கோரிக்கை பதிவு

மாண​வர்​க​ளுக்கு வச​தி​யாக ​ரயில்​களை இயக்​கக் கோரிக்கை

அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பயி​லும் மாண​வர்​க​ளுக்கு வச​தி​யாக பாசஞ்​சர் ரயில்​க​ளின் நேரங்​களை மாற்றி அமைக்க வேண்​டும்,​​ கூடு​தல் ரயில்​களை இயக்க வேண்​டும் என்று,​​ ரயில்வே இலா​கா​வுக்​குத் தென்​னக ரயில்வே பய​ணி​கள் ஆலோ​ச​னைக்​குழு உறுப்​பி​னர் முனை​வர் பி.சிவ​கு​மார் கோரிக்கை விடுத்​துள்​ளார்.​ ​அ​வர் ரயில்வே பொது மேலா​ள​ருக்கு புதன்​கி​ழமை அனுப்​பிய கோரிக்கை மனு:​ ​ ​அ​கல ரயில்​பா​தைத் திட்​டம் நிறை​வேற்​றப்​பட்ட பின்​னர்,​
​ கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யத்​தில் எக்ஸ்​பி​ரஸ் ரயில்​கள் 
நிற்​கா​மல் செல்​வது பய​ணி​களை பெரி​தும் பாதிக்​கி​றது.​ துறை​மு​கம் சந்​திப்பு ரயில் நிலை​யம் சென்று எக்ஸ்​பி​ரஸ் ரயில்​க​ளைப் பிடிப்​பது மக்​க​ளுக்​குச் 
சாத்​தி​ய​மாக இல்லை.​ இத​னால் திருப்​பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யத்​தின் 
வரு​வாய் வெகு​வா​கப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது.​÷50 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக அனைத்து எக்ஸ்​பிஸ் ரயில்​க​ளும் நிற்​கும் ரயில் நிலை​ய​மாக இருந்து 
வந்​துள்​ளது திருப்​பாப்பு​லி​யூர்.​ திரு​வந்​தி​பு​ரம் தேவ​நா​த​சு​வாமி கோயில்,​
​ திருப்​பாப்பு​லி​யூர் பாட​லீஸ்​வ​ரர் கோயில் ஆகி​ய​வற்​றுக்​குச் சென்​று​வ​ரும் ஆயி​ரக்​க​ணக்​கான பக்​தர்​க​ளுக்​கும்,​​ சுற்​று​லாப் பய​ணி​க​ளுக்​கும்,​​ தின​மும் சென்னை செல்​லும் பய​ணி​க​ளுக்​கும்,​​ திருப்​பாப்பு​லி​யூர்,​​ பண்​ருட்டி,​​ தாம்​ப​ரம் ரயில் நிலை​யங்​க​ளில் சோழன் எக்ஸ்​பி​ரஸ் ரயில்​கள் நிற்​கா​தது பெருத்த ஏமாற்​ற​மாக உள்​ளது.​அண்ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக மாண​வர்​கள் மற்​றும் அலு​வ​ல​கங்​க​ளுக்​குச் செல்​வோ​ருக்கு வச​தி​யாக,​​ விழுப்​பு​ரம் மயி​லா​டு​துறை இடையே முன்பு காலை​யில் 2 ரயில்​க​ளும் மாலை​யில் 2 ரயில்​க​ளும் 
இயக்​கப்​பட்​டன.​ தற்​போது காலை,​​ மாலை தலா ஒரு ரயில் மட்​டுமே 
இயக்​கப்​ப​டு​வது மாண​வர்​க​ளுக்​கும் அல​வ​ல​கம் செல்​வோ​ருக்​கும் 
போது​மா​ன​தாக இல்லை.​ ரயில்​க​ளின் இயக்க நேரங்​க​ளும் ஏற்​ற​தாக இல்லை.​ எனவே கூடு​த​லாக இரு பாசஞ்​சர் ரயில்​களை சரி​யான நேரத்​தில் இயக்க வேண்​டும் என்​றும் சிவ​கு​மார் மனு​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக