கோரிக்கை பதிவு

பிச்சாவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிச்சாவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செம்மொழி மாநாடு விடுமுறை பிச்சாவரத்தில் வருமானம் உயர்வு

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற் றுலா பயணிகள் வருகை அதிகரித்து படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இம்மையத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட் டம் அதிகளவில் காணப்படும். பள்ளி திறந்ததும் பயணிகள் வரத்து குறைந்து காணப்படும். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டது.இதன் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் கடந்த ஐந்து நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் 6 ஆயிரத்து 300 பேரும், வெளி நாட்டினர் 253 பேரும் வந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகள் வரத்து மூலம் ஐந்து நாளில் படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.

பிச்சாவரத்தில் ரூ.2 கோடி வருவாய்

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அரணாக இக்காடுகள் அமைந்துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில் 
6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது. வெளிமாவட்டம், மாநிலம் மற்றும் 
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
சமீபத் தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர் காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் நிர்மல்சன் இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க இங்கு ஆய்வு செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏப்ரல் முதல் மார்ச் வரை வெளிநாட்டினர் மற்றும் இந்தியர் என பிச்சாவரம் வந்த சுற்றுலா பயணிகளும், அதனால் கிடைத்த வருவாயும் வருமாறு: 2006-07ல் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளால் 28 லட்சம் ரூபாயும், 2007-08ல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பயணிகளால் 31 லட்ச மும், 2008 -09 ஒருலட்சத்து 42 ஆயிரம் பயணிகளால் 60 லட்சமும், 2009-10 ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் 
பயணிகளால் 85 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பிச்சாவரம் வன சுற்றுலா மையம்தங்கும் இடம் அதிகரிக்குமா அரசு?

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வரும் வெளிநாட்டினர் தங்க, வசதியான இடம் இல்லாததால், அவர்களின் வருகை குறைகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 எக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால் வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண், சிறு, கருங்கண்டன் என, 18க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்களும் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களைத் தடுக்கும் அரணாக, இக்காடுகள் அமைந்துள்ளன. மூலிகை தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால், பல நோய்கள் தீருகின்றன.

காடுகளை பாதுகாக்க, 1984 ஜூன் 16ல், ஐந்து ஏக்கர் பரப்பில், ஆறு படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில், ஆறு காட்டேஜ், 20 கட்டில் வசதிகளுடன், இரண்டு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, கூடுதல் படகுகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டன. வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சமீபத்தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர், காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் 
நிர்மல் சன், இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க, இங்கு ஆய்வு செய்தார்.

பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான கடந்த ஆண்டில், 85 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெளிநாட்டினர் இப்பகுதியில் தங்குவதற்கான வசதி இல்லாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.

பிச்சாவரம் - கொடியம்பாளையம் இடையே ரூ.10 கோடியில் சிறப்பு பாலம்


கடலூர் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இத்தீவுகளுக்கு தரைவழி பயணம் கானல் நீரா கவே இருந்து வந்தது. தற்போது இதற்கு தீர்வு ஏற்படும் வகையில், தீவுகளுக்கு செல்லும் வழியில் உள்ள கடல் பகுதியிலும், ஆற்றுப்பகுதியிலும் உயர் மட்ட பாலங் களை அரசு அமைத்து வருகிறது. கடலூர் அருகே சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை கிராமங்களுக்கு முதலில் தரைவழி போக்குவரத்திற்கு பாலம் கட்டப்பட்டது. நொச்சிக்காடு பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வரு கிறது. இதன் வரிசையில் பிச்சாவரம்&கொடியம் பாளையம் இடையே உப்பனாற்றில் பாலம் கட்டும் பணி முடிந்துள்ளது.
இதன் மூலம் கொடியம்பாளையம், பழையாறு, வடக்கு பிச்சாவரம், தாண்டவராயன் சோழன் குப்பம் உள்ளிட்ட தீவுகளுக்கு தரை வழி போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீவில் வசிக்கும் சுமார் 25 கிராம மக்கள் பயன் பெற வழி காணப்பட்டுள்ளது. 140 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தின் அகலம் 8.5 மீட்டர். 7 தூண்கள் பாலத்திற்கு பலம் சேர்க்க அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.10.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இப்பாலம் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி தொடங்கப்பட்டு கடந்த 28ம் தேதி முடிக்கப்பட்டுள்ளது. சுனாமி அவசர திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்பாட்டு துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதன் முறையாக கோள வடிவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் முதல் பகுதியை விட மைய பகுதி உயர்ந்து காணப்படும். இதனால் விசைப்படகுகள், சிறிய கப்பல்கள் தடையின்றி பாலத்தின் வழியாக பய ணிக்க முடியும். ஆரம்பத் தில் 4 மீட்டர் உயரத்தில் உள்ள பாலத்தின் அளவு நடு வில் 5.5 மீட்டர் உயரத்தில் முடிகிறது. மாவட்டத்தில் கடற்கரை கிராமங்கள் மற்றும் தீவுகளை தரை வழி போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இணைத்து ஏற் படுத்தப்பட்டுள்ள பாலங்களில் இந்த சிறப்பு பாலம் முதன் முறையாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்திற்கு 6ம் தேதி வரும் துணை முதல்வர் ஸ்டாலின், இப்பாலத்தை திறந்து வைக்கிறார்.