கோரிக்கை பதிவு

கடலூரில் கடும் மூடுபனி

கடலூரில் திங்கள்கிழமை காலை கடும் மூடுபனி காணப்பட்டது.​ ​கோடைகாலம் தொடங்கி விட்டது.​ எனினும் வழக்கத்துக்கு மாறாக பனிக் காலம் ​ மார்ச் மாதம் வரை நீடித்து வருகிறது.​ பகல் நேரத்தில் கடுமையான வெயிலும்,​​ பின் இரவில் பலத்த குளிரும் நிலவி வருகிறது.இந்நிலையில் திங்கள்கிழமை காலை வெகுநேரம் வரை பனி நீடித்தது.​ காலை 6 மணிக்கெல்லாம் சாலைகளில் 50 அடி தொலைவில் வரும் வாகனங்களைக் கூட பார்க்க முடியவில்லை.​ குளிரும் கடுமையாக இருந்தது.காலை 7-30 மணி வரை சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன.​ 7-30 மணிக்குப் பிறகே சூரியன் தனது முகத்தை மெல்லக் காண்பித்தது.​ அதைத் தொடர்ந்து பனி விலகத் தொடங்கியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக