கோரிக்கை பதிவு

தகுதி சான்று பெறாத 18 பள்ளி வாகனங்கள் : அதிகாரிகளின் சோதனையில் அம்பலம்

மாவட்டத்தில் 18 பள்ளி வாகனங்கள் தகுதி சான்றிதழ் பெறாமலே ஓட்டியிருப்பது அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.கடலூர் அடுத்த பெரியப்பட்டு மற்றும் வேதாரண்யத்தில் பள்ளி வாகனங்கள் விபத்திற்கு உள் ளான சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கப்படுகிறதா என சோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.அதனைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் போலீஸ், வருவாய் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக தற்போது பள்ளி வாகனங்களில் ஓட்டுனராய் பணியாற்றுபவர் 10 ஆண்டுகள் அனுபவமுள்ளவரா என்பது குறித்து கண்காணிக்கப்படுகிறது.
இதுவரை மாவட் டத்தில் 977 பள்ளி வாகனங் கள் சோதனை செய்யப் பட்டன. இவற்றில் அதிக குழந்தைகள் ஏற்றி சென்ற வாகனங்கள் 113, ஓட்டுனர் உரிமமின்றி இயக்கப்பட்ட வாகனங்கள் 16, அனுமதியின்றி இயக்கிய வாகனங் கள் 16, தகுதி சான்று பெறாமல் இயக்கிய வாகனங்கள் 18 கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக