கோரிக்கை பதிவு

பாலம் கட்ட முதல்வருக்கு மனு


புவனகிரி நுகர்வோர் உரிமை பாது காப்பு பேரவை சார்பில் தலைவர் செயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
புவனகிரி வெள்ளாற்றின் மீது உள்ள பாலம் பழுதடைந்து வருவதால் புதிய பாலம் கட்டக்கோரி நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு பணிக்காக ரூ. 35 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. சென்னை தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் மத்திய அரசுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் புதிய பாலம் கட்டவேண்டிய அவசியம் குறித்தும், அதற்காக ரூ. 19 கோடி செலவாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுநாள் வரை பணிகள் தொடங்கவில்லை. எனவே தமிழக முதல்வர்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக