கோரிக்கை பதிவு

கடலூர் வந்த கத்தாரின் 'நார்கஸ் சேலஞ்சர்' கப்பல்

பிப்.23 (டிஎன்எஸ்)  கத்தாரிலிருந்து, 'காஸ்' ஏற்றி புறப்பட்ட 'நார்கஸ் சேலஞ்சர்' கப்பல், கடலூர் வந்தது.

கடலூர் அடுத்த சிப்காட் வளாகத்தில் கெம்ப்ளாஸ்ட் கம்பெனி உள்ளது. இக்கம்பனிக்கு தேவையான மூலப்பொருள், 'வினைல் குளோரைடு மோனோமர்' 6,000 டன் காஸ், கத்தார் நாட்டிலிருந்து ஏற்றி புறப்பட்ட 'நார்கஸ் சேலஞ்சர்' கப்பல், நேற்று முன்தினம் (பிப்.21) கடலூர் வந்தடைந்தது.

இந்த கப்பல் மூலப்பொருட்களை இறக்கியபின், நேற்று காலை (பிப்.22)  கத்தார் நாட்டிற்கு பயணமானது.

பிப்.27ஆம் தேதி மேலும் ஒரு கப்பல் காஸ் ஏற்றிக் கொண்டு கடலூர் வருகிறது. (டிஎன்எஸ்)

கடலூரில் காட்டுத்தீ

கடலூரில் உள்ள தாவர மரபியல் பூங்காவில் இன்று காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கடலூர் பகுதியில் கடுமையான வெயில் அடித்து வருவதால் காய்ந்த புல்வெளிகள் உள்ள இடத்தில் தீப்பிடித்து அது காடு முழுவதும் பரவியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனினும், காட்டுத்தீ பிடித்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பதை வனத்துறையினர் வெளியிடவில்லை.
பல ஏக்கர் பரப்பளவில் உள்ள புல்வெளி பற்றி எரிவதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

இரு மாணவர்களை காணவில்லை : தீயணைப்பு வீரர்கள் தேடுதல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர் கள் இருவரை காணவில்லை என்ற தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் நேற்றிரவு பாலமான் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன் ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர் கவுதம்குமார் (20) நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் அவர் அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதையறிந்து ஆவேசமடைந்த சகமாணவர்கள் பல்கலை தேர்வுத்துறை அலுவலகம், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, அங்கு நின்றிருந்த வாகனங்களை உடைத்தனர். அவர்களை போலீசார் விரட்டினர்.அதில் மாணவர்கள் பலர் அருகில் உள்ள பாலமான் ஆற்றில் குதித்து தப்பினர். அவர்களில்  இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் சுமித்குமார் (22) இறந்தார். இந்த சம்பவங்களினால் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் விரட்டியதில் ஆற்றில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என்ற தகவல் நேற்று மாலை பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு தீயணைப்பு படையினர் பாலமான் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதனால் பல்கலை பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்: துணைவேந்தர் விளக்கம்

"விபத்தில் காயமடைந்த மாணவருக்கு, அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது; அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்' என துணைவேந்தர் ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விபத்தில் காயமடைந்த கவுதம்குமாருக்கு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், உடல்நிலை மோசமானதால், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவு 12.15 மணிக்கு 400 மாணவர்கள், "மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பேச வேண்டும்' என, எனது பங்களா செக்யூரிட்டியிடம் கேட்டனர். "காலையில் பேசலாம்' என செக்யூரிட்டி கூறியதையடுத்து, சமாதானமாகி சென்று விட்டனர். மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரி சண்முகத்திடம், சிகிச்சை குறித்து சான்று பெற்று, காலையில் மாணவர்களை சந்தித்து பேசலாம் என முடிவெடுத்திருந்தோம். இதற்கிடையே நிர்வாக அலுவலகம் நோக்கி சென்ற மாணவர்கள், தேர்வுத் துறை அலுவலகம் மற்றும் மருத்துவமனை கட்டடத்தின் கண்ணாடிகளையும், வாகனங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை உடைத்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த போலீசார், மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மாணவர் ஒருவர் பாலமான் ஓடையில் விழுந்து இறந்து விட்டதாக, உடலை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார், விசாரித்து வருகின்றனர். விடுதியை தவிர்த்து வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான், வேண்டுமென்றே பிரச்னையை தூண்டி விடுகின்றனர். கடந்த ஆண்டும், இதே போன்று பிரச்னை செய்தனர்; அவர்கள் யார் என கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதியில் அனைத்து மாணவர்களும் தங்குவதற்கு, போதுமான வசதி இல்லை. பெண்கள் அனைவருக்கும் இடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், 60 சதவீத மாணவர்கள் மட்டுமே, தங்கக்கூடிய நிலை உள்ளது. புதிய விடுதி கட்டடம் கட்டப்படுவதால், அடுத்த ஆண்டு முதல், மாணவர்கள் அனைவரும் தங்க வைக்கப்படுவர். வெளியில் தங்கியுள்ள மாணவர்களை கண்காணிக்க, ஒவ்வொரு பகுதியிலும் பகுதி அதிகாரி நியமிக்கப்பட உள்ளனர். மாணவர்கள் தங்கியுள்ள வீட்டு உரிமையாளர்கள் யார், வீடுகள், விடுதிகள் பற்றிய விவரங்கள், எங்கு செல்கின்றனர் என கண்காணிப்படும். இவ்வாறு ராமநாதன் கூறினார்.

ஆற்றில் விழுந்த மற்றொரு மாணவரும் சாவு

சிதம்பரத்தில்,​​ வடமாநில மாணவர் ஒருவர் விபத்தில் இறந்ததை அடுத்து அண்ணாமலை பல்கலை.​ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ​ மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.​ போலீஸôர் அவர்களை விரட்டியடித்த போது ​ ஆற்றில் விழுந்து மற்றொரு வடமாநில மாணவர் இறந்தார்.பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌதம்குமார் ​(20).​ இவர் சிதம்பரம் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள காம்ப்ளக்ஸில் தங்கி பி.இ.​ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர்,​​ இதே மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ்குமாருடன் ​(20) ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றார்.​ சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் மின்கம்பத்தின் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.அப்போது பின்புறம் வந்த லாரி கௌதம்குமார் மீது ஏறியது.இதில் படுகாயமடைந்த கௌதம்குமார்,​​ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.மாணவர் இறந்த தகவலை அடுத்து வடமாநில மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,​​ தேர்வுத்துறை கட்டடம் உள்ளிட்டவற்றின் கண்ணாடிகள்,​​ கம்ப்யூட்டர்,​​ மின்விளக்குகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.மருத்துவமனைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் அங்குள்ள நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அலறியடித்து ஓடினர்.​ பின்னர் துணைவேந்தர் விடுதியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.அப்போது அங்கு வந்த போலீஸôர் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்தனர்.​ அதில் தப்பி ஓடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சுமித்குமார் ​(22),​ பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தார்.இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் மேலும் பதற்றம் உருவானது.​ மாணவர்கள் அதிவேகத் தாக்குதலில் ஆட்டோ,​​ ஆம்புலன்ஸ்,​​ வேன்,​​ முதுநிலை மருத்துவ மாணவர்களின் கார்கள் சேதமடைந்தன.தகவல் அறிந்த டிஐஜி மாசானமுத்து,​​ கடலூர் மாவட்ட எஸ்.பி.​ அஸ்வின் கோட்னீஷ் மற்றும் அதிரடிப்படை போலீஸôர் பல்கலைக்கழக வளாகத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் ரகளையில் ஈடுபட்ட 21 வடமாநில மாணவர்களை பிடித்து விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர்.பின்னர் ஐஜி துரைராஜ்,​​ டிஐஜிக்கள் மாசானமுத்து ​(விழுப்புரம்),​​ ராமசுப்பிரமணியம் ​(காஞ்சிபுரம்)​ ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைநகருக்கு வந்து சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

ரசாயன ஆலைக்கழிவுகளால் தோல் நோய்?

கட​லூர் உப்​ப​னாற்றில் மீன்பிடித்த மீனவர் சண்முகம் தோல் நோயால் பாதிக்கப்பட்டார்.​ அவர் இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.கடலூர் உப்பனாற்றில் சிப்காட் தொழிற்சாலைகளின் மோசமான ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதாக,​​ பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் தொழிற்சாலைகள் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.​ சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை கடலில் கலப்பதாகத் தெரிவித்து வருகின்றன.​ மாசுக்கட்டுப்பாடு வாரியமும் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் உப்பனாற்றின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு உள்படுத்துவதும்,​​ அதன்பிறகு ஓசையின்றிப் போவதும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது.குற்றச்சாட்டுகள் மக்களிடம் இருந்து வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும்,​​ ஆய்வின் முடிவுகளையோ,​​ அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையோ மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளிப்படையாகத் தெரிவித்தது இல்லை.உப்பனாற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதற்கு ஆதாரமான நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது.​ கடலூரை அடுத்த சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் வி.சண்முகம் ​(40).​ கடந்த பிப்ரவரி 26-ம் தேதி காலை 10 மணிக்கு,​​ சிப்காட் தொழிற்சாலைகளுக்குப் பின்புறம் உள்ள உப்பனாற்றில் சிறிய படகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்.வலை உப்பனாறின் உள்ளே சிக்கிக் கொண்டது.​ அதை எடுப்பதற்காக உப்பனாற்று நீரில் கழுத்தளவுக்கு மூழ்கியபோது,​​ தோலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டது.​ வீடு திரும்பியதும் எரிச்சல் அதிகரித்தது.சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டன.​ எனவே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து,​​ ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.எனினும் அவருக்கு தொடர்ந்து அரிப்பும்,​​ உடல் நலம் பாதிப்பும் இருப்பதால்,​​ தோல்நோய் நிபுணரிடம் காண்பிக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.இது குறித்து புகார் மனு ஒன்றை சண்முகம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனிடம் அளித்தார்.​ உடலில் பல இடங்களில் வடுக்கள் இருப்பதையும் ​ காண்பித்தார்.கடலூர் உப்பனாற்றில் மீன்பிடிக்கும்போது அடிக்கடி,​​ இத்தகைய ​ நிலை ஏற்படுவதாகவும் சண்முகம் தெரிவித்தார்.​ மீனவர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பழநிவேல்,​​ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அருள்செல்வம்,​​ புகழேந்தி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

கடலூரில் கடும் மூடுபனி

கடலூரில் திங்கள்கிழமை காலை கடும் மூடுபனி காணப்பட்டது.​ ​கோடைகாலம் தொடங்கி விட்டது.​ எனினும் வழக்கத்துக்கு மாறாக பனிக் காலம் ​ மார்ச் மாதம் வரை நீடித்து வருகிறது.​ பகல் நேரத்தில் கடுமையான வெயிலும்,​​ பின் இரவில் பலத்த குளிரும் நிலவி வருகிறது.இந்நிலையில் திங்கள்கிழமை காலை வெகுநேரம் வரை பனி நீடித்தது.​ காலை 6 மணிக்கெல்லாம் சாலைகளில் 50 அடி தொலைவில் வரும் வாகனங்களைக் கூட பார்க்க முடியவில்லை.​ குளிரும் கடுமையாக இருந்தது.காலை 7-30 மணி வரை சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன.​ 7-30 மணிக்குப் பிறகே சூரியன் தனது முகத்தை மெல்லக் காண்பித்தது.​ அதைத் தொடர்ந்து பனி விலகத் தொடங்கியது