கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூர் மாவட்டத்தில் 82 சுயநிதிப் பள்ளிகளுக்கு கல்விக் கட்டண விவரம் வெளியீடு
வநதுள்ளது. இவற்றில் 82 பள்ளி நிர்வாகங்கள் வியாழக்கிழமை வரை,
கட்டணப் பட்டியலைப் பெற்றுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ÷கட் டணப் பட்டியலை இதுவரை வாங்காமல் இருக்கும் பள்ளிகள், நகர்ப் புறங்களில் உள்ள மிகப் பிரபலமான பள்ளிகள்தான் என்று
கூறப்படுகிறது.÷பிரபலமான பள்ளிகள் பல, தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தியும் தகவல்களை அளித்து உள்ளன. இந்தக் கட்டணத்தில் பள்ளி சிறப்பாக நடப்பதால், அதேக் கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்கலாம் என்று நீதிபதி கோவிந்தராஜ் குழு பரிந்துரைத்து உள்ளது. இவ்வாறு 25 சதவீத பள்ளி நிர்வாகங்கள், தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை குறைத்துக் காண்பித்ததால், அதேக் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கிராமப்புற நர்சரி பள்ளிகள் பலவற்றுக்கு அவர்கள் தற்போது வசூலிக்கும் கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதிபதி குழு பரிந்துரைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 20 சதவீத பள்ளிகளுக்கு அவர்கள் தற்போது
வசூலிக்கும் கட்டணத்தையே நீதிபதி குழு பரிந்துரைத்து உள்ளது.மொத்தத்தில் 50 சதத்துக்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகங்கள், நீதிபதி கோவிந்தராஜ் குழுவின் பரிந்துரைக் கட்டண விகிதத்தை, முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு இருப்பதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எப்போது தெரியும்?
பள்ளி செல்லா குழந்தைகள் கடலூரில் 63 பேர் கண்டுபிடிப்பு
செயின்ட் ஜோசப் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஐ.ஐ.எம்., தேர்வில் மாணவர் சாதனை
கடலூர் மாணவிக்கு இரு வெள்ளிப் பதக்கங்கள்
பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு மாவட்டத்தில் 157 மையங்களில் நடக்கிறது
இக்கேள்வித்தாள்கள் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 2 மையங்கள், நெய்வேலி என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், திட் டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 மையங்களில் தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது. தேர்வின் போது முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க 1 குழுவிற்கு 4 ஆசிரியர்கள் வீதம் 10 "டீம்'கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சி.இ.ஓ., 2 டி.இ.ஓ.,க்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ஆகியோர் தலைமையிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொள்வர்.சோதனையின் போது பிடிபட்டால் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாமல் தண்டிக்கப்படுவார்கள். பிரச்னைக்குரிய இடங் களாக கருதப்படும் பள்ளிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.தேர்வையொட்டி கலெக்டர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட் டம் நடந்தது. இதில் முறைகேடுகள் நடைபெறாதவாறு தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன், ஆர்.டி.ஓ., செல்வராஜ், சி.இ.ஓ., அமுதவல்லி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள்மொழிதேவி, டி.இ.ஓ.,க்கள் குருநாதன், கணேசமூர்த்தி, தொடக்க கல்வி அலுவலர் விஜயா, டி.எஸ்.பி., ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உலகத் தமிழ் இணைய மாநாடு: கம்ப்யூட்டர் வரைகலை போட்டி
நிகழ்ச்சியை சி.இ.ஓ., அமுதவள்ளி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி நிறுவனர் சேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., கதிர்வேல், டி. இ.ஓ., விஜயா, ராஜேந்திரன், எல்காட் நிறுவன மேலாளர் காமேஸ்வரன் கலந்து கொண்டனர்
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வினா-விடை கையேடு வழங்கவில்லை! தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் என தலைமை ஆசிரியர்கள் கருத்து
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை பொறுத்தவரை தமிழத்தில் உள்ள 30 வருவாய் கல்வி மாவட் டங்களில் கடலூர் மாவட்டம் 29வது இடத்தில் இருந்து வந்தது. பிற மாவட்டங்களைப் போல் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து முன்னேற வேண்டும் என மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். 2008-2009ம் கல்வியாண்டில் அப்போது இருந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி "டல் ஸ்டூடண்ட்'களை (மெல்ல கற்கும்) கண்டறிந்து அவர் களுக்காக தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்கான வினா - விடை கையேட்டை தயாரித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பாடப் பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம் உள் ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் கையேடு தயாரித்து கடந்த ஆண்டு நவம் பர் மாதம் 24ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வமும், அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவும் வெளியிட்டனர். அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி மாணவர்களுக்கு வழங்கி அதனை கற்பித் திட ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப் பட்டது.
இது கடலூர் மாவட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ் சிபுரம், திருவாரூர் உள் ளிட்ட தேர்ச்சியில் பின் தங்கிய மாவட்ட கல்வி அதிகாரிகளும் பின்பற்றினர்.
இந்த புதிய முயற்சியின் பலனாக 29வது இடத்தில் இருந்த கடலூர் மாவட் டம் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சியில்., 26வது இடமும், பிளஸ் 2வில் 24ம் இடத்திற்கும் முன்னேறியது. கடைசி இடத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டம் முறையே 23 மற்றும் 25வது இடத்தை பிடித்தது.
ஆனால் இந்த ஆண்டு "டல் ஸ்டூடண்ட்'டுகளுக் கான குறைந்தபட்ச மதிப் பெண் பெறுவதற்கான கையேடு கடலூர் மாவட்டத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் வழங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் இங்கு வழங்காதது ஏன் என தெரியவில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது செய்முறை தேர்வு நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதி தேர்வு துவங்க உள்ள நிலையில் இதன் பிறகு வழங்கினாலும் அந்த கையேட்டை வைத்து மாணவர்கள் படித்து தேர்ச்சி பெற முடியுமா என்பது சந்தேகமே.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மார்ச் 23ம் தேதி தேர்வு துவங்குகிறது. அவர்களுக்கேனும் "வினா-விடை' கையேட்டை வழங்கிட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபற்றி தலைமையாசிரியர்கள் கூறுகையில், "கடந்த ஆண்டு குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கான கையேடு நல்ல பலனை அளித்தது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அரையாண்டு தேர்வு முடிந்ததும் மாணவர்களுக்கு வழங்கியிருக்கலாம். ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தி அதற்கான பலன் உடனடியாக தெரிந்த போதிலும் அந்த திட்டத்தை தொடர்ந்து உரிய நேரத் தில் நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று புரியவில்லை. இதன் பிறகு கையேடு வழங்கினாலும் பலன் குறைவாகத்தான் இருக்கும்' என்கின்றனர்.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு 8ம் தேதி துவக்கம்! 25,592 பேர் தேர்வு எழுதுகின்றனர்
இதனைத் தொடர்ந்து 8ம் தேதி முதல் 20ம் தேதிவரை அறிவியல் பாடங் களான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், தொழில் கல்வி செய்முறைத் தேர்வுகள் நடக்கிறது.
இதற்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி கடந்த வாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளா கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தொடர்ந்து மாவட்ட கல் வித் துறை சார்பில் வினாத் தாள் அச்சடிப்பது, "பேட்ச்' பிரிப்பது உள்ளிட்ட பணிகள் முடிந்து மாவட்டத்தில் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மாவட்டத்தில் 12208 மாணவர்கள், 13,384 மாணவிகள் என மொத்தம் 25,592 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களைவிட 1,176 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.
இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 99 பள்ளிகளைச் சேர்ந்த 8293 மாணவர்களும், 9909 மாணவிகளும், விருத்தாச்சலம் கல்வி மாவட்டத்தில் 54 பள்ளிகளைச் சேர்ந்த 3915 மாணவர்களும், 3475 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.
வரும் 8ம் தேதி துவங்கவுள்ள செய்முறைத் தேர் விற்கான ஆயத்தக் கூட்டம் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள் ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரிகள் கடலூர் கணேசமூர்த்தி, விருத்தாச்சலம் குருநாதன், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழிதேவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 153 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதில் பள்ளிகளில் நடத் தப்படும் செய்முறைத் தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக் கினர். அதில் செய்முறை தேர்வுகள் கால அட்டவணையில் உள்ள தேதிகளில் தவறாது நடத்த வேண்டும்.
மருத்துவ மற்றும் விபத்து காரணங்களால் குறித்த "பேட்ச்'ல் தேர்வு எழுத இயலாத மாணவர்கள் உரிய கால அட்டவணைக்குள் வேறொரு நாளில், வேறொரு "பேட்ச்'ல் செய் முறைத் தேர்வை நடத்தி குறிப் பிட்ட இறுதி நாட்களுக் குள் முடிக்க வேண்டும்.
தேர்வு நாளன்று ஆய்வகத்தில் அகத்தேர்வர், புறத் தேர்வர் அனுமதிக்கப் பட்ட ஆய்வக உதவியாளர் கள் மட்டுமே இருத்தல் வேண்டும். செய்முறைத் தேர்வு சார்பாக அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை முன்கூட் டியே வழங்க வேண்டும். செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல் களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டனர்.
பின்னர் தலைமை ஆசிரியர்களிடம் செய்முறை தேர்விற்கான கால அட்டவணை, மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் மற்றும் "பேட்ச்' பட்டியல் வழங்கப்பட்டன.
கடலூர் சி.கே பள்ளியில் பருவ நிலை மாற்றம் குறித்த கண்காட்சி
கடலூர் சி.கே பிராக்டிக்கல் நாலேஜ் பள்ளியில் பருவநிலை மாற்றம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வினை உருவாக்கவும், அவர்களை இயற்கையின் தோழர்களாக மாற்றவும் ‘கிளைமேட்’ என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பள்ளியின் அறிவியல் பிரிவு, வாழ்வியல் கல்வி, தொழில்முனைவோர் பிரிவு ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. இதில் அனைத்து கல்வி துறைகளின் சார்பிலும் பருவநிலை மாற் றம் குறித்த மாணவர் கள் உருவாக்கிய பொருட்கள், மற்றும் ஆய்வு அறிக்கைகள், புள்ளி விவரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சியில் சிறு குழந்தைகள் முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை அனை வரும் பங்கேற்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் தார்சி யஸ் வரவேற்றார். இயக்குநர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் டாக்டர் ஹேமாசின்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் அமுதவல்லி சிறப்புரையாற்றினார். கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே ரங்கநாதனின் துணைவியார் தேன்மொழி ரங்கநாதன் மாணவர்களை பாராட்டினார்.
பூமி தோற்றம் படிப்படி யான அதன் மாற்றம் பூமி யின் அழிவு ஆகியவற்றை பள்ளி மாணவர்கள் இசை மற்றும் நடனத்தின் மூலம் கண்முன் கொண்டுவந்தார்கள். இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந் தது. பருவநிலை மாற்றம் குறித்து மாணவர்கள் பல் வேறு கண்காட்சி பொருட் களை பார்வைக்கு வைத்திருந்தனர். அவர்கள் பனிக்கட்டியால் பனிக்கரடி செய்து பருவநிலை மாற்றத்தால் மெல்ல மெல்ல கரைந்து அழிவதை தத்ரூபமாக செய்திருந்தனர்.
லிம்கா சாதனை: இது தவிர பள்ளியில் யோகா மற்றும் தியானம் நடந்தது. இதில் பள்ளி யோகா மாஸ் டர் காளத்தீஸ்வரர் ஆணிப்படுக்கையின் மீது 50 வித மான யோகசானங்களை செய்து புதிய லிம்கா சாதனை படைத்தார். இதை போல் பள்ளி மாணவர்கள் நவீன், விக்னேஷ், அஜய், ராஜகண்ணன், சதீஷ், அஞ்சனா, ஜனனி, மதுமிதா ஆகியோர் முட்டைகள் மீது அமர்ந்து அவை உடைந்து விடாமல் யோகாசனங்கள் செய் தனர்.
நவீன தொப்பி: பள்ளியின் தொழில்முனைவோர் பிரிவு மாணவர்கள் நவீனதொப்பியை தயாரித்து விற் பனை செய்தனர். தொப்பி யில் சிறிய மோட்டாரும் முன் பகுதியில் சிறிய சுழலும் விசிறியும் அமைக்கப்பட்டுள்ளது. சுவிட்ச் ஆன் செய் யும் போது விசிறி சுழன்று முகத்தில் ஜில்லென்ற காற்று வீசும். வெய்யில் காலத்தில் இந்த தொப்பி அனைவருக்கும் மிகவும் பயன்படும் என்று கூறி அவற்றை விற் பனை செய்தனர். கண்காட்சிக்கு வந்த அனைவரும் இந்த நவீன தொப்பியை வாங்கிச்சென்றனர்.
மேலும் மினி உழவர்சந்தையை பள்ளியில் மாணவர்கள் அமைத்திருந்தனர். பொங்கலுக்கு தேவையான பொருட் களை மாணவர்கள் விற் பனை செய்தார்கள். இதன் மூலம் மாணவர்கள் தொழில்முனைவோராக சிறந்த பயிற்சி பெற்றதாக பள்ளி முதல்வர் தெரிவித்தார். வாழ்வியல் கல்வித் துறை ஒருங்கிணைப்பாளர் காயத்ரி உமாசங்கர் நன்றி கூறினார்.
பாரதியார் பிறந்தநாள்
கடலூரில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கடலூர் திருப்பாதிரி புலியூர் பாடலேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் முத்துராமன் தலைமை தாங்கினார். தமிழாசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். ஓய்வு பெற்ற கல்வித்துறை கண்காணிப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கடல் நாகராசன் பரிசு வழங்கினார். மற்றொரு விழா; திருவள்ளுவர் பயிற்சி பள்ளி யில் நடந்த விழாவிற்கு பயிற்சி பள்ளி நிறுவனர் ஸ்ரீநிவா சன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுபாஷ் முன் னிலை வகித் தார். ஆசி ரியை கயல்விழி வரவேற் றார். சிறப்பு விருந்தினராக ஐந்தாம் உலக தமிழ்சங்க நிறுவனர் முத்துகுமரன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசராகவன் பாரதியும்& தமிழ்சங்கமும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். ஆசிரியை கார்த்திகா நன்றி கூறினார்.