கோரிக்கை பதிவு

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வடிவத்தை மாற்ற வேண்டும்

கடலூரில் கட்டத் தொடங்கி இருக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் தோற்றம் அழகாக இல்லாததால்,​​ அதன் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று,​​ காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணி கோரிக்கை விடுத்துள்ளது.கடலூர் மாவட்டக் காங்கிரஸ் வழக்கறிஞரணி அமைப்புக் கூட்டம் மாவட்டக் காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது.​ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பல ஆண்டுகளுக்கு பின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படுவது வரவேற்கத்தகுந்தது.​ ஆனால் அதன் வரைபடத்தைப் பார்க்கும் போது அழகாகத் தோன்றவில்லை.பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அழகாக இருக்க வேண்டும்.​ எனவே அதை அழகாகத் தோன்றும் வகையில் மாற்றி வடிவமைக்க வேண்டும்.அனைத்து மாநில மக்களுக்கும் விரைவில் நீதி கிடைக்கும் வகையில்,​​ அனைவரும் எளிதில் அணுகும் விதத்தில்,​​ உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை சென்னை,​​ மும்பை,​​ கொல்கத்தா நகரங்களில் உருவாக்க வேண்டும்.வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை,​​ ரூ.​ 2 லட்சத்தில் இருந்து ரூ.​ 10 லட்சமாக உயர்த்த வேண்டும்.​ கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.கடலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு,​​ கடலூர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.​ மாநில காங்கிரஸ் வழக்கறிஞரணித் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.வழக்கறிஞர்கள் அரிஹரதாஸ்,​​ சாந்தமூர்த்தி,​​ ஜெயக்குமார்,​​ தமிழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.​ கடலூர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவர் என்று சந்திரசேகரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக