கோரிக்கை பதிவு

எய்ட்ஸ் மறுவாழ்வு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு

கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கி வரும் எய்ட்ஸ் நோயாளிகள் மறுவாழ்வு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலூர் புதுப்பாளையம் சீனிவாசன் பிள்ளைத் தெருவில் மாடர்ன் கல்வி மற்றும் சமூக சேவை மையம் சார்பில் ஏப்ரல் மாதம் முதல் எய்ட்ஸ் நோயாளிகள் மறுவாழ்வு மையம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த மறுவாழ்வு மையத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் அருகில் வசிப்பவர்களுக்கு டி.பி., உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கழிவறைகள் சுத் தமாக இல்லை. இதனால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயமுள்ளதாகவும், மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில் எய்ட்ஸ் நோயாளிகள் மறுவாழ்வு மையத்தை ஆய்வு செய்தபோது அங்கு தற்போது மூன்றுபேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய பராமரிப்பு இருந்தாலும் அருகில் வீடுகள் உள்ளதால் மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதிக்குள் மையம் வேறு இடத்தில் மாற்றி அமைப்பதாக மறுவாழ்வு மைய நிர்வாகி திருமால் தெரிவித்துள்ளதாக கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக