கோரிக்கை பதிவு

பிச்சாவரம் - கொடியம்பாளையம் இடையே ரூ.10 கோடியில் சிறப்பு பாலம்


கடலூர் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இத்தீவுகளுக்கு தரைவழி பயணம் கானல் நீரா கவே இருந்து வந்தது. தற்போது இதற்கு தீர்வு ஏற்படும் வகையில், தீவுகளுக்கு செல்லும் வழியில் உள்ள கடல் பகுதியிலும், ஆற்றுப்பகுதியிலும் உயர் மட்ட பாலங் களை அரசு அமைத்து வருகிறது. கடலூர் அருகே சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை கிராமங்களுக்கு முதலில் தரைவழி போக்குவரத்திற்கு பாலம் கட்டப்பட்டது. நொச்சிக்காடு பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வரு கிறது. இதன் வரிசையில் பிச்சாவரம்&கொடியம் பாளையம் இடையே உப்பனாற்றில் பாலம் கட்டும் பணி முடிந்துள்ளது.
இதன் மூலம் கொடியம்பாளையம், பழையாறு, வடக்கு பிச்சாவரம், தாண்டவராயன் சோழன் குப்பம் உள்ளிட்ட தீவுகளுக்கு தரை வழி போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீவில் வசிக்கும் சுமார் 25 கிராம மக்கள் பயன் பெற வழி காணப்பட்டுள்ளது. 140 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தின் அகலம் 8.5 மீட்டர். 7 தூண்கள் பாலத்திற்கு பலம் சேர்க்க அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.10.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இப்பாலம் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி தொடங்கப்பட்டு கடந்த 28ம் தேதி முடிக்கப்பட்டுள்ளது. சுனாமி அவசர திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்பாட்டு துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதன் முறையாக கோள வடிவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் முதல் பகுதியை விட மைய பகுதி உயர்ந்து காணப்படும். இதனால் விசைப்படகுகள், சிறிய கப்பல்கள் தடையின்றி பாலத்தின் வழியாக பய ணிக்க முடியும். ஆரம்பத் தில் 4 மீட்டர் உயரத்தில் உள்ள பாலத்தின் அளவு நடு வில் 5.5 மீட்டர் உயரத்தில் முடிகிறது. மாவட்டத்தில் கடற்கரை கிராமங்கள் மற்றும் தீவுகளை தரை வழி போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இணைத்து ஏற் படுத்தப்பட்டுள்ள பாலங்களில் இந்த சிறப்பு பாலம் முதன் முறையாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்திற்கு 6ம் தேதி வரும் துணை முதல்வர் ஸ்டாலின், இப்பாலத்தை திறந்து வைக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக