கடலூர் வாசிப்போர் இயக்கம் சார்பில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவியர் 100 பேர் தங்களுக்குப் பிடித்த 100 புத்தகங்களை அறிமுகம் செய்தனர்.÷மக்களிடையே புத்தங்களைப் படிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில் மாதம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது, கடலூர் வாசிப்போர் இயக்கம். இதன் ஒரு அம்சமாக பள்ளி மாணவ மாணவியரிடையேயும் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை உருவாக்கும் விதத்தில் 100 புத்தகங்களை மாணவ மாணவியர் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. ÷இந் நிகழ்சசியில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர் 100 பேர் பங்கேற்றனர். ÷அவர்கள் கலை, அறிவியல், சமூகம், பொருளாதாரம், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வெளிவந்துள்ள 100 புத்தகங்களைத் தேர்வு செய்து, அறிமுகம் செய்து வைத்துப் பேசினர்.÷இதில் 75 மாணவர்கள் தமிழ்ப் புத்தகங்களையும் 25 மாணவர்கள் ஆங்கிலப் புத்தகங்களையும் தேர்வு செய்து இருந்தனர். ÷நிகழ்ச்சிக்கு வாசிப்போர் இயக்கத் தலைவரும் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வருமான ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை வாசிப்போர் இயக்க அமைப்பாளர் கவிஞர் பால்கி தொடங்கி வைத்தார்.கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கச் செயலாளர் சுகுமாறன், மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சிவராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் பி.ஜே.எக்ஸ். வேதநாயகம், வாசிப்போர் இயக்க நிóர்வாகிகள் செந்தில்குமார், திருஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக