த ஆட்டோ ஓட்​டு​நர்​கள்,​ உழ​வர் சந்தை அரு​கில் இருந்து ஊர்​வ​ல​மா​கப் புறப்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்தை அடைந்​த​னர். அங்கு ஆர்​பா​பட்​டம் நடத்​தி​னர். ​க​ட​லூ​ரில் ஆட்​டோக்​கள் ஓடா​த​தால் பள்​ளி​க​ளுக்​குச் செல்​லும் மாண​வர்​கள் பெரி​தும் அவ​திப்​பட்​ட​னர். வாகன வசதி உள்ள பெற்​றோர் பலர் தங்​கள் குழந்​தை​களை இரு சக்​கர வாக​னங்​க​ளில் அழைத்​துச் சென்​ற​னர். பேருந்துக​ளில் கூட்​டம் அதி​க​மா​கக் காணப்​பட்டதுடன் பலர் பேருந்துக​ளின் கூரை மீதும் பய​ணம் செய்​த​னர்.

மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிப்பு

கட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிக்​கப்​பட்​டது.வி ​டு​த​லைச் சிறுத்​கைள் கட்சி அலு​வ​ல​கத்​தில் நடந்த இந்த நிகழ்ச்​சி​யில் இலங்​கை​யில் ஈழத்​த​மி​ழர் போராட்​டத்​தில் இறந்​த​வர்​க​ளின் படங்​களை வைத்து மெழு​கு​வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்​தி​னர். ​நி​கழ்ச்​சிக்கு,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்ட துணைச் செய​லா​ளர் அறி​வு​டை​நம்பி தலைமை வகித்​தார். மாவட்​டத் துணைச் செலா​ளர் திரு​மேனி முன்​னிலை வகித்​தார்.ம​றைந்த வீரர்​க​ளுக்கு நக​ராட்சி துணைத் தலை​வர் தாம​ரைச் செல்​வன்,​ மெழு​கு​வர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்​தி​னார்.

தனி​யார் ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்​வ​தாக புகார்

கட​லூர் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்ய முயன்ற அதி​கா​ரி​களை ஊர் பொது​மக்​கள் தடுத்து நிறுத்​தி​னர். ​ ​க​ட​ லூர் அருகே சிப்​காட் பகு​தி​யில் தனி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலை தொடங்​கப்​பட இருக்​கி​றது. இதற்​காக சுமார் 1,000 ஏக்​கர் நிலம் ஏற்​கெ​னவே ஆர்​ஜி​தம் செய்ப்​பட்டு இருக்​கி​றது. மேற்​கொண்​டும் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்டு வரு​கி​றது. ​இந்​நி​லை​யில் இயற்கை எழில் மிகுந்த,​ மணல் குன்​று​கள் நிறைந்த திருச்​சோ​பு​ரம் பகு​தி​யில் நிலம் கைய​கப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் வெள்​ளிக்​கி​ழமை ஈடு​பட்​ட​னர்.நி​லத்தை அளந்து பல இடங்​க​ளில் கொடி நட்டு இருந்​த​னர். இதற்கு அப் பகு​தி​யில் வசிக்​கும் மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். இத​னால் நில அள​வைத் துறை அலு​வ​லர்​க​ளுக்​கும் பொது​மக்​க​ளுக்​கும் இடையே கடும் வாக்​கு​வா​த​மும் தள்​ளு​முள்​ளும் ஏற்​பட்​டது. ​மக்​கள் எதிர்ப்பு கார​ண​மாக நில​அ​ள​வைத்​துறை அதி​கா​ரி​கள் அங்​கி​ருந்து திரும்​பிச் சென்று விட்​ட​னர்.நி​லம் கொடுத்து மறுப்பு தெரி​வித்​தது குறித்து திருச்​சோ​பு​ரம் பிர​மு​கர் பாலு கூறி​யது:​ ​த ​னி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு திருச்​சோ​பு​ரம் கிரா​மத்​தில் நிலம் ஆர்​ஜி​தம் செய்ய நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் முயன்​ற​னர்.தி​ருச்​சோ​பு​ர​நா​தர் கோயி​லுக்​குச் சொந்​த​மான 30 ஏக்​கர் நிலத்தை அதி​கா​ரி​கள் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு வழங்​கும் முயற்​சி​யில் இறங்கி உள்​ள​னர்.இந்த நிலத்​தில் சுமார் 10 ஏக்​க​ரில் 200-க்கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் வீடு​கட்டி வசிக்​கின்​ற​னர். நாங்​கள் வீடு​களை காலி செய்ய மாட்​டோம் என்று தெரி​வித்து விட்​டோம். ​வீ​டு​கள் கட்டி இருக்​கும் 10 ஏக்​கர் உள்​ளிட்ட 30 ஏக்​கர் கோயில் நிலத்​தை​யும் தொழிற்​சா​லைக்கு ஆர்​ஜி​தம் செய்து கொடுக்​கும் முயற்​சி​யில் அதி​கா​ரி​கள் ஈடு​பட்டு இருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. கோயில் நிலத்தை தனி​யார் நிறு​வ​னத்​துக்கு அதி​கா​ரி​கள் எப்​படி வழங்க முடி​யும்?​ என்​றார் பாலு.

ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் சவப்​பாடை ஊர்​வ​லம்

கட​லூ​ரில் பழு​த​டைந்து கிடக்​கும் சாலை​களை சீர​மைக்க வலி​யு​றுத்தி இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும்,​ ஆர்ப்​பாட்​ட​மும் நடத்​தி​னர். ​ரூ. 44 கோடி​யில் தொடங்​கப்​பட்ட பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டம் 18 மாதங்​க​ளில் முடிக்​கப்​பட வேண்​டும். ஆனால் 30 மாதங்​க​ளுக்கு மேல் ஆகி​யும் முடி​வ​டைய வில்லை.60 சதம் பணி​கள்​கூட நிறை​வ​டைய வில்லை. இத் திட்​டத்​துக்​காக தோண்​டப்​பட்ட பள்​ளங்​க​ளால் வாக​னப் போக்​கு​வ​ரத்து பெரி​தும் சிர​ம​மாக இருக்​கி​றது. சாலை​கள் குண்​டும் குழி​யு​மாக மாறி நடந்து செல்​வ​தற்​கும் லாயக்​கற்​ற​தாக மாறி​விட்​டது. இத​னால் விபத்​து​கள் ஏற்​ப​டாத நாளே இல்லை. ​எ​னவே பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டத்தை துரி​த​மாக நிறை​வேற்ற நட​வ​டிக்கை எடுக்​காத கட​லூர் நக​ராட்​சி​யைக் கண்​டித்து இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும் நக​ராட்சி அலு​வ​ல​கம் முன் ஆர்ப்​பாட்​ட​மும் அறி​வித்து இருந்​த​னர். ச​வப்​பாடை ஊர்​வ​லத்​துக்கு போலீஸ் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. ​ ​ எனவே கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ நக​ராட்சி அலு​வ​ல​கம் முன் ஆர்​பா​பட்​டம் நடத்​தி​னர்.அதே நேர்த்​தில் யாரும் எதிர்​பா​ராத வித​மாக,​ ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தைச் சேர்ந்த இளை​ஞர்​கள் சிலர் எங்​கி​ருந்தோ சவப்​பாடை ஒன்றை தயா​ரித்து எடுத்​துக் கொண்டு தப்​பட்​டை​கள் முழங்க நக​ராட்சி அலு​வ​ல​கத்​துக்கு வந்​து​விட்​ட​னர்.அ​வர்​களை போலீ​ஸôர் பலர் தடுத்து நிறுத்த முன்​றும் முடி​ய​வில்லை. சவப்​பா​டை​யில் நக​ராட்சி அலு​வ​ல​கத்​தின் மாதிரி,​ தெர்​மா​கோல் அட்டை மூலம் செய்​யப்​பட்டு வைக்​கப்​பட்டு இருந்​தது. ​ச​வப்​பா​டை​யைக் கொண்​டு​வர போலீஸ் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்து,​ ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​ய​வர்​க​ளுக்​கும் போலீ​ஸô​ருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.ந​க​ராட்சி அலு​வ​லக வாயி​லுக்கு வந்​த​தும் சவப்​பா​டையை போலீ​ஸôர் பிய்த்து எறிந்​த​னர்.அ ​தைத் தொடர்ந்து ஆர்ப்​பாட்​டம் மீண்​டும் தொடர்ந்​தது. ஆர்ப்​பாட்​டத்​துக்கு இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்க கட​லூர் நக​ரச் செய​லா​ளர் ஆர்.அமர்​நாத் தலைமை தாங்​கி​னார்.ந​கர நிர்​வா​கி​கள் ஆர்.மணி​வண்​ணன்,​ கே.பி.பாலு செந்​தில்​கு​மார்,​ ரஜி​னி​ஆ​னந்த்,​ தென்​ன​சன்,​ கார்த்​தி​கே​யன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர். மாவட்​டச் செய​லா​ளர் ராஜேஷ் கண்​ணன்,​ தலை​வர் எஸ்.அசோ​கன்,​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.

ஆட்​சி​யர் அறி​வுரை

மீன​வர்​கள் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​க​ளு​டன் மீன்​பி​டிக்​கச் செல்​லு​மாறு,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வியா​ழக்​கி​ழமை அறி​வுரை வழங்​கி​னார்.÷24-ம் தேதி கட​லூர் தாழங்​குடா மீன​வர்​கள் 100 பேர் வங்​கக் கட​லில் வழக்​க​மான இடத்​தில் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​போது இந்​தி​யக் கடற்​ப​டை​யி​ன​ரால் தாக்​கப்​பட்​ட​னர். இத​னால் மீனவ மக்​க​ளி​டையே கொந்​த​ழிப்பு ஏற்​பட்​டது. எனவே வியா​ழக்​கி​ழமை மாலை மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​களை அழைத்து மாவட்ட ஆட்​சி​யர் பேசி​னார். பின்​னர் அவர் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ ​÷க​ டற்​படையினர் மீன​வர்​க​ளைத் தாக்​கக்​கூ​டாது என்று மீன​வர்​கள் கேட்​டுக் கொண்​ட​னர். சந்​தே​கப்​பட்​டால் மீன​வர்​க​ளைப் பிடித்து,​ கட​லூர் காவல் துறை​யி​ன​ரி​டம் ஒப்​ப​டைக்​க​லாம் என்​றும் கூறி​னர். கடற்​ப​டை​யி​ன​ரி​டம் இருந்து தங்​க​ளுக்​குப் பாது​காப்பு வேண்​டும் என்​றும் கோரி​னர்.÷இந்​திய இறை​யாண்​மைக்கு அச்​சு​றுத்​தல் ஏற்​பட்டு இருப்​ப​தா​லேயே நாட்டு நலன் கருதி கடற்​ப​டை​யி​னர் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு இருக்​கி​றார்​கள் என்று மீன​வர்​க​ளி​டம் எடுத்​துக் கூறப்​பட்​டது. அவர்​க​ளும் ஏற்​றுக் கொண்​ட​னர். அனைத்து மீன​வர்​க​ளுக்​கும் விரை​வில் அடை​யாள அட்டை வழங்க மீன்​வ​ளத் துறைக்கு உத்​த​ர​வி​டப்​பட்டு இருக்​கி​றது.÷மீ​ன​வர் அடை​யாள அட்டை வழங்​கும் வரை,​ வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​களை மீன​வர்​கள் எடுத்​துச் செல்​லு​மாறு அறி​வு​றுத்​தப்​பட்டு இருக்​கி​றது. மீன​வர்​கள் அச்​ச​மின்றி மீன் பிடிக்​கச் செல்​ல​லாம் என்​றார் ஆட்​சி​யர்.÷கூட் ​டத்​தில் சட்​டப் பேரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன்,​ கட​லூர் நக​ராட்​சித் தலை​வர் து.தங்​க​ராசு,​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ மீன் வளத்​துறை உதவி இயக்​கு​நர் அறி​வு​மதி,​ மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் சுப்​பு​ரா​யன்,​ ஏகாம்​ப​ரம்,​ குப்​பு​ராஜ் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் விடுத்துள்ள அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு இலவசமாக கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் இலவசமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர 1.1.2010 அன்று 20 வயதிற்கு குறையாமலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் உள்ள இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு ஆன பிஎஸ்வி பேட்ஜ் வைத்துள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.19,500 ஆகும். இதனை முழுவதும் அரசே ஏற்கிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி சான்று, சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் இதர வாகன ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் நகல்களுடன், தனி அலுவலர், சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுனர் பயிற்சி பிரிவு, கும்மிடிபூண்டி& 601201, திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 7&12&09க்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

26 ஆயி​ரம் கன அடி தண்​ணீர் வீணா​கக் கட​லில் கலக்​கி​றது

கட​லூர் மாவட்​டத்​தில் பெரும்​பா​லான ஏரி​கள் நிர​மபி விட்​டன. இத​னால் உப​ரி​யான 26 ஆயி​ரம் கன அடி நீர் திறந்து விடப்​பட்டு வீணா​கக் கட​லில் கலந்து கொண்டு இருக்​கி​றது. ​​ ​ வட​கி​ழக்​குப் பரு​வ​மழை தொடங்கி ஒரு வாரத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள பெரும்​பா​லான நீர்​நி​லை​கள் நிரம்பி விட்​டன. மிகப்​பெ​ரிய ஏரி​யான வீரா​ணத்​தின் மொத்த உய​ரம் 47.5 அடி. கொள்​ளி​டம் கீழ​ணை​யில் இருந்து பெறப்​ப​டும் காவிரி நீர் ​ நிறுத்​தப்​பட்டு விட்ட நிலை​யி​லும்,​ பெரம்​ப​லூர் மாவட்​டத்​தில் பெய்த மழை​யால் வீரா​ணம் ஏரிக்கு 1800 கன அடி நீர் வந்து கொண்டு இருக்​கி​றது. இந்த நீர் முழு​வ​தும் வெள்​ளி​யங்​கால் வடி​கால் வாய்க்​கா​லில் 1000 கன அடி வீத​மும்,​ வெள்​ளாற்​றில் 600 கன அடி வீத​மும் கட​லுக்​குத் திறந்து விடப்​பட்டு இருக்​கி​றது. ​​ ​ வட​கி​ழக்கு பருவ மழைக் காலத்​தில் வீரா​ணம் ஏரி​யின் பாது​காப்​பைக் கருதி 43.5 அடிக்கு மேல் நீரைத் தேக்க வேண்​டாம் என்று பொதுப் பணித்​துறை அதி​கா​ரி​கள் அறி​வு​றுத்​தப்​பட்டு உள்​ள​னர். எனி​னும் வீரா​ணம் ஏரி​யின் நீர் மட்​டம் ஞாயிற்​றுக்​கி​ழமை 44 அடி​யாக உயர்ந்​தது. எனவே ஏரிக்கு வரும் நீர் முழு​வ​தும் வெளி​யேற்​றப்​ப​டு​கி​றது. ​​ ​ கொள்​ளி​டம் கீழ​ணைக்கு கல்​ல​ணை​யில் இருந்து பெறப்​ப​டும் காவிரி நீர் முற்​றி​லும் நிறுத்​தப்​பட்டு விட்​டது. எனி​னும் மழை கார​ண​மாக அணைக்கு 7 ஆயி​ரம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்​ப​தா​க​வும்,​ இந்த நீர் முழு​வ​தும் கட​லில் திறந்து விடப்​ப​டு​வ​தா​க​வும் அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர். வட​வா​றில் கலக்​கும் மழை​நீ​ரா​லும்,​ நேரடி பாச​னப் பகு​தி​க​ளில் இருந்து வெளி​யேற்​றப்​ப​டும் நீரா​லும் மண​வாய்க்​கா​லில் ​(வடி​கால்)​ 10 ஆயி​ரம் கன அடி நீர்,​ வெள்​ளி​யங்​கால் வடி​கால் வாய்க்​கால் மூலம் கட​லுக்​குச் சென்று கொண்டு இருப்​ப​தாக,​ கீழணை விவ​சா​யி​கள் சங்​கச் செய​லா​ளர் விநா​ய​மூர்த்தி தெரி​வித்​தார். ​​ ​ வாலாஜா ஏரி,​ பெரு​மாள் ஏரி ஆகி​யவை நிரம்பி விட்​ட​தால் இவற்​றில் இருந்து சுமார் 13 ஆயி​ரம் கன அடி நீர் பர​வ​னாற்​றில் திறந்து விடப்​பட்டு கட​லில் கலந்து கொண்டு இருக்​கி​றது. பெண்​ணை​யாறு,​ கெடி​லம் ஆறு ஆகி​ய​வற்​றில் சுமார் 2 ஆயி​ரம் கன​அடி நீர் எதற்​கும் பயன்​ப​டா​மல் கட​லில் கலந்து கொண்டு இருக்​கி​றது. வெலிங்​டன் ஏரி​யில் கரை சீர​மைப்​புப் பணி​கள் நடப்​ப​தால்,​ ஏரிக்கு வரும் 1400 கன அடி நீர் வெள்​ளாற்​றில் திருப்பி விடப்​பட்டு இருக்​கி​றது. ​​ ​ ​ கொள்​ளி​டம்,​ வெள்​ளாறு,​ பர​வ​னாறு,​ மணி​முத்​தாறு,​ கெடி​லம்,​ பெண்ணை ஆறு ஆகி​ய​வற்​றின் மூல​மாக ​ ​ஆண்​டு​தோ​றும் 100 டி.எம்.சி. நீர் கட​லில் வீணா​கக் கலப்​ப​தாக விவ​சா​யி​கள் தெரி​விக்​கின்​ற​னர். ​​ ​ இது குறித்து அனைத்து விவ​சா​யச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பின் கட​லூர் மாவட்ட அமைப்​புச் செய​லா​ளர் பி.ரவீந்​தி​ரன் கூறு​கை​யில்,​ ஒரு வாரம் பெய்த மழை​யால் நீர்​நி​லை​கள் நிரம்பி 26 ஆயி​ரம் கன அடி நீர் வீணா​கக் கட​லில் கலக்​கி​றது. ஆனால் மழை முடிந்​த​தும் டெல்டா விவ​சா​யி​கள் மீண்​டும் மேட்​டூர் அணை​யின் கத​வைத் தட்ட வேண்டி இருக்​கி​றது.​ ​ ​ வீரா​ணம் ஏரி​யில் இருந்து 600 கன அடி நீர் பாச​னத்​துக்கு திறக்க கெஞ்ச வேண்​டிய பரி​தாப நிலை 15 தினங்​க​ளுக்கு முன் இருந்​தது. ஆனால் இப்​போது வீரா​ணம் ஏரிக்கு வரும் 1800 கன அடி நீரும் கட​லுக்​குத் திறந்து விடப்​ப​டு​வது எத்​தனை சோகம். ஆறு​க​ளில் தடுப்​ப​ணை​கள் கட்ட வேண்​டும் என்​றார். ​​ ​ கொள்​ளி​டம் கீழணை பாசன விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் கே.வி.கண்​ணன் கூறு​கை​யில்,​ விவ​சா​யி​கள் கூறு​வதை அரசு கேட்​பதே இல்லை. காவிரி,​ கொள்​ளி​டத்​தில் கத​வ​ணை​கள் கட்டி,​ பொன்​னேரி,​ வீரா​ணம் ஏரி ஆகி​ய​வற்றை ஆழப்​ப​டுத்​தி​னாலே போதும்,​ கொள்​ளி​டத்​தில் வீணா​கும் நீரை சேமிக்க முடி​யும். அரசு குறு​கி​ய​கால நோக்​கங்​க​ளைக் கைவிட்டு,​ தொலை நோக்​கு​டன் புதிய பாச​னத் திட்​டங்​களை உரு​வாக்க வேண்​டும் என்​றார்.

ஒருநாள் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காத கடலூர் நகரச் சாலைகள்

கடலூரில் ஒருநாள் (புதன்கிழமை இரவு) பெய்த மழையைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் படுமோசமாகக் காட்சி அளிக்கின்றன. கடலூரில் பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் தணியும் வகையில், புதன்கிழமை இரவு 57 மி.மீ. மழை பெய்தது. ஆனால், இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையைத் தவிர்த்து, பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் குண்டும், குழியுமாக உள்ள ஏனைய சாலைகள் அனைத்தும் திடீர் மழையால் உழுதுபோட்ட வயல்போல சகதிக் காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பலர் சாலைகளில் விழுந்து, சகதியில் புரளும் நிலை ஏற்பட்டது. இரு சக்கரவாகன ஓட்டிகளும் சகதியில் வழுக்கி விழுந்து சாக்கடையை உடலில் பூசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மழைக்கு முன்னரே முடிக்குமாறு, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், குறிப்பிடத்தகுந்த அளவில் பணிகள் எதுவும் முடிக்கப்படாதாதால் இத்தகைய நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஒரு நாள் மழையிலேயே இந்நிலை என்றால், பலத்த மழை பெய்யும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து இப்போதே கடலூர் நகர மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, மழைக் காலம் தொடங்கிவிட்டதால், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தற்போது தொடர வாய்ப்பு இல்லை என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காகத் தோண்டப்பட்ட மண் முழுவதும் சாலைகளில் கொட்டப்பட்டு, சாலைகளின் மட்டம் உயர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன் கூறுகையில், சாலைகள் மோசமானதால், சாலைகளின் தடுப்புக் கட்டை மேலும் மதிற்சுவர்களுக்கு மேலும் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றாததால் 50 செ.மீ. வரை சாலைகளின் மட்டம் உயர்ந்து விட்டது. புதிய சாலைகள் அமைக்கும் போது மேலும் 30 செ.மீ. உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சாலைகளில் குவிக்கப்பட்ட மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

100 புத்​த​கங்​களை அறி​மு​கம் செய்த 100 மாண​வர்​கள்

கட​லூர் வாசிப்​போர் இயக்​கம் சார்​பில் சனிக்​கி​ழமை நடந்த நிகழ்ச்​சி​யில்,​ பள்ளி மாணவ மாண​வி​யர் 100 பேர் தங்​க​ளுக்​குப் பிடித்த 100 புத்​த​கங்​களை அறி​மு​கம் செய்​த​னர்.÷மக்​க​ளி​டையே புத்​தங்​க​ளைப் படிக்​கும் பழக்​கத்தை உரு​வாக்​கும் வகை​யில் மாதம்​தோ​றும் பல்​வேறு நிகழ்ச்​சி​களை நடத்தி வரு​கி​றது,​ கட​லூர் வாசிப்​போர் இயக்​கம். இ​தன் ஒரு அம்​ச​மாக பள்ளி மாணவ மாண​வி​ய​ரி​டை​யே​யும் ​ புத்​த​கங்​க​ளைப் படிக்​கும் பழக்​கத்தை உரு​வாக்​கும் விதத்​தில் 100 புத்​த​கங்​களை மாணவ மாண​வி​யர் அறி​மு​கம் செய்​யும் நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்து இருந்​தது. ​÷இந் நிகழ்​ச​சி​யில் கட​லூர் கிருஷ்​ண​சாமி மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்​ளி​யில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயி​லும் மாணவ மாண​வி​யர் 100 பேர் பங்​கேற்​ற​னர். ÷அ​வர்​கள் கலை,​ அறி​வி​யல்,​ சமூ​கம்,​ பொரு​ளா​தா​ரம்,​ தலை​வர்​க​ளின் வாழ்க்கை வர​லாறு உள்​ளிட்ட பல்​வேறு தலைப்​பு​க​ளில் வெளி​வந்​துள்ள 100 புத்​த​கங்​க​ளைத் தேர்வு செய்து,​ அறி​மு​கம் செய்து வைத்​துப் பேசி​னர்.÷இ​தில் 75 மாண​வர்​கள் தமிழ்ப் புத்​த​கங்​க​ளை​யும் 25 மாண​வர்​கள் ஆங்​கி​லப் புத்​த​கங்​க​ளை​யும் தேர்வு செய்து இருந்​த​னர். ​÷நி​கழ்ச்​சிக்கு வாசிப்​போர் இயக்​கத் தலை​வ​ரும் கிருஷ்​ண​சாமி மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்ளி முதல்​வ​ரு​மான ஆர்.நட​ரா​ஜன் தலைமை தாங்​கி​னார். நிகழ்ச்​சியை வாசிப்​போர் இயக்க அமைப்​பா​ளர் கவி​ஞர் பால்கி தொடங்கி வைத்​தார்.க​ட​லூர் நகர அனைத்​துக் குடி​யி​ருப்​போர் நலச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் மு.மரு​த​வா​ணன்,​ காப்​பீட்​டுக் கழக ஊழி​யர் சங்​கச் செய​லா​ளர் சுகு​மா​றன்,​ மாவட்ட செஷன்ஸ் நீதி​மன்ற அரசு வழக்​க​றி​ஞர் சிவ​ராஜ்,​ முன்​னாள் அரசு வழக்​க​றி​ஞர் பி.ஜே.எக்ஸ். வேத​நா​ய​கம்,​ வாசிப்​போர் இயக்க நிóர்​வா​கி​கள் செந்​தில்​கு​மார்,​ திரு​ஞா​னம் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.

2010 செப்டம்பரில் முடிவடையும்

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் 2010 செப்டம்பர் மாதம் முடிவடையும் என்று, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கே.ரகுநாதன் தெரிவித்தார்.


இது தொடர்பாக குடிநீர் வாரிய செயற் பொறியாளர் ரகுநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:


கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் 4 பிரிவுகளாக மேற்கொள்ளப்படுகின்றன. தெருக்களில் ஆள்கள் நுழையும் தொட்டிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட முதல்பிரிவு பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிவடையும்.


தொட்டிகள் இணைப்பு உள்ளிட்ட 2-வது பிரிவு பணிகள் 2010 பிப்ரவரி மாதம் முடிவடையும்.


கழிவு நீரேற்று நிலையங்கள் அமைக்கும் 3-வது பிரிவு பணிகள் நகராட்சி உரிய காலத்தில் நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால், 2010 ஏப்ரல் மாதம் முடிவடையும்.


சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் 4-வது பிரிவுப் பணிகள் 2010 செப்டம்பர் மாதம் முடிவடையும்.


பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக 150 கி.மீ. நீளச் சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.


அதில் 126 கி.மீ. தூரம் முடிக்கப்பட்டு விட்டது. 115 கி.மீ. நீளச் சாலைகள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.


தேசிய நெடுஞ்சாலையில் 7.1 கி.மீ. நீளத்துக்கு பணிகள் நடைபெற வேண்டியது இருக்கிறது.


ரூ. 21 கோடிக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.


சாலைகள் சீரமைப்புக்கு, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 2 கோடி வழங்கி இருக்கிறோம். நகராட்சி மூலம் ரூ. 16.98 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.


வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு செலவிட்டு இருக்கிறோம்.


நகராட்சியிடம் இருந்து ரூ. 10 கோடி நிதி வரவேண்டியது இருக்கிறது என்றார் ரகுநாதன்.


உடனிருந்த கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது:


பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக, ரூ. 10 கோடி நிதி விடுவிக்குமாறு கேட்டு இருக்கிறோம். சாலைகளை சீரமைக்க ரூ. 12 கோடி கடன் கேட்டு இருக்கிறோம்.


பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து ரூ. 15 கோடி வசூலிக்க வேண்டியது இருக்கிறது என்றார் தங்கராசு.


ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


குடிநீர் வாரிய அதிகாரிகள், பணிகளை முடித்து சாலைகளை ஒப்படைத்து விட்டோம் என்றும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிரிகாரிகள் அதற்கு மறுப்பும் தெரிவித்தனர்.

பாதாள சாக்கடைத் திட்டத்தால் அரசுக்கு அவப்பெயர்

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முறையாக நடைபெறாததால், அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டது என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

ரூ. 44 கோடியில் 18 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், 30 மாதங்களுக்கு மேலாகியும் முடிக்கப்படாமல் உள்ளது.

இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். விபத்துகள் அதிகரித்து விட்டன. எனவே பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர், வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது:

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் முடிவு அடையாததால் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நகராட்சிக்கும் அவப்பெயர்.
அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். தனியார் பஸ் தொழிலாளர்கள் இதற்காக போராட்டம் நடத்தவும், நகராட்சித் தலைவர் அவர்களை அழைத்துப் பேசவும் வேண்டிய நிலையும் ஏற்பட்டு விட்டது.
கடந்த 9 மாதங்களில் மட்டும் 115 பேர் சாலை விபத்துகளில் இறக்கக் காரணமான தனியார் பஸ் தொழிலாளர்கள், சாலைகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.
சாலைகள் மோசமாக இருக்கும் போதே 115 பேரைச் சாகடித்தவர்கள், சாலைகள் நன்றாக இருந்தால் மேலும் 115 பேரை சாகடித்து இருப்பார்கள்.
நாமே வம்பை விலைகொடுத்து வாங்கி இருக்கிறோம். எனது வாகனம்கூட இந்தச் சாலைகளில் 10 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்ல முடியவில்லை.
சைக்கிளில் செல்பவர்களின் நிலை மேலும் மோசம். அமைச்சர்கள் உயர்அதிகாரிகள் வரும்போதெல்லாம், பிரச்னையாக இருக்கிறது.
திட்டம், நிதி, கான்டிராக்ட், அனைத்தையும் கொடுத்து இருக்கிறது அரசு. ஆனால் அரசுத் துறைகளிடையே இணக்கம் இல்லாததால், திட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இனி இத்திட்டம் வேகமாகவும் தரமானதாகவும் நடக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் அன்றாடம் எனக்கு அறிக்கை தர வேண்டும். நாளைமுதல் நகராட்சித் தலைவர் வேறு வேலைகளைப் பார்க்க மாட்டார். நகராட்சி சாலைகள், கிராமச் சாலைகளைவிட மோசமாகி விட்டன. இதனால் நகராட்சித் தலைவர், கிராம ஊராட்சித் தலைவராகி விட்டார். நான் ஒருநாள் விட்டு ஒருநாள் இப்பணிகளை ஆய்வு செய்வேன். நகராட்சித் தலைவர் தினமும் ஆய்வு செய்வார். மக்கள் குறைகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும்.மழைக் காலத்துக்கு முன் முக்கியப் பணிகளை முடிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலூர் கோட்டாட்சியர் செயல்படுவார் என்றார் ஆட்சியர். நகராட்சித் தலைவர் து.தங்கராசு, துணைத் தலைவர் தாமரைச் செல்வன் மற்றும் உறுப்பினர்கள் குறைகளைத் தெரிவித்தனர். குடிநீர் வாரிய செயற்பொறியாளர் கே.ரகுநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் நடனசபாபாதி, நகராட்சி ஆணையர் குமார், பொறியாளர் மனோகர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூரில் விஷக் காய்ச்சல்

கடலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஒரு வாரமாக விஷக்காய்ச்சல் பரவி வருகிறது.

ஏற்கெனவே சிப்காட் ரசாயன ஆலைக் கழிவுகளால் கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 கிராமங்கள் காற்றும் நிலமும் மாசுபட்டதாகி விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட கடலூர் சாலைகள் கிராமச் சாலைகளைவிட மோசமாகி, புழுதி மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் இங்கு சுவாசக் கோளாறுகள், சளித்தொல்லை, அதைத் தொடர்ந்து ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்குக் குறைவே இல்லை.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக ஏற்பட்டு இருக்கும் பருவநிலை மாற்றம், நோய்களை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. பகல் பொழுதில் கடும் வெயில், அதிகாலை 3 மணி முதல் பனிப்பொழிவு உள்ளது.

இதனால் கடலூர் நகரிலும் காரைக்காடு செம்மங்குப்பம், சங்கொலிக்குப்பம் கிராமங்களிலும் ஏராளமான மக்கள் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விஷக் காய்ச்சல் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் வியாழக்கிழமை கூறியது: கடலூர் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 3,500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். இது படிப்படியாக உயர்ந்து கடந்த 19-ம் தேதி 5,184-ஐ தொட்டது. வியாழக்கிழமை 5,838 பேர் சிகிச்சைக்கு வந்தனர். மொத்த புறநோயாளிகளில் 2 சதம் பேர் காய்ச்சல் நோய் கண்டவர்களாக இருப்பர். இது தற்போது 5 சதமாக உயர்ந்து இருக்கிறது. எனவே 20-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் அழைத்து தகுந்த அறிவுரை வழங்கி இருக்கிறோம்.

தேவையான மருந்துகள் அனைத்தும் இருப்பில் உள்ளன. ரத்தப் பரிசோதனை செய்ததில் இது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
இது 3 முதல் 5 நாள்கள் வரை நீடிக்கும். தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யாரும் பீதிஅடையத் தேவையில்லை என்றார் ஜெயவீரகுமார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆர்.மீரா இதுபற்றிக் கூறியது:
கடந்த 10 நாள்களாக சங்கொலிக்குப்பம், காரைக்காடு, செம்மங்குப்பம் பகுதி மக்களுக்கு, விஷக் காய்ச்சல் காணப்பட்டது.10 நாள்களாக எங்களது மருத்துவக்குழு அப்பகுதிகளில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறது.
ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. சிக்கன் குனியா போன்ற நோய் எதுவும் இல்லை. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட சாதாரணக் காய்ச்சல்தான். யாரும் பீதி அடையத் தேவையில்லை. இந்தக் காய்ச்சலுக்கு வேறு காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பருவநிலை மாற்றம் இருந்த போதிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இத்தகைய காய்ச்சல் இல்லை என்றார் டாக்டர் மீரா.