கோரிக்கை பதிவு

ரேஷன் கார்டு நீக்கத்தில் குளறுபடி : வட்ட வழங்கல் அலுவலர் மாற்றம்

புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது மற்றும் போலி கார்டுகள் நீக்கம் செய்வதில் ஏற்பட்ட குள றுபடியால் கடலூர் வட்ட குடிமை பொருள் தனி தாசில்தார் மாற்றம் செய் யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் போலி ரேஷன் கார்டு எண் ணிக்கை அதிகளவில் இருந்ததால் ஆய்வு செய்து நீக்க அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டு கடந்த வாரம் நீக்கப் பட்ட கார்டுதாரர்கள் குறித்து அந்தந்த ரேஷன் கடைகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதில் உண்மையான கார் டுதாரர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
முறையான ஆய்வு மேற் கொள்ளாததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. ஆறு மாதத் திற்கு ஒருமுறை கார்டுகள் நீக்குவதும், மீண்டும் புதுப்பிக்க அவகாசம் கொடுப்பதும், அதற்காக தங்களது அலுவல்களை விட்டுவிட்டு உண்மையான கார்டுதாரர்கள் அலைவதுமாக இருந்ததால் ரேஷன் கடைகள் மற் றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி டி.ஆர்.ஓ., நடராஜன் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜன் ஆகியோர் கடலூர் வட்ட வழங் கல் அலுவலகத்தில் விசாரணை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 5ம் தேதி வட்ட வழங்கல் தனி தாசில் தார் ராஜசேகர் நெய்வேலி நில எடுப்பு அலுவலகத்திற்கு மாற்றப் பட்டார். அங்கு பணிபுரிந்த பாண்டியம்மாள் கடலூர் குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு இன்று பொறுப் பேற்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக