கோரிக்கை பதிவு

கடலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல்

கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரா கூறும்போது, மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்படும். நக ராட்சி, ஊராட்சி பகுதியில் இயங்கும் கடைகள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் நடத்த உரிமம் பெற்று நடத்த வேண்டும். உரிமம் இன்றி நடத்தப்படும் இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். முறைகேடாக வும், சுகாதாரத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் விதத்தில் நடத்தப்படும் கடை களுக்கு ஆய்வின் அடிப்படையில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தொடரும், என்றார்.
குடியிருப்பு பகுதிகளில் தடை
ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சிவலிங்கம் கூறும்போது, சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கடைகள் குடியிருப்பு பகுதியிலேயே அமைந்திருப்பது காரணமாக உள்ளது. பொது சுகாதார சட்டத்தின் படி இறைச்சி கடைகள் குடியிருப்பு பகுதியில் வைக்க தடை உள்ளது.
இதனை முழுமையாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்தால் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு ஏற்படுத்தும். கடலூர் மாவட்டத்தில் முன்னோடியாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் இறைச்சி மற்றும் காய்கறிகளை கொண்ட மினி மார்க்கெட் குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அமைத்து சுகாதாரம் சீர்கெடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
கடலூர், ஏப். 16:
கடலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில், குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கொட்டப் படுகின்றன. மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதால், அவை களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சுகாதார துறை எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கோழி இறைச்சி கடைகள் இயங்கி வருவது குறித்தும், கோழி இறைச்சி கடைகள் பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்படும் வகையில் உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் முத்து என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் மீரா தலைமையில், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், ஊழியர்கள், திருப்பாதிரிப்புலியூர் சப்&இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதிசிவலிங்கம் ஆகியோர் கூத்தப்பாக்கம் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
கூத்தப்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்திய சிக்கன் சென்டர் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மீரா, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவி கோமதி சிவலிங்கம் முன்னிலையில் கோழி இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் கடையில் இருந்த எடை கருவி, கோழி சுத்தப்படுத்தும் இயந்திரம், இறைச்சி கோழிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டதில் அனுமதியின்றியும், சுகாதார முறைகளை கையாளாமலும் இறைச்சி கடைகள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. உரிமம் இன்றி செயல்படும் ஆடு, கோழி இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.
சுகாதாரத்துறை எச்சரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக