கோரிக்கை பதிவு

தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஆணையர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திலுள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் தொழிலாளர் ஆய்வர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களும் பெயர் பலகை தமிழில் கட்டாயமாக இருக்க வேண்டும். பிற மொழிகளை பயன்படுத்தும் போது தமிழ் மொழி முதலிலும், ஆங்கிலம் 2வதாகவும், பிறமொழி அடுத்தும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தொழிலாளர் ஆய்வர்கள் ஆய்வு செய்து நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிந்து வருகின்றனர்.இந்த ஆய்வுகள் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையொட்டி அனைத்து கடைகள், உணவு நிறுவனங்களிலும் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக