கோரிக்கை பதிவு

கடலூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாம்களை மேம்படுத்த ரூ.31 லட்சம் ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் தங்கி உள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு தமிழக அரசு ரூ.30 லட்சத்து 98 ஆயிரம் நிதி ஒதுக்கி உள்ளது.
காட்டுமன்னார் கோவில் அகதிகள் முகாமுக்கு ரூ.8 லட்சத்து 38 ஆயிரமும், குறிஞ்சிப்பாடி முகாமுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரமும், விருத்தாசலம் முகாமுக்கு ரூ.9 லட்சத்து 20 ஆயிரமும், அம்பலவாணன் பேட்டை முகாமுக்கு ரு.6 லட்சத்து 65 ஆயிரமும் ஒதுக்கப் பட்டுள்ளது.இந்த நிதி புதிய குடிநீர் குழாய்கள் அமைத் தல், மின் பழுது நீக்கல், தெருவிளக்கு மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டுதல் போன்றவற்றுக்கு செவிடப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கி உள்ள வர்களில் கலைஞர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 532 பேருக்கு அடையாள அட்டையும், 425 பேருக்கு இலவச கலர் டி.வி.யும், 13 பேருக்கு இலவச பஸ் பாசும், 45 பேருக்கு ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக