கோரிக்கை பதிவு

ஆற்றில் விழுந்த மற்றொரு மாணவரும் சாவு

சிதம்பரத்தில்,​​ வடமாநில மாணவர் ஒருவர் விபத்தில் இறந்ததை அடுத்து அண்ணாமலை பல்கலை.​ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ​ மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.​ போலீஸôர் அவர்களை விரட்டியடித்த போது ​ ஆற்றில் விழுந்து மற்றொரு வடமாநில மாணவர் இறந்தார்.பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌதம்குமார் ​(20).​ இவர் சிதம்பரம் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள காம்ப்ளக்ஸில் தங்கி பி.இ.​ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர்,​​ இதே மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ்குமாருடன் ​(20) ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றார்.​ சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் மின்கம்பத்தின் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.அப்போது பின்புறம் வந்த லாரி கௌதம்குமார் மீது ஏறியது.இதில் படுகாயமடைந்த கௌதம்குமார்,​​ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.மாணவர் இறந்த தகவலை அடுத்து வடமாநில மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,​​ தேர்வுத்துறை கட்டடம் உள்ளிட்டவற்றின் கண்ணாடிகள்,​​ கம்ப்யூட்டர்,​​ மின்விளக்குகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.மருத்துவமனைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் அங்குள்ள நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அலறியடித்து ஓடினர்.​ பின்னர் துணைவேந்தர் விடுதியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.அப்போது அங்கு வந்த போலீஸôர் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்தனர்.​ அதில் தப்பி ஓடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சுமித்குமார் ​(22),​ பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தார்.இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் மேலும் பதற்றம் உருவானது.​ மாணவர்கள் அதிவேகத் தாக்குதலில் ஆட்டோ,​​ ஆம்புலன்ஸ்,​​ வேன்,​​ முதுநிலை மருத்துவ மாணவர்களின் கார்கள் சேதமடைந்தன.தகவல் அறிந்த டிஐஜி மாசானமுத்து,​​ கடலூர் மாவட்ட எஸ்.பி.​ அஸ்வின் கோட்னீஷ் மற்றும் அதிரடிப்படை போலீஸôர் பல்கலைக்கழக வளாகத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் ரகளையில் ஈடுபட்ட 21 வடமாநில மாணவர்களை பிடித்து விசாரணைக்கு பின்னர் விடுவித்தனர்.பின்னர் ஐஜி துரைராஜ்,​​ டிஐஜிக்கள் மாசானமுத்து ​(விழுப்புரம்),​​ ராமசுப்பிரமணியம் ​(காஞ்சிபுரம்)​ ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைநகருக்கு வந்து சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக