கோரிக்கை பதிவு

பெரியார் கல்லூரி தமிழ் பேராசிரியர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு


கடலூர் பெரியார் கலைக்கல்லூரி தமிழ்த் துறை இணைப்பேராசிரியர் ஜனாதிபதி விருத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். செம்மொழித்தமிழ் மொழியில் சிறப்பாகப் பணியாற்றும் அறிஞர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப் பட்டு வருகிறது. ஐந்து நபர்களுக்கு வழங் கப்படும் "இளம் அறிஞர்' விருதிற்கு கடலூர் பெரியார் கலைக் கல்லுரி தமிழ் இணைப்பேராசிரியர் பழனிவேலு தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

இவர் புதுச்சேரி, அரியாங்குப்பம் டோல்கேட்டை சேர்ந்தவர். தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், புதுச்சேரி பல் கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்திற்காக தங்கப்பதக்கம் பெற்றவர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். "தமிழர் தம் கல்வி வரலாறு' என்ற இவரின் ஆய்வேடு தமிழக அரசின் சிறந்த நூல் வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்பட்டுள் ளது. இந்நூல் கோவை, பாரதியார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டங்களில் இடம் பெற் றுள்ளன.

இவரின் "கல்வி வரலாறு சில பார்வைகள்' என்ற நூல் புதுச்சேரி அரசின் 2001ம் ஆண்டுக்கான சிறந்த கட்டுரை நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டு கம்பன் புகழ் பரிசு பெற் றுள்ளது. புதுச்சேரி பகுதிகளை கள ஆய்வு செய்து எழுதப்பட்ட இவரின் முதுகலை ஆய்வேடு, "தமிழர் தம் குடிப்பழக் கம்' என்ற நூலாக வெளி வந்துள்ளது. சென்னை மொழி அறக்கட்டளையின் தமிழ் மரபுத்தொடர் அகராதியில் 1993முதல் 95 வரை ஆராய்ச்சி உதவியாளராகவும், 98ம் ஆண்டு வரை புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார்.

பின்னர் 1998ம் ஆண்டு முதல் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார நவீன திறனாய்வுக் கோட்பாடுகளைத் தமிழிலக்கியங்களில் பொருத்தி ஆய்வு செய்து வரும் இவர், கோட்பாட்டியல் திறனாய்வுகள், பனுவல் எடுத்துரைப்பு திறனாய்வு ஆகிய இரு திறனாய்வு நூல்களையும், 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக