கோரிக்கை பதிவு

மெள்ள மெள்ளக் கொல்லும்

''மேட்டூர், கடலூர் உட்பட பல இடங்களில், மெள்ள மெள்ளக் கொல்லும் ஆலைக் கழிவு அபாயம் அரங்கேறி வருகிறது. இந்த மாதிரியான ஆலைகள் பலவும் அரசின் அனுமதி இல்லாமலேயே இயங்குகின்றன. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 2,500 நடுத்தர, பெரும் தொழில் நிறுவனங்கள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குகின்றன. இப்படி இருந்தால், அரசின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?'' என்று ஆதங்கத்துடன் சொன்னார்.
போபால் நீதிக்கான பிரசாரத்தின் உறுப்பினரும், சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்வேதா நாராயணையும் சந்தித்தோம், ''கடலூர், பெரும் ஆபத்து மையமாக மாறிவருகிறது. அங்கு உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளன. தொழிற்பேட்டையைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் கெட்டுவிட்டது. 2008-ல் இங்கு ஆய்வுசெய்த மத்திய அரசின் 'நீரி' சூழல் நிறுவனம், 'இந்த ஆலைகளின் கழிவுகளால் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது' என அறிக்கை அளித்தது. நான்கு ஆண்டுகளாக நாங்கள் எடுத்த 12 'மாதிரி' ஆய்வுகளில், 'இங்கு வெளியேறும் 25 வேதிக் கழிவுகளில், 12 கழிவுகள் புற்றுநோயை உண்டாக்குபவை. அதிலும், பென்சீன் என்பது, மற்றவற்றைவிட 26 மடங்கு அதிகமாகப் புற்றுநோயை உண்டாக்கும்' எனக் கண்டறிந்தோம். அதேபோல், டால்மியாபுரம் சிமென்ட் ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில், மூளையைப் பாதிக்கும் காரீயம், பாதரசம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காட்மியம், பெரிலியம், பேரியம் உள்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் இருப்பதும் தெரிந்தது. கடந்த பிப்ரவரி நிலவரப்படி, கடலூர் சிப்காட்டில் 25 ஆலைகளில் 20 ஆலைகளுக்கு லைசென்ஸ் இல்லை!'' என்று சொல்லி மூச்சுத் திணறவைத்தார்.
- இரா. தமிழ்க்கனல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக