கோரிக்கை பதிவு

சட்ட மன்ற உறுப்பினரை காணவில்லை ?

  கோ.ஐயப்பன்  கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரைக் காணவில்லை! யாரவது எங்கிருக்கிறார் என்று தெரிந்தால்  கண்டு பிடித்து கொண்டுவாருங்கள். தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
மாவட்ட மந்திரி பன்னீர் செல்வம் பம்பரமாக மாவட்டம் முழுதும் சுற்றுகிறார், மக்களை சந்திக்கிறார் (தேர்தல் வருகிறதல்லவா ) அனால் நம் தொகுதி ஐயப்பன் என்ன பண்றார் என்றே தெரியவில்லை. அவரால் கடலூருக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.
- பாதாள சாக்கடை பிரச்சனை 
- ரயில்வே சுரங்கப்பாதைப் பிரச்சனை
- புதிய பேருந்துநிலையம்  அமைக்கும் பிரச்சனை 
- சிப்காட் மாசுபடுத்தும் பிரச்சனை
- ரயில் நிறுத்தும் பிரச்சனை (ரயில் கடலூரில் நிற்காது )
எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாமல் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவது,
கட்டபஞ்சாயத்து செய்வது, நிலா அபகரிப்பு செய்வது போன்ற தொழில் மூலம் கோடிகளில் புரல்வதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
அவர் செய்த ஒரே ஒரு சாதனை என்ன தெரியுமா ?
கலைஞர் அறிவாலயம் கட்டியிருக்கிறார்(யார் பணத்தில் ?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக