கோரிக்கை பதிவு

கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் விடுத்துள்ள அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு இலவசமாக கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் இலவசமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர 1.1.2010 அன்று 20 வயதிற்கு குறையாமலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் உள்ள இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு ஆன பிஎஸ்வி பேட்ஜ் வைத்துள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.19,500 ஆகும். இதனை முழுவதும் அரசே ஏற்கிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி சான்று, சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் இதர வாகன ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் நகல்களுடன், தனி அலுவலர், சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுனர் பயிற்சி பிரிவு, கும்மிடிபூண்டி& 601201, திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 7&12&09க்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக