கோரிக்கை பதிவு

தனி​யார் ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்​வ​தாக புகார்

கட​லூர் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்ய முயன்ற அதி​கா​ரி​களை ஊர் பொது​மக்​கள் தடுத்து நிறுத்​தி​னர். ​ ​க​ட​ லூர் அருகே சிப்​காட் பகு​தி​யில் தனி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலை தொடங்​கப்​பட இருக்​கி​றது. இதற்​காக சுமார் 1,000 ஏக்​கர் நிலம் ஏற்​கெ​னவே ஆர்​ஜி​தம் செய்ப்​பட்டு இருக்​கி​றது. மேற்​கொண்​டும் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்டு வரு​கி​றது. ​இந்​நி​லை​யில் இயற்கை எழில் மிகுந்த,​ மணல் குன்​று​கள் நிறைந்த திருச்​சோ​பு​ரம் பகு​தி​யில் நிலம் கைய​கப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் வெள்​ளிக்​கி​ழமை ஈடு​பட்​ட​னர்.நி​லத்தை அளந்து பல இடங்​க​ளில் கொடி நட்டு இருந்​த​னர். இதற்கு அப் பகு​தி​யில் வசிக்​கும் மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். இத​னால் நில அள​வைத் துறை அலு​வ​லர்​க​ளுக்​கும் பொது​மக்​க​ளுக்​கும் இடையே கடும் வாக்​கு​வா​த​மும் தள்​ளு​முள்​ளும் ஏற்​பட்​டது. ​மக்​கள் எதிர்ப்பு கார​ண​மாக நில​அ​ள​வைத்​துறை அதி​கா​ரி​கள் அங்​கி​ருந்து திரும்​பிச் சென்று விட்​ட​னர்.நி​லம் கொடுத்து மறுப்பு தெரி​வித்​தது குறித்து திருச்​சோ​பு​ரம் பிர​மு​கர் பாலு கூறி​யது:​ ​த ​னி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு திருச்​சோ​பு​ரம் கிரா​மத்​தில் நிலம் ஆர்​ஜி​தம் செய்ய நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் முயன்​ற​னர்.தி​ருச்​சோ​பு​ர​நா​தர் கோயி​லுக்​குச் சொந்​த​மான 30 ஏக்​கர் நிலத்தை அதி​கா​ரி​கள் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு வழங்​கும் முயற்​சி​யில் இறங்கி உள்​ள​னர்.இந்த நிலத்​தில் சுமார் 10 ஏக்​க​ரில் 200-க்கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் வீடு​கட்டி வசிக்​கின்​ற​னர். நாங்​கள் வீடு​களை காலி செய்ய மாட்​டோம் என்று தெரி​வித்து விட்​டோம். ​வீ​டு​கள் கட்டி இருக்​கும் 10 ஏக்​கர் உள்​ளிட்ட 30 ஏக்​கர் கோயில் நிலத்​தை​யும் தொழிற்​சா​லைக்கு ஆர்​ஜி​தம் செய்து கொடுக்​கும் முயற்​சி​யில் அதி​கா​ரி​கள் ஈடு​பட்டு இருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. கோயில் நிலத்தை தனி​யார் நிறு​வ​னத்​துக்கு அதி​கா​ரி​கள் எப்​படி வழங்க முடி​யும்?​ என்​றார் பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக