கோரிக்கை பதிவு

கட​லூ​ரில் தொடர்​மழை கார​ண​மாக ​ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் இடிந்து விழுந்​தது

கட​லூ​ரில் தொடர்ந்து பெய்து வரும் கன​மழை கார​ண​மாக,​​ பழைமை வாய்ந்த கட​லூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் வியா​ழக்​கி​ழமை இரவு இடிந்து விழுந்​தது.​ ​

க​ட​லூர் நெல்​லிக்​குப்​பம் சாலை​யில் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் உள்​ளது.​ இது 200 ஆண்​டு​க​ளுக்கு முன் ஆங்​கி​லே​யர் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​டது.​ ​ கட​லூர் நக​ரில் பழை​மை​யும் பெரு​மை​யும் வாய்ந்த கட்​ட​டங்​க​ளில் இது​வும் ஒன்று.​

கட​லூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கம் இக்​கட்​ட​டத்​தில் கடந்த 40 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இயங்கி வந்​தது.​ தற்​போது இந்த அலு​வ​ல​கத்​தில் 60 ஊழி​யர்​கள் பணி​பு​ரி​கி​றார்​கள்.​ ​

வி​யா​ழக்​கி​ழமை மாலை 6-30 மணி வரை ஊழி​யர்​கள் இங்கு பணி​பு​ரிந்​த​னர்.​ அதற்​கு​மேல் வீடு​க​ளுக்​குச் சென்​று​விட்​ட​னர்.​ இரவு 7 மணிக்கு அலு​வ​ல​கத்​தின் இர​வுக் காவ​லர் அமா​வாசை ​(55) மட்​டும் முதல் மாடி​யில் பணி​யில் இருந்​தார்.​ இரவு 7-30 மணி அள​வில் கட்​ட​டத்​தின் முன் பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்​தது.​ பயங்​கர சத்​தம் கேட்டு அக்​கம்​பக்​கத்​தில் உள்​ள​வர்​கள் ஓடி​வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்​த​னர்.​ ​

இ​ரவு நேரத்​தில் இச்​சம்​ப​வம் நடந்​த​தால் உயிர்ச்​சே​தம் இன்​றித் தப்​பி​யது.​ கட்​ட​டத்​தின் ஏனைய பகு​தி​க​ளும் இடிந்து விழும் நிலை​யில்​தான் உள்​ளன.​ எனவே ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கம் தாற்​கா​லி​க​மாக அரு​கில் உள்ள பூமாலை வணிக வளா​கத்​துக்கு வெள்​ளிக்​கி​ழமை மாற்​றப்​பட்​டது.​

அ​லு​வ​ல​கக் கட்​ட​டம் இடிந்து சேதம் அடைந்​தது குறித்து ஊராட்சி ஒன்​றி​யக் குழுத் தலை​வர் சாந்தி பஞ்​ச​மூர்த்தி மற்​றும் வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்​கள் மாவட்ட ஆட்​சி​ய​ரைச் சந்​தித்து விவ​ரம் தெரி​வித்​த​னர்.​

ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கத்​துக்கு புதிய கட்​ட​டம் கட்​டித் தரு​மாறு கோரிக்கை விடுத்​த​னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக