கோரிக்கை பதிவு

நெடுஞ்சாலை துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெடுஞ்சாலை துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் இழுபறி: மாற்றுப் பாதை தயார்படுத்தாததால் தாமதம்

கடலூர் நகரில் மாற்றுப் பாதை தயார் படுத்தாத காரணத்தால் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியாமல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடியில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை.
தற்போது வாகனங்களின் போக்குவரத்தால் கடலூர் புழுதி நகரமாக மாறி விட்டது. கோடை காலத்தில் துரிதமாக நடக்க வேண்டிய பணிகள் யாவும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தெருக்களில் குழாய் பதிக்கும் பணி ஒரு வழியாக முடிந்துள்ளது. நெடுஞ்சாலையில் பெரிய குழாய்கள் பதிக் கும் பணி இதுவரை தொடங்கவில்லை. கடலூர் முதுநகரில் இருந்து மஞ்சக்குப்பம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன.நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்திய பிறகுதான் சாலையில் பள்ளம் தோண்ட அனுமதிக்க முடியும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் நகராட்சி உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது.மேலும் பீச்ரோடில் கழிவு நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் 6 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டால்தான் கழிவுநீர் இயற்கையாக சென்று சேரும். ஆனால் கடலோரப்பகுதி என்பதால் 6 மீட்டர் ஆழம் தோண்டும் போது நீர் ஊற்று ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே தற்போது ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தை மாற்றி 3.15 மீட்டர் ஆழத்தில் குழாய் பதிக்க முடிவு செய் யப்பட்டது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மோட்டர் மூலம் பம்ப் செய்துதான் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். குடிநீர் வடிகால் வாரியம் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் பணிகள் முடித்த சாலைகள் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு சாலை போடுவதற்காக நகராட்சி, அரசிடம் 2 கோடி ரூபாய் கேட்டுள்ளது.
கோடை காலம் முடிய சில மாதங்களே இருக்கிறது.பாதாள சாக்கடைத் திட்டத்தின் முக்கிய பணிகள் இதுவரை தொடங்கப் படாமல் உள்ளன. இந்த ஆண்டாவது பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் முடிக்கப்படுமா என்பது கேள்விக் குறிதான்.

ரூ.71 லட்சம் செலவில் சாலை விரிவாக்க பணி தீவிரம்

கடலூர் அருகே ரூ. 71 லட்சம் மதிப்பில் அழகியநத்தம் - மருதாடு கிராம சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
கடலூர் பகுதியில் இருந்து 15 கிராமங்களுக்கு இதன் மூலம் துரிதமான போக்குவரத்திற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற சாலைகள் பெரும்பாலும் அகலத்தில் குறைந்தும் கனரக வாகனங்கள் சிரமமான பயணத்தை ஏற்படுத்தும் நிலையில் அமைந்துள்ளது. இதன் நிலையை மாற்றியமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கிராமப்புற சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள பிரதான சாலைகளை இருவழி போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக கடலூர் ஒன்றியத்தில் தூக்கணாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட திட்டத்தால் 
தமிழக - புதுச்சேரி பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்றுள்ளன. இதுபோன்று தற்பொழுது கடலூர் அருகே உள்ள அழகியநத்தம் - மருதாடு சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
அழகியநத்தம் பெண்ணையாற்று பாலத்தில் இருந்து மருதாடு கிராமத்தில் கடலூர் - நெல்லிக்குப்பம் பிரதான சாலையை இணைக்கும் வகையில் இக்கிராம சாலை விரிவாக்க திட்டம் 3.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.71 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விரிவாக்க பணியால் 3.45 மீட்டர் அகலம் கொண்ட சாலை 1.75 மீட்டர் புதிதாக அமைக்கப்பட்டு 
5.5 மீட் டராக மாற்றப்படுகிறது.
இதன் மூலம் இருவழி போக்குவரத்திற்கு தடையில்லாமல் வாகனங்கள் பயணிக்க முடியும். கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய பணி 6 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலை விரிவாக்கத்தினால் கடலூரில் இருந்து மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், அகரம், கடுவானூர், கிருஷ்ணாபுரம், நத்தம் மற்றும் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு விரைவாக செல்லமுடியும். சாலை விரிவாக்க பணி நன்மை என்றாலும் சாலையின் ஒரத்தில் இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
சுற்றுசூழல் கருத்தில் கொண்டு வெட்டிய மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் வைத்து மரங்களை உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 கிராமங்கள் பயன்பெறும்

எமனாக மாறி வரும் மணல் சாலைகள்

கடலூர் நகரம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, பராமரிப்பு இன்மையால், பெரும்பகுதி மணலால் மூடப்பட்டு மக்களுக்கு எமனாக மாறிவருகிறது.தேசிய நெடுஞ்சாலை 45ஏ கடலூர் நகராட்சி பகுதி வழியாக, 15 கி.மீ. தூரம் கடந்து செல்கிறது. பல கோடி செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தச் சாலை, முறையாகப் பராமரிப்பு இல்லாததால், பெரும்பகுதி மணல் படிந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது.தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்கள் பெட்டிக் கடைகள், ஹோட்டல்கள், திடீர் கோயில்கள், குளிர்பானக் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலையில் செல்வோருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இச்சாலை நிர்மாணிக்கப்பட்ட பிறகு, வாகனப் போக்குவரத்து பன்மடங்கு பெருகிவிட்டது.அதற்கேற்ப விரிவுப்படுத்தும் பணியையோ, பராமரிப்புப் பணிகளையோ செய்யாததால், தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் மாறி வருகிறது.பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கான அகலம் போக மீதம் உள்ள பகுதி முழுவதும், ஒரு அடி உயரத்துக்கு மணல் படிந்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் நடந்து செல்வோருக்கும் எமனாக மாறி இருக்கிறது.இந்த மணல் மேடுகளில் சிக்கி விழுந்து, அவர்கள் மீது பின்னால் வந்த வாகனம் மோதி மூவர் இறந்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை நடைபாதை முழுவதும் வணிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அலுவலர்களைக் கண்டு, ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் கவலைப்படவே இல்லை.  இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.அதற்கும் பலன் ஏதும் இல்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர், விழுப்புரம் கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:கடந்த 19-ம் தேதி கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் கண்துடைப்பு நாடகமாக நடந்தது. எந்த ஆக்கிரமிப்பையும்அகற்றவில்லை.எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது என்ற அளவுகூட அவர்களிடம் இல்லை. வெறுமனே விளம்பர போர்டுகளை மட்டுமே வைத்து அகற்றுமாறு கூறிச் சென்றனர். அதைக்கூட யாரும் அகற்றவில்லை. தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பராமரிப்பு இன்றி மண் மேடிட்டுக் கிடப்பது மக்கள் உயிருக்கு ஆபத்தாக உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.

கடலூர் இணைப்பு சாலையில் மெகா பள்ளம் : ஒரே பாதையில் வரும் வாகனங்களால் விபத்து

கடலூர் ரயில்வே மேம்பாலத்தையொட்டிய சாலையில் "மெகா சைஸ்' பள்ளங்கள் உள்ளதால் பஸ் நிலையத்திலிருந்து வரும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல ஒரே பாதையை பயன் டுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

கடலூர் பஸ் நிலையத்திலிருந்து சிதம்பரம் மார்க்கம் செல்லும் பஸ் கள் செல்வதற்காக ரயில்வே மேம்பாலத்தையொட்டி இணைப்பு சாலை அமைக்கப் பட்டுள் ளது. இதனால் சிதம்பரம், விருத்தாசலம் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள் மேம்பாலத்தின் வலதுபுற சாலை வழியாகவும், பேருந்து நிலையத்திலிருந்த வரும் வாகனங்கள் இடது புற சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் பாலத்தில் இடதுபுறசாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் வரும்பேருந்துகள், மேம்பாலத்தில் வலதுபுற சாலை வழியாகவே செல்கின்றன. இந்த சாலை குறுகிய பகுதி என்பதால் ஒரே வழியில் வாகனங்கள் வந்து, செல்லும்போது நெரிசல் காரணமாக தொடர்விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் மேம்பாலத்திலில் வரும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக பாலத்தின் இறக்கத்தையொட்டிய வலதுபுற சாலையில் திரும்பும் போது திடீரென எதிரில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்த்திட ரயில்வே மேம்பாலத்தையொட்டிய சாலையில் உள்ள மெகா பள்ளத்தை மூடி சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.