கோரிக்கை பதிவு

50 கிலோ மயில் மீன் கடலூரில் பிடிபட்டது

கடலூர் மீன்பிடி துறை முகத்தில் நேற்று 50 கிலோ மயில் மீன் பிடிபட்டது. ஆழ்கடல் பகுதிகளில் 10 முதல் 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சுறா, சுங்கம், யா மீன், மயில் உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைக்கும்.

இவ்வகை மீன்கள் தூண்டில்கள் மூலமே பிடிக்கப்படும். ரத்த வாடை அதிகமுள்ள டால்பின் மீன் துண்டுகள், சூறை மீன்களை தூண்டிலில் கோர்த்து கடலில் வீசினால் இவ்வகை மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொள்ளும்.

இதில் மயில் மீன்கள் 50 முதல் 500 கிலோ வரை இருக்கும். இம்மீன்களுக்கு மயில் தோகை போன்று இறக்கை இருக்கும் என்பதால், இதை மயில் மீன் என அழைக்கப்படுகிறது. தற்போது, ஆழ்கடல் பகுதியில் மயில் மீன் சீசன் துவங்கி யுள்ளது. கடலூர் பகுதி மீன வர்களிடம் நேற்று 50 கிலோ எடையுள்ள மயில் மீன் சிக்கியது. இதை வியாபாரிகள் வெட்டி பதப்படுத்தி கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய் கின்றனர். எஞ்சிய மீன்கள் கரு வாட்டிற்கு பதப்படுத்தப் படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக