கோரிக்கை பதிவு

தானி(ஆட்டோ ) ஓட்​டு​நர்​கள் வேலை நிறுத்தம்

கட​லூ​ரில் தானி (ஆட்டோ) ஓட்​டு​நர்​கள் வெள்​ளிக்​கி​ழமை வேலை நிறுத்​தம் செய்​த​னர். கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். வேலை நிறுத்​தம் கார​ண​மாக பள்ளி மாண​வர்​கள் பெரி​தும் பாதிக்​கப் பட்​ட​னர். ​ந​க​ரில் பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டப் பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும்,​ திருப்​பாப்பு​லி​யூர் பஸ் நிலை​யத்​தில் ஆட்​டோக்​கள் நிறுத்த அனு​ம​திக்க வேண்​டும்.உ​டல் ஊன​முற்​ற​வர்​கள்,​ நோயா​ளி​கள் போன்​ற​வர்​களை பஸ்​நி​லை​யத்​துக்​குள் ஆட்​டோக்​க​ளில் கொண்​டு​விட அனு​ம​திக்க வேண்​டும். வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​ல​கத்​தில் ஆட்​டோக்​க​ளுக்கு அதிக அள​வில் பெர்​மிட் கொடுப்​பதை நிறுத்த வேண்​டும் என்ற கோரிக்​கைளை வலி​யு​றுத்தி வெள்​ளிக்​கி​ழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோ ரிக்​ஷாக்​கள் வேலை​நி​றுத்​தம் அறி​விக்​கப்​பட்டு இருந்​தது. ​இ​த​னால் கட​லூ​ரில் 2 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட ஆட்​டோக்​கள் இயங்க வில்லை. வேலை​நி​றுத்​தம் செய்த ஆட்டோ ஓட்​டு​நர்​கள்,​ உழ​வர் சந்தை அரு​கில் இருந்து ஊர்​வ​ல​மா​கப் புறப்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்தை அடைந்​த​னர். அங்கு ஆர்​பா​பட்​டம் நடத்​தி​னர். ​க​ட​லூ​ரில் ஆட்​டோக்​கள் ஓடா​த​தால் பள்​ளி​க​ளுக்​குச் செல்​லும் மாண​வர்​கள் பெரி​தும் அவ​திப்​பட்​ட​னர். வாகன வசதி உள்ள பெற்​றோர் பலர் தங்​கள் குழந்​தை​களை இரு சக்​கர வாக​னங்​க​ளில் அழைத்​துச் சென்​ற​னர். பேருந்துக​ளில் கூட்​டம் அதி​க​மா​கக் காணப்​பட்டதுடன் பலர் பேருந்துக​ளின் கூரை மீதும் பய​ணம் செய்​த​னர்.

மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிப்பு

கட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிக்​கப்​பட்​டது.வி ​டு​த​லைச் சிறுத்​கைள் கட்சி அலு​வ​ல​கத்​தில் நடந்த இந்த நிகழ்ச்​சி​யில் இலங்​கை​யில் ஈழத்​த​மி​ழர் போராட்​டத்​தில் இறந்​த​வர்​க​ளின் படங்​களை வைத்து மெழு​கு​வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்​தி​னர். ​நி​கழ்ச்​சிக்கு,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்ட துணைச் செய​லா​ளர் அறி​வு​டை​நம்பி தலைமை வகித்​தார். மாவட்​டத் துணைச் செலா​ளர் திரு​மேனி முன்​னிலை வகித்​தார்.ம​றைந்த வீரர்​க​ளுக்கு நக​ராட்சி துணைத் தலை​வர் தாம​ரைச் செல்​வன்,​ மெழு​கு​வர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்​தி​னார்.

தனி​யார் ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்​வ​தாக புகார்

கட​லூர் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்ய முயன்ற அதி​கா​ரி​களை ஊர் பொது​மக்​கள் தடுத்து நிறுத்​தி​னர். ​ ​க​ட​ லூர் அருகே சிப்​காட் பகு​தி​யில் தனி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலை தொடங்​கப்​பட இருக்​கி​றது. இதற்​காக சுமார் 1,000 ஏக்​கர் நிலம் ஏற்​கெ​னவே ஆர்​ஜி​தம் செய்ப்​பட்டு இருக்​கி​றது. மேற்​கொண்​டும் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்டு வரு​கி​றது. ​இந்​நி​லை​யில் இயற்கை எழில் மிகுந்த,​ மணல் குன்​று​கள் நிறைந்த திருச்​சோ​பு​ரம் பகு​தி​யில் நிலம் கைய​கப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் வெள்​ளிக்​கி​ழமை ஈடு​பட்​ட​னர்.நி​லத்தை அளந்து பல இடங்​க​ளில் கொடி நட்டு இருந்​த​னர். இதற்கு அப் பகு​தி​யில் வசிக்​கும் மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். இத​னால் நில அள​வைத் துறை அலு​வ​லர்​க​ளுக்​கும் பொது​மக்​க​ளுக்​கும் இடையே கடும் வாக்​கு​வா​த​மும் தள்​ளு​முள்​ளும் ஏற்​பட்​டது. ​மக்​கள் எதிர்ப்பு கார​ண​மாக நில​அ​ள​வைத்​துறை அதி​கா​ரி​கள் அங்​கி​ருந்து திரும்​பிச் சென்று விட்​ட​னர்.நி​லம் கொடுத்து மறுப்பு தெரி​வித்​தது குறித்து திருச்​சோ​பு​ரம் பிர​மு​கர் பாலு கூறி​யது:​ ​த ​னி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு திருச்​சோ​பு​ரம் கிரா​மத்​தில் நிலம் ஆர்​ஜி​தம் செய்ய நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் முயன்​ற​னர்.தி​ருச்​சோ​பு​ர​நா​தர் கோயி​லுக்​குச் சொந்​த​மான 30 ஏக்​கர் நிலத்தை அதி​கா​ரி​கள் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு வழங்​கும் முயற்​சி​யில் இறங்கி உள்​ள​னர்.இந்த நிலத்​தில் சுமார் 10 ஏக்​க​ரில் 200-க்கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் வீடு​கட்டி வசிக்​கின்​ற​னர். நாங்​கள் வீடு​களை காலி செய்ய மாட்​டோம் என்று தெரி​வித்து விட்​டோம். ​வீ​டு​கள் கட்டி இருக்​கும் 10 ஏக்​கர் உள்​ளிட்ட 30 ஏக்​கர் கோயில் நிலத்​தை​யும் தொழிற்​சா​லைக்கு ஆர்​ஜி​தம் செய்து கொடுக்​கும் முயற்​சி​யில் அதி​கா​ரி​கள் ஈடு​பட்டு இருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. கோயில் நிலத்தை தனி​யார் நிறு​வ​னத்​துக்கு அதி​கா​ரி​கள் எப்​படி வழங்க முடி​யும்?​ என்​றார் பாலு.

ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் சவப்​பாடை ஊர்​வ​லம்

கட​லூ​ரில் பழு​த​டைந்து கிடக்​கும் சாலை​களை சீர​மைக்க வலி​யு​றுத்தி இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும்,​ ஆர்ப்​பாட்​ட​மும் நடத்​தி​னர். ​ரூ. 44 கோடி​யில் தொடங்​கப்​பட்ட பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டம் 18 மாதங்​க​ளில் முடிக்​கப்​பட வேண்​டும். ஆனால் 30 மாதங்​க​ளுக்கு மேல் ஆகி​யும் முடி​வ​டைய வில்லை.60 சதம் பணி​கள்​கூட நிறை​வ​டைய வில்லை. இத் திட்​டத்​துக்​காக தோண்​டப்​பட்ட பள்​ளங்​க​ளால் வாக​னப் போக்​கு​வ​ரத்து பெரி​தும் சிர​ம​மாக இருக்​கி​றது. சாலை​கள் குண்​டும் குழி​யு​மாக மாறி நடந்து செல்​வ​தற்​கும் லாயக்​கற்​ற​தாக மாறி​விட்​டது. இத​னால் விபத்​து​கள் ஏற்​ப​டாத நாளே இல்லை. ​எ​னவே பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டத்தை துரி​த​மாக நிறை​வேற்ற நட​வ​டிக்கை எடுக்​காத கட​லூர் நக​ராட்​சி​யைக் கண்​டித்து இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும் நக​ராட்சி அலு​வ​ல​கம் முன் ஆர்ப்​பாட்​ட​மும் அறி​வித்து இருந்​த​னர். ச​வப்​பாடை ஊர்​வ​லத்​துக்கு போலீஸ் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. ​ ​ எனவே கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ நக​ராட்சி அலு​வ​ல​கம் முன் ஆர்​பா​பட்​டம் நடத்​தி​னர்.அதே நேர்த்​தில் யாரும் எதிர்​பா​ராத வித​மாக,​ ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தைச் சேர்ந்த இளை​ஞர்​கள் சிலர் எங்​கி​ருந்தோ சவப்​பாடை ஒன்றை தயா​ரித்து எடுத்​துக் கொண்டு தப்​பட்​டை​கள் முழங்க நக​ராட்சி அலு​வ​ல​கத்​துக்கு வந்​து​விட்​ட​னர்.அ​வர்​களை போலீ​ஸôர் பலர் தடுத்து நிறுத்த முன்​றும் முடி​ய​வில்லை. சவப்​பா​டை​யில் நக​ராட்சி அலு​வ​ல​கத்​தின் மாதிரி,​ தெர்​மா​கோல் அட்டை மூலம் செய்​யப்​பட்டு வைக்​கப்​பட்டு இருந்​தது. ​ச​வப்​பா​டை​யைக் கொண்​டு​வர போலீஸ் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்து,​ ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​ய​வர்​க​ளுக்​கும் போலீ​ஸô​ருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.ந​க​ராட்சி அலு​வ​லக வாயி​லுக்கு வந்​த​தும் சவப்​பா​டையை போலீ​ஸôர் பிய்த்து எறிந்​த​னர்.அ ​தைத் தொடர்ந்து ஆர்ப்​பாட்​டம் மீண்​டும் தொடர்ந்​தது. ஆர்ப்​பாட்​டத்​துக்கு இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்க கட​லூர் நக​ரச் செய​லா​ளர் ஆர்.அமர்​நாத் தலைமை தாங்​கி​னார்.ந​கர நிர்​வா​கி​கள் ஆர்.மணி​வண்​ணன்,​ கே.பி.பாலு செந்​தில்​கு​மார்,​ ரஜி​னி​ஆ​னந்த்,​ தென்​ன​சன்,​ கார்த்​தி​கே​யன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர். மாவட்​டச் செய​லா​ளர் ராஜேஷ் கண்​ணன்,​ தலை​வர் எஸ்.அசோ​கன்,​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.

ஆட்​சி​யர் அறி​வுரை

மீன​வர்​கள் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​க​ளு​டன் மீன்​பி​டிக்​கச் செல்​லு​மாறு,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வியா​ழக்​கி​ழமை அறி​வுரை வழங்​கி​னார்.÷24-ம் தேதி கட​லூர் தாழங்​குடா மீன​வர்​கள் 100 பேர் வங்​கக் கட​லில் வழக்​க​மான இடத்​தில் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​போது இந்​தி​யக் கடற்​ப​டை​யி​ன​ரால் தாக்​கப்​பட்​ட​னர். இத​னால் மீனவ மக்​க​ளி​டையே கொந்​த​ழிப்பு ஏற்​பட்​டது. எனவே வியா​ழக்​கி​ழமை மாலை மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​களை அழைத்து மாவட்ட ஆட்​சி​யர் பேசி​னார். பின்​னர் அவர் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ ​÷க​ டற்​படையினர் மீன​வர்​க​ளைத் தாக்​கக்​கூ​டாது என்று மீன​வர்​கள் கேட்​டுக் கொண்​ட​னர். சந்​தே​கப்​பட்​டால் மீன​வர்​க​ளைப் பிடித்து,​ கட​லூர் காவல் துறை​யி​ன​ரி​டம் ஒப்​ப​டைக்​க​லாம் என்​றும் கூறி​னர். கடற்​ப​டை​யி​ன​ரி​டம் இருந்து தங்​க​ளுக்​குப் பாது​காப்பு வேண்​டும் என்​றும் கோரி​னர்.÷இந்​திய இறை​யாண்​மைக்கு அச்​சு​றுத்​தல் ஏற்​பட்டு இருப்​ப​தா​லேயே நாட்டு நலன் கருதி கடற்​ப​டை​யி​னர் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு இருக்​கி​றார்​கள் என்று மீன​வர்​க​ளி​டம் எடுத்​துக் கூறப்​பட்​டது. அவர்​க​ளும் ஏற்​றுக் கொண்​ட​னர். அனைத்து மீன​வர்​க​ளுக்​கும் விரை​வில் அடை​யாள அட்டை வழங்க மீன்​வ​ளத் துறைக்கு உத்​த​ர​வி​டப்​பட்டு இருக்​கி​றது.÷மீ​ன​வர் அடை​யாள அட்டை வழங்​கும் வரை,​ வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​களை மீன​வர்​கள் எடுத்​துச் செல்​லு​மாறு அறி​வு​றுத்​தப்​பட்டு இருக்​கி​றது. மீன​வர்​கள் அச்​ச​மின்றி மீன் பிடிக்​கச் செல்​ல​லாம் என்​றார் ஆட்​சி​யர்.÷கூட் ​டத்​தில் சட்​டப் பேரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன்,​ கட​லூர் நக​ராட்​சித் தலை​வர் து.தங்​க​ராசு,​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ மீன் வளத்​துறை உதவி இயக்​கு​நர் அறி​வு​மதி,​ மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் சுப்​பு​ரா​யன்,​ ஏகாம்​ப​ரம்,​ குப்​பு​ராஜ் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் விடுத்துள்ள அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு இலவசமாக கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் இலவசமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர 1.1.2010 அன்று 20 வயதிற்கு குறையாமலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் உள்ள இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு ஆன பிஎஸ்வி பேட்ஜ் வைத்துள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.19,500 ஆகும். இதனை முழுவதும் அரசே ஏற்கிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி சான்று, சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் இதர வாகன ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் நகல்களுடன், தனி அலுவலர், சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுனர் பயிற்சி பிரிவு, கும்மிடிபூண்டி& 601201, திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 7&12&09க்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

26 ஆயி​ரம் கன அடி தண்​ணீர் வீணா​கக் கட​லில் கலக்​கி​றது

கட​லூர் மாவட்​டத்​தில் பெரும்​பா​லான ஏரி​கள் நிர​மபி விட்​டன. இத​னால் உப​ரி​யான 26 ஆயி​ரம் கன அடி நீர் திறந்து விடப்​பட்டு வீணா​கக் கட​லில் கலந்து கொண்டு இருக்​கி​றது. ​​ ​ வட​கி​ழக்​குப் பரு​வ​மழை தொடங்கி ஒரு வாரத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள பெரும்​பா​லான நீர்​நி​லை​கள் நிரம்பி விட்​டன. மிகப்​பெ​ரிய ஏரி​யான வீரா​ணத்​தின் மொத்த உய​ரம் 47.5 அடி. கொள்​ளி​டம் கீழ​ணை​யில் இருந்து பெறப்​ப​டும் காவிரி நீர் ​ நிறுத்​தப்​பட்டு விட்ட நிலை​யி​லும்,​ பெரம்​ப​லூர் மாவட்​டத்​தில் பெய்த மழை​யால் வீரா​ணம் ஏரிக்கு 1800 கன அடி நீர் வந்து கொண்டு இருக்​கி​றது. இந்த நீர் முழு​வ​தும் வெள்​ளி​யங்​கால் வடி​கால் வாய்க்​கா​லில் 1000 கன அடி வீத​மும்,​ வெள்​ளாற்​றில் 600 கன அடி வீத​மும் கட​லுக்​குத் திறந்து விடப்​பட்டு இருக்​கி​றது. ​​ ​ வட​கி​ழக்கு பருவ மழைக் காலத்​தில் வீரா​ணம் ஏரி​யின் பாது​காப்​பைக் கருதி 43.5 அடிக்கு மேல் நீரைத் தேக்க வேண்​டாம் என்று பொதுப் பணித்​துறை அதி​கா​ரி​கள் அறி​வு​றுத்​தப்​பட்டு உள்​ள​னர். எனி​னும் வீரா​ணம் ஏரி​யின் நீர் மட்​டம் ஞாயிற்​றுக்​கி​ழமை 44 அடி​யாக உயர்ந்​தது. எனவே ஏரிக்கு வரும் நீர் முழு​வ​தும் வெளி​யேற்​றப்​ப​டு​கி​றது. ​​ ​ கொள்​ளி​டம் கீழ​ணைக்கு கல்​ல​ணை​யில் இருந்து பெறப்​ப​டும் காவிரி நீர் முற்​றி​லும் நிறுத்​தப்​பட்டு விட்​டது. எனி​னும் மழை கார​ண​மாக அணைக்கு 7 ஆயி​ரம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்​ப​தா​க​வும்,​ இந்த நீர் முழு​வ​தும் கட​லில் திறந்து விடப்​ப​டு​வ​தா​க​வும் அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர். வட​வா​றில் கலக்​கும் மழை​நீ​ரா​லும்,​ நேரடி பாச​னப் பகு​தி​க​ளில் இருந்து வெளி​யேற்​றப்​ப​டும் நீரா​லும் மண​வாய்க்​கா​லில் ​(வடி​கால்)​ 10 ஆயி​ரம் கன அடி நீர்,​ வெள்​ளி​யங்​கால் வடி​கால் வாய்க்​கால் மூலம் கட​லுக்​குச் சென்று கொண்டு இருப்​ப​தாக,​ கீழணை விவ​சா​யி​கள் சங்​கச் செய​லா​ளர் விநா​ய​மூர்த்தி தெரி​வித்​தார். ​​ ​ வாலாஜா ஏரி,​ பெரு​மாள் ஏரி ஆகி​யவை நிரம்பி விட்​ட​தால் இவற்​றில் இருந்து சுமார் 13 ஆயி​ரம் கன அடி நீர் பர​வ​னாற்​றில் திறந்து விடப்​பட்டு கட​லில் கலந்து கொண்டு இருக்​கி​றது. பெண்​ணை​யாறு,​ கெடி​லம் ஆறு ஆகி​ய​வற்​றில் சுமார் 2 ஆயி​ரம் கன​அடி நீர் எதற்​கும் பயன்​ப​டா​மல் கட​லில் கலந்து கொண்டு இருக்​கி​றது. வெலிங்​டன் ஏரி​யில் கரை சீர​மைப்​புப் பணி​கள் நடப்​ப​தால்,​ ஏரிக்கு வரும் 1400 கன அடி நீர் வெள்​ளாற்​றில் திருப்பி விடப்​பட்டு இருக்​கி​றது. ​​ ​ ​ கொள்​ளி​டம்,​ வெள்​ளாறு,​ பர​வ​னாறு,​ மணி​முத்​தாறு,​ கெடி​லம்,​ பெண்ணை ஆறு ஆகி​ய​வற்​றின் மூல​மாக ​ ​ஆண்​டு​தோ​றும் 100 டி.எம்.சி. நீர் கட​லில் வீணா​கக் கலப்​ப​தாக விவ​சா​யி​கள் தெரி​விக்​கின்​ற​னர். ​​ ​ இது குறித்து அனைத்து விவ​சா​யச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பின் கட​லூர் மாவட்ட அமைப்​புச் செய​லா​ளர் பி.ரவீந்​தி​ரன் கூறு​கை​யில்,​ ஒரு வாரம் பெய்த மழை​யால் நீர்​நி​லை​கள் நிரம்பி 26 ஆயி​ரம் கன அடி நீர் வீணா​கக் கட​லில் கலக்​கி​றது. ஆனால் மழை முடிந்​த​தும் டெல்டா விவ​சா​யி​கள் மீண்​டும் மேட்​டூர் அணை​யின் கத​வைத் தட்ட வேண்டி இருக்​கி​றது.​ ​ ​ வீரா​ணம் ஏரி​யில் இருந்து 600 கன அடி நீர் பாச​னத்​துக்கு திறக்க கெஞ்ச வேண்​டிய பரி​தாப நிலை 15 தினங்​க​ளுக்கு முன் இருந்​தது. ஆனால் இப்​போது வீரா​ணம் ஏரிக்கு வரும் 1800 கன அடி நீரும் கட​லுக்​குத் திறந்து விடப்​ப​டு​வது எத்​தனை சோகம். ஆறு​க​ளில் தடுப்​ப​ணை​கள் கட்ட வேண்​டும் என்​றார். ​​ ​ கொள்​ளி​டம் கீழணை பாசன விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் கே.வி.கண்​ணன் கூறு​கை​யில்,​ விவ​சா​யி​கள் கூறு​வதை அரசு கேட்​பதே இல்லை. காவிரி,​ கொள்​ளி​டத்​தில் கத​வ​ணை​கள் கட்டி,​ பொன்​னேரி,​ வீரா​ணம் ஏரி ஆகி​ய​வற்றை ஆழப்​ப​டுத்​தி​னாலே போதும்,​ கொள்​ளி​டத்​தில் வீணா​கும் நீரை சேமிக்க முடி​யும். அரசு குறு​கி​ய​கால நோக்​கங்​க​ளைக் கைவிட்டு,​ தொலை நோக்​கு​டன் புதிய பாச​னத் திட்​டங்​களை உரு​வாக்க வேண்​டும் என்​றார்.

ஒருநாள் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காத கடலூர் நகரச் சாலைகள்

கடலூரில் ஒருநாள் (புதன்கிழமை இரவு) பெய்த மழையைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் படுமோசமாகக் காட்சி அளிக்கின்றன. கடலூரில் பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் தணியும் வகையில், புதன்கிழமை இரவு 57 மி.மீ. மழை பெய்தது. ஆனால், இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையைத் தவிர்த்து, பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் குண்டும், குழியுமாக உள்ள ஏனைய சாலைகள் அனைத்தும் திடீர் மழையால் உழுதுபோட்ட வயல்போல சகதிக் காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பலர் சாலைகளில் விழுந்து, சகதியில் புரளும் நிலை ஏற்பட்டது. இரு சக்கரவாகன ஓட்டிகளும் சகதியில் வழுக்கி விழுந்து சாக்கடையை உடலில் பூசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மழைக்கு முன்னரே முடிக்குமாறு, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், குறிப்பிடத்தகுந்த அளவில் பணிகள் எதுவும் முடிக்கப்படாதாதால் இத்தகைய நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஒரு நாள் மழையிலேயே இந்நிலை என்றால், பலத்த மழை பெய்யும் போது ஏற்படும் விளைவுகள் குறித்து இப்போதே கடலூர் நகர மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, மழைக் காலம் தொடங்கிவிட்டதால், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை தற்போது தொடர வாய்ப்பு இல்லை என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காகத் தோண்டப்பட்ட மண் முழுவதும் சாலைகளில் கொட்டப்பட்டு, சாலைகளின் மட்டம் உயர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன் கூறுகையில், சாலைகள் மோசமானதால், சாலைகளின் தடுப்புக் கட்டை மேலும் மதிற்சுவர்களுக்கு மேலும் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றாததால் 50 செ.மீ. வரை சாலைகளின் மட்டம் உயர்ந்து விட்டது. புதிய சாலைகள் அமைக்கும் போது மேலும் 30 செ.மீ. உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சாலைகளில் குவிக்கப்பட்ட மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.

100 புத்​த​கங்​களை அறி​மு​கம் செய்த 100 மாண​வர்​கள்

கட​லூர் வாசிப்​போர் இயக்​கம் சார்​பில் சனிக்​கி​ழமை நடந்த நிகழ்ச்​சி​யில்,​ பள்ளி மாணவ மாண​வி​யர் 100 பேர் தங்​க​ளுக்​குப் பிடித்த 100 புத்​த​கங்​களை அறி​மு​கம் செய்​த​னர்.÷மக்​க​ளி​டையே புத்​தங்​க​ளைப் படிக்​கும் பழக்​கத்தை உரு​வாக்​கும் வகை​யில் மாதம்​தோ​றும் பல்​வேறு நிகழ்ச்​சி​களை நடத்தி வரு​கி​றது,​ கட​லூர் வாசிப்​போர் இயக்​கம். இ​தன் ஒரு அம்​ச​மாக பள்ளி மாணவ மாண​வி​ய​ரி​டை​யே​யும் ​ புத்​த​கங்​க​ளைப் படிக்​கும் பழக்​கத்தை உரு​வாக்​கும் விதத்​தில் 100 புத்​த​கங்​களை மாணவ மாண​வி​யர் அறி​மு​கம் செய்​யும் நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்து இருந்​தது. ​÷இந் நிகழ்​ச​சி​யில் கட​லூர் கிருஷ்​ண​சாமி மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்​ளி​யில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயி​லும் மாணவ மாண​வி​யர் 100 பேர் பங்​கேற்​ற​னர். ÷அ​வர்​கள் கலை,​ அறி​வி​யல்,​ சமூ​கம்,​ பொரு​ளா​தா​ரம்,​ தலை​வர்​க​ளின் வாழ்க்கை வர​லாறு உள்​ளிட்ட பல்​வேறு தலைப்​பு​க​ளில் வெளி​வந்​துள்ள 100 புத்​த​கங்​க​ளைத் தேர்வு செய்து,​ அறி​மு​கம் செய்து வைத்​துப் பேசி​னர்.÷இ​தில் 75 மாண​வர்​கள் தமிழ்ப் புத்​த​கங்​க​ளை​யும் 25 மாண​வர்​கள் ஆங்​கி​லப் புத்​த​கங்​க​ளை​யும் தேர்வு செய்து இருந்​த​னர். ​÷நி​கழ்ச்​சிக்கு வாசிப்​போர் இயக்​கத் தலை​வ​ரும் கிருஷ்​ண​சாமி மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்ளி முதல்​வ​ரு​மான ஆர்.நட​ரா​ஜன் தலைமை தாங்​கி​னார். நிகழ்ச்​சியை வாசிப்​போர் இயக்க அமைப்​பா​ளர் கவி​ஞர் பால்கி தொடங்கி வைத்​தார்.க​ட​லூர் நகர அனைத்​துக் குடி​யி​ருப்​போர் நலச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் மு.மரு​த​வா​ணன்,​ காப்​பீட்​டுக் கழக ஊழி​யர் சங்​கச் செய​லா​ளர் சுகு​மா​றன்,​ மாவட்ட செஷன்ஸ் நீதி​மன்ற அரசு வழக்​க​றி​ஞர் சிவ​ராஜ்,​ முன்​னாள் அரசு வழக்​க​றி​ஞர் பி.ஜே.எக்ஸ். வேத​நா​ய​கம்,​ வாசிப்​போர் இயக்க நிóர்​வா​கி​கள் செந்​தில்​கு​மார்,​ திரு​ஞா​னம் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.