கோரிக்கை பதிவு

எப்​போது தெரி​யும்?

பள்​ளிக் கல்​விக் கட்​டண வசூல் ஒழுங்​கு​மு​றைச் சட்​டம் செல்​லும் என்று உயர் நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்கி பத்து நாள்​க​ளுக்கு மேலா​கி​றது.​ ஆனால்,​​ பள்​ளி​க​ளுக்கு எத்​த​கைய கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது என்​பது பற்றி,​​ தமி​ழக அரசு இது​வரை வெளிப்​ப​டை​யாக எதை​யும் பேச​வில்லை.​ ஒவ்​வொரு பள்​ளிக்​கும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கட்​ட​ணம் எவ்​வ​ளவு என்​பது தெரி​யா​மல் அவ​திப்​ப​டு​வது வழக்​கம்​போல பெற்​றோர்​கள் மட்​டுமே!​பள்​ளிக் கட்​ட​ணங்​கள் மிக அதி​க​மாக உள்​ளன என்று மக்​கள் தாங்​க​மாட்​டா​மல் புலம்​பி​ய​தால்​தான் அரசு இந்​தப் பிரச்​னை​யில் ஆர்​வம் காட்​டி​யது.​ உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதி​பதி கோவிந்​த​ரா​ஜன் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டது.​ தமிழ்​நாடு பள்​ளி​கள் ​(கட்​டண வசூல் ஒழுங்​கு​முறை)​ சட்​டம் 2009 கொண்​டு​வ​ரப்​பட்​டது.​ இந்​தச் சட்​டத்​துக்கு எதி​ரா​கத் தனி​யார் பள்​ளி​கள் சங்​கம் தொடுத்த வழக்​கில்,​​ இந்​தச் சட்​டம் செல்​லும் என்று தலைமை நீதி​பதி எச்.எல்.​ கோகலே,​​ நீதி​பதி கே.கே.​ சசி​த​ரன் ஆகி​யோர் தீர்ப்பு வழங்​கி​னர்.​ தமி​ழக அர​சுக்கு இதை​விட சாத​க​மான தீர்ப்பு வேறு ஏதும் கிடை​யாது.​ ஆனா​லும்,​​ இது​வரை அரசு எந்த அறி​விப்​பை​யும் செய்​ய​வில்லை.​அரசு எந்த அறி​விப்​பும் செய்​ய​வில்லை என்​ப​தற்​காக,​​ தனி​யார் பள்​ளி​கள் சும்மா இருந்​து​வி​ட​வில்லை.​ அவர்​கள் தங்​கள் பள்​ளி​யில் மாண​வர்​க​ளைச் சேர்த்​துக் கொண்​டு​தான் இருக்​கி​றார்​கள்.​ ஆனால் இந்த மாண​வர் சேர்க்கை சின்ன நோட்​டுப் புத்​த​கத்​தி​லும்,​​ வெறும் துண்​டுச் சீட்​டி​லு​மாக நடந்து கொண்​டி​ருக்​கி​றது.​ சில பள்​ளி​கள் கட்​ட​ணங்​க​ளை​யும் வசூ​லித்​து​விட்​டன.​ சில பள்​ளி​கள் மாண​வர் சேர்க்கை மட்​டும் நடத்​து​கின்​றன.​ கட்​ட​ணங்​க​ளைப் பிறகு சொல்​கி​றோம் என்று கூறு​கின்​றன.​ இத்​தனை நடை​முறை ஊழல்​க​ளுக்​கும் கார​ணம்-​ இன்​ன​மும் அரசு தான் நிர்​ண​யித்​துள்ள கட்​டண விகி​தத்தை வெளிப்​ப​டை​யாக அறி​விக்​கா​மல் இருப்​ப​து​தான்.​இந்​தச் சட்​டத்​தில்,​​ மாண​வர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​களை தனி​யார் பள்​ளி​கள் மே 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதிக்​குள் வழங்​கி​விட வேண்​டும் என்று அறி​விக்​கப்​பட்​டுள்​ள​தால்,​​ தனி​யார் பள்​ளி​கள் தங்​கள் விண்​ணப்​பங்​களை விற்​பனை செய்​ய​வில்​லையே தவிர,​​ மாண​வர் சேர்க்​கையை நடத்​திக் கொண்டே இருக்​கின்​றன.​ பெற்​றோர்​க​ளும்,​​ முந்​திக்​கொண்டு குழந்​தை​க​ளைச் சேர்க்​கா​மல் அரசு அறி​விப்​புக்​கா​கக் காத்​தி​ருந்​தால்,​​ நம் குழந்​தைக்கு இடம் கிடைக்​கா​மல் போய்​வி​டும் என்ற பயத்​தின் கார​ண​மாக இந்​தப் பள்​ளி​கள் சொல்​லும் அனைத்​துக்​கும் கட்​டுப்​பட்டு,​​ எந்த ஆதா​ர​மும் இல்​லா​மல் நம்​பிக்​கை​யின் அடிப்​ப​டை​யில் பணத்​தைக் கொடுத்து அனு​ம​தியை உறு​திப்​ப​டுத்​திக் கொள்​கி​றார்​கள்.​சென்ற ஆண்டு ஜூலை மாதம்,​​ தமி​ழ​கத்​தின் அனைத்து தனி​யார் பள்​ளி​க​ளுக்​கும் அரசு ஒரு சுற்​ற​றிக்கை அனுப்​பி​யது.​ 2008-09-ம் ஆண்​டு​க​ளில் வசூ​லித்த கட்​ட​ணம்,​​ சிறப்​புக் கட்​ட​ணம் மற்​றும் வரவு செல​வுக் கணக்​கு​கள் ஆகி​ய​வற்றை மெட்​ரி​கு​லே​ஷன் பள்ளி ஆய்​வா​ளர் அலு​வ​ல​கத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று கேட்​டி​ருந்​தது.​ ஆனால்,​​ இந்த நட​வ​டிக்​கையை எதிர்த்து,​​ தனி​யார் பள்​ளி​கள் சங்​கம் வழக்​குத் தொடுத்​த​து​டன்,​​ வழக்கு முடி​யும்​வரை நமது வரவு செல​வுக் கணக்​கு​களை சமர்ப்​பிக்க வேண்​டிய அவ​சி​ய​மில்லை என்ற முடி​வை​யும் எடுத்​த​தா​கத் தெரி​கி​றது.​ ​இந்த வழக்​கில் அரசு கொண்​டு​வந்​துள்ள சட்​டம் செல்​லும் என்று தீர்ப்பு வரு​வ​தற்கு ஓராண்டு காலம் ஆன நிலை​யில்,​​ மெட்​ரி​கு​லே​ஷன் பள்ளி ஆய்​வா​ளர் அலு​வ​ல​கம் என்ன செய்து கொண்​டி​ருந்​தது?​ அந்​தந்​தப் பள்​ளி​க​ளில் படிக்​கும் குழந்​தை​க​ளின் பெற்​றோ​ரி​டம் தாங்​கள் செலுத்​திய கட்​டண விவ​ரங்​க​ளின் நகலை அனுப்பி வைக்​கும்​படி கேட்​டி​ருந்​தாலே போதுமே,​​ கொட்​டித் தீர்த்​தி​ருப்​பார்​களே!​ ​கல் ​வித் துறை ஏற்​கெ​னவே இத்​த​க​வல்​கள் அனைத்​தை​யும் பெற்று,​​ ஒவ்​வொரு பள்​ளி​யை​யும் அதன் வச​தி​க​ளுக்கு ஏற்ப தரம் பிரித்து முடித்​தி​ருந்​தி​ருந்​தால்,​​ இப்​போது வெளிப்​ப​டை​யாக கட்​டண விவ​ரங்​களை வகுப்பு வாரி​யாக அறி​விக்க வேண்​டி​ய​து​தானே.​ தமிழ்​நாட்​டில் மாவட்ட வாரி​யாக எத்​தனை தனி​யார் பள்​ளி​கள் உள்​ளன,​​ இவை எந்த அடிப்​ப​டை​யில் ஏ,​​ பி,​​ சி,​​ என தரம் பிரிக்​கப்​பட்​டன,​​ இவற்​றுக்​கான கல்​விக் கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ சிறப்​புக் கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ என்​பதை ஒட்​டு​மொத்​த​மாக இணை​ய​த​ளத்​தில் வெளி​யிட்​டால்,​​ பெற்​றோர்​கள் அனை​வ​ருமே பார்த்து அறிந்​து​கொள்ள முடி​யுமே!​ அரசு ஏன் இதில் இன்​ன​மும் மெüனம் காக்க வேண்​டும்.​மெட்​ரி​கு​லே​ஷன் பள்​ளி​க​ளில் எல்.கே.ஜி.​ மாண​வர் சேர்க்கை மற்​றும் புத்​த​கம் ரூ.​ 445,​ யு.கே.ஜி.​ ரூ.​ 500,​ முதல் வகுப்பு ரூ.​ 655 என ஐந்​தாம் வகுப்பு வரை கட்​ட​ணம் நிர்​ண​யித்து,​​ பள்​ளி​க​ளுக்கு சுற்​ற​றிக்கை அனுப்​பி​யுள்​ள​தா​கக் கல்​வித்​துறை வட்​டா​ரங்​கள் கூறி​னா​லும் இதை ஏன் மக்​கள் அறிந்​து​கொள்​ளும்​படி வெளிப்​ப​டை​யா​கத் தெரி​விக்​க​வில்லை.​1973-ல் இயற்​றப்​பட்ட தனி​யார் பள்ளி ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​தின் பிரிவு 32-ன் படி,​​ எந்த ஒரு தனி​யார் பள்​ளி​யும் தகு​தி​வாய்ந்த அதி​காரி குறிப்​பிட்​டுள்ள கட்​ட​ணம் தவிர,​​ வேறு எந்​தக் கட்​ட​ண​மும் வசூ​லிக்​கக்​கூ​டாது என்று தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது என்​பதை நீதி​ப​தி​கள் தீர்ப்​பில் குறிப்​பிட்​டுள்​ள​னர்.​ அப்​ப​டி​யா​னால்,​​ இத்​தனை ஆண்​டு​க​ளாக கல்​வித் துறை அதி​கா​ரி​கள் ஏன் மெüன​மாக இந்த கல்​விக் கட்​ட​ணக் கொள்​ளையை வேடிக்கை பார்த்​துக் கொண்​டி​ருந்​தார்​கள்?​கல்​லூ​ரி​கள் விவ​கா​ரத்​தி​லும் இதே மெüனம்​தான் நீடிக்​கி​றது.​ அதி​கக் கட்​ட​ணம்,​​ நன்​கொடை போன்ற முறை​கே​டு​க​ளில் ஈடு​பட்​ட​தாக,​​ கோவை​யைச் சேர்ந்த ஒரு கல்​லூரி மீது நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று அமைச்​சர் பொன்​முடி அறி​வித்து ஓராண்டு ஆகப் போகி​றது.​ ஆனால் அந்​தக் கல்​லூரி மீது என்ன நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டது என்​பது யாருக்​குமே தெரி​யாது.​சென்ற ஆண்டு பல பொறி​யி​யல் கல்​லூ​ரி​க​ளில் அரசு அறி​வித்த குழு நேரில் சென்று பல்​வேறு புகார்​களை விசா​ரித்​தது.​ சில கல்​லூ​ரி​கள் அலு​வ​ல​கங்​க​ளைப் பூட்​டிக்​கொண்டு அலட்​சி​யப்​ப​டுத்​தின.​ ஆனால் எந்​தப் பொறி​யி​யல் கல்​லூரி மீது என்ன நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டது.​ அந்​தக் கல்​லூ​ரி​கள் தற்​போது நடை​பெ​ற​வுள்ள கலந்​தாய்​வுக்கு தகு​தி​யா​ன​வையா இல்​லையா?​ இன்​னும் அறி​விப்பு இல்லை.​ஒவ்​வொரு தனி​யார் பள்​ளிக்​கும் அரசு நிர்​ண​யித்​துள்ள கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ முறை​கேடு செய்த பொறி​யி​யல் கல்​லூ​ரி​கள் மீது என்ன நட​வ​டிக்கை?​ கல்​வி​யாண்டு தொடங்​க​வுள்ள நிலை​யில் இப்​போது சொல்​லா​விட்​டால்,​​ வேறு எப்​போது சொல்​வார்​கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக