கோரிக்கை பதிவு

சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

கடலூரில் நேற்று அனல் காற்று வீசியதால் சில்வர் பீச்சில் மக்கள் கூட் டம் அதிகமாக இருந்தது.
சுனாமிக்கு பிறகு வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. சில நேரங்களில் கடல் உள்வாங்குவதும், வெளியே வருவதும் நடந்து வருகிறது. கடந்த 2 வாரம் முன் சுனாமி பீதி காரணமாக பீச்சிற்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட "லைலா' புயல் காரணமாக மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் சில்வர் பீச்சிற்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந் திருந்தது. நேற்று கடுமையான வெயில் அடித்ததால் அனல் காற்று வீசியது. அதனால் மாலை நேரத்தில் சில்வர் பீச்சில் மக்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக