கோரிக்கை பதிவு

தமிழக அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கல்விக் கட்டண அரசாணை நகல் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்த அரசாணை நகல் சி.இ.ஓ., அலுவலகத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதை கட்டுப்படுத்தப் படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி அரசு சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயிப்புக்குழு அமைத் தது. இந்த குழு தனியார் பள்ளிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கட்டணத்தை நிர்ணயித்துள் ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 398 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது 328 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள் ளது. அதில் 101 பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் குறித்த பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அமுதவல்லி தனியார் பள்ளிகளுக்கு வழங்கினார். மீதமுள்ள பள்ளிகளுக்கு விரைவில் வழங் கப்படும்.

10 ஆண்டாக செயல்படவில்லை - பாழடைந்து கிடக்கும் மண்டல பனைபொருள் பயிற்சி நிலையம்

கடலூரில் உள்ள மண்டல பனைப்பொருட்கள் பயிற்சி நிலையம் கடந்த 10 ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது. பனை தொழில் மீண்டும் பொலிவு பெற தமிழக அரசு நிதி ஒதுக்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் கடற்கரை சாலையில் மண்டல பனைப்பொருள் தயாரிப்பு மற்றும் பயிற்சி நிலையம் உள்ளது. தமிழ்நாடு கதர்கிராம கைத் தொழில் வாரியத்தின் கீழ் இந்நிலையம் செயல்பட்டு வந்தது. கடந்த 1977ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பயிற்சி நிலையம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒரே பனை பொருள் பயிற்சி நிலையமாக செயல்பட்டு வந்ததுள்ளது. இந்த நிலையத்தில் பனை ஓலைப்பொருட்கள், பனைநார் பொருட்கள், தூரிகைகள், பதநீர், பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து 5 பிரிவாக வகுப்பு கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையம் கதர் கிராம கைத்தொழில் வாரியத்தின் ஆதரவை கடந்த 2001ம் ஆண்டு முதல் இழந்தது. இதனால் இங்கு பணியாற்றி வந்த மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் 20 இடங்களில் பனை மர அபி விருத்தி நிலையங்களின் கிளைகள் படர்ந்துள்ளது. ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொந்த இடங்களும், கட்டிடங்களும் இருந்தும் இந்நிலையங்களுக்கு போதிய நிதி ஆதாரமின்றி 
செயலிழந்து உள்ளது. கடலூர் மண்டல பனை பொருள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் கட்டுப்பாட் டில் விற்பனை நிலையங்கள் சிதம்பரம், பூம்புகார், நெய் வேலி ஆகிய இடங்களில் அமைந்துள் ளது. ஆனால் பனை பொருள் உற்பத்தியின்றி இந்த இடங்கள் மூடப்பட்டுள்ளன.
அரசு பனை யிலான தூரிகைகள், கூடைகள் பயன்படுத்த அனைத்து நக ராட்சி மற்றும் இதர துறை அலுவலகங்களுக்கு உத்தர விட வேண்டும். பனை வெல்லம் சத்துணவில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மீண்டும் பனை பயிற்சி மற்றும் பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் தழைத்தோங்கும். தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கிராம தொழிலை அபிவிருத்தி செய்ய வழி காண வேண்டும் என பனை தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை