கோரிக்கை பதிவு

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலில்

பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கும் வசதி பெட்டிகள் அதிகமாக உள்ளது. ஆனால் இரண் டாம் வகுப்புக்கு உட்காரும் வசதிக்கு முன்பதிவு இல்லாததால் பயணிகள் அவதி அடைகின்றனர்.
சென்னை & திருச்சி இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக சோழன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினசரி காலை சென்னை எழும்பூரில் 8.20க்கு புறப்படும் இந்த ரயில், மாலை 4.35க்கு திருச்சி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்சியில் காலை 9.10க்கு புறப்படும் ரயில் மாலை 5.45க்கு சென் னையை வந்தடைகிறது.
ஆனால் இதன் முன்பதி வால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்புக்கான உட்கார்ந்து செல்லும் சீட்டுகளுக்கு முன்பதிவு இல்லை. அதற்கு மாறாக 10 பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கே முன்பதிவு (பர்த்கோச்) உள்ளது. பொது வாக பகல் நேர ரயில்களில் பெரும்பாலான பயணிகள் தூங்க மாட்டார்கள். ஆனால் இந்த ரயிலில் 10 பெட்டிகள் தூங்கும் வசதியாக இருப்பதால் இந்த பெட்டிகளுக்கான முன்பதிவு, மற்றும் பய ணத்தை யாரும் விரும்பவில்லை.
அதற்கு மாறாக பயணி கள் அதிகம் விரும்பும் இரண்டாம் வகுப்பு உட் காரும் வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட பெட்டிகளை அதிக அளவில் இணைத்தால் பயணிகளுக்கு உதவியாக இருப்பதோடு, ரயில்வே நிர்வாகத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
பயணிகள் அவதி

மாண​வர்​க​ளுக்கு வச​தி​யாக ​ரயில்​களை இயக்​கக் கோரிக்கை

அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பயி​லும் மாண​வர்​க​ளுக்கு வச​தி​யாக பாசஞ்​சர் ரயில்​க​ளின் நேரங்​களை மாற்றி அமைக்க வேண்​டும்,​​ கூடு​தல் ரயில்​களை இயக்க வேண்​டும் என்று,​​ ரயில்வே இலா​கா​வுக்​குத் தென்​னக ரயில்வே பய​ணி​கள் ஆலோ​ச​னைக்​குழு உறுப்​பி​னர் முனை​வர் பி.சிவ​கு​மார் கோரிக்கை விடுத்​துள்​ளார்.​ ​அ​வர் ரயில்வே பொது மேலா​ள​ருக்கு புதன்​கி​ழமை அனுப்​பிய கோரிக்கை மனு:​ ​ ​அ​கல ரயில்​பா​தைத் திட்​டம் நிறை​வேற்​றப்​பட்ட பின்​னர்,​
​ கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யத்​தில் எக்ஸ்​பி​ரஸ் ரயில்​கள் 
நிற்​கா​மல் செல்​வது பய​ணி​களை பெரி​தும் பாதிக்​கி​றது.​ துறை​மு​கம் சந்​திப்பு ரயில் நிலை​யம் சென்று எக்ஸ்​பி​ரஸ் ரயில்​க​ளைப் பிடிப்​பது மக்​க​ளுக்​குச் 
சாத்​தி​ய​மாக இல்லை.​ இத​னால் திருப்​பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யத்​தின் 
வரு​வாய் வெகு​வா​கப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது.​÷50 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக அனைத்து எக்ஸ்​பிஸ் ரயில்​க​ளும் நிற்​கும் ரயில் நிலை​ய​மாக இருந்து 
வந்​துள்​ளது திருப்​பாப்பு​லி​யூர்.​ திரு​வந்​தி​பு​ரம் தேவ​நா​த​சு​வாமி கோயில்,​
​ திருப்​பாப்பு​லி​யூர் பாட​லீஸ்​வ​ரர் கோயில் ஆகி​ய​வற்​றுக்​குச் சென்​று​வ​ரும் ஆயி​ரக்​க​ணக்​கான பக்​தர்​க​ளுக்​கும்,​​ சுற்​று​லாப் பய​ணி​க​ளுக்​கும்,​​ தின​மும் சென்னை செல்​லும் பய​ணி​க​ளுக்​கும்,​​ திருப்​பாப்பு​லி​யூர்,​​ பண்​ருட்டி,​​ தாம்​ப​ரம் ரயில் நிலை​யங்​க​ளில் சோழன் எக்ஸ்​பி​ரஸ் ரயில்​கள் நிற்​கா​தது பெருத்த ஏமாற்​ற​மாக உள்​ளது.​அண்ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக மாண​வர்​கள் மற்​றும் அலு​வ​ல​கங்​க​ளுக்​குச் செல்​வோ​ருக்கு வச​தி​யாக,​​ விழுப்​பு​ரம் மயி​லா​டு​துறை இடையே முன்பு காலை​யில் 2 ரயில்​க​ளும் மாலை​யில் 2 ரயில்​க​ளும் 
இயக்​கப்​பட்​டன.​ தற்​போது காலை,​​ மாலை தலா ஒரு ரயில் மட்​டுமே 
இயக்​கப்​ப​டு​வது மாண​வர்​க​ளுக்​கும் அல​வ​ல​கம் செல்​வோ​ருக்​கும் 
போது​மா​ன​தாக இல்லை.​ ரயில்​க​ளின் இயக்க நேரங்​க​ளும் ஏற்​ற​தாக இல்லை.​ எனவே கூடு​த​லாக இரு பாசஞ்​சர் ரயில்​களை சரி​யான நேரத்​தில் இயக்க வேண்​டும் என்​றும் சிவ​கு​மார் மனு​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

அண்ணாமலைப் பல்கலையில் தமிழர்களக்கு 85% இடங்கள் கேட்டு ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 80 விழுக்காடு இடங்களை ஒதுக்கக் கோரிக்கை விடுத்து, தமிழக மாணவர் முன்னணி சார்பில் நேற்று(31.03.2010) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தே.அரவிந்தன் முன்னிலை வகித்தார். ”அக்னிச் சிறகுகள்” குபேரன் கண்டன உரையாற்றினார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:

அண்மையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடநாட்டு மாணவர் ஒருவர் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, குடித்து விட்டு பைக் ஒட்டி விபத்தில் இறந்து போனார். அதற்கு பதிலடியாக வடநாட்டு மாணவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் நம் மருத்துவமனையின் கண்ணாடிகளை, ஆம்புலன்சு வண்டிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நமக்கு 2 செய்திகளை கூறியிருக்கிறது. ஒன்று, வடநாட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்குப் படிப்பதும், இரண்டாவதாக அவர்கள் ஒருங்கிணைந்த முறையில் இருப்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்த மாணவர்கள் துணை வேந்தரை சந்திக்க முற்பட்ட போது அதற்கு மறுப்புத் தெரிவித்திரிக்கிறார் அவர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தான் துணை வேந்தர் பதவியே. அந்தப் பதிவியில் இருந்து கொண்டு அவர் சந்திக்க மறுத்தது நியாமில்லை. வடநாட்டு மாணவர்களாக இருந்தாலும், தமிழ் மாணவர்களாக இருந்தாலும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கத் தானே அந்தப் பதவி. துணை வேந்தர் இதனை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வடநாட்டு மாணவர்கள் இங்கு படிப்பதோடு அல்லாமல் இங்கு அடாவடித்தனங்களில் ஈடுபடுவதும், வகுப்புகளை ஹிந்தியில் நடத்த வலியுறுத்துவதும், தமிழ் மாணவர்களை கேலி செய்வதும் இங்கு நடக்கிறது. அவர்கள் படித்து முடித்ததும் இங்கெயே தங்கி, வேலை புரிந்து, தங்கள் குடும்பங்களை இங்கேயே குடியமர்த்தி ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்கள்.

இலங்கையில் சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் எப்படி திட்டமிட்டு சிங்களர்களை குடியமர்த்துகிறதோ, அதைப் போல இந்திய அரசு தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குவிவதை விரும்புகிறது. இதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துணை போகக் கூடாது.

இந்நிலை நீடித்தால், நமது மண்ணில் பெரும் எண்ணிக்கையில் அவர்கள் குடியேறி ஆக்கிரமிப்பு செய்வார்கள். எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் பணத்தாசைக்கு ஆட்படாமல் வரும் கல்வியாண்டில் 85 விழுக்காடு இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாங்கள் கேட்பது பீகாரிலோ, உத்திரப்பிரதேசத்திலோ அல்ல.

தமிழ்நாட்டில் செயல்படுகின்ற, தமிழர்களின் வியர்வையிலும் உழைப்பிலும் கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் தான் தமிழர்களுக்கு இடங்களை ஒதுக்குங்கள் என கேட்கிறோம். இது சலுகைப் போராட்டம் அல்ல,  இன உரிமை போராட்டம் என்பதை நாம் உணர வேண்டும். நம் மண்ணை அயலாரிடமிருந்து மீட்க நாம் ஒன்று திரள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இப்போராட்டத்தில் தமிழ் மாணவர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முடிவில், திரு. சௌந்தரராசன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில் இன்று வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் டிசம்பர்-2009 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்டர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச்31-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.  
 வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359  மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர் என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.ஏ.-வரலாறு, சோசியாலஜி, எக்னாமிக்ஸ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், தமிழ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், ஆங்கிலம் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், பங்ஷனல் தமிழ், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் மற்றும் சிவிக் ஸ்டெடிஸ், ஹியுமன் ரைட்ஸ், சோசியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன், பிசினஸ் எக்னாமிக்ஸ், பி.ஏ. மற்றும் பி.எஸ்சி. சைக்காலஜி  பி.எஸ்சி.- கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (டபுள் டிகிரி), ஆப்ரேஷன் ரிசர்ச் (டபுள் டிகிரி), அப்ளைடு கெமிஸ்டரி, எலக்டிரானிக் சயன்ஸ்,  இயற்பியல், தாவரவியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இனபர்மேஷன் டெக்னாலஜி, விஷுவல் கம்யூனிக்கேஷன்ஸ், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், இன்டீரியர் டிசைன், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் டூரிசம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எஸ்., பி.எம்.எம்., பி.மியுசிக்., பி.டான்ஸ்., பி.பி.எல்., பி.சி.ஏ., பி.டிட், பி.எட்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.ஃபில்- இயற்பியல், விலங்கியல், கடல்வாழ் உயிரியல் மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகள், டிப்ளமா படிப்புகள். சான்றிதழ் படிப்புகள்.

தொலைதூரக்கல்வி மைய பாடங்கள் வானொலியில் ஒலிபரப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பயிலும் பல்வேறு துறை மாணவர்களுக்கான பாடங்கள் புதுச்சேரி,​​ சென்னை,​​ திருச்சிராப்பள்ளி,​​ கோயம்புத்தூர் ஆகிய அகில இந்திய வானொலி நிலையங்களில் முதல் அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது.இவ்வாண்டுக்கான பாடங்கள் மே 9-ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது.​ மே 8,9 தேதிகளில் மட்டும் மாலை 5 மணிக்கே இப்பாடங்கள் ஒலிபரப்பாகும்.30 நிமிட கால அளவிலான தமிழ்,​​ ஆங்கிலம்,​​ சமூகவியல்,​​ பொருளாதாரம்,​​ வணிகம்,​​ மக்கள் தொகையியல்,​​ அரசியல் பொது நிர்வாகம்,​​ காவல் நிர்வாகத்துறை மாணவர்களுக்கான இப்பாடங்களின் ஒலிபரப்பை கேட்டு பயன்பெறுங்கள் என புதுச்சேரி வானொலி நிலைய இயக்குநர் கல்யாணி ராமச்சந்திரன் பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பல்கலை. மாணவர்கள் மூவர் சாவு: மாவட்ட வருவாய் அலுவலர் 2-ம் கட்ட பொது விசாரணை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமையில் 2-ம் கட்ட பொது விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல மாணவர் கவுதம்குமார் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி விபத்தில் இறந்ததை அடுத்து பல்கலையில் பயிலும் வடமாநில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு பல்கலைக்கழக கட்டடங்கள், பல்கலை. வேன் மற்றும் ஆட்டோக்களை சேதப்படுத்தினர்.இச்சம்பவத்தின் போது போலீஸôர் மாணவர்களை விரட்டியடித்த போது 3 பொறியியல் புல மாணவர்கள் முத்தையாநகர் அருகே உள்ள பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தனர்.இச்சம்பவம் குறித்து தமிழக அரசு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் மார்ச் 5-ம் தேதி முதல் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தார்.சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் கட்ட பொது விசாரணை நடத்தினார். இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை 2-ம் கட்ட பொது விசாரணையை நடத்தினார்.அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் மற்றும் அருந்ததியினர் சங்கத்தினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் போது தமிழக ஜார்க்கண்ட் முக்தி மோட்சா தலைவர் எம்.ராமச்சந்திரன்a மற்றும் நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.அடுத்த கட்ட பொது விசாரணை மார்ச் 31-ம் தேதி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலை வகுப்புகள் துவங்கின

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில்  விடுமுறைக்குப்பின்  நேற்று  வகுப்புகள் துவங்கின.
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு  மாணவர் கவுதம்குமார் (20) கடந்த  28ம் தேதி மோட்டார் பைக்கில் சென்றபோது லாரி மோதி காய மடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதில் ஆத்திர மடைந்த வெளி மாநில மாணவர்கள், மார்ச் 1ம் தேதி  இரவு ரகளையில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவர்களை தடியடி நடத்தி விரட்டினர். பயந்து ஓடிய மாணவர்கள் முத்தையா நகர் பாலமான் வாய்க்காலில் குதித்து தப்பிக்க முயன்ற போது  சுமித்குமார் (22), முகமது சர்பரேஸ் ராப் (22), ஆஷிஷ் ரஞ்சன் குமார் (20)  ஆகியோர் சேற்றில் மூழ்கி இறந்தார். இதனால் 

பல்கலைக்கழகத்தில் மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க மருத்துவம் தவிர மற்ற பிரிவு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப் பட்டது.
இந்நிலையில் நேற்று 11ம் தேதி  எம்.ஏ., எம்.எஸ்சி,. அனைத்து பாடப் பிரிவுகள்,   பி. எட், எம்.எட், பி.மியுசிக், எம்.மியுசிக், பி.எஸ்சி., விவசாயம் மற்றும் தோட்டக்கலை,. டி.பார்ம், பி.பார்ம், எம்.எஸ்.சி,.  ஐ.டி.,  ச
ப்ட்வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ், பி.இ., எம்.இ., ஆகிய  பாடப்பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு  வகுப்புகள் துவங்கியது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வடநாட்டு மாணவர்களுக்கு அடிபணியக்கூடாது!

வடநாட்டு மாணவர்களின் அடாவடிக்காக கல்லூரியை மூடி, தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்பைப் பாழாக்கக்கூடாது” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது. காலவரம்பின்றி மூடப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகை எண்ணிக்கையில் வடநாட்டு மாணவர்களை சேர்த்து வருகிறது. இது பல்கலைக்கழகத்தின் இன சமநிலையை சீர்குலைத்து தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
வகுப்பறையில் வடநாட்டு மாணவர்கள் ஹிந்தியை வலியுறுத்துவதாலும், ஒருங்கிணைந்த முறையில் அடாவடியில் ஈடுபடுவதாலும் கல்லூரி ஆசிரியர்கள், தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களும் எரிச்சலடைந்துள்ளனர். இவர்களின் அத்துமீறிய செயலால் மூன்று இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை காரணமாகக் கொண்டு கல்லூரியை பல்கலை நிர்வாகம் காலவரையின்றி மூடியிருக்கிறது. இது தேவையற்றது.
வடநாட்டு மாணவர்களுக்கு அடிபணிந்து அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையை பல்கலை நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும். வகுப்புகள் தொடர்ந்து நடத்த வேண்டும். ஒரு சில வடநாட்டு மாணவர்கள் அடாவடிக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பு பாழாக்கப்படுவது முறையற்றது.
வரும் கல்வியாண்டில் 85 விழுக்காடு இடம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது.
இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையினை முழுமையாக படிக்க..

இரு மாணவர்களை காணவில்லை : தீயணைப்பு வீரர்கள் தேடுதல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர் கள் இருவரை காணவில்லை என்ற தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் நேற்றிரவு பாலமான் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன் ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர் கவுதம்குமார் (20) நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் அவர் அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதையறிந்து ஆவேசமடைந்த சகமாணவர்கள் பல்கலை தேர்வுத்துறை அலுவலகம், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, அங்கு நின்றிருந்த வாகனங்களை உடைத்தனர். அவர்களை போலீசார் விரட்டினர்.அதில் மாணவர்கள் பலர் அருகில் உள்ள பாலமான் ஆற்றில் குதித்து தப்பினர். அவர்களில்  இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் சுமித்குமார் (22) இறந்தார். இந்த சம்பவங்களினால் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் விரட்டியதில் ஆற்றில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என்ற தகவல் நேற்று மாலை பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு தீயணைப்பு படையினர் பாலமான் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதனால் பல்கலை பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்: துணைவேந்தர் விளக்கம்

"விபத்தில் காயமடைந்த மாணவருக்கு, அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது; அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்' என துணைவேந்தர் ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விபத்தில் காயமடைந்த கவுதம்குமாருக்கு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், உடல்நிலை மோசமானதால், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவு 12.15 மணிக்கு 400 மாணவர்கள், "மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பேச வேண்டும்' என, எனது பங்களா செக்யூரிட்டியிடம் கேட்டனர். "காலையில் பேசலாம்' என செக்யூரிட்டி கூறியதையடுத்து, சமாதானமாகி சென்று விட்டனர். மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரி சண்முகத்திடம், சிகிச்சை குறித்து சான்று பெற்று, காலையில் மாணவர்களை சந்தித்து பேசலாம் என முடிவெடுத்திருந்தோம். இதற்கிடையே நிர்வாக அலுவலகம் நோக்கி சென்ற மாணவர்கள், தேர்வுத் துறை அலுவலகம் மற்றும் மருத்துவமனை கட்டடத்தின் கண்ணாடிகளையும், வாகனங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை உடைத்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த போலீசார், மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மாணவர் ஒருவர் பாலமான் ஓடையில் விழுந்து இறந்து விட்டதாக, உடலை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார், விசாரித்து வருகின்றனர். விடுதியை தவிர்த்து வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான், வேண்டுமென்றே பிரச்னையை தூண்டி விடுகின்றனர். கடந்த ஆண்டும், இதே போன்று பிரச்னை செய்தனர்; அவர்கள் யார் என கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதியில் அனைத்து மாணவர்களும் தங்குவதற்கு, போதுமான வசதி இல்லை. பெண்கள் அனைவருக்கும் இடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், 60 சதவீத மாணவர்கள் மட்டுமே, தங்கக்கூடிய நிலை உள்ளது. புதிய விடுதி கட்டடம் கட்டப்படுவதால், அடுத்த ஆண்டு முதல், மாணவர்கள் அனைவரும் தங்க வைக்கப்படுவர். வெளியில் தங்கியுள்ள மாணவர்களை கண்காணிக்க, ஒவ்வொரு பகுதியிலும் பகுதி அதிகாரி நியமிக்கப்பட உள்ளனர். மாணவர்கள் தங்கியுள்ள வீட்டு உரிமையாளர்கள் யார், வீடுகள், விடுதிகள் பற்றிய விவரங்கள், எங்கு செல்கின்றனர் என கண்காணிப்படும். இவ்வாறு ராமநாதன் கூறினார்.

ஆற்றில் விழுந்த மற்றொரு மாணவரும் சாவு

சிதம்பரத்தில்,​​ வடமாநில மாணவர் ஒருவர் விபத்தில் இறந்ததை அடுத்து அண்ணாமலை பல்கலை.​ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ​ மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.​ போலீஸôர் அவர்களை விரட்டியடித்த போது ​ ஆற்றில் விழுந்து மற்றொரு வடமாநில மாணவர் இறந்தார்.பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌதம்குமார் ​(20).​ இவர் சிதம்பரம் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள காம்ப்ளக்ஸில் தங்கி பி.இ.​ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர்,​​ இதே மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ்குமாருடன் ​(20) ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றார்.​ சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் மின்கம்பத்தின் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.அப்போது பின்புறம் வந்த லாரி கௌதம்குமார் மீது ஏறியது.இதில் படுகாயமடைந்த கௌதம்குமார்,​​ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.மாணவர் இறந்த தகவலை அடுத்து வடமாநில மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,​​ தேர்வுத்துறை கட்டடம் உள்ளிட்டவற்றின் கண்ணாடிகள்,​​ கம்ப்யூட்டர்,​​ மின்விளக்குகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.மருத்துவமனைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் அங்குள்ள நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அலறியடித்து ஓடினர்.​ பின்னர் துணைவேந்தர் விடுதியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.அப்போது அங்கு வந்த போலீஸôர் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்தனர்.​ அதில் தப்பி ஓடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சுமித்குமார் ​(22),​ பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தார்.இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் மேலும் பதற்றம் உருவானது.​ மாணவர்கள் அதிவேகத் தாக்குதலில் ஆட்டோ,​​ ஆம்புலன்ஸ்,​​ வேன்,​​ முதுநிலை மருத்துவ மாணவர்களின் கார்கள் சேதமடைந்தன.தகவல் அறிந்த டிஐஜி மாசானமுத்து,​​ கடலூர் மாவட்ட எஸ்.பி.​ அஸ்வின் கோட்னீஷ் மற்றும் அதிரடிப்படை போலீஸôர் பல்கலைக்கழக வளாகத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் ரகளையில் ஈடுபட்ட 21 வடமாநில மாணவர்களை பிடித்து விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர்.பின்னர் ஐஜி துரைராஜ்,​​ டிஐஜிக்கள் மாசானமுத்து ​(விழுப்புரம்),​​ ராமசுப்பிரமணியம் ​(காஞ்சிபுரம்)​ ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைநகருக்கு வந்து சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அண்ணாமலை பல்கலையில் நுழைவு தேர்வு: விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மருத் துவம், இன்ஜினியரிங் சேர்க் கைக்கான நுழைவு தேர்வு விண்ணப் பங்கள் விற்பனை துவங்கியது.சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழகத்தில் 2010-11ம் ஆண்டிற்கான பி.இ., பி.எஸ்.சி., (விவசாயம்), பி.எஸ்.சி., (தோட் டக்கலை), எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்,. பி.பி.டி., பி.எஸ்.சி., (நர்சிங்), பி.பார்மசி., போன்ற பட்ட படிப்பு நுழைவுத் தேர்வுக் கான விண்ணப்பங்கள் விற்பனையை துணை வேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.

பி.இ., பி.எஸ்.சி.,( விவசாயம்), பி.எஸ்.சி., (தோட்டக்கலை) போன்ற பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் 400 ரூபாய்க் கும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி.,(நர்சிங் மற்றும் பி.பார்ம்) ஆகியவைகளுக் கான விண்ணப்பம் 300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும், விண் ணப்பங்களை தபால் மூலமாகவோ, நேரிடையாகவோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் இக்கல்வியாண் டில் சேர்ந்து படிக்க நுழைவுத்தேர்வு அவசியம் என்றும், தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த நுழைவு தேர்வை கட்டாயம் எழுதவேண்டும் என்றும் துணைவேந்தர் ராமநாதன் கூறினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1,333 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்: கவர்னர் பர்னாலா 22-ந்தேதி வழங்குகிறார்


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 77-வது பட்டமளிப்பு விழா வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மண்டபத்தில் நடக்கிறது.
விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு 2008-2009-ம் கல்வி ஆண்டில் பட்டம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களையும், பல் வேறு அறக்கட்டளை பரிசு களையும் வழங்குகிறார்.
விழாவில் நேரடியாக 1, 333 மாணவர்களுக்கு பட்டங்களையும், இதில் பல்வேறு பாடங்களில் முதன்மை தேர்ச்சி பெற்ற 145 மாணவ- மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசுகளையும் கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.
இதில் 264 (எம்.பில், 62 பி.எச்டி, 201,டி.எஸ்.சி.1) மாணவர்கள் ஆராய்ச்சி பட்டங்கள் பெறுகிறார்கள்.
நேரடி சேர்க்கை மூலம் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள் 6,114 பேர், தொலைதூர கல்வி இயக்க கம் மூலம் பட்டம் பெறும் மாணவர்கள் 97,413 பேர் உள்பட மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 27 மாணவ- மாணவிகள் பட்டம் பெறுகின்றனர்.
விழாவில் புதுடெல்லி மானியக்குழு துணை தலைவர் பேராசிரியர் வேத் பிரகாஷ், கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி எம்.பி. கலந்து கொள்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் (டாக்டர் ராமநாதன்) ஆண்டறிக்கை வாசிக்கிறார். விழா ஏற்பாடுகளை பல்கலைக் கழக நிர்வாகம் செய்து வருகிறது.
இவ்வாறு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் கூறினார்.
பேட்டியின் போது துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா 21-ந் தேதி மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழக துணைவேந்தர் பங்களா வந்தடைகிறார். இதற்காக பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஹெலிகாப்டர் தளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம், பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.