கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
ஆட்சியர் அறிவுரை
மீனவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் மீன்பிடிக்கச் செல்லுமாறு, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வியாழக்கிழமை அறிவுரை வழங்கினார்.÷24-ம் தேதி கடலூர் தாழங்குடா மீனவர்கள் 100 பேர் வங்கக் கடலில் வழக்கமான இடத்தில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது இந்தியக் கடற்படையினரால் தாக்கப்பட்டனர். இதனால் மீனவ மக்களிடையே கொந்தழிப்பு ஏற்பட்டது. எனவே வியாழக்கிழமை மாலை மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ÷க டற்படையினர் மீனவர்களைத் தாக்கக்கூடாது என்று மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். சந்தேகப்பட்டால் மீனவர்களைப் பிடித்து, கடலூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கலாம் என்றும் கூறினர். கடற்படையினரிடம் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரினர்.÷இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாலேயே நாட்டு நலன் கருதி கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று மீனவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. அவர்களும் ஏற்றுக் கொண்டனர். அனைத்து மீனவர்களுக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்க மீன்வளத் துறைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.÷மீனவர் அடையாள அட்டை வழங்கும் வரை, வாக்காளர் அடையாள அட்டைகளை மீனவர்கள் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கச் செல்லலாம் என்றார் ஆட்சியர்.÷கூட் டத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மீன் வளத்துறை உதவி இயக்குநர் அறிவுமதி, மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுப்புராயன், ஏகாம்பரம், குப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக