கோரிக்கை பதிவு

நுகர்வோர் மன்ற துவக்க விழா


கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் துவக்க விழா மற்றும் மாணவர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இளைஞர்களிடையே நுகர்வோர்களின் உரிமைகள் குறித்து கூட்டமைப்பு ஆலோசகர் பால்கி எடுத் துரைத்தார். தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு தாஸ் பேசினார். 50 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக 2ம் ஆண்டு மாணவர் உதயேந்திரன் வரவேற்றார். மாணவி மீரா நன்றி கூறினார்.
பேராசிரியர் கண்ணன், மனோகரன், பேராசிரியைகள் அபிராமிசுந்தரி, சத்தியபாமா, சாருபாலா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங் கிணைப்பாளர் முனைவர் திலக்குமார் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக