கோரிக்கை பதிவு

துறைமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துறைமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாகை, கடலூரில் 3 மீன்பிடி துறைமுகங்கள்

நாகப்பட்டிணம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உலக வங்கி உதவியுடன் சுமார் 77 கோடி செலவில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன.உலக வங்கியின் இ.டி.ஆர்.பி. என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் நாகப்பட்டிணம் மீன்பிடிதுறைமுகம் ரூ.35 கோடியே 65 லட்சம் செலவிலும், அந்த மாவட்டத்தில் உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகம் ரூ.27 கோடியே 56 லட்சம் செலவிலும் புதிய மீன்பிடி துறைமுகங்களாக புதுப்பிக்கப்பட உள்ளன.

இதேபோல் கடலூர் மாவட்டம் போர்ட்டனோவா அன்னக்கோவில் என்ற இடத்தில் ரூ.131/2 கோடி செலவில் மீன்பிடி தளம் அமைக்கப்படுகிறது.

இந்த மீன்பிடி துறைமுகங்களில் மீனவர்கள் படகுகளை நிறுத்திக்கொள்ளவும், மீன்களை விற்பனை செய்வதற்கும், சுனாமி போன்ற அவசர காலங்களில் படகுகளை நிறுத்தவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.
உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த புதிய மீன்பிடி துறைமுகங்கள் திட்டத்திற்கு முதலமைச்சர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் தமிழக அரசின் வருவாய்த்துறைச் செயலாளர் கி.தனவேல் தெரிவித்தார்.

50 கிலோ மயில் மீன் கடலூரில் பிடிபட்டது

கடலூர் மீன்பிடி துறை முகத்தில் நேற்று 50 கிலோ மயில் மீன் பிடிபட்டது. ஆழ்கடல் பகுதிகளில் 10 முதல் 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சுறா, சுங்கம், யா மீன், மயில் உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைக்கும்.

இவ்வகை மீன்கள் தூண்டில்கள் மூலமே பிடிக்கப்படும். ரத்த வாடை அதிகமுள்ள டால்பின் மீன் துண்டுகள், சூறை மீன்களை தூண்டிலில் கோர்த்து கடலில் வீசினால் இவ்வகை மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொள்ளும்.

இதில் மயில் மீன்கள் 50 முதல் 500 கிலோ வரை இருக்கும். இம்மீன்களுக்கு மயில் தோகை போன்று இறக்கை இருக்கும் என்பதால், இதை மயில் மீன் என அழைக்கப்படுகிறது. தற்போது, ஆழ்கடல் பகுதியில் மயில் மீன் சீசன் துவங்கி யுள்ளது. கடலூர் பகுதி மீன வர்களிடம் நேற்று 50 கிலோ எடையுள்ள மயில் மீன் சிக்கியது. இதை வியாபாரிகள் வெட்டி பதப்படுத்தி கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய் கின்றனர். எஞ்சிய மீன்கள் கரு வாட்டிற்கு பதப்படுத்தப் படுகிறது

பச்சையாங்குப்பம் - துறைமுகம் சாலை குண்டும் குழியுமாக மாறிய அவலம்

கடலூர் துறைமுகத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. கடலூர் துறைமுகம் பல ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு முதல் சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. இதனால் துறைமுகத்தில் 14 கோடி ரூபாய் செலவில் சிமென்ட் சாலை, சுற்று சுவர் மற்றும் ஹைமாஸ் விளக்கு அமைத்து மேம்படுத்தப் பட்டது. ஆனால் துறைமுகச்சாலை என அழைக்கப்படும் பச்சையாங்குப்பம்-துறைமுகம் சாலை பல ஆண்டாக பராமரிப்பின்றி உள்ளதால் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்றநிலையில் உள்ளது. இரவில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சற்றுகவனக்குறைவு ஏற்பட்டாலும் பள்ளத்தில் விழ வேண்டியுள்ளது.கடந்த மாதம் பெய்த மழையினால் சாலை மிகவும் மோசமானது.

இதனால் சாலையின் பல இடங்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டு குட்டை போல் காட்சியளிக்கிறது. தற்போது மீன்பிடி துறைமுகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் இருப்பதால் இந்த சாலையை துறைமுக பொறுப்பில் இருந்து தற்போது நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நகராட்சியாவது இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.