கோரிக்கை பதிவு

பிச்சாவரத்தில் ரூ.2 கோடி வருவாய்

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அரணாக இக்காடுகள் அமைந்துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில் 
6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது. வெளிமாவட்டம், மாநிலம் மற்றும் 
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
சமீபத் தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர் காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் நிர்மல்சன் இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க இங்கு ஆய்வு செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏப்ரல் முதல் மார்ச் வரை வெளிநாட்டினர் மற்றும் இந்தியர் என பிச்சாவரம் வந்த சுற்றுலா பயணிகளும், அதனால் கிடைத்த வருவாயும் வருமாறு: 2006-07ல் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளால் 28 லட்சம் ரூபாயும், 2007-08ல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பயணிகளால் 31 லட்ச மும், 2008 -09 ஒருலட்சத்து 42 ஆயிரம் பயணிகளால் 60 லட்சமும், 2009-10 ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் 
பயணிகளால் 85 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக