கோரிக்கை பதிவு

பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டம்

கடலூரில் பாதாள சாக் கடை திட்டப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கடலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட் டப் பணி தற்போது போக் குவரத்து மிகுந்த நெடுஞ் சாலையான வண் டிப்பாளையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் இணைப்பு முதல் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு வரையிலும், திருப்பாதிரிப்புலியூர் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு முதல் சுப்புராய செட்டி தெரு, சங்கரநாயுடு தெரு பெருமாள் கோவில் வரை குழாய் பதிக்கும் பணி மற்றும் வீடுகளுக்கு இணைப்பு குழாய் பொருத் தும் பணி மேற் கொள்ளப் பட உள்ளது. இப் பணியை விரைந்து முடிக்க வசதியாக போக்குவரத்தை மாற்று வழியில் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் கடலூர் டவுன் ஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், டி.எஸ்.பி., ஸ்டாலின், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ் சாலை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகளும், வர்த் தக சங்க நிர்வாகிகள் மற் றும் பொது நல அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம்

மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப் பட்ட 60 வாகனங்கள் வரும் 26ம் தேதி கடலூர் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலக செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவில் கைப்பற்றப்பட்ட 60 வாகனங் களை ஏலம் எடுப்பவர்கள் இன்று 24ம் தேதி முதல் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். 26ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.

இரு சக்கர வாகனத்திற்கு 500ம், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன் பணமாக 26ம் தேதி காலை 8.30 மணிக்கு மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க வருபவர்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடை யாள அட்டை, வங்கி பாஸ் புக் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். மேலும், தொடர்புக்கு ஏ.டி.எஸ்.பி., 04142-284353, என்ற தொலைபேசியும், பண் ருட்டி மது விலக்கு பிரிவு 297688 மற்றும் 04144-230477 என்ற எண்ணிற்கும் இன்ஸ்பெக்டர் 98423-14114 என்ற மொபைல் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25 கோடியில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்

கடலூர் நகராட்சியில் ரூ. 25.35 கோடியில் புதிய சாலைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் நகராட்சி இயல்புக் கூட்டம் புதன்கிழமை நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது.  பாதாளச் சாக்கடைத் திட்டத்தாலும் மழையினாலும் பழுதடைந்த சாலைகளை புதியதாக அமைக்க நகராட்சி திட்டம் தயாரித்து உள்ளது. அதன்படி 46.9 கி.மீ. தார்ச் சாலையும், 48.5 கி.மீ. சிமென்ட் சாலையும் (160 சாலைகள்) அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.இச்சாலைகள் ரூ. 25.35 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொகையை அரசு மானியத்துடன் கடனாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கோரலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்:  நகராட்சி கூட்ட மண்டபத்தில் அம்பேத்கர் படம் வைப்பது. இத்தீர்மானத்தை நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கொண்டு வந்தார்.  ஆற்றுத் திருவிழாவுக்காக பெண்ணை ஆற்றங்கரையை சுத்தம் செய்த பணிக்கு ரூ. 1.5 லட்சம் அனுமதிப்பது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதுயுகம் மற்றும் குட்லக் என்டர்டெய்ன்மெண்ட் சர்வீசஸ்  நிறுவனத்துக்கு பொருள்காட்சி நடத்த தடையில்லாச் சான்று வழங்குவது.கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தற்போது ரூ.424 லட்சத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.505 லட்சத்துக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகளை பார்வையிட மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், 2 மேற்பார்வையாளர் பணியிடங்களை, ஒப்பந்தப்புள்ளி கோரி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிரப்ப அனுமதிக்கலாம்.இதனால் ஆண்டுச் செலவு ரூ. 61 ஆயிரம். கடலூர் நகராட்சி பகுதியில் 34 குடிசைப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள 14,911 குடும்பங்களின் வறுமை மற்றும் வாழ்வாதார நிலைகளை கண்டறிய கணக்கெடுக்கும் பணிக்கு, ரூ. 2.5 லட்சம் அனுமதிப்பது.  நகராட்சி சார்பில் கம்மியம்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ள நவீன எரிவாயு தகன மேடையை எவ்வாறு செயல்படுத்துவது, நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது என்பது பற்றி நகராட்சித் தலைவர் உள்ளிட்டோர் பழநி, ஈரோடு நகராட்சிகளுக்குச் சென்று பார்த்து வந்தச் செலவுத் தொகை ரூ. 60 ஆயிரம் அனுமதிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எப்​போது தெரி​யும்?

பள்​ளிக் கல்​விக் கட்​டண வசூல் ஒழுங்​கு​மு​றைச் சட்​டம் செல்​லும் என்று உயர் நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்கி பத்து நாள்​க​ளுக்கு மேலா​கி​றது.​ ஆனால்,​​ பள்​ளி​க​ளுக்கு எத்​த​கைய கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது என்​பது பற்றி,​​ தமி​ழக அரசு இது​வரை வெளிப்​ப​டை​யாக எதை​யும் பேச​வில்லை.​ ஒவ்​வொரு பள்​ளிக்​கும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கட்​ட​ணம் எவ்​வ​ளவு என்​பது தெரி​யா​மல் அவ​திப்​ப​டு​வது வழக்​கம்​போல பெற்​றோர்​கள் மட்​டுமே!​பள்​ளிக் கட்​ட​ணங்​கள் மிக அதி​க​மாக உள்​ளன என்று மக்​கள் தாங்​க​மாட்​டா​மல் புலம்​பி​ய​தால்​தான் அரசு இந்​தப் பிரச்​னை​யில் ஆர்​வம் காட்​டி​யது.​ உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதி​பதி கோவிந்​த​ரா​ஜன் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டது.​ தமிழ்​நாடு பள்​ளி​கள் ​(கட்​டண வசூல் ஒழுங்​கு​முறை)​ சட்​டம் 2009 கொண்​டு​வ​ரப்​பட்​டது.​ இந்​தச் சட்​டத்​துக்கு எதி​ரா​கத் தனி​யார் பள்​ளி​கள் சங்​கம் தொடுத்த வழக்​கில்,​​ இந்​தச் சட்​டம் செல்​லும் என்று தலைமை நீதி​பதி எச்.எல்.​ கோகலே,​​ நீதி​பதி கே.கே.​ சசி​த​ரன் ஆகி​யோர் தீர்ப்பு வழங்​கி​னர்.​ தமி​ழக அர​சுக்கு இதை​விட சாத​க​மான தீர்ப்பு வேறு ஏதும் கிடை​யாது.​ ஆனா​லும்,​​ இது​வரை அரசு எந்த அறி​விப்​பை​யும் செய்​ய​வில்லை.​அரசு எந்த அறி​விப்​பும் செய்​ய​வில்லை என்​ப​தற்​காக,​​ தனி​யார் பள்​ளி​கள் சும்மா இருந்​து​வி​ட​வில்லை.​ அவர்​கள் தங்​கள் பள்​ளி​யில் மாண​வர்​க​ளைச் சேர்த்​துக் கொண்​டு​தான் இருக்​கி​றார்​கள்.​ ஆனால் இந்த மாண​வர் சேர்க்கை சின்ன நோட்​டுப் புத்​த​கத்​தி​லும்,​​ வெறும் துண்​டுச் சீட்​டி​லு​மாக நடந்து கொண்​டி​ருக்​கி​றது.​ சில பள்​ளி​கள் கட்​ட​ணங்​க​ளை​யும் வசூ​லித்​து​விட்​டன.​ சில பள்​ளி​கள் மாண​வர் சேர்க்கை மட்​டும் நடத்​து​கின்​றன.​ கட்​ட​ணங்​க​ளைப் பிறகு சொல்​கி​றோம் என்று கூறு​கின்​றன.​ இத்​தனை நடை​முறை ஊழல்​க​ளுக்​கும் கார​ணம்-​ இன்​ன​மும் அரசு தான் நிர்​ண​யித்​துள்ள கட்​டண விகி​தத்தை வெளிப்​ப​டை​யாக அறி​விக்​கா​மல் இருப்​ப​து​தான்.​இந்​தச் சட்​டத்​தில்,​​ மாண​வர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​களை தனி​யார் பள்​ளி​கள் மே 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதிக்​குள் வழங்​கி​விட வேண்​டும் என்று அறி​விக்​கப்​பட்​டுள்​ள​தால்,​​ தனி​யார் பள்​ளி​கள் தங்​கள் விண்​ணப்​பங்​களை விற்​பனை செய்​ய​வில்​லையே தவிர,​​ மாண​வர் சேர்க்​கையை நடத்​திக் கொண்டே இருக்​கின்​றன.​ பெற்​றோர்​க​ளும்,​​ முந்​திக்​கொண்டு குழந்​தை​க​ளைச் சேர்க்​கா​மல் அரசு அறி​விப்​புக்​கா​கக் காத்​தி​ருந்​தால்,​​ நம் குழந்​தைக்கு இடம் கிடைக்​கா​மல் போய்​வி​டும் என்ற பயத்​தின் கார​ண​மாக இந்​தப் பள்​ளி​கள் சொல்​லும் அனைத்​துக்​கும் கட்​டுப்​பட்டு,​​ எந்த ஆதா​ர​மும் இல்​லா​மல் நம்​பிக்​கை​யின் அடிப்​ப​டை​யில் பணத்​தைக் கொடுத்து அனு​ம​தியை உறு​திப்​ப​டுத்​திக் கொள்​கி​றார்​கள்.​சென்ற ஆண்டு ஜூலை மாதம்,​​ தமி​ழ​கத்​தின் அனைத்து தனி​யார் பள்​ளி​க​ளுக்​கும் அரசு ஒரு சுற்​ற​றிக்கை அனுப்​பி​யது.​ 2008-09-ம் ஆண்​டு​க​ளில் வசூ​லித்த கட்​ட​ணம்,​​ சிறப்​புக் கட்​ட​ணம் மற்​றும் வரவு செல​வுக் கணக்​கு​கள் ஆகி​ய​வற்றை மெட்​ரி​கு​லே​ஷன் பள்ளி ஆய்​வா​ளர் அலு​வ​ல​கத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று கேட்​டி​ருந்​தது.​ ஆனால்,​​ இந்த நட​வ​டிக்​கையை எதிர்த்து,​​ தனி​யார் பள்​ளி​கள் சங்​கம் வழக்​குத் தொடுத்​த​து​டன்,​​ வழக்கு முடி​யும்​வரை நமது வரவு செல​வுக் கணக்​கு​களை சமர்ப்​பிக்க வேண்​டிய அவ​சி​ய​மில்லை என்ற முடி​வை​யும் எடுத்​த​தா​கத் தெரி​கி​றது.​ ​இந்த வழக்​கில் அரசு கொண்​டு​வந்​துள்ள சட்​டம் செல்​லும் என்று தீர்ப்பு வரு​வ​தற்கு ஓராண்டு காலம் ஆன நிலை​யில்,​​ மெட்​ரி​கு​லே​ஷன் பள்ளி ஆய்​வா​ளர் அலு​வ​ல​கம் என்ன செய்து கொண்​டி​ருந்​தது?​ அந்​தந்​தப் பள்​ளி​க​ளில் படிக்​கும் குழந்​தை​க​ளின் பெற்​றோ​ரி​டம் தாங்​கள் செலுத்​திய கட்​டண விவ​ரங்​க​ளின் நகலை அனுப்பி வைக்​கும்​படி கேட்​டி​ருந்​தாலே போதுமே,​​ கொட்​டித் தீர்த்​தி​ருப்​பார்​களே!​ ​கல் ​வித் துறை ஏற்​கெ​னவே இத்​த​க​வல்​கள் அனைத்​தை​யும் பெற்று,​​ ஒவ்​வொரு பள்​ளி​யை​யும் அதன் வச​தி​க​ளுக்கு ஏற்ப தரம் பிரித்து முடித்​தி​ருந்​தி​ருந்​தால்,​​ இப்​போது வெளிப்​ப​டை​யாக கட்​டண விவ​ரங்​களை வகுப்பு வாரி​யாக அறி​விக்க வேண்​டி​ய​து​தானே.​ தமிழ்​நாட்​டில் மாவட்ட வாரி​யாக எத்​தனை தனி​யார் பள்​ளி​கள் உள்​ளன,​​ இவை எந்த அடிப்​ப​டை​யில் ஏ,​​ பி,​​ சி,​​ என தரம் பிரிக்​கப்​பட்​டன,​​ இவற்​றுக்​கான கல்​விக் கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ சிறப்​புக் கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ என்​பதை ஒட்​டு​மொத்​த​மாக இணை​ய​த​ளத்​தில் வெளி​யிட்​டால்,​​ பெற்​றோர்​கள் அனை​வ​ருமே பார்த்து அறிந்​து​கொள்ள முடி​யுமே!​ அரசு ஏன் இதில் இன்​ன​மும் மெüனம் காக்க வேண்​டும்.​மெட்​ரி​கு​லே​ஷன் பள்​ளி​க​ளில் எல்.கே.ஜி.​ மாண​வர் சேர்க்கை மற்​றும் புத்​த​கம் ரூ.​ 445,​ யு.கே.ஜி.​ ரூ.​ 500,​ முதல் வகுப்பு ரூ.​ 655 என ஐந்​தாம் வகுப்பு வரை கட்​ட​ணம் நிர்​ண​யித்து,​​ பள்​ளி​க​ளுக்கு சுற்​ற​றிக்கை அனுப்​பி​யுள்​ள​தா​கக் கல்​வித்​துறை வட்​டா​ரங்​கள் கூறி​னா​லும் இதை ஏன் மக்​கள் அறிந்​து​கொள்​ளும்​படி வெளிப்​ப​டை​யா​கத் தெரி​விக்​க​வில்லை.​1973-ல் இயற்​றப்​பட்ட தனி​யார் பள்ளி ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​தின் பிரிவு 32-ன் படி,​​ எந்த ஒரு தனி​யார் பள்​ளி​யும் தகு​தி​வாய்ந்த அதி​காரி குறிப்​பிட்​டுள்ள கட்​ட​ணம் தவிர,​​ வேறு எந்​தக் கட்​ட​ண​மும் வசூ​லிக்​கக்​கூ​டாது என்று தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது என்​பதை நீதி​ப​தி​கள் தீர்ப்​பில் குறிப்​பிட்​டுள்​ள​னர்.​ அப்​ப​டி​யா​னால்,​​ இத்​தனை ஆண்​டு​க​ளாக கல்​வித் துறை அதி​கா​ரி​கள் ஏன் மெüன​மாக இந்த கல்​விக் கட்​ட​ணக் கொள்​ளையை வேடிக்கை பார்த்​துக் கொண்​டி​ருந்​தார்​கள்?​கல்​லூ​ரி​கள் விவ​கா​ரத்​தி​லும் இதே மெüனம்​தான் நீடிக்​கி​றது.​ அதி​கக் கட்​ட​ணம்,​​ நன்​கொடை போன்ற முறை​கே​டு​க​ளில் ஈடு​பட்​ட​தாக,​​ கோவை​யைச் சேர்ந்த ஒரு கல்​லூரி மீது நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று அமைச்​சர் பொன்​முடி அறி​வித்து ஓராண்டு ஆகப் போகி​றது.​ ஆனால் அந்​தக் கல்​லூரி மீது என்ன நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டது என்​பது யாருக்​குமே தெரி​யாது.​சென்ற ஆண்டு பல பொறி​யி​யல் கல்​லூ​ரி​க​ளில் அரசு அறி​வித்த குழு நேரில் சென்று பல்​வேறு புகார்​களை விசா​ரித்​தது.​ சில கல்​லூ​ரி​கள் அலு​வ​ல​கங்​க​ளைப் பூட்​டிக்​கொண்டு அலட்​சி​யப்​ப​டுத்​தின.​ ஆனால் எந்​தப் பொறி​யி​யல் கல்​லூரி மீது என்ன நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டது.​ அந்​தக் கல்​லூ​ரி​கள் தற்​போது நடை​பெ​ற​வுள்ள கலந்​தாய்​வுக்கு தகு​தி​யா​ன​வையா இல்​லையா?​ இன்​னும் அறி​விப்பு இல்லை.​ஒவ்​வொரு தனி​யார் பள்​ளிக்​கும் அரசு நிர்​ண​யித்​துள்ள கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ முறை​கேடு செய்த பொறி​யி​யல் கல்​லூ​ரி​கள் மீது என்ன நட​வ​டிக்கை?​ கல்​வி​யாண்டு தொடங்​க​வுள்ள நிலை​யில் இப்​போது சொல்​லா​விட்​டால்,​​ வேறு எப்​போது சொல்​வார்​கள்!

பிச்சாவரத்தில் ரூ.2 கோடி வருவாய்

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அரணாக இக்காடுகள் அமைந்துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில் 
6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது. வெளிமாவட்டம், மாநிலம் மற்றும் 
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
சமீபத் தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர் காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் நிர்மல்சன் இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க இங்கு ஆய்வு செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏப்ரல் முதல் மார்ச் வரை வெளிநாட்டினர் மற்றும் இந்தியர் என பிச்சாவரம் வந்த சுற்றுலா பயணிகளும், அதனால் கிடைத்த வருவாயும் வருமாறு: 2006-07ல் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளால் 28 லட்சம் ரூபாயும், 2007-08ல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பயணிகளால் 31 லட்ச மும், 2008 -09 ஒருலட்சத்து 42 ஆயிரம் பயணிகளால் 60 லட்சமும், 2009-10 ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் 
பயணிகளால் 85 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பிச்சாவரம் வன சுற்றுலா மையம்தங்கும் இடம் அதிகரிக்குமா அரசு?

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வரும் வெளிநாட்டினர் தங்க, வசதியான இடம் இல்லாததால், அவர்களின் வருகை குறைகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 எக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால் வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண், சிறு, கருங்கண்டன் என, 18க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்களும் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களைத் தடுக்கும் அரணாக, இக்காடுகள் அமைந்துள்ளன. மூலிகை தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால், பல நோய்கள் தீருகின்றன.

காடுகளை பாதுகாக்க, 1984 ஜூன் 16ல், ஐந்து ஏக்கர் பரப்பில், ஆறு படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில், ஆறு காட்டேஜ், 20 கட்டில் வசதிகளுடன், இரண்டு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, கூடுதல் படகுகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டன. வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சமீபத்தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர், காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் 
நிர்மல் சன், இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க, இங்கு ஆய்வு செய்தார்.

பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான கடந்த ஆண்டில், 85 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெளிநாட்டினர் இப்பகுதியில் தங்குவதற்கான வசதி இல்லாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல்

கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரா கூறும்போது, மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்படும். நக ராட்சி, ஊராட்சி பகுதியில் இயங்கும் கடைகள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் நடத்த உரிமம் பெற்று நடத்த வேண்டும். உரிமம் இன்றி நடத்தப்படும் இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். முறைகேடாக வும், சுகாதாரத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் விதத்தில் நடத்தப்படும் கடை களுக்கு ஆய்வின் அடிப்படையில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தொடரும், என்றார்.
குடியிருப்பு பகுதிகளில் தடை
ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சிவலிங்கம் கூறும்போது, சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கடைகள் குடியிருப்பு பகுதியிலேயே அமைந்திருப்பது காரணமாக உள்ளது. பொது சுகாதார சட்டத்தின் படி இறைச்சி கடைகள் குடியிருப்பு பகுதியில் வைக்க தடை உள்ளது.
இதனை முழுமையாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்தால் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு ஏற்படுத்தும். கடலூர் மாவட்டத்தில் முன்னோடியாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் இறைச்சி மற்றும் காய்கறிகளை கொண்ட மினி மார்க்கெட் குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அமைத்து சுகாதாரம் சீர்கெடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
கடலூர், ஏப். 16:
கடலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில், குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கொட்டப் படுகின்றன. மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதால், அவை களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சுகாதார துறை எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கோழி இறைச்சி கடைகள் இயங்கி வருவது குறித்தும், கோழி இறைச்சி கடைகள் பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்படும் வகையில் உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் முத்து என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் மீரா தலைமையில், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், ஊழியர்கள், திருப்பாதிரிப்புலியூர் சப்&இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதிசிவலிங்கம் ஆகியோர் கூத்தப்பாக்கம் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
கூத்தப்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்திய சிக்கன் சென்டர் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மீரா, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவி கோமதி சிவலிங்கம் முன்னிலையில் கோழி இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் கடையில் இருந்த எடை கருவி, கோழி சுத்தப்படுத்தும் இயந்திரம், இறைச்சி கோழிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டதில் அனுமதியின்றியும், சுகாதார முறைகளை கையாளாமலும் இறைச்சி கடைகள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. உரிமம் இன்றி செயல்படும் ஆடு, கோழி இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.
சுகாதாரத்துறை எச்சரிக்கை.