கோரிக்கை பதிவு

போலி டாக்டர் கைது விவகாரம்

போலி டாக்டர் என தன்னை கைது செய்தது தொடர்பாக கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டாக்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்பட 7 பேர் வரும் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள் ளது. கடலூர் முதுநகரில் கடந்த ஆண்டு போலீசார் அப்பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த முருகேசன் என்பவரை போலி டாக்டர் என கைது செய்தனர். தான் கொல்கத்தாவில் மருத்துவ படிப்பு படித்துள்ளதாகவும்.
இதில் தன்னை டாக்டர் என்று குறிப்பிடலாம் என்று முருகேசன் கூறினார். ஆனால் போலீசார் போலி டாக்டர்கள் பிரிவில் முரு கேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தன் மீது தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் என தான் படித்த படிப்பிற்கு தன்னை குறிப்பிடலாம்.ஆனால் போலீசார் போலி டாக்டர் பட்டியலில் தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண் டும் என கோரி முருகேசன் கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராமபத்திரன் தமிழக உள்துறை செயலர், மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், எஸ்பி அஷ்வின் கோட்னீஸ், டிஎஸ்பி ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்&இன்ஸ்பெக்டர்கள் சேக்கிழார், பிரேமா உள்ளிட்ட 7 பேர் வரும் 7ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக