கோரிக்கை பதிவு

கோயில் தெற்கு வாயிலை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நந்தன் நுழைந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயிலை திறக்கக்கோரி சிதம்பரம் தெற்கு சன்னதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படம்) புதன்கிழமை நடைபெற்றது.ஏழைகள் முன்னேற்றக் கழகம், பிற்படுத்தப்பட்டோர் பேரவை, தமிழக சமாஜவாதி கட்சி, உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி, அண்ணாமலைப் பல்கலை. எஸ்சி., எஸ்டி ஆசிரியர் சங்கம், மக்கள் தேசம் கட்சி, ஆதிதிராவிடர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.ஏழைகள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் எம்.ஏ.டி.அர்ச்சுனன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். தமிழக சமாஜவாதி கட்சி மாநில செயல் தலைவர் இளங்கோயாதவ், வழக்கறிஞர் ப.கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி மக்கள் தேசம் கட்சி தலைவர் மு.ராசிக்ஃபரித் உள்ளிட்டோர் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக