கடலூரில் தானி (ஆட்டோ) ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம் செய்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலை நிறுத்தம் காரணமாக பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும்.உடல் ஊனமுற்றவர்கள், நோயாளிகள் போன்றவர்களை பஸ்நிலையத்துக்குள் ஆட்டோக்களில் கொண்டுவிட அனுமதிக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோக்களுக்கு அதிக அளவில் பெர்மிட் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோ ரிக்ஷாக்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடலூரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்க வில்லை. வேலைநிறுத்தம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள், உழவர் சந்தை அருகில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு ஆர்பாபட்டம் நடத்தினர். கடலூரில் ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். வாகன வசதி உள்ள பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் சென்றனர். பேருந்துகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதுடன் பலர் பேருந்துகளின் கூரை மீதும் பயணம் செய்தனர்.
கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
மாவீரர்கள் தினம் அனுசரிப்பு
கடலூரில் வெள்ளிக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.வி டுதலைச் சிறுத்கைள் கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் ஈழத்தமிழர் போராட்டத்தில் இறந்தவர்களின் படங்களை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செலாளர் திருமேனி முன்னிலை வகித்தார்.மறைந்த வீரர்களுக்கு நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கட்டுகள்
மாவீரர்கள்,
விடுதலைச் சிறுத்தைகள்
தனியார் ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்ஜிதம் செய்வதாக புகார்
கடலூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய முயன்ற அதிகாரிகளை ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். கட லூர் அருகே சிப்காட் பகுதியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 1,000 ஏக்கர் நிலம் ஏற்கெனவே ஆர்ஜிதம் செய்ப்பட்டு இருக்கிறது. மேற்கொண்டும் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயற்கை எழில் மிகுந்த, மணல் குன்றுகள் நிறைந்த திருச்சோபுரம் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் நில அளவைத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.நிலத்தை அளந்து பல இடங்களில் கொடி நட்டு இருந்தனர். இதற்கு அப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நில அளவைத் துறை அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மக்கள் எதிர்ப்பு காரணமாக நிலஅளவைத்துறை அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டனர்.நிலம் கொடுத்து மறுப்பு தெரிவித்தது குறித்து திருச்சோபுரம் பிரமுகர் பாலு கூறியது: த னியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு திருச்சோபுரம் கிராமத்தில் நிலம் ஆர்ஜிதம் செய்ய நில அளவைத்துறை அதிகாரிகள் முயன்றனர்.திருச்சோபுரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு வழங்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.இந்த நிலத்தில் சுமார் 10 ஏக்கரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகட்டி வசிக்கின்றனர். நாங்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என்று தெரிவித்து விட்டோம். வீடுகள் கட்டி இருக்கும் 10 ஏக்கர் உள்ளிட்ட 30 ஏக்கர் கோயில் நிலத்தையும் தொழிற்சாலைக்கு ஆர்ஜிதம் செய்து கொடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. கோயில் நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் எப்படி வழங்க முடியும்? என்றார் பாலு.
கட்டுகள்
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை,
சிப்காட்
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சவப்பாடை ஊர்வலம்
கடலூரில் பழுதடைந்து கிடக்கும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், வெள்ளிக்கிழமை சவப்பாடை ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ரூ. 44 கோடியில் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் 18 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். ஆனால் 30 மாதங்களுக்கு மேல் ஆகியும் முடிவடைய வில்லை.60 சதம் பணிகள்கூட நிறைவடைய வில்லை. இத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் வாகனப் போக்குவரத்து பெரிதும் சிரமமாக இருக்கிறது. சாலைகள் குண்டும் குழியுமாக மாறி நடந்து செல்வதற்கும் லாயக்கற்றதாக மாறிவிட்டது. இதனால் விபத்துகள் ஏற்படாத நாளே இல்லை. எனவே பாதாளச் சாக்கடைத் திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத கடலூர் நகராட்சியைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை சவப்பாடை ஊர்வலமும் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும் அறிவித்து இருந்தனர். சவப்பாடை ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர், நகராட்சி அலுவலகம் முன் ஆர்பாபட்டம் நடத்தினர்.அதே நேர்த்தில் யாரும் எதிர்பாராத விதமாக, ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் எங்கிருந்தோ சவப்பாடை ஒன்றை தயாரித்து எடுத்துக் கொண்டு தப்பட்டைகள் முழங்க நகராட்சி அலுவலகத்துக்கு வந்துவிட்டனர்.அவர்களை போலீஸôர் பலர் தடுத்து நிறுத்த முன்றும் முடியவில்லை. சவப்பாடையில் நகராட்சி அலுவலகத்தின் மாதிரி, தெர்மாகோல் அட்டை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. சவப்பாடையைக் கொண்டுவர போலீஸ் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.நகராட்சி அலுவலக வாயிலுக்கு வந்ததும் சவப்பாடையை போலீஸôர் பிய்த்து எறிந்தனர்.அ தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மீண்டும் தொடர்ந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கடலூர் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார்.நகர நிர்வாகிகள் ஆர்.மணிவண்ணன், கே.பி.பாலு செந்தில்குமார், ரஜினிஆனந்த், தென்னசன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணன், தலைவர் எஸ்.அசோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் சுப்புராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கட்டுகள்
கடலூர் நகராட்சி,
பாதாளச் சாக்கடை
ஆட்சியர் அறிவுரை
மீனவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் மீன்பிடிக்கச் செல்லுமாறு, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வியாழக்கிழமை அறிவுரை வழங்கினார்.÷24-ம் தேதி கடலூர் தாழங்குடா மீனவர்கள் 100 பேர் வங்கக் கடலில் வழக்கமான இடத்தில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது இந்தியக் கடற்படையினரால் தாக்கப்பட்டனர். இதனால் மீனவ மக்களிடையே கொந்தழிப்பு ஏற்பட்டது. எனவே வியாழக்கிழமை மாலை மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ÷க டற்படையினர் மீனவர்களைத் தாக்கக்கூடாது என்று மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். சந்தேகப்பட்டால் மீனவர்களைப் பிடித்து, கடலூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கலாம் என்றும் கூறினர். கடற்படையினரிடம் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரினர்.÷இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாலேயே நாட்டு நலன் கருதி கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று மீனவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அவர்களும் ஏற்றுக் கொண்டனர். அனைத்து மீனவர்களுக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்க மீன்வளத் துறைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.÷மீனவர் அடையாள அட்டை வழங்கும் வரை, வாக்காளர் அடையாள அட்டைகளை மீனவர்கள் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கச் செல்லலாம் என்றார் ஆட்சியர்.÷கூட் டத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மீன் வளத்துறை உதவி இயக்குநர் அறிவுமதி, மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுப்புராயன், ஏகாம்பரம், குப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு
கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் விடுத்துள்ள அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு இலவசமாக கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் இலவசமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர 1.1.2010 அன்று 20 வயதிற்கு குறையாமலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் உள்ள இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு ஆன பிஎஸ்வி பேட்ஜ் வைத்துள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.19,500 ஆகும். இதனை முழுவதும் அரசே ஏற்கிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி சான்று, சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் இதர வாகன ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் நகல்களுடன், தனி அலுவலர், சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுனர் பயிற்சி பிரிவு, கும்மிடிபூண்டி& 601201, திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 7&12&09க்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
26 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது
கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரமபி விட்டன. இதனால் உபரியான 26 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வீணாகக் கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு வாரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மிகப்பெரிய ஏரியான வீராணத்தின் மொத்த உயரம் 47.5 அடி. கொள்ளிடம் கீழணையில் இருந்து பெறப்படும் காவிரி நீர் நிறுத்தப்பட்டு விட்ட நிலையிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் வீராணம் ஏரிக்கு 1800 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நீர் முழுவதும் வெள்ளியங்கால் வடிகால் வாய்க்காலில் 1000 கன அடி வீதமும், வெள்ளாற்றில் 600 கன அடி வீதமும் கடலுக்குத் திறந்து விடப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் வீராணம் ஏரியின் பாதுகாப்பைக் கருதி 43.5 அடிக்கு மேல் நீரைத் தேக்க வேண்டாம் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எனினும் வீராணம் ஏரியின் நீர் மட்டம் ஞாயிற்றுக்கிழமை 44 அடியாக உயர்ந்தது. எனவே ஏரிக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. கொள்ளிடம் கீழணைக்கு கல்லணையில் இருந்து பெறப்படும் காவிரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. எனினும் மழை காரணமாக அணைக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதாகவும், இந்த நீர் முழுவதும் கடலில் திறந்து விடப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வடவாறில் கலக்கும் மழைநீராலும், நேரடி பாசனப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீராலும் மணவாய்க்காலில் (வடிகால்) 10 ஆயிரம் கன அடி நீர், வெள்ளியங்கால் வடிகால் வாய்க்கால் மூலம் கடலுக்குச் சென்று கொண்டு இருப்பதாக, கீழணை விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயமூர்த்தி தெரிவித்தார். வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை நிரம்பி விட்டதால் இவற்றில் இருந்து சுமார் 13 ஆயிரம் கன அடி நீர் பரவனாற்றில் திறந்து விடப்பட்டு கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. பெண்ணையாறு, கெடிலம் ஆறு ஆகியவற்றில் சுமார் 2 ஆயிரம் கனஅடி நீர் எதற்கும் பயன்படாமல் கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. வெலிங்டன் ஏரியில் கரை சீரமைப்புப் பணிகள் நடப்பதால், ஏரிக்கு வரும் 1400 கன அடி நீர் வெள்ளாற்றில் திருப்பி விடப்பட்டு இருக்கிறது. கொள்ளிடம், வெள்ளாறு, பரவனாறு, மணிமுத்தாறு, கெடிலம், பெண்ணை ஆறு ஆகியவற்றின் மூலமாக ஆண்டுதோறும் 100 டி.எம்.சி. நீர் கடலில் வீணாகக் கலப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில், ஒரு வாரம் பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி 26 ஆயிரம் கன அடி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால் மழை முடிந்ததும் டெல்டா விவசாயிகள் மீண்டும் மேட்டூர் அணையின் கதவைத் தட்ட வேண்டி இருக்கிறது. வீராணம் ஏரியில் இருந்து 600 கன அடி நீர் பாசனத்துக்கு திறக்க கெஞ்ச வேண்டிய பரிதாப நிலை 15 தினங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்போது வீராணம் ஏரிக்கு வரும் 1800 கன அடி நீரும் கடலுக்குத் திறந்து விடப்படுவது எத்தனை சோகம். ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார். கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.கண்ணன் கூறுகையில், விவசாயிகள் கூறுவதை அரசு கேட்பதே இல்லை. காவிரி, கொள்ளிடத்தில் கதவணைகள் கட்டி, பொன்னேரி, வீராணம் ஏரி ஆகியவற்றை ஆழப்படுத்தினாலே போதும், கொள்ளிடத்தில் வீணாகும் நீரை சேமிக்க முடியும். அரசு குறுகியகால நோக்கங்களைக் கைவிட்டு, தொலை நோக்குடன் புதிய பாசனத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
கட்டுகள்
பருவமழை
ஒருநாள் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காத கடலூர் நகரச் சாலைகள்
கடலூரில் ஒருநாள் (புதன்கிழமை இரவு) பெய்த மழையைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் படுமோசமாகக் காட்சி அளிக்கின்றன. கடலூரில் பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் தணியும் வகையில், புதன்கிழமை இரவு 57 மி.மீ. மழை பெய்தது. ஆனால், இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையைத் தவிர்த்து, பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் குண்டும், குழியுமாக உள்ள ஏனைய சாலைகள் அனைத்தும் திடீர் மழையால் உழுதுபோட்ட வயல்போல சகதிக் காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பலர் சாலைகளில் விழுந்து, சகதியில் புரளும் நிலை ஏற்பட்டது. இரு சக்கரவாகன ஓட்டிகளும் சகதியில் வழுக்கி விழுந்து சாக்கடையை உடலில் பூசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மழைக்கு முன்னரே முடிக்குமாறு, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், குறிப்பிடத்தகுந்த அளவில் பணிகள் எதுவும் முடிக்கப்படாதாதால் இத்தகைய நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஒரு நாள் மழையிலேயே இந்நிலை என்றால், பலத்த மழை பெய்யும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து இப்போதே கடலூர் நகர மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, மழைக் காலம் தொடங்கிவிட்டதால், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தற்போது தொடர வாய்ப்பு இல்லை என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காகத் தோண்டப்பட்ட மண் முழுவதும் சாலைகளில் கொட்டப்பட்டு, சாலைகளின் மட்டம் உயர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன் கூறுகையில், சாலைகள் மோசமானதால், சாலைகளின் தடுப்புக் கட்டை மேலும் மதிற்சுவர்களுக்கு மேலும் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றாததால் 50 செ.மீ. வரை சாலைகளின் மட்டம் உயர்ந்து விட்டது. புதிய சாலைகள் அமைக்கும் போது மேலும் 30 செ.மீ. உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சாலைகளில் குவிக்கப்பட்ட மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.
கட்டுகள்
மழை
100 புத்தகங்களை அறிமுகம் செய்த 100 மாணவர்கள்
கடலூர் வாசிப்போர் இயக்கம் சார்பில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவியர் 100 பேர் தங்களுக்குப் பிடித்த 100 புத்தகங்களை அறிமுகம் செய்தனர்.÷மக்களிடையே புத்தங்களைப் படிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில் மாதம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது, கடலூர் வாசிப்போர் இயக்கம். இதன் ஒரு அம்சமாக பள்ளி மாணவ மாணவியரிடையேயும் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை உருவாக்கும் விதத்தில் 100 புத்தகங்களை மாணவ மாணவியர் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. ÷இந் நிகழ்சசியில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர் 100 பேர் பங்கேற்றனர். ÷அவர்கள் கலை, அறிவியல், சமூகம், பொருளாதாரம், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வெளிவந்துள்ள 100 புத்தகங்களைத் தேர்வு செய்து, அறிமுகம் செய்து வைத்துப் பேசினர்.÷இதில் 75 மாணவர்கள் தமிழ்ப் புத்தகங்களையும் 25 மாணவர்கள் ஆங்கிலப் புத்தகங்களையும் தேர்வு செய்து இருந்தனர். ÷நிகழ்ச்சிக்கு வாசிப்போர் இயக்கத் தலைவரும் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வருமான ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை வாசிப்போர் இயக்க அமைப்பாளர் கவிஞர் பால்கி தொடங்கி வைத்தார்.கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கச் செயலாளர் சுகுமாறன், மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சிவராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் பி.ஜே.எக்ஸ். வேதநாயகம், வாசிப்போர் இயக்க நிóர்வாகிகள் செந்தில்குமார், திருஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கட்டுகள்
பள்ளி,
வாசிப்போர் இயக்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)